தி.மு.க. ஆட்சியில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி?



தமிழகத்தில் ஒரு நகரம், ஒரு கிராமம்விடாமல் எங்கும் ஜல்லிக்கட்டு மீட்புப்போராட்டங்கள் தன்னெழுச்சியாக வெடித்துள்ள பின்னணியில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  அவசரச்சட்டம் கொண்டுவரக் கோரும் மனுவோடு தில்லி சென்றார். 

பிரதமர்நரேந்திர மோடியைச் சந்தித்தார். முதலமைச்சர்தன்னைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்தார் என்பதன்றி, தமிழகத்தின் கோரிக்கைக்கு பிரதமர் வேறு மரியாதை அளித்ததாகத் தெரியவில்லை.

‘ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பண்பாட்டுமுக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஏற்றுக்கொண்ட பிரதமர், பிரச்சனை இப்போது நீதிமன்றவிசாரணையில் இருக்கிறது என்று நழுவி விட்டார்’ என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்புடன் தன்னைச் சந்தித்த தமிழகமுதலமைச்சருக்கல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே துரோகமிழைத்திருக்கிறார் மோடி. 

பன்னிர் செல்வம் அதிகாரம் தன்  கையில் இருக்கையில் இதற்கு முன்னர் தடை இருந்த போதும் பிரசனையே இல்லாமல் வெளியுலகம் தெரியாமல் தனது அதிகாரம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணையை ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிட்டு நடத்திய திமுக தலைவர் கலைஞர் போன்று ஏன் நடத்தவில்லை?எதற்காக தமிழ் நாடு என்றாலே கசப்புடன் பார்க்கும் பிரதமரிடம் போய் மண்டி இட வேண்டும்.
காரணம் ஊழல்,சொத்துக்குவிப்பு,அதிகார முறைகேடுகள்,அந்நிய செலவாணி மோசடிகள் என்று சசிகலா குடும்பத்தையும் ,வருமானத்துக்கு அதிகமாக 3000 கோடிகளை குவித்ததால் பன்னிரு செல்வமும் மோடியின்,பாஜக கண்ணசைவை எதிர் பார்த்துதான் காய்களை நகர்த்த வேண்டியுள்ளது.இல்லை என்றால் கண்டெய்னர் அளவு இழப்புகள் அவர்களுக்கு.

ஒருவாதத்திற்காக, பிரச்சனை நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வதானால் கூட, மத்திய அரசு ஆக்கப்பூர்வமாக இதைஅணுகும் என்ற நம்பிக்கை வார்த்தைகளைக் கூட சொல்ல முன்வராதது ஏன்? 

இதற்கானபொறுப்பு தனது ஆட்சியின் தலையில் விழுந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடுதான் முதலமைச்சரைத் திருப்பியனுப்பியிருக்கிறார் மோடி என்பது வெளிப்படை.

‘மாநில அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவளிக்கும்’ என்றும்முதல்வரிடம் பிரதமர் கூறினாராம். எப்படிப்பட்ட ஆதரவு? 

நீதிமன்றத்தை மீறி மாநில அரசேஜல்லிக்கட்டை அனுமதிக்க நடவடிக்கை எடுக்குமானால் அதற்கு ஆதரவா, அல்லது, போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ஆதரவா? 

இதில் என்ன மௌடீகம்? நீதிமன்ற விசாரணையில் இருப்பதால்தான், காட்சிப்படுத்தலிலிருந்து விலக்களிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நீக்கி அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்என்ற கோரிக்கையே எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தை மீறி 23 அவசரச்சட்டங்களைக் கொண்டுவரத் தயங்காத மோடி அரசு இதிலேபின்வாங்குவது ஏன்? 

ஒரு பக்கம், ஆர்எஸ்எஸ்கூடாரத்தின் கலாச்சார ஆதிக்க அரசியலில், மாநிலங்களின் பன்முகப் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கிற போக்கு; அடுத்து, கால்நடை விருத்திச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும்பன்னாட்டு கார்ப்பரேட் சக்திகளின் நலன்கள். மத்திய அரசு ஏதோ உடனடி நடவடிக்கை எடுக்கப்போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்று பதுங்கிக்கொண்ட தமிழக பாஜக தலைவர்கள் மக்கள் கோபத்திலிருந்து தப்பிவிட முடியாது.

பண்பாட்டுத் தளத்தோடு வேரூன்றியுள்ள ஒருபாரம்பரியத்தில் கைவைக்கப்படுகிறபோது அதுமக்கள் பெருந்திரளைக் கொதித்தெழ வைக்கும் என்பதற்கு சாட்சியமாக இன்று தமிழகம் திகழ்கிறது. பொருளாதாரம், சமூகநிலை என அனைத்துத் தரப்பு மக்களும் போராட்டக் களமிறங்கியுள்ள நிலையில், அந்த உணர்வை உச்சநீதிமன்றம் சரியாகப் புரிந்துகொண்டு வழக்கைக் கையாளவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் முற்றிலும் நியாயமானது. 
போக்குவரத்துத் தொழிலாளர்கள், கலையுலகினர், தனியார் பள்ளி நிர்வாகங்கள், வணிகநிறுவனங்கள் என பல்வேறு தரப்பினரும் தாங்களாகப் போராட்ட அலையில் இணைந்துகொண்டிருக்கிற நிலையில், மத்திய-மாநில அரசுகள் அடுத்து என்ன செய்யப்போகின்றன? 
நீதிமன்றம் என்ன ஆணையிடப்போகிறது?

தமிழ்நாடு அரசோ தனது அதிகார மய்யம் மன்னார்குடியா?
பெரியகுளமா?என்ற பரிதவிப்பில் நிற்கிறது.

ஆனால் சசிகலாவும்,பன்னிர்செல்வமும் தங்கள் எதிர்காலமே மோடியின் பாஜக அரசின் கையில் இருப்பதால் தமிழ்நாட்டின் நலனையே மோடியின் காலில் வைத்து விட்டு குனிந்து நிற்கின்றனர்.
=======================================================================================
தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி?
வெளியே தெரியாமல் அரசாணையை கலைஞர் வெளியிட்டார்.ஜல்லிக்கட்டு தடையின்றி நடந்தது.ஆனால் அதை இப்போது போராடுபவர்கள் நன்றியுடன் கூறுவதாக தெரியவில்லை.காவிரியில் இருந்து எந்த பிரசனையானாலும் மக்களை அல்லாத விட்டு,போராடவிட்டு தான் அதை பெருந்தன்மையுடன் தான் செய்ததாக  கூறி ஜால்றா ஊடகங்கள் மூலம் தனக்கு தானே பாராட்டு விழா நடத்திக்கொள்வது ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததில் இருந்து உள்ள நடை முறை.
அதையே இன்று முதல்வர் பன்னணீர்  செல்வம் அடுத்தக்கட்டடத்துக்கு கொண்டு செல்கிறார்.
சத்தம் போடாமல் அலுவலக ரீதியாகவே தமிழக மக்களுக்கு நன்மைகளை செய்தவர் கலைஞர்.
========================================================================================
ன்று,
ஜனவரி-20.

  • முதலாவது அதிகாரபூர்வமான கூடைப்பந்தாட்டம் மசாசூசெட்சில் இடம்பெற்றது(1892)
  • பேர்ள் துறைமுகத்தை கடற்படைத்தளமாக பயன்படுத்த அமெரிக்க செனட் சபை அனுமதியளித்தது(1887)
  • வெளிப்புறக் காட்சிகளைக் கொண்ட முதலாவது முழு நீள திரைப்படம் திரையிடப்பட்டது(1929)
========================================================================================

                            வீட்டு எலிகளை  கொடுமை படுத்துவதை தட்டிக்கேட்காத                                                                                                    பீட்டாவை தடை செய்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?