அசிங்கம். இந்தியாவுக்கு்தான்.!

மோடி அரசு நேப்பாள பூகம்ப நிவாரணத்துக்கு உதவிய கதை.

பூகம்பம் என அறிந்ததும் நிவாரணப் பொருட்களையும் மீட்புப் படையையும் மத்திய அரசு அனுப்பியது மிக நல்ல செயல்.நல்ல செயல் மட்டுமல்ல.கண்டிப்பாக செய்ய வேண்டிய மனிதாமிமான  செயல்.. 
யார் ஆட்சி செய்தாலும் இதனையே செய்வர்.
அதுவும் நேபாளம் அண்டை நாடு .

இதுவே நமது மற்றும் உலக பாரம்பரியம்.

இந்த உதவிகளை மோடி ஒன்றும் தனது தயாள குணத்தினால் புதிதாக
ச் செய்துவிடவில்லை . தனது ,அல்லது கட்சி காசிலும் செய்யவில்லை.
ஆயினும் மோடி பஜனை பாட அப்போதே துவங்கிவிட்டன ஜால்ரா ஊடகங்கள்.

மோடி சொந்தத் தாயைப் பார்க்கப் போகும்போதுகூட காமிராமேன்கள் சகிதம் செல்வதும்,அங்கு தாயைப்பார்க்காமல் காமிராவிற்கு போஸ் கொடுப்பதும் கூட  புதிதல்ல.இந்திய மக்கள் அனுபவம்தான்.தன்னை எங்கு சென்றாலும் முன்னிளைப்படுத்துவதுதான் மோடி செய்யும் முதல் காரியம்.தன விளம்பர வெறியர்.
மோடி.
 இங்கே நேபாளத்துக்கு மீட்புப் படையோடு தனது ஜால்ரா ஊடகப்படையையும் அனுப்பினார்.

அது சும்மா இருக்குமா?

மீட்கப்பட்டவரிடம் மூச்சு விடவே சிரமப்படுவோரிடம் மோடி புராணம் பாட நிர்பந்தித்தது.

மோடி இல்லாவிட்டால் தாங்கள் உயிர் பிழைத்திருப்பது இயலாதது.அவர்தான் கடவுள் போல் வந்து காப்பாற்றினார்.என்று சொல்ல வைக்கப்பட்டார்கள்.சொல்ல வற்புறுத்தப் பட்டார்கள்.

மெகாசீரியல் போல் பரபரப்பு ஊட்ட கேள்விகேட்டது.
 இப்போது இந்த மோடி புகழ் பேச்சு நிலநடுக்கத்தால் நொந்து போன நேபாள மக்களுக்கு நீரோ மன்னன்  பிடில் ஆசித்த கதையை நினைவுக்கு கொண்டுவர மனம் நொந்த நேப்பாளியர் “இந்திய ஊடகங்களே திரும்பிப் போ” என முழக்கமிட ஆரம்பித்து விட்டனர்.

அதுமட்டுமா இன்னும் பல கூத்துகள் இந்திய அரசுக்கு எதிராக அரங்கேறின.
ஸ்ரீகருடாழ்வான் என்கிற பெயரில் முகநூலில் உலவும் பாஜக பிரச்சாரகரே மனம் நொந்து என்ன எழுதுகிறார் பாருங்கள்:

“மோடி நிர்வாகம் இப்போது நேபாளத்தில் செய்து வரும் உதவியை, மோடியை முன்னிறுத்தி விளம்பரப்படுத்தப்படுவதால்,இந்திய ஊடகங்கள் மேல், நேபாள மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்..
”இதில், மோடியின் பொது ஜனத் தொடர்பு இயந்திரமும் அசிங்கப்பட்டிருக்கிறது..‘நாங்கள் இந்தியாவை, இந்திய மக்களை மதிக்கிறோம்.
ஆனால், எங்களைக் கேவலமாகச் சித்தரித்து இந்திய ஊடகங்கள் விளம்பரம் தேட நினைப்பது கண்டு அவமானப்படுகிறோம்.
இந்திய ஊடகங்களைக் கண்டிக்கிறோம்..’ என்று கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்..
சுருக்கமாகச் சொன்னால், ‘நேபாளத்துக்கு இந்திய அரசு  உதவி கூட, மோடி என்னும் தனி நபர் விளம்பரத்துக்காக... வாக்கு வங்கிக்காக’
என்று அந்த  நேபாள  மக்கள் எண்ணத் தொடங்கி விட்டார்கள்.

 இதில் தாமரையும் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டிருக்கிறது...இப்படி விஷயம் பூமராங் ஆகிவிட்டதால் மோடிகளின் சீடகோடிகளே செய்வதறியாது கைபிசைந்து நிற்கின்றனர்.விளம்பர ஆசை எதிர் வினை அசிங்கமாக ஆகிவிட்டது.

 இது மட்டுமா?
இதானால் மோடி என்ற விளம்பர வெறியரால் உண்மையில் உதவிய இந்திய மக்களுக்கும், இடிபாடுகளுக்கிடையே சேவை செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கும் அசிங்கம் உண்டாகி விட்டது.நம் ராணுவ வீரர்களின் நல உதவிகள் முன்புதான் இந்தியாவே நேபாளத்தை விட்டு வெளியேறு குரல்கள் எழுப்பப்படுகின்றன.

செய்தும் கெட்டப்பெயர் இந்தியாவுக்கு.இதை தேடி தந்தது மாண்புமிகு விளம்பர பிரதமர் மோடி யின் தன்னிலை கோயபல்ஸ் விளம்பரம் தான்.

மாட்டுக்கறி சாப்பிடும் ராகுல் கேதர்நாத் கோயிலுக்குப் போனதால்தான் இந்த பூகம்பம் என விஞ்ஞானிகள் நிறைந்த  பாஜக கட்சியின் எம்.பி. சாட்சி மகராஜ் மாபெரும் “அறிவியல் கண்டுபிடிப்பை” வெளியிட்டார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் மாட்டுக்கறி சாப்பிடுவதால்தான் பூகம்பம் என தத்துவ மழை பொழிய மூளை உள்ள அனைவரும் எள்ளி நகையாடலானார்கள்.

இந்தியாவுக்கு அப்போதே தலைகுனிவு தொடங்கிவிட்டது.
பாகிஸ்தான் தான் அனுப்பும் நிவாரணப்பொருட்களில் மாட்டுக்கறியை அனுப்பி இந்து நாடான நேபாளத்தை அசிங்கப்படுத்துவதாக இந்திய ஊடகங்கள், சமூகவலைதளங்களில் ஒரு செய்தி வெளியிட்டன.

ஆனால் கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டுமணி நேரத்தில் தக்குமுக்கு தாளமானது.
நேப்பாள அமைச்சர் ஊடகவியலாளர்களைச் சந்தித்து விளக்கம் சொன்னார். பாகிஸ்தான் அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ரொட்டி, தயிர், ரசம், வெண்ணை உட்பட பல பொருட்கள் இருந்தன. மசாலா கலந்த மாட்டுக்கறியும் இருந்தது.

எல்லாம் தரமாக இருந்தன. எங்கள் மக்கள் அவற்றை விரும்பி உண்டனர். நாங்கள் அதுபோல் மேலும் உணவுப்பொட்டலங்கள் அனுப்புமாறு கோரியுள்ளோம் என்றார்.

ஏனெனில் நேப்பாள மக்களில் சுமார் 25 விழுக்காட்டினர் தலித்துகள்.
 மேலும் நேப்பாள நாட்டிலும் மாட்டுக்கறி உண்போர் கணிசமானோர் ஆவர்.
அண்மையில்தான் நூற்றுக்கணக்கான மாடுகளை பலியிடும் திருவிழா நேப்பாளில் நடந்தது. 
பலியிட்ட மாடுகளை தின்றனர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அடுத்து மேற்குநாடுகள் பூகம்பம் நடந்த பகுதியில் பைபிள்களோடு மதத்துக்கு ஆள் பிடிக்க அலைவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு மோடிக்கு விசிறிவிட்டன .
ஆனால் அச்செய்தி பொய் என்பதும் ஒரு ஏட்டில் மேற்கு நாடுகள் போதுமான உதவி செய்யவில்லை என்பதை விமர்சிக்க ஒரு வெளிநாட்டு ஆங்கில ஏடு வெளியிட்ட நையாண்டிக் கட்டுரையே என்பதும் ; அதனையே மெய்போல் சித்தரித்து மோடியின் ஜால்ரா ஊடகங்கள் செய்த விஷமப் பிரச்சாரம் அது என்ற உண்மை வெளியானது.

இப்போது கப்சிப்.அண்மையில் ஏமனில் பிரச்சனை ஏற்பட்ட போது அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது.

உடனே மோடியின் சாகசம், சாதனை என ஜால்ரா ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக்கின.

ஆனால் இதற்கு முன்பு ஈரானில், இராக்கில், லிபியாவில் என பலநாடுகளில் உள்நாட்டுக் கலவரம் மூண்டபோது அல்லது தாக்குதல் நடந்த போது இந்தியர்களைப் பத்திரமாக மீட்டுவந்ததுண்டு. 
யார் ஆண்டாலும் அதனைச் செய்தாக வேண்டும். செய்தார்கள்.

உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கிய குஜராத் மக்கள் பத்தாயிரம் பேரை
ஒரே நாளில் போக்குவரத்து வசதியே இல்லாத நிலையில் மோடியே மீட்டதாக ஒரு பொய்யைப் பரப்பிவிட்டார்கள்.

தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தினமலர் ரொம்ப விறு,விறுப்பாக மோடியின் செயல் திறத்தை எழுதி குவித்தது. ஆனால் விமானம்,வாகனங்கள் போக வசதியில்லா இடத்தில் இருந்து மோடி  காப்பாற்றினார் என்று
  கொஞ்சம் யொசிக்கத்தரிந்தவ்ர்கள் தாங்கள் தங்கள் மாநில மக்களை அப்படி காப்பாற்றப் போகிறோம்
என்று மோடியை நோக்கி
கிடிக்கிப்பிடி கேள்விகள்
எழுந்ததும் .

 “ நான் அவனில்லை”தவறான செய்தி என்று மூச்சு கூட விடாமல்  என நழுவி ஓடியதும் மறக்க முடியுமா ?

பூகம்பத்தில் சிக்கி மீட்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான நிமிஷ் சிரீவஸ்தவா கூறுவதைக் கவனியுங்கள். 
“பாதிப்புக்குள்ளான நேபாள மக்களை கும்பலாக நிறுத்தி அவர்களை “மோடி, மோடி” என்று கோஷமிடச் செய்து இந்திய ஊடகவியலாளர்கள் அந்தக் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டார்கள்” என்கிறார் அவர்.
 “மீட்கப்பட்ட ஒவ்வொரிடமும் மோடியின் இரக்க குணம் பற்றி கேட்டு அவற்றைப் பதிவு செய்து கொண்டதாக”வும் தெரிவித்துள்ளார். 
அதே சமயம், “மீட்புப் படை தாமதமாக வந்ததாக வேதனையுடன் 
சிலர் தெரிவித்த கருத்துக்களை கத்தரித்து விட்டார்கள்” 
நிவாரணப்பணிகளில் இந்தியா முன்னணியில் இருப்பது தெரிய்ம்.ஆனால் ஒவ்வொரு நிவாரண பொட்டலத்திலும் உங்கள் போட்டோவை போட்டிருக்கிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா  மோடி?
துக்க வீட்டிலும் ஆதாயம் தேட கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்யும் வெட்கமற்ற மோடியைக் கண்டு உலகம் சிரிக்கிறது. அதானால் அசிங்கம் அவருக்கு மட்டுமல்ல.அவரை பிரதமராகக் கொண்ட இந்தியாவுக்கும்தான்.இன்று நெபாள மக்கள் இந்தியவே வெளியேறு என்று குரல் எழுப்பும் படி செய்து விட்டாரே நம் விளம்பர பிரதமர் 10லட்சம் சட்டை புகழ் மோடி..
இதனால் உலக அரங்கில் தலை குனிவு மோடிக்கா இல்லை இந்தியாவுக்குத்தானே.
இதற்குத்தான் ஆசைப்பட்டீர்களா மோடி அவர்களே .
இந்த அனுபவத்துக்குப்பின்னராவது உங்கள் மண வீட்டுக்கு சென்றால் மாப்பிள்ளை, சாவு வீட்டுக்கு சென்றால் பிணம் என்று எல்லோரும் தன்னையே கவனிக்க வேண்டும் என்று  செயல்படும்  விளம்பர வெறியை கொஞ்சம் தணித்துக்கொள்ளுங்கள்.
வேறென்ன சொல்ல!
வெள்ளத்தில் சிக்கிய குஜராத் மக்கள் பத்தாயிரம் பேரை
ஒரே நாளில் போக்குவரத்து வசதியே இல்லாத நிலையில் அன்றைய குஜராத் முதல்வர் மோடி தனது செயல் திறத்தால் மீட்டதாக ஒரு பொய்யைப் பரப்பிவிட்டார்கள்.ஆனால் அப்புளுகு இரண்டே நாளில் உடைந்து விட்டது.
========================================================================

இன்று,

மே-07.

  • உலக ஆஸ்துமா நோய் தினம்.
  • நார்வே தேசிய தினம்
  • வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்(1861)
  • சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் இறந்த தினம்(1539)
  • ஐரோப்பிய அமைப்பு உருவாக்கப்பட்டது(1948)
========================================================================

நோபல் பரிசுக்கு கடும் போட்டி.


ஐன்ஸ்டீன் ,டார்வின்,எடிசன் என்று அறிவாளிகள் ,கண்டு பிடிப்பாளர்கள் மேலை நாடுகளில் தோன்றினார்கள்.
அப்போது இந்தியாவில் இருந்து சந்திர போஸ் பொன்று சிலர்தான் இங்கொன்றும்,அங்கொன்றுமாக  தென்பட்டார்கள்.
அதனால் ன்பால் பரிசு பெரும்பாலும் மேலை நாடுகளில் பங்கு போடப்பட்டு விட்டன.
ஆனால் இன்று இந்திய நிலை வேறு. இன்று இந்தியாவில் இருக்கும் அறிவியலாளர்கள்,கண்டு பிடிப்பாளர்கள் வரிசை எண்ணி மாளாது.அதிலும் அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட கட்சியிலேயே இருப்பது மேலும் உலக அதிசயம்.
நோபல் பரிசாளர்கள் அனைவருக்கும் கொடுக்க முடியாமல் கடையை மூடும் நிலை உண்டாகிவிட்டது என்பதுதான் இந்திய உண்மை.
மாட்டுக்கறி தின்று விட்டு போனதால் பூகம்பம்,ராமர் கட்டிய பாலம் இடிபட்டு போக்குவரத்து முடமாகி விடக்கூடாது என்பதால் சேது சமுத்திர திட்டம் முடக்கம்,பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விமானம் கண்டு பிடிப்பு ,குளோனிங்கில் கவுரவர்கள் உருவாக்கல்,பிள்ளையாருக்கு தலையை மாற்றி அறுவை சிகிச்சை இந்த வரிசையில் முன்னாள் பாஜக தலைவர் தனது மாபெரும் கண்டு பிடிப்பை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் உலகில் உணவு தானியங்கள் பற்றாக்குறையே ஒரு முடிவுக்கு வரும்.செடிகள்,மரங்கள் எல்லாம் முன்னைவிட சில அடிகள் உயரமாக வளரும்.மழை,ஆற்று நீரை பயிரிட நாம் இனி எதிர்பார்க்க வெண்டிய அவசியம் இல்லை.
ஒவ்வொருவரும் தனது வீட்டிலேயே காய்கறி,அரிசி,கோதுமை பயிரிட்டு உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
இதன் மூலம் மோடியின் விவசாய நிலம்  பறி ப்பு,ரியல் எஸ்டேட்
சட்டங்களை தாராளமாக நிறைவெற்றைடலாம்.
என்ன அலுவலகம் சென்று விடுபவர்கள் கையில் பாலிதின் பையை கொண்டு போக வேண்டிவரும்.பின்னே அங்கே வைத்து வரும் ஆத்திரத்தையும்,மூத்திரத்தையும் அடக்க முடியுமா என்ன?
ஆத்திரம் போனாலும் மூத்திரம் வீட்டுக்கு கொண்டுவரலாமே?
இனி  அறிவியலார் நிதின் கட் காரி கண்டு பிடிப்பு
வறட்சியை சமாளிப்பது எப்படி என்பது குறித்து பாஜக சார்பில் நாக்பூரில் பயிலரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்த பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றியவர் அந்த ஊரைச்சேர்ந்தவரும் மத்திய  அமைச்சருமான நிதின் கட்காரி.
இவர் மத்திய அமைச்சரானவுடன் புதுதில்லியில் முக்கியமான விஐபிக்கள் வசிக்கும் மோதிலால் தெருவில் இலக்கம் எண் 2ல் உள்ள மிகப்பிரமாண்டமான பங்களா ஒதுக்கப்பட்டது. இந்த பங்களாவில்தான் கடந்த 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தேசிய ஆலோசனை குழுத் தலைவராக இருந்த சோனியா காந்தியின் அலுவலகமும் செயல்பட்டுவந்தது.
விஷயம் இந்த பங்களா பற்றியது அல்ல. அந்த பங்களாவில் உள்ள செடி மற்றும் மரங்களை பற்றியது.பாஜக பயிலரங்கில் பேசிய கட்காரி, நாள்தோறும் தமது சிறுநீரை ஒரு பிளாஸ்டிக் பையில் பிடித்து அதை 50 லிட்டர் கேன் ஒன்றில் சேகரித்து வைத்து பங்களாவில் உள்ள தோட்டக்காரரிடம் அளிப்பாராம். அதை அனைத்து செடி மற்றும் மரங்கள் மீது தெளிக்குமாறு அந்த ஊழியரிடம் கூறினாராம்
[50லிட்டர் கேனா.அமைச்சர் அல்லவா இருந்தாலும்,இருக்கலாம்.?]
அந்த ஊழியரும் அப்படியே தெளித்தாராம். இப்படி தெளித்த பின்னர் ஒரு வாரத்தில் அந்த செடிகளும் மரங்களும் நன்கு வளரத் தொடங்கியதாம். மற்ற மரங்களை விட சிறுநீர்தெளிக்கப்பட்ட மரங்கள் ஒன்றரை அடி உயரமாக வளர்ந்ததாம்.
அமைச்சரின் பேச்சு ஏபிபி மஜ்ஜா என்ற மராத்திய செய்தி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியுள்ளது. இது யூ டியூப்பிலும் இடம் பெற்றுள்ளது. பயிலரங்கில் கலந்துகொண்ட பாஜக தொண்டர்களை இனி உங்களதுசிறுநீரை வீணாக்காமல் அதை யூரியா போன்றும் இயற்கை உரம் போன்றும் பயன்படுத்துமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். ஆரஞ்சு செடிக்கு ஊற்றினால் அது நல்ல விளைச்சலைதரும் என்றும்கூறினார். (நாக்பூரை சுற்றி அதிகமான அளவில் ஆரஞ்சு விளைவிக்கப்படுகிறது )அமைச்சரின் இந்த பேச்சு சமூக வளைத்தளங்களில் பலவிதமான கருத்துக்களுடன் சக்கை போடு போடுகிறது. “ அடுத்த முறை கட்காரி தனது பண்ணை வீட்டில் இருந்து பழங்களை யாருக்காவது கொடுத்தால் அவர்கள் அதை சாப்பிடும்முன்பு ஒன்றுக்கு இரண்டு தடவை யோசிப்பார்கள்’’ என்று ஜெ.கோபிகிருஷ்ணா என்பவர் கூறியிருக்கிறார்.
“கட்காரி அளித்த இரவுவிருந்தில் கலந்துகொண்ட இந்தியாவுக்கான அமெரிக்க தூதர், ‘விருந்தில் பரிமாறப்பட்ட காய்கறி சாலட்டில் இடம்பெற்ற காய்கறிகள் அவரது பண்ணைவீட்டில் விளைவிக்கப்பட்டவையா? ’’ என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனு போட்டிருப்பதாக மற்றொருவர் நகைச்சுவையுடன் பின்னூட்டம் போட்டிருக்கிறார்.மற்றொருவரோ ‘கிராமப்புறங்களில் நாங்கள் சிறுவயதில் பள்ளி முடித்துவிட்டு வீடுதிரும்பும்போது சக மாணவர்களுடன் செடிகள் மீது சிறுநீர்கழித்திருக்கிறோம். அப்போது தோட்டக்காரன் அடிக்கவரும்போது, ‘உங்களது செடிகள் தண்ணீர் இல்லாமல் வாடியிருக்கிறது. அது துளிர்ப்பதற்காக தண்ணீர் ஊற்றுகிறோம்’’ என்று கிண்டலாக கூறி அடிவாங்கியதுண்டு.
பாவம் படிப்பறிவு இல்லாத அந்த தோட்டக்காரனுக்கு தெரியாது நாங்கள் கழித்தது சிறுநீர்அல்ல; யூரியா என்பது. தற்போது இதனை உலகிற்கு அறிவித்த அறிவுஜீவி கட்காரி அண்ணனுக்கு நன்றிகள் பல என்று கூறியுள்ளார்.
இனி மனித சிறுநீரை சேமிக்க அனைத்து இடங்களிலும் பூத் அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று இன்னொருவரும் கிண்டலாக கூறியிருக்கிறார்.
குடிக்க தண்ணீர் இல்லை.சிறுநீருக்கு எங்கே
போவது என்றெல்லாம் சொல்லக்கூடாது.
கட்காரி கண்டுபிடிப்பு பற்றி ஒரு சந்தேகம்?
சிறுநீர் கழித்தால் செடிகள் அமோகமாக வளரும் என்றால் சென்னையில் ஒவ்வொரு ட்ரான்ஸ்பார்மர் அருகிலும் காடுகள் உண்டாகியிருக்க வேண்டுமே .அப்படி ஒன்றும் இல்லையே?ஒரு வேளை இந்த கார்ப்பரேசன் காரர்கள் மூளையிலேயே கிள்ளி எறிந்து விடுகிறார்களோ?
மத்திய அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சர், அரசு அலுவலகங்களில் உள்ள கழிப்பறைகளில் பினாயிலுக்கு பதில் பசு மூத்திரத்தை ( அவர்கள் பாஷையில் கோமியம்) பயன்படுத்துங்கள் என்கிறார். மற்றொரு மத்திய அமைச்சர் மனித சிறுநீரை பயிர்களுக்கு பயன்படுத்துங்கள் என்கிறார். மேலும் பல மத்திய அமைச்சர்கள் பல விதமான பரிசோதனைகளில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் மேலும் பல புதிய கண்டுபிடிப்புகள் வெளிவந்தால் யாரும் ஆச்சரியமடைய வேண்டாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?