குற்றவாளியின் பிறந்த நாளை

 கொண்டாடும் அரசு. 

மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
   ஒரு சட்ட மன்ற உறுப்பினராகக் கூட இல்லாத ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவுக்காக அரசு எந்திரமும், அரசு நிதியும் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. அரசின் சாதனைக் கண்காட்சி என்ற பெயரில் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கண்காட்சிக்கு அரசு செலவில் ஏற்பாடு
ஜெயலலி தாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 670 தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 
நேற்று தொடங்கி 8 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 60 முதல் 100 மருத்துவமனைகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு மேல் சிகிச்சை ஏதேனும் தேவைப்பட்டால், அவர்களுக்கு அதே மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தின்படி இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், பொது சுகாதாரத் துறையின் சார்பில் நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.  ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்காக இதையெல்லாம் செய்ய நினைக்கும் அமைச்சர்களும், அ.தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களின் சொந்த நிதியிலிருந்தோ அல்லது அ.தி.மு.க.வின் கட்சி நிதியிலிருந்தோ செய்திருக்க வேண்டும்.
அவ்வாறு செய்வதாக இருந்தால் ஆண்டின் 365 நாட்களுக்கும் கூட அவர்கள் மருத்துவ முகாம்களை நடத்தலாம். 
மாறாக அரசு நிதியிலிருந்து ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடுவதும், இதற்காக கடந்த கால நடைமுறைகளை மீறி தலைமைச் செயலக வளாகத்தையே கொண்டாட்டக் களமாக மாற்றுவதும் அருவெறுப்பான முன்மாதிரி.அதிலும் தலைச் செயலக சங்கத்தினர் நடந்து கொண்ட முறை கண்டிக்கத்தக்கது.ஒரு முதல்வருக்கு பிறந்த நாள் என்றால் கூட தலைமைச்செயலக ஊழியர்கள் சங்கம் கொண்டாடுவது தவ று.அதிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஊழல்வாதிக்கு கொண்டாட்டம் மிக தவ றானது.இவர்கள் ஊழியர் சங்கத்தினரா?
 அல்லது அதிமுக அடியாட்களா??
மருத்துவ முகாம்கள் ஒருபுறமிருக்க ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும்வகையில் தமிழ்நாட்டில் 67 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்திருக்கிறார். மரக்கன்றுகள் நடுவது நல்ல விஷயம் தான்.
இதற்கான திட்டத்தை தேசத்தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளிலோ, எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்ற காமராசர் போன்ற தலைவர்களின் பிறந்த நாளிலோ அல்லது இயற்கையை காக்கவே வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட நம்மாழ்வாரின் பிறந்த நாளிலோ தொடங்கி வைத்திருந்தால் அது மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும். மாறாக ஊழல் குற்றவாளியின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக அரசு சார்பில் புதிய திட்டத்தை அறிவித்து தொடங்குவதை ஏற்கவே முடியாது.
இன்னொருபுறம், அ.தி.மு.க. அரசின் சாதனைக் கண்காட்சி என்ற பெயரில் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கண்காட்சிக்கு அரசு செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதிலும் குறிப்பாக ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, சிறை சென்ற ஒருவருக்காக இவ்வளவையும் செய்வது அசிங்கமானது -நம் தமிழக அரசு நிர்வாகத்தையே கேவலப்படுத்துவது  .

இதுதவிர, அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பதவியில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஜெயலலிதாவை வாழ்த்தி நாளிதழ்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 இதற்காக கோடிக்கணக்கில் அரசு நிதி செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக ஜெயலலிதா பிறந்த நாள் குறித்த அ.தி.மு.க.வின் செய்திக் குறிப்பை தமிழக அரசின் செய்திமக்கள் தொடர்பு இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
அரசு செய்திகளை வெளியிடவேண்டிய இந்த இயக்குனரகத்தை எப்போது அ.தி.மு.க. குத்தகைக்கு எடுத்தது என்பது தெரியவில்லை.
 தமிழக ஆட்சியாளர்கள் ஜனநாயக நடைமுறைகளையோ அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையோ மதிக்கவில்லை என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. 
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தற்போது அம்மா அடிமைகள் சபை 
தமிழக அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் உருவப்படங்களை மாட்டுவதும், அரசு சார்ந்த ஆலோசனைக் கூட்டங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை முன்னிலைப் படுத்தி வைப்பதும், குடியரசு நாள் கொண்டாட்டங்களில் அணிவகுக்கும் அலங்கார ஊர்திகளில் ஜெயலலிதா படங்களை இடம்பெறச் செய்ததும் ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும். 
மரம் நடும் விழாக்களில் அப்பகுதி அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள் அதை ஏற்றுக் கொள்ளலாம்.அவர்களின் கட்சித்தலைவி ஜெயலலிதா.
ஆனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டு மரம் நாட்டுவதை பார்க்கையில்தான் நம் தமிழ் நாடு நிர்வாகம் எவ்வளவு தரம்தாழ்ந்து ,அதிகாரிகள் எல்லோரும் ஜெயாவின் அடிமைகளாக ,அதிமுக உறுப்பினர்களை விட தாழ்ந்து போயுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.இவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் அரசு சம்பளம் வழங்க்குகிறதா?அல்லது அதிமுக தலைமைகழகம் சம்பளம் கொடுக்கிறதா என்ற சந்தேகம் தான் வருகிறது.
இவற்றையெல்லாம் விஞ்சும் வகையில் ஊழல் குற்றவாளியின் பிறந்தநாளை எந்தவித வெட்கமும் இன்றி அரசு செலவில் அ.தி.மு.க.வினர் கொண்டாடி மகிழ்வது தங்களை தட்டிக் கேட்க யாருமே இல்லை என்ற ஆணவத்தையே காட்டுகிறது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அரசின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் செலவிடப்பட்ட தொகையை அ.தி.மு.க.விடமிருந்து வசூலிக்க வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் வழங்கப்பட்ட விளம்பரங்களுக்கான செலவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுனர் ஆணையிட வேண்டும்.


மூ முத்த வழக்குரைஞர் ராம் ஜெத் மாலினிதான்
வாரியலும்,விளக்குமாறும் ,
கோட் செலவை விட விளம்பரச்செலவுதான் தாங்க முடியலை.அடுத்த பட்ஜெட்டில் பிரதமரின் விளம்பரத்துக்கு ஒரு ஆயிரம் கோடிகளை ஒதுக்குங்க மோடி.  



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?