வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியை பெறுவது ?

இந்தியாவில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களில், ஆர்.எஸ்.எஸ்.-தான், வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியைப் பெறுகிறது என்றதகவல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு வெளியிட்ட அறிக் கையின் மூலம் தெரியவந்துள்ளது.
இப்படி வெளிநாடுகளில் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டு, இந்தியாவில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் வேலையை ஆர்எஸ்எஸ் செய்து வருவதாகவும் கூறியுள்ள அந்த பிரச்சார அமைப்பு, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்-க்கு நிதி அளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வமைப்புகள் வெளிநாடுகளின் நிதியைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுவதாகஉளவுத்துறை மூலம் குற்றம் சாட் டப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டதுடன், பணப் பரிவர்த்தனைகளும் முடக்கப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானநிதியைப் பெறுவது ஆர்எஸ்எஸ் தான் என்ற உண்மையை, “அமெரிக் காவில் ஆர்எஸ்எஸ்க்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள்” என்ற பிரச்சார அமைப்பின் அறிக்கை வெளிச்சத் திற்கு கொண்டு வந்துள்ளது.
 மேலும்இந்த உண்மையை இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
பல கார்ப்பரேட்டுகள் சுரங்கங்கள் தோண்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைவது குறித்தும் மரபணுமாற்றுப் பயிர்களினால் விவசாயம் அழிந்து விடும் ஆபத்து குறித்தும் அரசு சாரா அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
 இவை கார்ப்பரேட்டுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. 
அதைத்தொடர்ந்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்திய உளவுத்துறை அமைப்பினால் தயாரிக்கப்பட்ட 21 பக்க அறிக்கையானது, சுற்றுச்சூழல், கட்டுமானத் தொழிலாளர் கள்துறை மற்றும் மனித உரிமை தளங்களில் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறியது.
உளவுத்துறையின் இந்த அறிக்கையை சாக்காக வைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டன.
ஆனால், இந்தியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளிலேயே அதிகமாக அந்நிய பணம் பெறுவது ஆர்எஸ்எஸ்தான் என்பதை உளவுத்துறை திட்டமிட்டு அறிக்கையில் விட்டு விட்டதாக, அமெரிக்க பிரச்சார அமைப்பு வந்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டிலேயே “வெறுப்பு அரசியலை வளர்ப்பதற்காக அந்நிய நிதி” என்ற தலைப்பில், ஆர்எஸ்எஸ் தனது இந்துத்வா திட்டத்திற்காக பெறும் அந்நிய நிதி குறித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, “வெறுப்பு அரசியலுக்கு அளிக்கும் நிதியை நிறுத்து” என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு மூலம் வெளியிடப்பட்டது.
இந்தியாவின் வளர்ச்சிக்கும் தொண்டு பணிகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் அளிக்கப்படும் அமெரிக்காவின் நிதி, எப்படி ஆர்எஸ்எஸ்ஸின் சங் பரிவார அமைப்புகளின் வெறுப்பு அரசியலைப் பரப்ப பயன்படுகிறது என்பதை ஆதாரப்பூர்வ மாக அந்த அறிக்கை முன்வைத்தது.
பலலட்சம் கோடி டாலர்கள் ஆர்எஸ்எஸ்அமைப்புகளுக்கு சென்றுள்ளதை யும் அந்த அறிக்கை அம்பலப்படுத் தியது.
இந்த அறிக்கையின் அடிப்படை யில்தான், மோடிக்கு அமெரிக்காவில் நுழையவே விசா மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
ஆனாலும் இன்றுவரை இவ்வாறான நிதி ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
நாட்டில் அரசு சாரா அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும் இந்த சூழலில், ஆர்எஸ்எஸ்-ஸின் அந்நிய நிதி பின்னணிகுறித்தும்- அதன் சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும், சிபிஐ-யின் உயர்மட்ட உளவுத்துறை அமைப்பை வைத்து, நரேந்திரமோடி அரசு விசாரிக்குமா? 
அந்த விசாரணை விவரங்களின் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் மீது நடவடிக்கை எடுக்குமா? 
-என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.
பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஸின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் முழுநேர ஊழியராக கடந்த1971-லிருந்து செயல்பட்டு வருகிறார். 
அவருக்கு இந்த வெளிநாட்டு நிதியிலிருந்துதான், இவ்வளவு காலமாக வும் முழுநேர ஊழியருக்கான ஊதியம் வழங்கப்பட்டது. 
அதன்மூலம் அரசியலில் வளர்ந்து இன்று பிரதமராகவும் ஆகிவிட்டார். அப்படியிருக் கையில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறும் ஆர்எஸ்எஸ் மீது, மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?
இன்று சென்னையில் ஓட்டம் காணும் மெட்ரோ ரெயில்ஆரம்ப  ஆயத்தப்பணிகளில் அன்று ஆய்வு செய்யும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஆரம்பித்தவர்கள் பெயர்களை காணோம்.வரலாற்றில் மெட்ரோ வேண்டாம் .மோனோ கொண்டுவரப்போறேன் என்றவர் பெயர் ஆரம்பித்து கொடியசைத்தவர் என்று வரும் அவலம்.
========================================================================
இன்று,
ஜூன்-29.
  • செஷெல் விடுதலை தினம்(1976)
  • வான்கூவர் தீவில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது(1850)
  • பிரின்ஸ் எட்வர்ட் தீவு, ஜாக் கார்ட்டியர் என்ற ஐரோப்பியரால் கண்டுபிடிக்கப்பட்டது(1534)
  • அட்லாண்டஸ் விண்ணோடம், ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையத்துடன் முதல் முறையாக இணைந்தது(1995)
=======================================================================

பிரபல இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் (87) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
======================================================


அவசர நிலை [எமர்ஜென்சி ]காலமும் 
கலைஞரின் சாதுர்யமும்.
- நக்கீரன்.
இந்தியாவில் நெருக்கடி நிலை நடைமுறைப்படுத்தப்பட்ட 40வது ஆண்டு இது. அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றி செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அதை மீறி பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காக 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலையை நாடு முழுவதும் அவர் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெருந்தலைவர் காமராஜர் போன்ற மூத்த தலைவர்கள் இத்தகைய நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதே ஆண்டு அக்டோபர் 2ல் பெருந்தலைவர் மரணமடைந்தார்.
இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக எமர்ஜென்சி காலத்தைக் கூறலாம். அப்போது தமிழகத்தில் ஆட்சியிலிருந்த கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு, இந்த நெருக்கடி நிலையை எதிர்த்தது. இதற்காக கடற்கரையில் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றியது. இதன் காரணமாக 1976ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் நாள் தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கலைத்தது. அன்றிரவே தமிழகத்தின் பல பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட தி.மு.கவினர் கைது செய்யப்பட்டனர். (தி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம் கட்சிகளைச் சேர்ந்த முன்னணியினரும் கைது செய்யப்பட்டனர்)
பிப்ரவரி 1ந் தேதி கலைஞரின் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் படை, மு.க.ஸ்டாலினை கைது செய்தது. திருமணமாகி 5 மாதங்களே ஆன நிலையில் மனைவி கண்கலங்கி நிற்க, ‘மாமியார் வீட்டு’க்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து முரசொலி மாறனும் கைது செய்யப்பட்டார். ஆற்காடு வீராசாமி, சிட்டிபாபு, நீலநாராயணன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலரும் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தி.க. தலைவர் கி.வீரமணியும் அதே சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டார். வைகோ உள்ளிட்ட தி.மு.கவினர் பலரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இரவு நேரத்தில் லாக்கப்பைத் திறக்கக்கூடாது என்பது சிறை விதி. அதை மீறி சென்னை மத்திய சிறையின் லாக்கப் கதவுகள் திறக்கப்பட்டன. காவலர்கள் தடியுடன் சென்று மிசா சிறைவாசிகளைக் கடுமையாகத் தாக்கினர். மு.க.ஸ்டாலின் மீதுதான் கொலைவெறியுடன் தாக்குதல் நடந்தது. அவரைப் பாதுகாப்பதற்காக குறுக்கிட்ட சிட்டிபாபு கடுமையான தாக்குதலுக்குள்ளாகி பின்னர் மரணமடைந்தார். தாக்குதலில் ஆற்காடு வீராசாமியின் காது திறனிழந்தது. முரசொலி மாறனின் முதுகுப்பகுதியில் கடுமையான தாக்குதல். கி.வீரமணியையும் பலமாகத் தாக்கினர். இவர்களைப் போலவே மதுரை சிறையில் தாக்குதலுக்குள்ளான தி.மு.க பிரமுகர் சாத்தூர் பாலகிருஷ்ணன் மரணமடைந்தார்.
தமிழகம் முழுவதும் கைதானவர்களை எந்த சிறையில் வைத்திருக்கிறார்கள் என்ற விவரம்கூட வெளியிடப்படவில்லை. தி.மு.கவினரைப் பற்றிய விவரத்தைத் தெரிவிக்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என அறிவித்து, அண்ணாசாலையில் (மவுண்ட் ரோடு) நடந்தபடி துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தார் கலைஞர். (அவற்றை அச்சிடவும் முடியாதபடி நெருக்கடி நிலை இருந்தது- கையால் எழுதி, சைக்ளோஸ்டைல் எனும் முறையில் அச்சில் உருட்டி நகல் எடுக்கவேண்டும். மு.க.அழகிரியும் கோபாலபுரத்தில் இருந்த தி.மு.கவினரும் இந்த வேலையை செய்திருந்தனர்). கலைஞரின் இந்தப் போராட்டத்திற்குப் பிறகே சிறையில் உள்ள தி.மு.கவினரைக் குடும்பத்தினர் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தது. ரத்த உறவுகள் மட்டுமே சந்திக்க முடியும் என்பதால் கலைஞரால் ஸ்டாலினை மட்டுமே பார்க்க முடிந்தது.
கலைஞரின் வீடு, முரசொலி அலுவலகம் என அனைத்தும் சோதனைக்குள்ளாயின. அவரது குடும்பத்து உறுப்பினர்களையும்கூட போலீசார் விட்டுவைக்கவில்லை. கலைஞரைப் பார்ப்பதற்கு வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வரும் தொண்டர்களையும் போலீசார் மிரட்டத் தொடங்கினர். அன்றைய தி.மு.க தொண்டர்கள் இதற்கெல்லாம் மிரண்டவர்களா என்ன? திருப்பதிக்கும் திருத்தணிக்கும் யாத்திரை செல்வது போல வாகனம் பிடித்துக்கொண்டு, குடும்பத்து உறுப்பினர்கள் சிலரை மொட்டைப் போடவும் வைத்து, சந்தனம் தடவிய மொட்டைத் தலையுடன் வாகனத்தை சென்னை கோபாலபுரத்திற்குள் விட்டு கலைஞரைத் ‘தரிசித்து’விட்டுத்தான் போவார்கள்.
பத்திரிகைகளில் செய்தி வெளியிட வேண்டுமென்றால் அது சென்சார் செய்யப்பட்டபிறகே அனுமதிக்கப்படும். சென்சார் செய்யும் பொறுப்பில் இருந்தவர்களோ ராஜாவை (இந்திராணியை) மிஞ்சிய ராஜவிசுவாசிகள். ஆட்சிக்கு எதிராக ஒரு வார்த்தைகூட இருக்கமுடியாது. அதுமட்டுமல்ல.. பெருந்தலைவர் காமராஜர் என்று எழுதினால் பெருந்தலைவரை கட் செய்துவிடுவார்கள். அறிஞர் அண்ணா என்று எழுதினால் அறிஞரை கட் செய்வார்கள். தந்தை பெரியார் என்ற பெயரை எழுதவே முடியாது. இந்திரா அரசுக்கு எதிராக இருந்த முரசொலி, விடுதலை, துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகள் கடும் நெருக்கடிக்குள்ளாயின.
எதையும் எழுத முடியவில்லையே என கடுப்பான கலைஞர் 1976ஆம் ஆணடு மார்ச் 2ந் தேதி நாளேட்டின் முதல் பக்கத்தில் இப்படித் தலைப்பிட்டார். “வெண்டைக்காய் உடலுக்கு நல்லது. இரஷ்யாவிலிருந்து திரும்பிய ஆதிலெட்சுமி ஆராய்ச்சி”
எங்கே வெட்டு பார்ப்போம் என்று சென்சார் அதிகாரிக்கு சவால் விடுவது போன்ற தலைப்பு இது. இதைவிட முக்கியமான ஒன்று உண்டு.
பிப்ரவரி 3ந் தேதி அண்ணாவின் நினைவு நாள். மறுநாள் முரசொலியில், ‘அண்ணா துயிலுமிடத்திற்கு வர இயலாதோர் பட்டியல்’ என்ற தலைப்புடன் யார், யார் வரவில்லை என்பது வெளியாகியது. பொதுவாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்களின் பட்டியல்தான் வெளிவரும். வராதவர்களின் பட்டியலை வெளியிட என்ன அவசியம்? அங்கேதான் இருக்கிறது கலைஞரின் சாதுர்யம்.
எமர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தில் கைதாகி சிறைப்பட்ட தி.மு.கவினர் யார் யார் என்பது சக கட்சிக்காரர்களுக்கே சரியாகத் தெரியாது. அதனை வெளிப்படையாக வெளியிடவும் முடியாது. அதனால்தான் சிறைப்பட்டிருந்தவர்களின் பெயரை ‘அண்ணா துயிலுமிடத்திற்கு வர இயலாதோர் பட்டியல்’ என வெளியிட்டார் இரண்டு, மூன்று நாட்கள் இந்தப் பட்டியல் வெளியான பிறகே சென்சார் அதிகாரிகள் திடுமென விழித்துப் பார்த்தனர். அதற்குள் கலைஞரின் பணி கச்சிதமாக நிறைவேறியிருந்தது.
ஓராண்டு காலத்திற்குப் பின், எமர்ஜென்சியை ரத்து செய்தார் இந்திராகாந்தி அம்மையார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.கவினர் அனைவரும்  விடுதலையாயினர்.
========================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?