உங்கள் இதயம் பாதுகாப்பாக இருக்கிறதா?



உனக்கு என் இதயத்தை தந்து விட்டேன்.
உன்னைக்கண்டது முதல் என் இதயம் என்னிடம் இல்லை.
இவை எல்லாம் மற்றவர்களை கவர சொல்லும் வார்த்தை.மற்றபடி இதயமில்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் கூட இதய நோய்க்கு பயந்துதான் ஆக வேண்டும்.மாரடைப்பு என்பது நுரையீரல் வியாதி அல்ல.இதயம் தொடர்பான அடைப்பு.
தன் இதயத்தை மற்றவ்ர்களிடம் கொடுத்து விட்டவர்கள்,இதயமே இல்லாத மனிதர்களை கூட இந்த இதய நோய் பாதிக்கும்.முடிந்தால் சொர்க்கத்துக்கோ,நரகத்துக்கோ செல்ல பயணச்சீட்டை தந்து விடும்.

இதய நோய் ஏற்படுவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. 

சிலருக்கு பிறவியிலேயே ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக இதய நோய்  ஏற்படுகிறது. 
பலருக்கு அவர்களின் பழக்க வழக்கங்களால் ஏற்படுகிறது. சரியான உணவு, உடற்பயிற்சி ஆகியவை இல்லாததாலும், புகைப்பிடித்தல்  போன்ற காரணங்களாலும் இதய நோய் ஏற்படுகிறது. 
எந்த அளவுக்கு ஆபத்தை நாம் எதிர்கொள்கிறோம், அந்த அளவுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான  வாய்ப்புகள் அதிகம். 
ரத்த குழாய்களில் கொழுப்புகள் படிவதால் அதன் இடைவெளி மிகவும் குறுகலாகிவிடுகிறது. 
இவ்வாறு படியும் கொழுப்புகள்  ‘பிளேக்ஸ்‘ என அழைக்கப்படுகிறது. 
இதில் பாதிப்பு ஏற்படும்போதுதான் மாரடைப்பு ஏற்படுகிறது. 

அதிக ரத்த அழுத்தம்


ரத்தக் குழாய் வழியாக ரத்தம் செல்லும் போது, அதன் பக்கவாட்டு சுவர்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதுதான் ரத்த அழுத்தமாக அளவிடப்படுகிறது.  சிறிய ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து இடைவெளி குறுகும்போது, ரத்தத்தை உடலின் பற்ற பாகங்களுக்கு ‘பம்ப்‘ செய்ய இதயம் சிரமம்படுகிறது.  குறுகிய ரத்தக் குழாய் வழியாக ரத்தம் பாயும் போது அழுத்தம் அதிகரித்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் நிலையாக  இருக்கும்போது, ரத்த குழாய் சுவர்கள் பலவீனமாகி இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது.  


பெண்களும் இதய நோயும்,

உடலில் நல்ல கொழுப்பை ஈஸ்ட்ரோஜன் அதிகரிக்கிறது. இது பெண்களை பாதுகாக்கிறது. ஆனால், மாதவிடாய்க்குப் பின் பெண்களும், ஆண்களைப்  போல் இதய பாதிப்புக்கு ஆளாகலாம். பெண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அது ஈஸ்ட்ரோஜனால் ஏற்படும் நன்மையை கெடுத்து விடுகிறது. 

புகைப்பிடித்தல்,


புகை பிடிப்பதால் ரத்த குழாயின் பாதை பாதிப்படைகிறது. அதில் கொழுப்பு படிவதையும், ரத்தம் உறைவதையும் அதிகரிக்கிறது. புகையிலையில் உள்ள  நிகோடின் இதய துடிப்பை அதிகரித்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. 

மாரடைப்புஅறிகுறிகள்
மாரடைப்புக்கான அறிகுறிகளை தெரிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.

 இதோ சில:
நெஞ்சு வலி அல்லது அசௌகரியம் (எரிச்சல், அழுத்தம்)
கழுத்து, தாடை, தோள்பட்டை, முதுகு ஆகியவற்றில் அசௌகரியம்.
மூச்சுத் திணறல்
வாந்தி
வியர்த்தல்
உடல் குளிர்ச்சியடைதல்
இதில் எந்த அறிகுறியை நீங்கள் உணர்ந்தாலும், அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். 


இதய நோய் பாதிப்பை குறைக்க 
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல், உடற்பயிற்சியை அதிகரித்தல், சரியான உடல் எடையை பராமரித்தல், புகைப்பிடிப்பதை கைவிடுதல்,  டென்ஷன் ஆவதை குறைத்தல் போன்றவை மூலம் இதய பாதிப்பை குறைக்கலாம். ரத்த அழுத்தம், கொழுப் பின் அளவு ஆகியவற்றை குறிப்பிட்ட  இடைவெளியில் சோதனை செய்து அதன் அளவு சரியாக உள்ளதா என கணக்கிட வேண்டும். ரத்த அழுத்தத்தை 6 மாதத்துக்கு ஒரு முறையும்,  கொழுப்பின் அளவை ஆண்டுக்கு ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது. 

சர்க்கரை நோயும், இதய நோய்க்கு முக்கிய காரணம் என்பதால், அதன் அளவையும் அடிக்கடி சோதனை செய்து தெரிந்து கொள்வது அவசியம். உடல்  எடையையும் சரியான அளவில் உள்ளதா என்பதை அடிக்கடி சோதிக்க வேண்டும். கூடுதல் எடை, இதயத்தின் வேலையை அதிகரித்து ரத்த  அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் தினந்தோறும் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். 

இதய செயல் இழப்பு 
உடலின் மற்ற பாகங்களுக்கு போதிய ரத்தத்தை, போதிய அழுத்தத்துடன் இதயம் சரியாக அனுப்பவில்லை என்றால் அதுதான் இதய செயல் இழப்பு.  இதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை பெற்று இதய பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். 

அரித்மியா? 
சீரற்ற இதயதுடிப்பு அரித்மியா என அழைக்கப்படுகிறது. மிக வேகமாகவோ அல்லது மிக மெதுவாகவோ அல்லது சீரற்ற முறையில் இதயம் துடிக்கும்.  இதயம் வேகமாக துடித்தாலோ, மயக்கம் ஏற்பட்டாலோ தாமதிக்காமல் இதயநோய் நிபுணரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். 

சிஏடி(கரோனரி ஆர்டெரி நோய்


இது பொதுவாக ஏற்படும் இதயநோய். ரத்த குழாயில் கொழுப்பு பொருட்கள் படிவதால் அது குறுகி அல்லது தடிமனாகி இதயத்துக்கு போதிய  ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லாது. அப்போது நெஞ்சு வலி ஏற்படும். கொழுப்பு படிமங்கள் சேதமடைந்து கிழியும் போது ரத்தம் உறையும். அது ரத்தக்  குழாயை முற்றிலும் அடைத்து விடும். 

அப்போது மாரடைப்பு ஏற்படுகிறது. 

பைபாஸ் சர்ஜரி 
உடலின் மற்ற பகுதியில்,(வழக்கமாக கால் பகுதியில்) இருந்து நல்ல நிலையில் உள்ள ரத்தக் குழாயை வெட்டி எடுத்து அதை இதயத்தின் அடைப்பு  ஏற்பட்ட பகுதிக்கு கீழே இணைத்து ரத்தத்தை மாற்றுப் பாதையில் செல்ல வைப்பதுதான் பைபாஸ் சர்ஜரி.


இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டால் மட்டும் போதாது.
அதன் பின்னர்தான் இதயத்தை காக்க முழு முயற்சியுடன் இருக்க வேண்டும்.இதய அறுவை சிகிச்சைக்குப்பின்னர் பயிற்சி பெற்ற உணவியல் நிபுணர் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களால் அளிக்கப்படும் ஆலோசனை  மற்றும் பயிற்சிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
 இதன்மூலம் இதயத்திற்கு செல்லும் நல்ல ரத்த ஓட்டம் மற்றும் உடலின் செயல்பாடு அதிகரிக்கிறது.  
உடலின் பருமன் குறையும். மன அழுத்தம் குறைந்து இதய ரத்த குழாய் நோய் ஏற்படாமல் கட்டுப்படும். உணவு பழக்கங்களை உணவியல் ஆலோசகர்  கூறியபடி கடைப்பிடிக்க வேண்டும்.
 தினமும் 30 நிமிடம் அல்லது வாரத்தில் 5 நாட்களாவது மருத்துவரின் ஆலோசனைபடி நடைபயிற்சி மேற்கொள்ள  வேண்டும்.
நமது இதயம் கடினமான தசை நார்களால் ஆனது. நிமிடத்திற்கு 60 முதல் 90 முறை துடிக்கின்றது. 
நாள் ஒன்றுக்கு சராசரியாக 7200 லிட்டர்  ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துகிறது. இதய தசைகளுக்கு மூன்று முக்கிய ரத்த நாளங்கள் பிராணவாயுவையும் ஊட்ட சத்துக்களையும் கொண்டு  செல்கிறது. 
இவற்றில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் இதய பணிகள் தடைபடுகின்றன. 
இதய செயல் இழப்பு ஏற்படும் வாய்ப்பும் அதிகமாகிறது.  இந்த அடைப்பினால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யத்தான் பை-பாஸ் அறுவை சிகிச்சை. 

இதன்மூலம் புதியதொரு ரத்தநாளங்களை தடைப்பட்ட ரத்த குழாயின் அருகில் பொருத்தி, மாற்றுவழி ஏற்படுத்துவதன் மூலம் இதய தசைக்கு  தேவையான ரத்த ஓட்டத்தை தங்கு தடையின்றி பெற செய்கின்றது. 

இதய பைபாஸ் அறுவை சிகிச்சை, பாதிக்கப்பட்ட இதய தசைகளுக்கு ரத்த  ஓட்டத்தை அதிகப்படுத்துமே தவிர கொழுப்பு படிவதை தவிர்க்க முடியாது. அறுவை சிகிச்சைக்குப்பின் மாதம் தோறும் மருத்துவரை அணுகி அவரது  ஆலோசனையின்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 
மருந்துகளை தாங்களாகவே நிறுத்தி விடக் கூடாது. 

மருத்துவர் கூறும் நேரங்களில் ரத்தம், இசிஜி, எக்கோ, டிரட்மில் மற்றும் சிடி ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 

உணவு பழக்கங்களை உண வியல் ஆலோசகர் கூறியபடி கடைப்பிடிக்க வேண்டும். 
தினமும் 30 நிமிடம் அல்லது வாரத்தில் 5 நாட்களாவது  மருத்துவரின் ஆலோசனைபடி நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
 புகை, புகையிலை மற்றும் மது அருந்தும் பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.  மேற்கூறிய அனைத்தையும் முறையாக செய்வதினால் 10 முதல் 20 சதவீதம் மீண்டும் இருதய நோய் வருவதை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள், சர்க்கரையின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும். 

இல்லாவிடில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்போது ரத்த  நாளங்களில் கொழுப்பு படிவது அதிகமாகும். 

அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளிகள் இவற்றை பின்பற்றவில்லையென்றால் 

பை-பாஸ்  செய்யப்பட்ட ரத்த நாளங்களிலும் அடைப்பு ஏற்பட்டு மீண்டும் மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது. 


மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை 
செய்யும் நிலைக்கு உள்ளாகக் கூடும். 

===================================================================

இதய நோயிலிருந்து விடுவித்துக்கொள்ள 

மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை
எண்ணை அதிகமாக இல்லாத உணவு முறை
தினமும் உடற்பயிற்சி


இவைகளை கடைப்பிடித்தாலே 60 சதவீதம் இதய நோயிலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ளலாம்.


============================================================
                 இதயமில்லாதவர்களால் கைவிடப்பட்டோர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?