அம்மா 110ல் தைத்த சட்டை

இன்றும் இந்திராணி தொடர்புடைய கொலை வழக்குத்தான் .
காரணம் இன்று வெளிவரும் த்திரைப்பட்ன்களை விட பரபர திருப்பங்களுடன் கவர்ச்சியும் கலந்துள்ள கதையாகத்தெரிகிறது .
ஆனால் உண்மைக்கதை.
எப்படியும் சில நாட்களில் இந்தி,தெலுங்கு ,மலையாளம்,தமிழ் என இந்த சம்பவம் திரைப்படமாக வரப்போகிறது.அதற்குள் நாம் முந்திக்கொண்டால் குறைந்த பட்சம் கதை நம்மது என்று வழக்காவது போட்டு பரபரப்பை உண்டாக்கலாம் அல்லவா?
 மகளை பிரபல டிவி பெண் அதிபர் இந்திராணி கொலை செய்த விவகாரத்தில் அடுத்தடுத்து மர்மங்கள் தொடர்கின்றன. 
ஷீனா கொலையில் தான் சம்பந்தப்பட்டுள்ளதாக இந்திராணியின் இரண்டாவது கணவன் சஞ்சீவ் கன்னா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். அதேசமயம், கொலையில் மூன்றாவது கணவன் பீட்டர் முகர்ஜி,  அவர் மகனும் ஷீனாவின் காதலன் ராகுலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையை திருப்பி விட்டுள்ளது. கொலை நடந்த அன்று நானும் மும்பையில் தான் இருந்தேன்; ஆனால், எனக்கு கொலை பற்றி தெரியாது என்று கூறிய இந்திராணி மகன் மிக்கேலை இப்போது போலீஸ், ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று துருவித்துருவி விசாரித்து வருகின்றனர். 
இவ்வளவு பரபரப்புக்கு இடையே பீட்டர், திடீரென போலீஸ் நிலையம் வந்து தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுத்து பூர்வமாக கடிதத்தை வக்கீல் மூலம் தந்தார். அவரிடம்  அதை வாங்காமல் எச்சரித்த போலீஸ், சம்மன் வந்ததும் ஆஜராகும் படி உத்தரவிட்டது. 
இதுவரை ஓடிஒளிந்த ஷீனாவின் காதலன் ராகுல், நேற்றுமுன்தினம் மும்பை வந்தான்; விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை கண்டதும் ஓட்டம் பிடித்தான். 
அவனும் இந்த கொலையில் முக்கிய பங்கு இருக்குமா என்ற சந்தேகம் இப்போது  ஏற்பட்டுள்ளது. 

கார் மீட்பு: இந்திராணி மகள் ஷீனாவை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கார் நேற்று மீட்கப்பட்டது. அந்த காரில் தடயங்கள் இருக்கிறதா என்று தடயவியல் நிபுணர்கள் ஆராய்ந்துள்ளனர். இந்திராணியின் கார் டிரைவர் சியாம் ராய் தான், கடைசி வரை இருந்து  ரெய்காட் காட்டில் ஷீனாவின்  உடல் மீது பெட்ரோல் ஊற்றியவன். 
அவனை அழைத்து வந்து காரில் சில பகுதிகளை தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்தனர். ஏற்கனவே ஷீனாவின் மிஞ்சிய எலும்பு பகுதிகளை  டிஎன்ஏ பரிசோதனைக்காக ஜேஜே மருத்துவமனை டாக்டர்  குழு தான் சம்பவ இடமான ரெய்காட் காட்டில் சேகரித்தது. 
அதை போலீசிடம் ஒப்படைத்து விட்டது. தடயவியல்  அறிக்கைக்காக தான் போலீஸ் காத்திருக்கிறது.  அது ஷீனாவின் உடல் தான் என்று தெரியவந்தால் அடுத்து விசாரணை  சூடுபிடிக்கும். இந்திராணி, சஞ்சீவ் மற்றும் டிரைவர் சியாம் ஆகியோரின் போலீஸ் காவல் 31 ம் தேதியுடன்  முடிகிறது. அதன் பின்  அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். 
ஆனால், அவர்களிடம் இன்னும் விசாரிக்க வேண்டியிருப்பதால் போலீஸ் காவலை நீட்டிக்க கோர்ட்டில் போலீஸ் மனு செய்ய உள்ளது. 

மகன் தப்பியது எப்படி: ஷீனாவின் தம்பி மிக்கேல்; இவன் அசாமில் இருக்கிறான். அவ்வப்போது மும்பை வந்து தாய் இந்திராணி, ஷீனாவை சந்தித்து  போவதுண்டு. அப்படி வரும் போதெல்லாம் அவன் பீட்டர் வீட்டில் தங்குவான். கொலை நடந்த அன்று அவன் மும்பையில் தான் இருந்துள்ளான். அவனை காரில் அழைத்துகொண்டு இந்திராணி, சஞ்சீவ் இருவரும் ஒரு  ஓட்டலுக்கு சென்றுள்ளனர். 
அங்கு அறை எடுத்து மூவரும் குளிர்பானம்  குடித்துள்ளனர். சில நொடிகளில் மிக்கேல் மட்டும் மயங்கி உள்ளான். திட்டமிட்டபடி காரியம் முடிந்ததை பார்த்த இந்திராணி, சஞ்சீவ் இருவரும் சிரித்தபடி அறையை  பூட்டி விட்டு கிளம்பினர். அடுத்த சில மணி நேரத்தில் தான் ஷீனா கொலை நடந்துள்ளது. கொலையை முடித்தபின் மீண்டும் அறைக்கு வந்த அவர்களுக்கு அதிர்ச்சி. அறையில் மிக்கேல் இல்லை. போலீஸ் விசாரணையில் இது பற்றி கூறிய மிக்கேல், ‘அறையில் எனக்கு மயக்கம் தெளிந்தபின் உடனே அங்கிருந்து தப்ப முடிவு செய்தேன். ஓட்டல் ஊழியர்கள் உதவியுடன் அறை கதவை திறந்து வெளியேறினேன். அவர்கள் என்னை கொல்லும் நோக்கத்துடன் தான் இப்படி செய்துள்ளனர்’ என்று கூறினான். ஆனால், போலீசுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அறையில் மூவருக்கும் என்ன  பேச்சு நடந்தது? பிரச்னை வந்ததா? சண்டை வந்ததா? அப்போது ஷீனா பற்றி பேசப்பட்டதா?  என்றெல்லாம் சந்தேகம் வரவே, மிக்கேலிடம் விரிவாக  விசாரிக்க தனிப்படை போட்டு, அவர்களுடன்  அனுப்பி விட்டனர். மிக்கேல் இப்போது இருக்குமிடம் தெரியவில்லை. அவனிடம் எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்த தனிப்படை திட்டமிட்டுள்ளது. அவன் கைது செய்யப்படுவானா? அப்ரூவர் ஆவானா என்பது போகப்போக தெரியும். 
பீட்டர் பங்கு என்ன: பீட்டர் முகர்ஜிக்கு சொந்தமான பங்களாவில் தான் இந்திராணி, அவர் மகள் ஷீனா,  மகன் மிக்கேல், பீட்டர் மகன் ராகுல் ஆகியோர் வசித்துள்ளனர். ராகுல் டேராடூன் உட்பட சில இடங்களில் இருப்பதுண்டு  என்பதால் மும்பைக்கு எப்போதாவது வருவதுண்டு. எப்படி ஷீனாவுடன் ராகுலுக்கு தொடர்பு ஏற்பட்டது என்பதும் குழப்பமாக உள்ளது.  பீட்டருக்கு தெரிந்து தான் இவர்களின் காதல் வளர்ந்துள்ளதாக  அவர் ஒப்புக்கொண்டாலும், இந்திராணிக்கும் இதில் பங்குண்டு என்று தான் போலீஸ் சந்தேகிக்கிறது. என் மகளை வளர்ப்பு மகன் ராகுல் காதலித்து திருமணம் செய்ய எப்படி ஒப்புக்கொள்வேன்;  அதனால் கோப்பட்டேன்’ என்று இந்திராணி சொல்லி வந்தாலும் அதை போலீஸ் அறவே நம்பவில்லை. பீட்டருடன் சேர்ந்தே பல பிசினஸ் விஷயங்களை செய்துள்ள இந்திராணி, இந்த விஷயத்தில் அவருக்கு தெரியாமல் செய்ய வாய்ப்பில்லை என்று திடமாக நம்புகிறது. அதனால் பீட்டருக்கும் ‘செக்’ வைத்துள்ளது. அவர் நடமாட்டம்  தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. அவர் பெரும்பாலும் வக்கீலுடன் தான் பேசி வருவதாக கூறப்படுகிறது. போலீஸ் நிலையத்துக்கு சென்ற போது இந்திராணியுடன் சண்டை போட்டதாக தகவல் உள்ளது. ஆனால், அதை பீட்டர் மறுக்கிறார்; நான் இந்திராணியை பார்க்கவில்லை. எழுத்துபூர்வமாக என் கடிதத்தை தந்தேன்; ஆனால், போலீஸ்  கூப்பிடும் போது வர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டார் என்று மட்டும் விளக்கம் அளித்தார். 

பாஸ்போர்ட் அம்பலம்: ‘என் மகளை நான் கொல்வேனா? அவள் அமெரிக்காவில் உள்ளார்’ என்று ஆரம்பத்தில் பொய் சொன்னார் இந்திராணி. டிரைவர் சியாமை பார்த்ததும் அதிர்ந்து போய், அடுத்த கட்ட விசாரணையில் அழ ஆரம்பித்து விட்டார். இந்திராணி, சியாம், சஞ்சீவ் ஆகியோரிடம் தனித்தனியாகவும், கூட்டாகவும் விசாரித்து வந்த போலீஸ் அதிகாரிகள், அவர்கள் சொன்னதை வைத்து உடனுக்குடன் பல இடங்களில் அதிரடி ரெய்டும் நடத்தியுள்ளனர். மும்பை வீடு மட்டுமின்றி, ராகுல் தங்கி வந்த டேராடூன்  நகரில் உள்ள பங்களாவிலும் போலீஸ் சோதனை செய்தது; அங்குதான் ஷீனாவின் பாஸ்போர்ட் சிக்கியது. உடனே, மும்பைக்கு வரும்படி ராகுலுக்கு போலீஸ் உத்தரவிட்டது. நேற்றுமுன்தினம் இரவு மும்பை வந்த அவரிடம் போலீஸ் விசாரித்ததாக தெரிகிறது. ஆனால், அவர் வாய் திறக்கவே இல்லை. ஷீனாவுடன் இருந்த உறவு பற்றி மட்டும் சில விவரங்களை சொல்லியிருக்கிறார். எனினும் கொலையில் பங்கு இருக்கிறதா  என்று போலீஸ் தொடர்ந்–்து விசாரணை நடத்த உள்ளது. 

இந்திராணியிடம் கிடுக்கிப்பிடி: நேற்று இரவு வரை மிக்கேலிடம் ரகசிய இடத்தில் தான் போலீஸ் குழு விசாரணை நடத்தியது.  அவருக்கு இரவு உணவும் வாங்கி தந்து பொறுமையாக விஷயங்களை கறந்தது. அவர் சொன்ன சில தகவல்களும் முன்னுக்கு பின் முரணாக உள்ளதால் அவர் மீதும் கண் வைத்துள்ளது. மிக்கேல் சொன்ன தகவல்களை  அடிப்படையாக வைத்து மும்பையில்  போலீஸ் காவலில் உள்ள இந்திராணியிடம் விசாரித்தது. புதுப்புது விஷயங்களை போலீஸ் கேட்பதால் அவர் திணறிப்போனார். பல கட்டங்களில் கதறி அழுதார்;  அவர் அழுகையை நிறுத்தும் வரை பொறுமை காத்தனர் அதிகாரிகள்.  குறிப்பாக, இளம் வயதில் நடந்த உண்மை சம்பவங்களை பற்றி வெளிப்படையாக கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கூறிய  அவர், ஷீனா கொலை பற்றி மட்டும் தொடர்ந்து உண்மைகளை மறைத்து வருவதாக போலீஸ் திடமாக நம்புகிறது. நேற்று இரவு வரை மணிக்கணக்கில் அவரிடம் விசாரணை நடத்திய போலீஸ் இன்றும் அவரிடம் விசாரணையை தொடர உள்ளது. அதை தொடர்ந்து தான் பீட்டர், ராகுல் கைதாவரா என்பது தெரியும். 

பேஸ்புக்கில் புலம்பிய சஞ்சீவ் : பேஸ்புக்கில் சஞ்சீவ் கன்னா புலம்பிய சில விஷயங்கள்  தான் அவரை  போலீசிடம் காட்டிக்கொடுத்ததாக  தெரிகிறது. தவறு செய்தவன் என்றாவது சிக்குவான்  என்றெல்லாம் அவர் தந்த பேஸ்புக் தகவல்கள் பற்றி கேட்டபோது மழுப்பிய அவர் கடைசியில் ஒரு வழியாக நேற்று முன் தினம் நள்ளிரவு கொலை பற்றிய உண்மையை ஒப்புக்கொண்டார். ‘கொலை நடந்தது  எனக்கு தெரியாது; இந்திராணியுடன் காரில் சென்றது உண்மை. அப்போது ஷீனாவும் உடனிருந்தார். ஆனால், அதன் பின்  என்ன நடந்தது என்று தெரியாது; நான் காரில் தூங்கி விட்டேன்’ என்று கூறியபோது போலீஸ் அதிகாரிகள் கடுப்பாகி விட்டனர்.   அதன் பின் சற்று கடுமையாக கேட்டபின் உண்மைகளை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 

பணத்துக்காக நடந்த கொலையா?: இந்திராணி சொன்ன கதையை எல்லாம்  போலீஸ் நம்பவில்லை. பணம் தான் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்று நம்புகிறது. ராகுலிடம் விசாரித்தால் உண்மை வரும் என்று எண்ணியுள்ள போலீஸ், அவரிடம் இன்று விரிவாக விசாரணை நடத்த உள்ளது.

போலீஸ் நிலையத்துக்கு தாயுடன் வந்த ராகுல்: போலீஸ் விசாரணையில் நேற்று மாலை ராகுல் ஆஜரானார்.  அவரிடம் கேள்வி கேட்டபோது அவரின் தாய் சப்னம் உடனிருந்தார். அவர் பீட்டருக்கு முதல் மனைவி. சில மணி நேரத்தில் ராகுல் அங்கிருந்து கிளம்பி சென்றார். அவர் நிருபர்களிடம் வாய் திறக்கவில்லை. 

காட்டிக்கொடுத்த பாஸ்போர்ட்: டேராடூனில் ராகுல் வீட்டில் பாஸ்போர் கிடைத்தது பற்றி இந்திராணியிடம் போலீஸ் காட்டியபோது, அவர் அதிர்ந்து விட்டார். அமெரிக்காவில் ஷீனா இருக்கிறார் என்று ஏன் பொய் சொன்னீர்கள் என்று கேட்டதற்கு மீண்டும் அழுது விட்டார். அவரிடம் ஷீனா கொலை தொடர்பான நேரடி கேள்விகளுக்கு இப்போது அதிகாரிகள் வந்துள்ளனர். ஓரிரு நாளில் அவர் முழு வாக்குமூலம் அளிப்பார் என்று தெரிகிறது. 

அவமானத்தால் கூனிக்குறுகும் உறவினர்: பீட்டர், இந்திராணி என்று இரு தரப்பிலும் உள்ள குடும்ப உறவினர்கள், நண்பர்கள் என்ற பலரிடமும் போலீஸ் விசாரித்து வருகிறது. பலரும் இந்திராணி விஷயத்தை பற்றி கூனிக்குறுகினர்.  ஆனால், பல உறவினர்களும் தங்களுக்கு இந்திராணி மட்டுமல்ல, அவளின் தாய் இருந்தபோதே உறவு அறுந்துவிட்டது; அவர்களும் எங்களை மதிக்க மாட்டார்கள். எங்களுக்கு இந்த கொலை தொடர்பாக அவமானம் தான் என்று தெரிவித்துள்ளனர். அதனால் விரைவில் குற்றவாளிகள் பட்டியல் சுருங்கி , உண்மைகள் வெளிவரும் என்று தெரிகிறது. 
* கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல்
* மூன்றாவது கணவன் சஞ்சீவ் ஒப்புதல் வாக்குமூலம்
* மகனையும்  கொல்ல நடந்த சதி திட்டமும் அம்பலம்
* போலீஸ் நிலையத்துக்கு வந்த பீட்டர் முகர்ஜிக்கு எச்சரிக்கை
* காதலன் வீட்டில் ஷீனா பாஸ்போர்ட் பறிமுதல்.
* 2012 ஏப்ரல் 24 ம் தேதி ஷீனா கொலை செய்யப்பட்டாள். அடுத்த சில நாளில்  போலீசுக்கு தகவல் தெரியவந்துள்ளது;  ஆனால், யாரோ அப்படியே பைலை மூடி விட்டனர்; அது யார்?
* கொலை நடந்த  அன்று மும்பையில் இந்திராணி, அவளின் இரண்டாவது கணவன் சஞ்சீவுடன் காரில் பயணித்துள்ளார் மகன் மிக்கேல்; கொலை நடந்தது தெரிந்தும்  ஏன் போலீசில் சொல்லவில்லை?
* பீட்டருக்கு கொலை பற்றி தெரிந்திருக்கிறது; அமெரிக்காவில் என் மகள் இருக்கிறாள் என்று போலீசில் இந்திராணி சொல்லும் போது, ஷீனா பாஸ்போர்ட் சிக்கியது. அது கிடந்த இடம் ராகுல் தங்கிய டேராடூன் வீடு. அப்படியானால் ராகுலுக்கும் கொலை பற்றி தெரியும் தானே.
* போலீஸ் கூப்பிடும் முன்பே கர் போலீஸ் நிலையத்துக்கு வந்து எழுத்துப்பூர்வ கடிதம் தந்தார் பீட்டர். அங்கிருந்த இந்திராணியை திட்டியுள்ளார். அவருக்கும் கொலை பற்றி தெரியும்.
* பீட்டருடன் சேர்ந்த பின், சஞ்சீவ் கன்னாவுடன் உறவை தொடர்ந்துள்ளார் இந்திராணி. இருவரும் சேர்ந்து தான் ஷீனாவை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளனர். அப்படியானால் சஞ்சீவுடன் பழகுவது பீட்டருக்கு தெரியாதா? 
இப்படி அடுக்கடுக்கான முடிச்சுகள்  அவிழ்ந்தால் தான் யார்  யாருக்கு கொலையில் தொடர்பு என்பது தெரியும்.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-30.

  • சர்வதேச காணாமல் போனோர் தினம்
  • ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)
  • பிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)
  • கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 
    டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.
    நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்
    திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு இவன் என் நாடக கம்பெனி ஆள் என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.
    அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.
    என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நாடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .
    என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்
    என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். 
    நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.
    அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் .
    ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு
    ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டு தான் இறந்து போனார்
                                                                                                                                     - பூ.கொ.சரவணன்
  • ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
  • ---------------------------------------------------------------------------------------------------------------------------------
முழு உடல் பரிசோதனைத் திட்டம்.
திமுக திட்டத்துக்கு அம்மா 110 ல் தைத்த சட்டை.


முழு உடல் பரிசோதனைத் திட்டத்தைத் தொடங்கிட திமுக ஆட்சியிலேயே 11-6-99 அன்று ஆணையிடப்பட்டுள்ளது. “முதல் அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால், தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய அரசாணையை வாங்கிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
நான்காண்டுகளுக்கு முன்பும், மூன்றாண்டுகளுக்கு முன்பும் 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கதியே இதுவென்றால், தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் பேரவைக்கு 110வது விதியின் கீழ் அறிக்கை படிப்பதற்காக மட்டுமே வருகை தந்து, படித்து விட்டுப் போய் விடுகிறாரே, இந்த அறிவிப்புகளுக்கு ஏதாவது பொருள் இருக்குமென்று கருத முடியுமா? அதிலும் முக்கியமான திட்டம் என்னவென்றால், அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்” தொடங்கப்படும் என்பதுதான். அதுவும் ஏதாவது புதிய திட்டமா என்றால் கிடையாது. ஏற்கனவே மருத்துவமனைகளில் நடைபெற்று வரும் திட்டம்தான். அதாவது ரத்த பரிசோதனை, ரத்தக் கொழுப்புப் பரிசோதனை, இதயப் பரிசோதனை போன்றவைகளை மருத்துவமனைகளிலே செய்து கொள்ளும் திட்டம். இதைத்தான் ஏதோ புதிய கண்டுபிடிப்பைப் போல அறிவித்திருக்கிறார்கள். ஆனால் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் முழு உடல் பரிசோதனைத் திட்டத்தைத் தொடங்கிட திமுக ஆட்சியிலேயே 11-6-1999 அன்று ஆணையிடப்பட்டுள்ளது. “முதல் அமைச்சருக்கு சந்தேகம் இருந்தால், தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய அரசாணையை வாங்கிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.
அதிலும் அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் ஆண்களுக்கான திட்டமாம்! “அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம்” என்பது மகளிருக் கான திட்டமாம். இப்படி ஒரு அறிவிப்பு. இதையே கிராமத்தில் செய்துகொண்டால், அதற்கு “அம்மா ஆரோக்கியத் திட்டம்” என்று பெயராம்! இன்னும் சொல்லப் போனால் கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளில் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக “வருமுன் காப்போம் திட்டம்” என்ற பெயரிலே தி.மு. கழக ஆட்சியிலேயே 1997ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.

========================================================================
உங்கள் பணத்தை வங்கிகள் 
ஏழு வழிகளில் திருடுகின்றன

பெரும்பாலானவர்களுக்கு தங்களுடைய வங்கிக் கணக்கி லுள்ள பணத்தைப் பராமரிப்பது தலை வலியாக உள்ளது. 
வங்கிக் கணக்கில் பணமே இல்லாதவர்களுக்கும் அது பிரச்சனைதான். ஏனெனில் வங்கிகள் எதிர்பாரா கட்டணங்களை உங்களுடைய கணக்கிலிருந்து வசூல் செய்து விடுகின்றன.
வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர் களின் கணக்கிலிருந்து பல்வேறு வழிகளில் கட்டணத்தை வசூல்செய்கின்றன. இதில் வாடிக்கையாளர் களின் கவனத்திற்கு போகாதவையும் கூட சில அடங்கும். இது சிறு சிறு கட்டணமாக இருந்தாலும் பெரிய தொகையாக சேர்ந்து விடும்.
வங்கி கட்டணத்தை தவிர்க்க உங்கள் வங்கியின் கட்டண சேவை யை முன் கூட்டியே அறிவது அவசியமாகும். 
கணக்கு தொடங்கும் போது, வெறும் படிவத்தை மட்டுமே நிரப்பிகொடுத்தால் போதும் என்று பூரிப்படைந்து விடாமல், உங்கள் சந்தேகங் கள் மற்றும் வங்கி கட்டணம் பற்றிய கேள்விகளை வங்கி ஊழியர்களிடம் கேட்டால் முறையாக பதில்களைப் பெற முடியும்.நமக்கு மறைமுகமாக விதிக்கப் படும் சில வகை கட்டணங்கள் எவை?
வட்டி விகிதம்
கிரெடிட் கார்டு உபயோகிப்போர் களிடம் மிகவும் பிரபலமாக இருப்பது வட்டி விகிதம். 
இது கிரெடிடு கார்டு நிறுவனம் நாம் பணத்தை திரும்ப செலுத்த வேண்டிய கடைசி தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அப்பணத்தின் மீது வங்கிகள் சில சதவீத வட்டியை நம் தலையில் கட்டிவிடும். இது மாதம் 2.5 சதவிகி தத்திலிருந்து 4 சதவிகிதம் வரை இருக்கும். 
இதை வருடத்திற்கு கணக் கிட்டால் 30 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதம் வரை உயரும்.
கணக்கு தொடங்குவதோடு இருந்து விடக்கூடாது. 
வங்கிக் கணக்கு தொடங்கி பணம் சேர்ப்பது நல்ல எண்ணம் தான். ஆனால் தொடங்கிய பின் உபயோகிக்காமல் இருந்தால் வங்கி கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். 
சாதாரணமாக வங்கிகள் இதற்கு 250 ரூபாயை கட்டணமாகவும் மற்றும் சேவை வரியையும் வசூலிப்பார்கள் இது சிறிய தொகையாக தெரிந்தாலும் சிறு துளி பெரு வெள்ளம் போல் பெரிய தொகையாக மாறும். 
இதைத் தவிர்க்க உபயோகிக்காத வங்கிக் கணக்கை மூடிவிடலாம்.
வெளிநாடுகளுக்குபணப் பரிமாற்றம் செய்தல்
வெளிநாடுகளுக்கு பணப் பரி மாற்றம் செய்யும் போது அதை இந்திய நாணயத்திற்கு மாற்ற உள்கட்டமைப்பு விகித மதிப்பின்படி மாற்றமும் செய்யப்படும். கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் பண பரிமாற்றம் செய்யும் தொகையிலிருந்து ஓரு குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கட்டணத் தொகையாக வசூலிப்பார்கள். 
இது குறைந்தபட்சமாக 250 ரூபாய் அல்லது பரிமாற்றத் தொகையிலிருந்து 3.5 சதவிகிதமாக இருக்கும்.
கிரேடிட் கார்டு
லிமிட்நீங்கள் வழங்கப்பட்ட கடன் தொகைக்கும் அதிகமாக தெரியாமல் உபயோகித்து விட்டீர்களா? அப்படி யானால் உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனம் அதற்கும் கட்டணத் தொகையை வசூலிப்பார்கள். 
எவ் வளவு தொகை அதிகமாக உபயோகித் திருக்கிறீர்களோ அதில் ஒரு குறிப் பிட்ட சதவிகிதத்தை கட்டணத் தொகையாக வசூலிப்பார்கள். 
இது அதிகபட்சம் 5 சதவிகிதமாக இருக்கும். 
ஒரு சில நிறுவனங்கள் எவ்வளவு சதவிகிதம் அதிகமாக உபயோகித்திருக்கிறீர்களோ அதையே கட்டணத் தொகையாகவும், வேறு சில நிறுவனங்கள் அதிகபட்சமாக 10 சதவிகிதமும் வசூலிப்பார்கள்.
காசோலை
நிறைய வங்கிகள் கட்டணத்தின் பேரில் அனைத்து வங்கிகளும் ஏற்கும் உள்ளூர் காசோலைகளை வழங்கி வருகின்றன. 
3 மாதங்களுக்கு ஒரு முறை இலவசமாக ஒரு காசோலை புத்தகம் வழங்கும் வங்கிகளும் இதில் அடக்கம். 
ஒரு காசோலைக்கு 3 முதல் 25 சதவிகிதம் கட்டணத்தில் வழங்கும் வங்கிகளும் உண்டு. வங்கி கட்டணம் பற்றிய விவரங்களை படித்து இம்மாதிரியான காசோலை தேவையில்லை எனில் பெறாமல் இருப்பது நல்லது. 
சில வங்கிகளில் இது போன்ற காசோலை புத்தகங்களை கொடுப்பதில்லை; மாறாக வேறுவேறு நகரங்களுக்கு பணப் பரிவர்த் தனைகளை நாம் செய்யும் போது அதிகபட்சமான பணத்தை கொடுப் பதற்கு நாம் தயாராக இருக்கச் செய் கின்றன.
ஏ.டி.எம் கட்டணங்கள்
நமக்கு இருக்கும் சேமிப்புத் தொகையிலிருந்து நாம் எடுக்கும் தொகைக்கு வங்கிகள் ஒரு கட்டணம் வைத்துள்ளன.
 பணத்தை நமது கைகளில் தரும் போது இந்த கட்ட ணம் பிடிக்கப்படுகின்றது. 
இதனால் வங்கி சேமிப்பில் இருக்கும் பணம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. 
ஒருவேளை பெருமளவில் பணத்தை எடுக்க முற்பட்டால் பெருந் தொகையை கட்டணமாக செலுத்த வும் தயாராக இருங்கள். இது பணம் செலுத்தும் கட்டணங்களைப் போல்பெருமளவில் இருக்கும். சில கிரெடிட்கார்டுகளை பணம் எடுக்க பயன் படுத்தும் போது அதற்கும் வங்கிகள் கட்டணங்கள் விதிக்கின்றன.
இதர கட்டணங்கள்
நேஷனல் எலக்ட்ரானிக் பன்டு டிரான்ஸ்பர்  மற்றும் ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்இதை பற்றி எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். 
இந்த அமைப்புகள் ஒரு தனிப்பட்ட நபர் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும் பண சுழற்சியை செய்ய உதவுகின்றன. 
வங்கிகள் இத்தகைய சூழ்நிலையை பயன்படுத்தி அவர் களுக்கு பிற நாடுகளிலிருந்து இந்திய நாட்டில் துவங்கப்படும் வங்கிக் கணக்கிற்கு புதிய கட்டணங்களை அறிவித்துள்ளன. 
இதன் கட்டணங் கள் பெரும் தொகை அல்ல. 
ஆனால் பெருமளவில் இத்தகைய பணப் பரிமாற்றங்களை செய்யும் போது அதிக அளவில் கட்டணங்கள் வசூல் செய்ய முற்படுகின்றன.
நன்றி:தீக்கதிர்.
========================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?