"மோடி"க்கு கார்ப்பரேட்கள் வாரி வழங்கிய நன்கொடை!

அதற்கு நன்றி தெரிவிக்கும் பட்ஜெட் ?

தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. 
வருமான வரியை ஒழுங்காக செலுத்துபவர்கள் மாத சம்பளக்காரர்கள்,அரசு ஊழியர்கள்தான் பெரும் நிறுவனங்கள்,தொழிலதிபர்கள்,பெரும் வியாபாரிகள் அனைவருமே வருமானவரியை செலுத்துவதில் முறைகேடுகளை செய்பவர்கள்தான்.
எனவே நடுத்தர மக்களுக்குக்குத்தான் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை.
ார்பரேட் வரி படிப்படியாக 25% வரை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
கார்பரெட்கள் வரியை எவ்வளவு ஒழுங்காக செலுத்துவார்கள் என்பது நோக்கியா,ரிலையன்ஸ்,அதானி,அம்பானி ,விஜய் மல்லையா,சகாரா,சாரதா,டெக்கான்  போன்ற குழுமங்கள் இதுவரை  எடுத்துக் காட்டியுள்ளன.
அந்த  பெரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை.
அதுவும் 25 சதவிகிதம்.
நாடு விளங்கிடும்.
சமையல் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும். 
ஏழை மக்களுக்கான உணவுக்கான மானியம்,சமையல் வாயு உருளைக்கான மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப் படும். 
நிர்பயா  என்ற பெண்கள் பாதுகாப்புக்கு 1000 கோடிகள் .இந்த நிதியை என்ன வகைகளில் செலவிடுவார்கள்.?
மக்களை கொடுமைப்படுத்தும்  சேவை வரி 14% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால்கார்ப்பரேட் வரி தற்போது 30% ஆக உள்ளது. இது அடுத்த நான்கு ஆண்டுகளில் 25% ஆக குறைக்கப்படும். 
இதானால் 3000 கொடிகளுக்கு மேல் லாபம் காட்டும் டி .சி.எஸ் போன்ற நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம்.ஆனால் அவர்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை குறைப்பதையும்,திடீர் என்று வேலையை பிடுங்கி தெருவில் நிற்க வைப்பதையும் இந்த அரசு கண்டு கொள்ளாது.
திட்டமிடப்படாத செலவினங்கள்- ரூ.13,12,200 கோடி
.திட்டமிடப்பட்ட செலவினங்கள்- ரூ.4,65,277 கோடி.

அது என்ன திட்டமிடப்படா செலவினம்.மோடிக்கு தங்கத்தில் பெயர் இழைத்து கோட்,சூட் தைப்பது போன்றவையா?
உற்பத்தித் துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் இதை ஈடுகட்டவே வகுக்கப்பட்டுள்ளது. 
ஏப்ரல் 1 2016 முதல் (ஜி.எஸ்.டி.) சரக்கு, சேவை வரி அமலுக்கு கொண்டு வரப்படும்.  
இதனால் விலை வாசி ஏறும்.அதில் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.கண்டிப்பாக தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மோடி இவைகளை செய்வது சரியானதுதான்.
வாக்களித்த ஏழை மக்களுக்கு மானியங்கள் நீக்கம்.
பணமளித்த கார்பரெட்களுக்கு வரிச்சலுகை.
அதுதான் "மோடி'யின் ராமராஜ்யம்.
============================================
#கீழ்க்கண்ட பொருட்களை பார்த்தாலே
இந்த பட்ஜெட் யாருக்கானது என்று எளிதாக
உணர்ந்து கொள்ளலாம்.
============================================
* அழகு நிலையங்கள்,
* கேஸ் உள்ள பானங்கள்,
* செட் அப் பாக்ஸ்கள்
* எஸ்.யு.வி கார் வகைகள்
* வாகன கட்டணம் அதிகரிப்பு
* கால் டாக்சி சேவை
* குளிரூட்டப்பட்ட உணவகம்
* இறக்குமதி செய்யப்பட்ட கார்கள்
* புகையிலை பொருட்கள்
*  இருசக்கர வாகனம்
* செல்போன்கள்

போன்றவற்றின் விலை உயரும்.
============================================
* தோல் காலணிகள்
* எல்.சி.டி டிவிகள்
* இறக்குமதி தானியங்கள்
* வைரங்கள்
* கணினிகள்
* விலையுர்ந்த கற்கள்
* இறக்குமதி உடைகள்
* தரை விரிப்பு

ஆகிவற்றின் விலை குறையும்.
============================================

 பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரும் முதலாளிகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரி நிர்வாகத்தை மாற்றியமைப்பது என்றபெயரில் பெருமளவு வரிச்சலுகை கள் அளித்தல், தொழில் நடத்துவதற்கான செலவினங்களை குறைப்பதற்கான வழிமுறை என்ற பெயரில்வரி விலக்கு அளித்தல், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிலம் தொடர்பான சட்டங்களை முழுமையாக திருத்துவது, அனைத்துவிதமான மானியங்களையும் படிப்படியாக ஒழிப்பது, முழுமையான சந்தைப்போட்டி நிலைமையை ஏற்படுத்துவது, அனைத்துவிதமான பொதுத்துறை நிறுவனங்களையும் மிக வேகமாக தனியார்மயமாக்குவது என்பன உள்ளிட்ட திட்டங்களை வரும் காலத்தில் துரிதமாக அமலாக்கிட மத்திய மோடி அரசு தீர்மானித்திருப்பது  பகிரங்கமாகவே கூறப்பட்டுள்ளது.
==========================================================================
மோடிக்கு கார்ப்பரேட்கள் வாரி வழங்கிய நன்கொடை?
ஜனநாயக சீர்திருத்த அமைப்பு  வெளியிட்ட பட்டியல் !




பாஜகவை சேர்ந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தேர்தல் காலத்தில் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல நூறுகோடி ரூபாய்களை நன்கொடையாக வாரி இறைத்திருக்கின்றன.
 இந்தியாவில் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவது வழக்கம். அந்த வகையில் மக்களிடம் இருந்தும், கட்சி உறுப்பினர்களிடம் இருந்தும், தொழில் அதிபர்களிடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடையை திரட்டுகின்றன.
ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எப்போதும் ஆதரவாக செயல்படும் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் நேரத்தில் அந்த நிறுவனங்களிடம் பல நூறு கோடிக் கணக்கான ரூபாயை நன்கொடையாய் பெற்றிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. கடந்த தில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெளிநாடுகளில் இருந்தும்,
தொழில் அதிபர்களிடம் இருந்தும் கோடி கணக்கான ரூபாயை நன்கொடையாக பெற்றது என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் இதை பெரிய குற்றச்சாட்டாக தெரிவித்தார். ஆனால் அவருடைய பாரதிய ஜனதா கட்சியே தில்லி சட்டசபை தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதிக நன்கொடை பெற்றது இப்போது தெரியவந்துள்ளது.
தில்லி தேர்தலையொட்டி கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாரதிய ஜனதா கட்சி மொத்தம் ரூ.60.78 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2013-2014-ம் ஆண்டில் மொத்த தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடையில் பாரதிய ஜனதா கட்சி 69 சதவிகிதம் நன்கொடை பெற்றுள்ளது.
அதாவது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்ற கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடை குறித்து ஜனநாயக சீர்திருத்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது
:-பாரதிய ஜனதா கட்சி கடந்த 2012-13-ம் நிதி ஆண்டில் ரூ.83.19 கோடி நன்கொடை பெற்றது.
இது கடந்த 2013-2014-ம் ஆண்டில் ரூ.87.67 கோடியாகவும், 2014-2015-ம் ஆண்டில் 170.86 கோடியாக உயர்ந்து விட்டது.
அதாவது பாரதிய ஜனதாவின் நன்கொடை வசூல் 2012-2013-ம் ஆண்டை விட 2014-2015-ம் ஆண்டில் இரு மடங்கு மேல் உயர்ந்திருக்கிறது.
பார்தி குழுமத்தின் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை பாரதிய ஜனதா கட்சிக்கு 3 தடவையாக கடந்த 2012-2013-ம் ஆண்டில் ரூ.41.37 கோடியை நன்கொடையாக வழங்கி உள்ளது.
இதேபோல் சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2013-2014-ம் ஆண்டில் 36.50 கோடியை கொடுத்து உள்ளது.
சரத்பவாரின் தேசியவாத கட்சிக்கு சத்யா எலக்ட்ரோல் அறக்கட்டளை கடந்த 2013-2014-ம் ஆண்டில் அளித்து உள்ளது.
தேசிய அரசியல் கட்சிகள் கடந்த 2013-2014-ம் ஆண்டில் மொத்தம் ரூ. 247 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளன.
இது கடந்த 2012-2013-ம்ஆண்டை விட 158 சதவிகிதம் அதிகமாகும்.
மாநிலம் வாரியாக பார்த்தாலும் பாரதிய ஜனதா கட்சி தான் அதிக நன்கொடை வசூலித்தது தெரியவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ரூ.23.25 கோடியை வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ரூ. 22.24 கோடியை வசூலித்து முதலிடத்தை பிடித்து உள்ளது.
இதெல்லாம் வெளிப்படையாக தெரிந்த நன்கொடைகள் மட்டுமே ஆகும். அதானி குழுமம் போன்ற பாஜக மற்றும் மோடி விசுவாச கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்லாயிரங்கோடிகளை வரி இறைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் பிரதிபலனாகவே,
தற்போது நரேந்திர மோடி அரசு மக்கள் நலனை பின்னுக்கு தள்ளி, கார்ப்பரேட் நலனை முன்நிறுத்தி வருகிறார்.
மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர் போன்று செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டுக்களையும் மோடியின் மீது சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.
 பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, பூடான், நேபாளம், பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்பட பல நாடுகளில் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் வெளிப்படைத் தன்மை உள்ளது.
ஆனால், இந்தியாவில் மட்டும் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூலிப்பதில் மறைமுகப் போக்கை கடைப்பிடிக்கின்றன என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?