பழமா?-சாறா? எது நல்லது ?



பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.
ஆரஞ்சுப் பழச்சாறு இளமையுடன் வாழ உதவுகிறது.
இதயத்திற்கு இதமான பொருட்களில் ஒன்றாக திராட்சை பழச்சாறு நிலவுகிறது.
இவை எல்லாம் நம்மிடம் பொதுவாக நிலவி வருகின்ற நம்பிக்கைகள். பழச்சாற்றில் அதிக சத்துக்கள் உள்ளதில் எள்ளளவும் ஐயமில்லை தான். ஆனால், பழமாக உண்பது  ?
 பழச்சாறாக உண்பது?
 எது அதிக பலன் தரும்?என்பதில் தான் குழப்பமே.
இதில் எது சிறந்தது என்று பல ஆய்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.
பழங்களை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக பழச்சாறாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு மோசமானதாக அமையும் என்று பிரிட்டனின் கிளாஸ்கோவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 பழச்சாற்றில் அதிக சர்க்கரை இருப்பதால், மேசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
கிளாஸ்கொவ் பல்கலைக்கழக இரத்த குழாய் மற்றும் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பேராசியரியர் நவீத் சாத்தார், மருத்துவர் ஜாசன் கில் ஆகியோர் லான்செட் நீரிழிவு மற்றும் நாளமில்லா சுரப்பியல் இதழில் இந்த புதிய ஆய்வுப் பற்றிய கட்டுரையை எழுதியுள்ளனர்.
 பழச்சாறுகளிலுள்ள ஊட்டசத்து்ககளை தெளிவாக அச்சிட்டு புட்டிகளின் மேல் ஒட்டுவதோடு, ஒரு நாளைக்கு 150 மில்லிக்கு அதிகமாக பழச்சாறு குடிப்பதை தவிர்க்க மக்களை அறிவுறுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பழச்சாறு உடலுககு மிகவும் நல்லது என்று எண்ணி பழங்களை சாப்பிடுவதற்கு பதிலாக பழச்சாறு குடிப்பது மிக மேசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பழச்சாறு அதிக செறிவுடைய ஆற்றலையும், சர்க்கரையையும் உள்ளடக்கியுள்ளது.
எடுத்துக்காட்டாக கூறினால், 250 மில்லி ஆப்பிள் பழச்சாற்றில் நூற்றி பத்து கிலோ கலோரிகளும், 26 கிராம் சர்க்கரையையும் உள்ளன.
 எனவே, அதிக சர்க்கரை அளவு நீரிழிவுக்கு வழிகோலும்.

பழச்சாறு குடிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. ஆரஞ்சுப் பழச்சாறு இளமையுடன் வாழ உதவுகிறது. இதயத்திற்கு இதமான பொருட்களில் ஒன்றாக திராட்சை பழச்சாறு நிலவுகிறது.
 இவை எல்லாம் நம்மிடம் பொதுவாக நிலவி வருகின்ற நம்பிக்கைகள்.
ஒரு குவளை பழச்சாறு, ஒரு பழத்துண்டைவிட அதிக சர்க்கரையை கொண்டுள்ளது. பழத்தை நேரிடையாக உண்டும்போது கிடைக்கக்கூடிய நார்சத்து அதனை பழச்சாறாக குடிக்கும்போது கிடைப்பதில்லை. பழச்சாறுகளில் விட்மின்களும், தாதுப் பொருட்களும் உள்ளன.
 ஆனால், பிற இனிப்பான சாறுகளில் சர்க்கரையை தவிர வேறு எதுவும் இருப்பதில்லை.
இதனை உறுதிச் செய்ய புதிய ஆய்வு நடத்தப்பட்டது. ஆக்ஸிஜனேற்ற தடுப்பு பொருட்கள் அதிகமாக இருந்த பிறகும், அரை லிட்டர் திராட்சை பழச்சாறை மூன்று மாதங்கள் நாள்தோறும் அருந்தி வந்தவர்களிடம் இன்சுலின் தடுப்பு மற்றும் இடை தசை அதிகரிப்பு காணப்பட்டதை புதிதாக நடத்திய ஆய்வில் அறியவந்துள்ளனர்.
பழச்சாறு போடும்போது பழத்திலுள்ள சர்க்கரையை தவிர, சுவையாக இருக்க நாம் சேர்க்கின்ற சர்க்கரையும் சேர்ந்து மிகவும் அதிகமாகி விடுகிறது.
அதிக சர்க்கரை அளவு உடல்நலத்தில் சிக்கல்களையே தோற்றுவிக்கும்.
சிறிய குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுக்க பழகிவிட்டால், பிறகு பழங்களை கடித்து சாப்பிட அவர்கள் விரும்புவதில்லை.
 எனவே, பல் முளைத்தவுடன், குழந்தைகளுக்கு பழங்களை சிறிதாக அரிந்து கடித்து உண்ண வைப்பதே மிகவும் நல்லது.

==========================================================================
தண்ணீர் குடிப்பது எப்படி?
ஒரு மனிதனின் உடல் எடையில், 3 இல் இரண்டு பங்கு அளவுக்கு தண்ணீர் இருக்கிறது.
 கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே பெண்கள் 52% நீரும், ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர் அலவும் குறைவாக இருக்கும்.
ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது.
 அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது.
இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும், ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில் ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம். எனவே, தேவையான அளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
தண்ணீர் இழக்கும் அளவு அருந்த வேண்டியது அவசியம். இல்லை எனில், தண்ணீர் இழப்பு (dehydaration) ஏற்பட்டு, உடல் உபாதைகளுக்கு காரணமாகிறது. சிறு நீரகங்களில் கற்கள் உருவாவதற்கும், உடலின் நச்சுப்பொருட்கள் வெளியேறாமலும் தடுக்கிறது. ஒரு நாளைக்கு 8 கோப்பை தண்ணீர் அருந்துவது மிக அவசியம்.
 அதிக அளவில் அருந்துவதால், எந்த பிரச்சினையும் இல்லை.
சிறுநீரகங்கள் அவற்றை சிறுநீராக்கி வெளியேற்றிவிடும்.
எனவே அதிக தண்ணீர் குடிப்பதை பழகிக்கொள்ள வேண்டும்.
தண்ணீர்
தண்ணீரை, டம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும். அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும். வாய் நிறைய தண்ணீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்பொழுது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவது, உண்ட உணவு ஜீரணிக்கும்.
டம்ளரில் வாய் வைத்துக் குடித்தால், காதில் வருகிற நோய்கள் தள்ளிப் போகும்.
தண்ணீரைத் தலை அண்ணாந்துச் சாப்பிடுவது, காது நோய்களுக்கு வழி வகுக்கும். நமது உடம்பில் காது, மூக்கு, தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன.எனவே நாம் தண்ணீர் அண்ணாந்து குடிக்கையில் உடன் செல்லும் காற்று காது ,மூக்கு,வழியே வெளியேற முயற்சிக்கையில் காத்து வலி,மூக்கடைப்பு போன்ற கோளாறுகள் உர்ண்டாக வாய்ப்புள்ளது.
எனவே, ஒருபோதும் தண்ணீரை அண்ணாந்துக் குடிக்க வேண்டாம்.
==========================================================================
இன்று.
மார்ச்-27.
  • சர்வதேசநாடகத்  தினம்
  • மல்தோவா, பேசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)
  • ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை கண்டுபிடித்தார்(1513)
  • டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இடையே நடுநிலை ஏற்பட்டது(1794)
==========================================================================
கறி மசாலா வாழைப் பழச் சிற்றுண்டி
பெரிய வாழைப் பழங்கள் மூன்று எடுங்கள்.
மஞ்சள், கறி மசாலா தலா  ஒரு கரண்டி.
 கறுப்பு மிளகு சிறியளவு,
 தேங்காய் எண்ணெய் ஒரு கரண்டி ஆகியவை தேவை .
.
.வாழைப் பழத்தின் தோலை உரித்து இரண்டு சென்டி  மீட்டர் அளவு  துண்டுதுண்டாக வெட்டுங்கள்.
.தொடர்ந்து, 3 துண்டுகளை குச்சியால் இணையுங்கள்.
அந்த குச்சியால் இணைக்கப்பட்ட வாழைப் பழத் துண்டுகளை தனித்தனியாக தட்டில் வையுங்கள்.

அப்புறம், மஞ்சள், கறி மசாலா மற்றும் தேங்காய் எண்ணெய்யை சாறாக கலந்து வாழைப் பழத் துண்டுகளின் மேல்இரண்டு பக்கங்களிலும் மெதுவாக பூசுங்கள்.

 அடிப்பகுதி சற்று அகலமாக இருக்கும் வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்குங்கள்.
தேங்காய் எண்ணெய் வாணலியில் ஊற்றி காய்ந்ததும்   வாழைப் பழத் துண்டு  சொருகிய குச்சிகளை வையுங்கள்..
.இரண்டு பக்கங்களையும்  தனித்தனியாக 3 நிமிடம் பொறிக்க வேண்டும்.
வாழைப் பழத் துண்டுகள் பொன் நிறமாக பொறிக்கப்பட்ட பின் வெளியே எடுத்து தட்டில் வைத்து ,வாழைப்பழத் துண்டுகளில் தூளாக்கிய கறுப்பு மிளகை  தூவுங்கள்.
இப்போது இனிப்பு மணம் வீசுகின்ற வாழைப் பழத் துண்டு சிற்றுண்டி தயார்.
சாப்பிடுவதற்கு இனிப்பு மற்றும் கொஞ்சம் காரமான சுவையாக இருக்கும் .
முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு இது மிகவும் ஏற்றதாகும்.எளிதாக செரிமானமாகும் சத்து மிக்க சிற்றுண்டி .
                                                                                                  நன்றி; -சீன உணவரங்கம்

=========================================================================
ராட்சத விண்கல்.
சுமார் ஆயிரம் மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை [28-03-2015]பூமிக்கு மிக அருகாக  கடக்க உள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த விண்கல்லுக்கு ‘2014 ஒய்.பி.35' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த விண்கல் மணிக்கு 23,000 கிமீ வேகத்தில் பூமியைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 இந்தக் கல் பூமியின் 28 லட்சம் மைல்களைக் கடந்து பயணிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சிறியதும் பெரியதுமான விண் கற்கள் அவ்வப்போது பூமியைக் கடந்து செல்வது வாடிக்கையாக நிகழ்வதுதான் என்றாலும், இந்த அளவு பெரிய விண்கல் பூமியைக் கடப்பது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் நிகழ்வு.
 23,000கிமீ வேகத்தில் வரும் இந்த விண்கல் பூமியில் மோதினால் இந்தியா அளவுக்குள்ள நாட்டையே அழித்துவிடக்கூடிய அளவுக்கு அதன்  மோதல்  இருக்கும். 
இந்த மோதலினால் நாடு அழிவதுடன் உலகில் பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.
அப்படி ஒன்றும் நேராமல் அந்த விண்கல் தனது பாதையில் போகட்டும்.
==========================================================================
=

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?