பொறியியல் கல்லுாரிகளின் ஆடித்தள்ளுபடி?

பொறியியல் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., படிப்புகளில், கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
மொத்தம் உள்ள, 524 கல்லுாரிகளில் மதுரை தயா பொறியியல் கல்லுாரிக்கு மட்டும்கவுன்சிலிங்கில் சேர அனுமதி இல்லை.
ஆக மீதமுள்ள, 523 கல்லுாரிகளில், 2.82 லட்சம் இடங்களில் மாணவர்களை சேர்க்கஅகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலானஏ.ஐ.சி.டி.இ.அங்கீகாரம் அளித்துள்ளது . 
அண்ணா பல்கலைக்கழம் மூலம் ,கவுன்சிலிங் நடத்தி  மாணவர்களை சேர்க்க, 1.92 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
 இதன்படி சென்ற மாதம் (ஜூன்) 23ம் தேதி விளையாட்டுப் பிரிவுக்கும், 24ம் தேதி மாற்றுத் திறனாளிகளுக்கும் கவுன்சிலிங் நடந்தது. 27ம் தேதி பொது கவுன்சிலிங் துவங்கியது,
ஜுலை 22 உடன் கவுன்சிலிங் முடிவடை  கிறது.
ஆனால் இன்னமும் கல்லூரிகளில் பல இடங்களுக்கு மாணவர்கள் சேர ஆர்வம் காட்டாமல் உள்ளனர் .
இதனால்   இன்ஜினியரிங் கல்லுாரிகளில், காலியிடங்களின் எண்ணிக்கை, 1.25  லட்சத்தை தாண்டும் என தெரிகிறது. 

 200க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 77 ஆயிரம் இடங்களில், 36 ஆயிரம்  இடங்கள் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.இன்னமும் 50 சதவீதம்  நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் நிரம்பவில்லை.

பொதுவாகவே முன்பு சேர்வதற்கு ஆர்வம் காட்டி அடி தடி போல் முனைப்புடன் இருந்த I.T,ECE,போன்றவற்றில் மாணவர்கள் சேரும் ஆர்வம் குறைந்து விட்டது.

காரணம் TCS,HCL, போன்ற சில முன்னணி கணினி ,மென்பொருள்,தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் புதிதாக படித்து வருபவர்களை குறைந்த சம்பளத்தில் சேர்த்துக் கொண்டு விட்டு பழைய பணியாளர்களை திடீரென வீட்டுக்கு அனுப்பிய பிரச்னை ,வழக்கு போன்ற நிகழ்வுகள் மாணவர்களுக்கு தகவல் தொழில் நுட்ப பணியில்  உள்ள ஆர்வத்தை குறைத்து அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

இதுவரை ஆண்டுக்காண்டு புற்றீசல் போல் ஊர்,ஊருக்கு திறக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சென்ற ஆண்டும்,இந்த ஆண்டும் 47 கல்லூரிகளுக்கு மேல் மூடப்பட்டு  விட்டன.

இந்த ஆண்டு சில கல்லூரிகளில் சில துறைகளில் மூன்று,நான்கு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனராம்.
இதனால்  இக்கல்லுாரிகளும்கவுன்சிலிங்கில் பங்கேற்காத இயலாத  நிகர்நிலை பல்கலைகளும் தங்களிடம் உள்ள காலியிடங்களை நிரப்ப அதிக அளவு விளம்பரங்கள் , பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் மூலம்மாணவர் சேர்க்கையில் தீவிரமாக இறங்கியுள்ளன.
அக்கவர்ச்சித்திட்டங்களில் மாணவர்களுக்கான கல்லூரி பேருந்து  கட்டணம், ரூபாய் 30 ஆயிரம் வரை  தள்ளுபடி,விடுதி வாடகையில் 40%தள்ளுபடி, நன்கொடை  கிடையாது, மாணவர் விடுதிகளில் இலவச வை - பை , ப்ரொஜெக்ட் செய்ய தனியார் தொழிற்கூடங்களில் நேரடி இலவச சிறப்பு பயிற்சி, பாடங்களில் நிலுவை  வைக்காத மாணவருக்கு கல்வி கட்டண குறைப்பு எனபல சலுகைகளை அள்ளி  வழங்கி வருகின்றன. 
சில கல்லுாரிகள்  மொபைல் போன் நிறுவனங்களில்  இருந்து மாணவர்கள் வீட்டு தொடர்பு எண்களை பணம் செலுத்தி வாங்கி மாணவரின்  பெற்றோர்களை  நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் கல்லூரியின் அருமை,பெருமைகளை கூறி அவர்களது மகனுக்கு தங்கள் கல்லூரியில் சேர்ந்தால் வழங்கப்படும் சலுகைகளை ,பயன்களை எடுத்து கூறி தங்கள் கல்லூரி ஆடித்தள்ளுபடி தகவல்களை அனுப்பி வருகின்றன. 
சில  கல்லுாரிகள்வாட்ஸ் ஆப்இன்ஸ்டாக்ராம்பேஸ்புக் மூலம் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளன.
இப்படிஇவர்கள் கூறும் சலுகைகள் பொறியியல் பயிலும் நான்கு ஆண்டுகளுக்கும் அள்ளி வழங்கப் படுமா என்றால் இக்கல்லூரிகள் சேர்க்கையை பற்றித்தான் பேசுகிறார்கள்.சேர்ந்து படிக்க ஆரம்பித்தப்பின்னர் முதல் ஆண்டுக்கு அடுத்துவரும் ஆண்டுகள்  மட்டுமே இச்சலுகைகள் கிடைக்க வாய்ப்பில்லை . 

அடுத்தடுத்த ஆண்டுகளில்,பல கல்லுாரிகள்  மாணவர்களுக்கு வேறு வழியில்லா நிலையில் தங்கள் சுய முகத்தைக்காட்டி கூடுதல் கட்டண வசூலில் ஈடுபடும் என்றே தருகிறது.

அத்துடன் முதலாண்டு சேர்க்க தங்கள் இழந்த பணத்தையும் பின்வரும் ஆண்டுகளில்  கட்டணங்களை அதிகப்படுத்தி மாணவர்களிட மிருந்து கறந்து விடும் என்றே தெரிகிறது.
========================================================================================
இன்று,
ஜூலை-21.

  • பெல்ஜியம் தேசிய தினம்
  • ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது(1954)
  • லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது(1977)
  • சிவாஜி கணேசன் இறந்த தினம்(2001)

========================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?