ஆகா ,,,,, வந்திருச்சு....,,,,!



இப்போதெல்லாம் கோடைக்காலம் என்றால் தமிழ் நாட்டு மக்கள் பயப்படுவதெல்லாம் கோடை வெப்பத்  தாக்குதலை / கடுமையாகத்தாக்கும் மின்தடையை எதிர்பார்த்துதான்.
கோடை வெப்பத்தை ஒரளவுக்கு தாங்க  தரும்,மின்விசிறி,ஏ.சி, குளிர்சாதன பெட்டிகளை இயக்க மின்சாரம் இல்லாமல் கோடையை மேலும் தாங்கக் முடியாததாக்கி விடும் என்ற பயம் தமிழகத்தில் உள்ள சிறு குழந்தைகள் வரை வந்துள்ளது.
வழக்கமாக கோடைக்காலம் வந்து விட்டாலே தமிழகத்தில் மின்தட்டுப்பாடு தலைதூக்கும்.
மின்வாரியத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் கடந்த 2008ம் ஆண்டு முதல் மின்தடை அமல்படுத்தப்பட்டது. குடியிருப்பு பகுதிக்கு சுழற்சி முறையில் மின்விநியோகம் செய்யப்பட்டது. அதாவது சென்னையில் இரண்டு மணி நேரமும் இதர மாவட்டங்களில் நான்கு மணி நேரம் மின் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மின் வெட்டை தவிர்க்க பல மின் திட்டங்களும் துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2011 ல் மூன்று மாதங்களில் மின் வெட்டை காணாமல் போக்குவதாக கூறி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் அறிவிக்கப்படாமல் பல மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது.
தொழிற்சாலைகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 90 சதவிகிதமும், மற்ற நேரங்களில் 40 சதவிகிதமும் மின்தடை செய்யப்பட்டது. இதன்காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. புழுக்கத்தில் மக்கள் அல்லல்பட்டனர்.
நான்கு ஆண்டுகளாகியும் இன்னமும் ஜெயலலிதா கூறிய அந்த மூன்று மாதங்கள் போகவில்லை.
ஏற்கனவே கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப் பட்ட மின் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து முடிப்பதற்குப் பதில் கருணாநிதி ஆரம்பித்த திட்டங்கள் என்ற காழ்ப் புணர்ச்சியில் அனைத்து திட்டங்களும் ஓரங்கட்டப் பட் டன.

மின் தட்டுப்பாடு அதிகரிக்கப் பட்டது.தொழிற்சாலைகள் மடங்கின.பலர் வேலை இழந்தனர்.மின்சாரமும் இல்லாமல்,வேலையும் இல்லாமல் தமிழ் நாடே இருளில் மூழ்கியது.இதை சமாளிக்க பல மடங்கு அதிகமாக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டது.
இதோ மீண்டும் வெயிற்காலம் .

இந்த ஆண்டு கோடைக்காலத்தில் ஏ.சி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக தமிழகத்தின் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட் என்று உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தின் மின் உற்பத்தி 12,170 மெகா வாட். மின் பற்றாக்குறையை சமாளிப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
தற்போது கிடைத்து வரும் மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்களில் ஏற்படும் தீ விபத்து, பாய்லர் டியூப் பஞ்சர் உள்ளிட்ட காரணங்களால் 2 ஆயிரம் மெகாவாட் வரை குறைவது வழக்கமாக இருக்கிறது.
ஒப்பந்தப்புள்ளி வரை சென்ற உடன் குடி திட்டம் மறை முகமான காரணங்களால் ஊத்தி மூடப்பட்டது.
அதற்கு வெளியெ மின்சாரம் வாங்குவதினால் ஏற்படும் பயன் [?] கிடைக்காது என்பது தான் உண்மையான காரணம் என கூறப்படுகிற து.
மின் பற்றாக்குறையால் இந்த ஆண்டும் கோடைக்காலத்தில் பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், ஆட்சியாளர்களும், மின்வாரிய அதிகாரிகளும் மின் தேவையை சமாளிக்க பல் வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலங்களிலிருந்து தனியார் மூலம் 3,330 மெகா வாட் மின் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.இதனால் த்மிழ் நாட்டுக்கு மட்டுமின்றி ஆள்வோருக்கும் நல்ல வெளிச்சம் கிடைக்குமாம்.
தற்போது 780 மெகா வாட் மின்சாரம் கிடைக்கிறது.
இன்னும் இரண்டு மாதங்களில் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதனால் இந்த ஆண்டு கோடைக்காலத்தில் மின் தடை அவ்வளவாக ஏற்படாது என்றுமின்வாரிய வட்டாரங்கள் நம்புகின்றன.

இதற்கிடையில் தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்.எல்.ஏ.க்கள் முன்வைத்த விவாதத்துக்கு முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்து பேசும்போது, '2011-ம் ஆண்டு அ.தி.மு.க அரசு பொறுப்பேற்ற பிறகு 4 ஆயிரத்து 640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வல்லூர் மூன்றாம் அலகிலிருந்து 350 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வுள்ளது. மேலும் 2 ஆயிரத்து 163 மெகாவாட் மின்சாரம் இன்னும் சில மாதங்களில் கிடைக்கும். இதன்காரணமாக மின்பற்றாக்குறை குறைக்கப்பட்டு மின்தேவை முழுவதையும் பூர்த்தி செய்யும் நிலையை எட்டிக் கொண்டு இருக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறார்.

இதைத்தானே ஜெயலலிதாவும் ,நத்தம் விசுவநாதனும் ஆட்சியில் அமர்ந்தது முதல் பல வார்த்தைகளில் சொல்லி வந்துள்ளார்கள்.
இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்றப்பகுதிகளில் அறிவிக்கப்படாமல் 2 மணி நேரம் மின்தடை செய்ய தொடங்கிவிட்டது மின்வாரியம்.
இதுகுறித்து மின்வாரியத்திடம் கேட்டால் மழுப்பலான பதில் கிடைப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் மின் தடை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கு ஏற்ப வேறு வழியின்றி மக்க ளும் வாழப் பழகிக் கொண்டார்கள்.

கடந்த ஒருவாரம் காலமாகஅடிக்கடி மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளரிடம் கேட்டால், மின்தடைக்கு பதில் சொல்லாமல் மீன் விலை ஏறி  விட்டதாக கேட்டது போல்   வேறு ஏதோ தகவலை சொல்லி வருகிறார்கள்..

மின்கட்டணத்தை உயர்த்துவது மட்டுமல்ல, மின் உற்பத்தியையும் அதிகரிப்பதும் தங்கள் வேலைதான் என்பதை மின்வாரியம் உணருமா?அதற்கு மின் உற்பத்தி நிலையங்களைத் துவக்காமல் துவக்கப்பட்ட திட்டங்களையும் மூடி வரும் இவர்கள் ஆட்சி முறை சரிவருமா?இன்னமும் மிச்ச காலத்தையும் வெளியெ மின்சாரம் வாங்கியே சமாளித்து விடலாம்.அதன் பின் வரும் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் .என்ற அளவுக்கு அதிக நம்பிக்கைதான் இவர்களுக்கு.
வெளியெ மின் சாரத்தை  அளவுக்கு அதிக விலை கொடுத்து வாங்கும் பணத்தில் கிடைக்கும் "பலனை" வைத்து வாக்குக்கு 1000 கொடுத்தால் வாயை மூடி வாக்களிக்கும் தமிழக கைப்புள்ள மக்களைப் பற்றியும் இவர்களுக்கு அளவுக்கு அதிக நம்பிக்கைதான் .
இந்த அளவு நம்பிக்கையில் பாதியாவது " இந்த கோடையும் கடந்து போகும்" என்று நம க்கு  இருக்க வேண்டும்.
"வேறு வழி?"

==========================================================================

                                                                                                                                  

===============================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?