2014 முக்கிய நிகழ்வுகள்.

ஜனவரி
1 - ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல் அளித்தார்.
5 - இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோ ஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. - டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 17 நிமிடம் 8 விநாடியில் ராக்கெட்டிலிருந்து செயற்கைக் கோள் பிரிந்து வட்டப்பாதைக்கு கொண்டு செல்லப்பட்டது.
20 - ஒடிசா வீலர் தீவில் நடத்தப்பட்ட அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி.
தேசிய காவல் அகாடமியின் முதல் பெண் இயக்குநராக அருணா பகுகுணா நியமனம்.
21 - கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்பட்டதால், வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைத்து உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.
22 - கடந்த 2005ஆம் ஆண்டுக்கு முன் வெளியிடப் பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.
27 - தமிழக - இலங்கை மீனவர்கள் இடையே சென் னையில் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக இரு நாட்டு மீனவர்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
30 - வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 12 ஆக உயர்த்தியது.
31 - மாநிலங்களவை எம்.பி.தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ், எல்.சசிகலா, புஷ்பா, விஜிலா சத்தியானந்த், திமுக சார்பில் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகிய 6 பேர் போட்டியின்றி தேர்வு.
பிப்ரவரி
1 - நாட்டின் முதலாவது மோனோ ரயில் சேவை மும்பையில் தொடக்கம், வடாலா முதல் செம்பூர் வரை 8.8 கி.மீ.தூரம் உள்ள வழித்தடத்தில் மோனோ ரயில் சென்றது.
11 - நேபாள பிரதமராக சுஷில் கொய்ராலா பதவியேற்பு.
12 - ரயில்வே இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்பட வில்லை. புதிதாக தமிழகத்துக்கு 9 ரயில்கள் உட்பட 73 புதிய ரயில்கள் அறிவிப்பு.
14 - டில்லி சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ், பாஜ கட்சிகள் எதிர்த்து வாக்களித்ததால், முதல்வர் கெஜ்ரிவால் ராஜினாமா. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி 49 நாளில் முடிவுக்கு வந்தது.
15 - திருச்சியில் திமுக 10ஆவது மாநில மாநாடு தொடங்கியது.
17 - இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல், வாகனங்கள், உள்நாட்டு செல்போன்கள், டி.வி, ஃபிரிட்ஜ் உள்பட வீட்டு உபயோகப் பொருள்கள், சோப்புகள் ஆகியவற்றுக்கு வரிச்சலுகை அறிவிப்பு, அரிசி மற்றும் ரத்த வங்கிக்கு சேவை வரி ரத்து.
18 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆயுள் தண்டனையாக குறைத்து அதிரடி தீர்ப்பும் வழங்கியது.
18 -மக்களவையில் தெலங்கானா மசோதா நிறைவேற்றம்.
19 - தஞ்சை, திண்டுக்கல் மாநகராட்சிகள் உதயம்.
20 - ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை குறைக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் மேலும் 4 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
20 - மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
27 - நாட்டின் முதல் அஞ்சலக ஏடிஎம் சேவை சென்னையில் தொடக்கம்.
மார்ச்
1 - தெலுங்கானா மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் ஒப்புதல்.
8 - மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு சென்ற போயிங் 777 ரக பயணிகள் விமானம், நடுக்கடலில் விழுந்து நொறுங்கியதில்
5 இந்தியர்கள் உட்பட 239 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.
20 - பழம்பெரும் எழுத்தாளர் குஷ்வந்த் சிங் மரணம்.
22 - தமிழகம் முழுவதும் மீண்டும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு அமலாகியது.
24 - கெய்ரோவில் வன்முறையில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாக காரணமாக இருந்த எகிப்தின் முன்னாள் அதிபர் முகமது மோர்சி ஆதர வாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
27 - இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரிய, அமெரிக்காவின் தீர்மானம் அய்.நா.சபையில் நிறை வேறியது. இதற்காக நடந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.
ஏப்ரல்
9 - குஜராத் மாநிலம் வதோதரா மக்களவைத் தொகுதியில், பாஜ பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். தனது மனைவி பெயர் ஜசோதா பென் என்றும், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார் என்றும் வேட்பு மனுவில் தெரிவித்தார்.
15 - திருநங்கைகள் அனைவரையும் மூன்றாம் பாலினமாக பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
27 - உச்ச நீதிமன்றத்தின் 41 ஆவது தலைமை நீதிபதி யாக ஆர்.எம்.லோதா பதவியேற்பு.
மே
4 - நடுவானில் பறக்கும்போதே எதிரி நாட்டு விமானங்களை தகர்க்கும். ஆஸ்ட்ரா என்ற அதிநவீன ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
5 - கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 248 வழக்குகளை உடனடி யாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
6 - ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு உயர் அதிகாரிகளை சிபிஅய் விசாரிக்க, அரசிடம் முன் அனுமதிபெற தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
7 - முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.
16 - நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிப்பு. 337 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா ஆட்சியை பிடித்தது. இக்கட்சி தனித்தே 283 இடங்களை பிடித்தது. தமிழகத்தில் நடந்த 5 முனைப்போட்டியில் அதிமுக 37 இடங்களை பிடித்தது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ராதாகிருஷ்ணன் வெற்றி. ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி.
16-ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல் தெலங்கானாவில் டிஆர்எஸ்., சீமாந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடித்தன.
16 -  ஒடிசாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் 119 இடங்களில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக ஆட்சியைப் பிடித்தது.
25 - 70 ஆண்டு கால அம்பாசிடர் கார் தொழிற்சாலை மூடப்பட்டது.
25 - ஆந்திராவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 13 வயதான பூர்ணா, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய சிறுமி என்ற சாதனை படைத்தார்.
26 - இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பு. அவருடன் 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 22 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.அய்.பிக்கள் பங்கேற்றனர்.
ஜூன்
2 - நாட்டின் 29ஆவது மாநிலமாக தெலங்கானா உதயமானது. அம்மாநிலத்தின் முதல்வராக கே.சந்திர சேகரராவ் பதவியேற்பு.
3 - டில்லியில் நடந்த சாலை விபத்தில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கோபிநாத் முண்டே பலி.
6 - மக்களவை சபாநாயகராக பாஜ மூத்த பெண் எம்.பி.சுமித்ரா மகாஜன் பதவியேற்றார். இதன் மூலம் மக்களவையின் 2ஆவது பெண் சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
7 - கூடங்குளம் அணுமின் நிலைய முதல் உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்திய அணுமின் நிலையங்களில் முதல் முறையாக உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது.
9 - அதிவேக புல்லட் ரயில்களை இயக்கும் வகையில் வைர நாற்கர ரயில் திட்டம் செயல் படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் குடியரசத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையில் தெரிவிக்கப்பட்டது.
13 - சுற்றுலா பயணப்படியை பெறுவதற்காக போலியாக பயணச்சீட்டு அளித்து மோசடியில் ஈடுபட்ட 6 எம்பிக்கள் மீது சி.பி.அய் வழக்குப் பதிவு செய்தது.
18 - உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க 3 பேர் கொண்ட பராமரிப்பு குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
25 - ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை பட்ஜெட்டுக்கு முன்பாகவே மத்திய அரசு உயர்த்தியது. அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவிகிதமும் உயர்த்தப்பட்டு அமலானது.
28 - சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் திடீரென இடிந்து சரிந்து விழுந்ததில் 63 பேர் கட்டட இடுபாடுகளுக்குள் சிக்கி பலி.
ஜூலை
1 - கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
4 - ஈராக்கில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி தவித்த தூத்துக்குடி செவிலியர் மோனிஷா உள்பட இந்தியாவை சேர்ந்த 46 செவிலியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
10 - பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
15 - மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னை மற்றும் இதர நகரங்களில் ரூ. 825 கோடி செலவில் புதிதாக 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
16 - தமிழகத்தில் வேட்டி அணிவதற்கு தடை விதித்தால் கிளப்களின் அனுமதி ரத்தாகும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
17 - ரஷ்யா - உக்ரைன் எல்லையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த மலேசிய பயணிகள் விமானம் ஏவு கணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் உடல் சிதறி பலி.
24 - டில்லியில் நடந்த இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவிகிதமாக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
30- கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி பலியான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பளிக்கப்பட்டது. பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், தாளாளர் சரஸ்வதி உட்பட 8 பேருக்கு 5 ஆண்டு சிறையும், கட்டட பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இவ் வழக்கில் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட்
6 - வேட்டி மற்றும் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருபவர்களை தடை செய்யும் கிளப், சங்கங்கள், மனமகிழ் மன்றங்களின் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் அவற்றின் உரிமையாளர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய சட்ட மசோதா சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
6 - இந்திய ராணுவத்தில் அன்னிய நேரடி முதலீட்டை 49 சதவிகிதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
8 - மக்களவை வரலாற்றில் முதல் முறையாக, தமிழில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தமிழிலேயே பதில் அளித் தார் மத்திய வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன்.
13- தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதிவியேற்பு.
13- கனடா நாட்டின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மஞ்சள் பார்கவா என்ற பேராசிரியருக்கு கணித கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு கிடைத்தது.
19 - பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணி யாளர்களுக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
25 - கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2010 ஆண்டு வரை நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
செப்டம்பர்
13 - திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஆண், பெண் இருவருக்கும் மருத்துவ சோதனை கட்டாயம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.
22 - சமையல் எரிவாயு மானியம், முதியோர், விதவை, ஆதரவற்றோர் உதவித் தொகைகள், கல்வி உதவித் தொகை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது விநியோக திட்டங்களின் பலன்கள் வங்கி கணக்கு மூலம் ஆதார் அட்டை விவரங்களுடன் இணைக்கப்பட்டு வழங்கப்பட மத்திய அரசு முடிவு.
24 - மங்கள்யான் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் இணைந்ததன் மூலம் உலக விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக் கோள் அனுப்பி மகத்தான சாதனையை இந்தியா படைத்தது.
24 - கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாக ஒதுக்கீடு செய்த 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
26.ஜெயலலிதா ஊழல் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உடனே சிறையில் அடைக்கப்பட்டார்.முதல்வராக இருக்கையில்  பதவி இழந்து சிறையில் அடைக்கப்பட்ட முதல் இந்திய  மாநில முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றார்.
29 சென்னையில் தமிழ் நாட்டின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு, அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அக்டோபர்
17 - வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது.
19 - அரியானாவில் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ. 47 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான் மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளில் 122 தொகுதி களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உயர்ந்து அந்த மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
21 - வழக்குரைஞர் அலுவலகங்கள், பார் அசோசி யேஷன் அறைகளில் நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என்று  உயர்நீதிமன்றம் அறிவித்தது.
25 - ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ. 10 உயர்த்தப் பட்டுள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு.
27 - வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கிய, தொழில் அதிபர்கள் பிரதீப் பர்மன் (டாபர் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்) டிம்ளோ பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் 5 இயக்குநர்கள் ராதா, சேத்தன், ரோகன், அன்னா, மல்லிகா பங்கஜ் சிமன்லால் லோதியா (தங்கம் வெள்ளி வியாபாரி) ஆகியோரின் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்தது.
28 - தாது மணல், கிரானைட் கொள்ளை குறித்து விசா ரணை நடத்த அமைக்கப்பட்ட சகாயம் குழுவுக்கு அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம், ரூ 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும் 4 நாட்களில் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு கெடு விதித்தது.
29 - வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருந்த 627 பேரின் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்தது. அவர்கள் மீது சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.அய்.டி) விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
நவம்பர்
6 - வெளிநாட்டு வங்கியில் கணக்கு வைத்துள்ளதாக மத்திய அரசு அளித்த 628 பேர் பட்டியலில் 289 பேர் கணக்குகளில் பணம் இல்லை எனவும், 122 பெயர்கள் இரு முறை இடம் பெற்றுள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.அய்.டி) அதிகாரிகள் தெரிவித்தனர்.
7 - ஜாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதமானது அதை நடத்த தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இக்கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் ரத்து செய்தது.
14 - இலங்கையில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரின் மரண தண்டனையை ரத்து செய்து இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவிப்பு.
16 - அய்எஸ் தீவிரவாதிகள் மீண்டும் ஒரு அமெரிக்க பிணைக் கைதியின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். மேலும் 18 சிரியா நாட்டு ராணுவ அதிகாரிகளின் தலையை துண்டித்து கொலை செய்த பயங்கர வீடியோவையும் வெளியிட்டனர்.
21 - இந்தாண்டுக்கான சிறந்த கண்டுபிடிப்பாக இந்தியாவின் மங்கள்யான் விண்கலத்தை அமெரிக்காவின் டைம் இதழ் தேர்வு செய்தது.
டிசம்பர்
4 - திருவனந்தபுரம் கொச்சியில் பிரபல நீதிபதி கிருஷ்ணய்யர் மரணம்.
10 - திருமலையில் சாமி தரிசனம் செய்ய வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது செய்தி சேகரிக்கவும் படம் எடுக்கவும் வந்த தமிழக பத்திரிகையாளர்கள் மீது ஆந்திர காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
10 - 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோருக்கு நார்வேயில் வழங்கப்பட்டது.
11 - தமிழகத்தில் மின் கட்டணம் 15 சதவிகிதம் உயர்த்தி தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு.
14 - ஓய்வூதிய விதிகளின் அடிப்படையில் ஓர் ஆண்டுக்கு குறைவாக பணியாற்றினாலும் ஓய்வூதியம் தர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு.
16 - பாகிஸ்தானில் ராணுவப் பள்ளிக்குள் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நுழைந்து வகுப்பறைகளில் இருந்து குழந்தைகள் மீது கண் மூடித்தனமாக சுட்டதில் 140 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 160 பேர் பலி.
23- ஜார்கண்ட், காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாயின. ஜார்க்கண்டில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. காஷ்மீரில் எந்தக்கட்சியிலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

தொகுப்பு-நன்றி:விடுதலை 

===========================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?