"சிம்" மைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?






உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் ஒரு நொடிக்கும் குறைவாக நேரத்தில் தொலைத்தொடர்புகளை இணைக்கும் முக்கிய வேலையை கச்சிதமாக செய்கிறது சிம் கார்டில் உள்ள தொழிநுட்பம்.

சிம் (Sim) என்பது ஒருங்கிணைந்த சுற்றுகளைக் கொண்ட ஒரு சிறிய சிப் (Chip) ஆகும். இதனுள் பாதுகாப்பட்ட (international mobile subscriber identity- IMSI) சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாளம் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
மேலும் தனிப்பட்ட வரிசை எண் (ICCID), பாதுகாப்பு அங்கீகார அம்சம் (security authentication), இடுதல் தகவல் (ciphering information), உள்ளூர் வசதிகளுக்கான தற்காலிக தகவல்கள் சிம் கார்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும்
அதுமட்டுமல்லாது பயனர்களுக்கு சாதாரண பயன்பாட்டுக்காக தனிப்பட்ட அடையாள எண் (PIN), தனிப்பட்ட நீக்கல் குறியீடு (PUK) என்ற இரண்டு கடவுச்சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சிம்மில் உள்ள முக்கியமான சில Key சந்தாதாரர்களை அடையாளம் காணப் பயன்படுகிறது.
தற்போது 900 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சிம் கார்டு மூலம் தொலைத்தொடர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக Department of Telecommunications (DoT) பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் European Telecommunications Standards Institute சிம் கார்டின் அம்சங்களை TS 11.11 என்ற குறியீட்டில் வரிசைப்படுத்தியது. இது சிம்மின் இயக்கத்தை முழுவதும் விளக்குவதாக இருந்தது.
இதைத் தொடர்ந்து 1991ம் ஆண்டு Giesecke & Devrient என்ற நிறுவனம் சிம் கார்டை வெளியிட்டது. 300 சிம் கார்டுகளை தயாரித்த அந்த நிறுவனம் அதை Finnish wireless network operator Radiolinjaவிடம் விற்றது.
இதுவே சிம் கார்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. இந்த சிம் கார்டுகள் 5v, 3v, 1.8v என மூன்று Volt-களில் வெளியானது. 1998ம் ஆண்டு முன்னர் 5v சிம் கார்டுகள் மட்டுமே அதிக பயன்பாட்டில் இருந்தன.
சிம் கார்ட்டின் மையப்பகுதியில் சிப் (Chip) உள்ளது. இந்த Active chip side-ல் தான் மேற்புரப் பரப்பான Metal contact, Bond Wire-ஆல் இணைக்கப்பட்டிருக்கும். இதுவே நமது போனுடன் தொடர்பை ஏற்படுத்துகிறது.
Chip பகுதியின் அருகில் Chip Adhesive என்ற அமைப்பும், அதன் மேலே Substrate என்ற அமைப்பும், அதை சுற்றி Encapsulation என்ற அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
hot melt என்ற பகுதி Substrateக்கு கீழே கொடுக்கப்பட்டு, இந்த ஒட்டு மொத்த அமைப்பும் card Body உடன் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது தான் கண் இமைக்கும் நேரத்தில் பரிமாற்றப்படும் தகவல்களுக்கு காரணமாக உள்ளது.
இந்த தொலைத்தொடர் சேவையில் Data encryption என்ற முறையில் அனுப்பப்படும் தகவலானது பாதுகாப்பாக பரிமாற்றப்படுகிறது. இந்த முறையை 2013ம் ஆண்டு cryptographer and security researcher ஆக உள்ள Karsten Nohl என்பவர் சிம் கார்டுகளில் கொண்டு வந்தார்.
மேலும் 2012ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Nano Sim புதிய அனுபவத்தை பலருக்கும் கொடுத்து இருக்கும். அதற்கு ஏற்றவாறு தற்போது வரும் ஸ்மார்ட் போன்களும் அந்த அம்சங்களை கொண்டதாக இருக்கிறது.
தொலைத்தொடர்பு துறை பல்வேறு முன்னேற்றங்களை அடைந்திருக்கும் வேளையில் சிம் கார்டுகளில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
==================================================================================
நரை முடிதாரரா நீங்கள் 
பெரும்பாலானோர் சிறு வயதிலிருந்தே, நரைமுடி பிரச்னைக்கு ஆளாகின்றனர். 

இதற்கு பல காரணங்கள் உள்ளன. 

பரம்பரை காரணமாக நரைமுடி வந்தால், ஒன்றும் செய்ய முடியாது. 

சிலருக்கு, முடிக்கு நிறமளிக்கும் மெலனின் என்ற சுரப்பிகளை உற்பத்தி செய்யும், மெலனோ சைட்டுகள் போதிய மெலனினை உற்பத்தி செய்யாமல் இருப்பது, ஒரு காரணமாக இருக்கும்.

மெலனின் அளவு குறைந்தால், கூந்தல் நரைக்க துவங்கும். 

இத்தகைய நரைமுடி, 30 வயதுக்கு மேல்தான் ஏற்படும். 

தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழலில், சிறு வயதிலேயே முடி நரைக்க துவங்கி விடுகிறது. இத்தகைய நரைமுடிக்கு, நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. 


ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, 2 டீஸ்பூன் டீ தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, பின், அதை குளிர வைத்து, முடியில் தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்காமல், முடியை நீரில் அலச வேண்டும்.

கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது, முடியை கருமையாக்கும். 
தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க விட்டு, குளிர வைத்து, அதனை தினமும் கூந்தலுக்கு தடவி வந்தால், முடி கருமையாகும்; அடர்த்தியாகும்.

கருமையை இழந்த முடிக்கு, மீண்டும் கருமையை கொடுப்பதற்கு, முளைக்கீரை சாற்றை முடியில் தடவி ஊற வைத்து, நீரில் அலச வேண்டும். 

நெல்லிக்காய், முடியை கருமையாக்குவதில் மிகச்சிறந்த பொருள். நெல்லிக்காய் சாற்றில், சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து முடிக்கு தடவி ஊற வைத்து குளித்து வந்தால், கூந்தல் இழந்த கருமையை மீண்டும் பெறும். 

இத்தகைய சிகிச்சைகள் ஆண், பெண் என இருபாலாருக்கும் அவை அனைத்தும் வீட்டிலேயே எளிதாக செய்யக் கூடியவை.
நரைமுடியைப் போக்க, பிளாக் டீ பெரிதும் உதவியாக இருக்கும். 

=======================================================================================
இன்று,
மார்ச்-11.
1702: இங்கிலாந்தின் முதலாவது தேசிய நாளிதழான த டெய்லி கரண்டின் முதல் பதிப்பு வெளியாகியது.
1917: முதலாம் உலகப் போரில் பாக்தாத் ஆங்கிலோ இந்திய படைகளிடம் வீழ்ந்தது.
1990: சோவியத் யூனியனிலிருந்து பிரிவதாக லிதுவேனியா சுதந்திரப் பிரகடனம் செய்தது.
1990: சிலியில், பட்றிசியொ அய்ல்வின் 1970 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியானார்.
2004: ஸ்பெய்னின் மட்ரிட் நகர ரயில்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 191 பேர் பலியாகினர்.
2006: சிலியின் முதல் பெண் ஜனாதிபதியாக மிச்சேல் பாச்செலட் பதவியேற்றார்.
2009: ஜேர்மனியில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் பலி.
2011: ஜப்பானின் புகுஷிமா பிராந்தியத்திற்கு அருகில் ஏற்பட்ட  9.0 ரிச்டர் அளவிலான பூகம்பத்தை தொடர்ந்து தாக்கிய சுனாமியினால் சுமார் 20,000 பேர் பலியாகினர்.
 இதன்போது  அணுக்கதிர்வீச்சு கசிவும் ஏற்பட்டது.

 புகுஷிமா அணு உலை விபத்து

 ஜப்பானில் 2011 மார்ச் 11-ல் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமி, ஜப்பான் நிலப் பகுதிகளைக் கபளீகரம் செய்ததை உலகமெங்கும் உள்ளவர்கள் தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்த்து அதிர்ந்துபோனார்கள்.

நிலநடுக்கம், சுனாமியில் 15,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

6,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

சுனாமியின் தொடர்ச்சியாக, புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து, இந்தப் பேரழிவின் விளைவாக ஏற்பட்ட மற்றொரு அசம்பாவிதம்.

பசிபிக் கடற்கரையோரம் உள்ள வடக்கு புகுஷிமா பகுதியில், சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட செண்டாய் நகரத்திலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல் நீர் புகுந்ததால், மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்தன. 

அணு உலையைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த 19 அடி உயர தடுப்புச் சுவரை, 46 அடி உயரத்துக்கு எழுந்து வந்த அலை சுலபமாகத் தாண்டி அணு உலைக்குள் புகுந்தது. 

இதனால், குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து, 6 அணு உலைகளில் 3 உலைகள் சேதமடைந்தன.

இதையடுத்து அந்த உலைகளிலிருந்து அணுக் கதிர்வீச்சு வெளியேறத் தொடங்கியது. 

இந்த அணு உலைகளைக் குளிர்விக்கும் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் டிரக்குகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் அணு உலைகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். 

இந்தப் பணிகளால் கதிர்வீச்சை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தாலும், பல முறை புகை மண்டலம் ஏற்பட்டதால் பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

அப்பகுதியில் வசித்த 45,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். 

1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மிக மோசமான அணுஉலை விபத்து இது.

 இந்த விபத்தில் மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள் தாவரங்களும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டன.

=======================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?