ஒற்றை தலைவலி



ஒற்றை தலைவலி என்பது தலையின் ஒரு பக்கமாக ஏற்படும். தலையின் ஒரு பகுதி மட்டுமே கிட்டத்தட்ட 3 நாட்கள் தொடர்ந்து வலிக்கும் போது அது ஒற்றை தலைவலியாக உணர படுகிறது.
இதன் முக்கியமான அறிகுறிகள்: ஒருபக்க தலைவலியுடன் வாந்தி குமட்டல் ஒளி மற்றும் ஒலி போன்றவற்றை உணர்வதில் சகிப்பு தன்மை குறைதல்.
ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கு 15 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்கு முன்னர் பின்வரும் அறிகுறிகள் ஏற்படலாம்.
பார்வை திறனில் சில மாற்றங்கள் ஏற்படலாம். கருப்பு புள்ளிகள் அல்லது “Z” வடிவங்கள் கண் முன் தோன்றலாம்.
கழுத்து, தோள் ஆகிய இடங்களில் ஊசியால் குத்துவது போன்று இருக்கலாம். நுகர்தல் உணர்வு இல்லாமல் இருக்கலாம்.
உடல் சமநிலையில் இல்லாமலும், பேச்சில் தடுமாற்றமும் இருக்கலாம்.
ஒற்றை தலைவலி இரண்டு வகைப்படும்.
1.மரபார்ந்த ஒற்றை தலை வலி
2.பொதுவான ஒற்றை தலை வலி
மேலே குறிப்பிட்ட அறிகுறிகளுடன் ஏற்படும் தலைவலி மரபார்ந்த ஒற்றைத்தலைவலி எனவும். அப்படியான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வருவது பொதுவான ஒற்றை தலைவலி எனவும் கூறப்படுகிறது.
பொதுவாக இந்நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஒளி மற்றும் ஒலி உணர்வது பிடிப்பதில்லை ஆகையால் அமைதியான இருளான இடத்தில் இருப்பதையே விரும்புவர்.
ஒற்றைத் தலைவலிக்கான சரியான காரணம் அறியப்படாவிட்டாலும், மூளையில் செரோடோனின் மாறுபடுவதே பிரதான காரணமாக கருதப்படுகிறது.
மூளை இயங்குவதற்குத் தேவைப்படும் செரோடோனின் அல்லது 5 ஐடிராக்சி டிரிப்டமைன் எனப்படும் ஒரு ஒற்றை அமைன் நரம்பு சமிக்ஞை கடத்தியாக செயல்பெறும் வேதியியல் திரவத்தின் அளவு குறையும் போதுதான் இந்த ஒற்றைத் தலைவலிகள் ஏற்படுகின்றன.
காரணங்கள் :
இந்நோய் உருவாக பின்வரும் சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம்:
மன அழுத்தம், அயர்ச்சி,நீண்ட பயணம், அழுவதற்கு பின்,பல்வேறு மாறுபட்ட உணர்வுகளுக்கு மத்தியில் இருக்கும்போது, வானிலை மாற்றம் ஏற்படும்போது தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போது, உணவு நேரத்தை புறக்கணிக்கும்போது, அதிகமான சத்தம் மற்றும் வெளிச்சம்,பெட்ரோல் அல்லது வாசனை பொருட்கள் நுகர்தல், தலை சாயம்வ,போர்வையை முழுவதுபோர்த்திக்கொண்டு உறங்கும்போது,
தலையணையில் முகத்தை மூடிக் கொண்டு தூங்கும்போது, இறுக்கமான உடை அணியும்போது, கழுத்தில் இறுக்கமான ஆபரணம் அணியும்போது, பருவ மாற்றத்திற்கு பிறகு பெய்யும் முதல் மழையில் நனையும்போது, அதிக வெயிலில் நடக்கும்போது, தலை குளித்த பிறகு கூந்தலை சரியாக காய வைக்காமல் இருக்கும்போது,முடியை இறுக்கமாக பின்னும்போது, கண்களுக்கு லென்ஸ் அணியும்போது,பெண்களுக்கு மாத விலக்கின்போது, குளிக்கும்போது முகத்தில் தண்ணீர் வேகமாக என காரணங்கள் பல உள்ளன.
தூண்டும் காரணிகள் :
ஒவ்வொருவருக்கும் ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் காரணிகள் வேறுபடும். மாதவிலக்கின் போது மன அழுத்தம், வெப்பம்,புகை, சிகரெட், உயர்வான இடத்தின் அழுத்தம், அது மட்டுமின்றி கொட்டாவி விடுதல், எடை எடை தூக்குதல் போன்றவற்றால் கூட தலைவலி வரலாம்.
50 வயதிற்கு பிறகு ஆண்களுக்கு ஒற்றை தலை வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
பெண்களுக்கு மெனோபாஸ் ஆனவுடன் ஒற்றை தலை வலி குறைய வாய்ப்புண்டு.
குழந்தைகளுக்கான ஒற்றை தலை வலி பெரும்பாலும் 2 மணி நேரத்திற்கு நீடிக்கின்றது.
ஒற்றை தலைவலி இருக்கும் குடும்பத்தில் அவர்கள் வாரிசுகளுக்கும் அது தொடர வாய்ப்பிருக்கிறது.
நீடிக்கும் காலம்:
பெரும்பாலும் 60% ஒற்றை தலைவலி தலை ஒரு பக்கம் மட்டுமே வலிக்கும். சிலருக்கு இரு பக்கமும் வலி இருக்கும்.
72 மணி நேரம் நீடிக்கும். வலி இருக்கும் பக்கம் பார்வை தற்காலிகமாக தடைபடும்.ஒரு பகுதி மரத்து போகலாம்.
தலைக்குள் வெளிச்சம் பாய்வதைப்போல் உணர்வார்கள். கை, கால், நாக்கு, உதடு ஆகியவை பலமிழக்கும்.
காய்ச்சல், நாளுக்கு நாள் அதிகமாகும் தலை வலி, தொடர்ச்சியாக ஏற்படுகின்ற வலி, வலிப்பு மற்றும் வாந்தியுடன் கூடிய தலைவலி ஆபத்தானது.
சிகிச்சை:
ஒற்றை தலை வலியை பூரணமாக குணப்படுத்த முடியாது. ஆனால் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் உட்கொண்டால் வலியை கட்டு படுத்தலாம்.
ஒற்றை தலைவலியை உண்டாக்கும் மேற்கூறிய காரணிகளையும் சூழ்நிலைகளையும் இனம் கண்டு அவற்றை தவிர்ப்பதால் இந்த நோயின் தாக்கத்திலிருந்து விடுபடலாம்.
பாட்டி வைத்தியம்:
எந்தவொரு நோய்க்கும் நமது முன்னோர்கள் சில இயற்கை மருந்துகளை சொல்லி இருக்கின்றனர். அதை போலவே இந்த ஒற்றை தலை வலிக்கும் சில குறிப்புகள் உண்டு. அவற்றை நாம் கீழே பார்க்கலாம்.
1. ஆரஞ்சு பழ தோலை எடுத்து சாறு பிழிந்து தலை வலி இருக்கும் பக்கத்தின் எதிர் காதில் சிறிதளவு ஊற்ற வேண்டும். இது தற்காலிக சிகிச்சை தான்.
2. ஒரு டம்பளர் காரட் சாறுடன் 1/4 டம்பளர் பசலை கீரை சாறு மற்றும் 1/4 டம்பளர் பீட் ரூட் சாறு சேர்த்து குடித்தால் தலை வலி குறையும். இத தொடர்ந்து 5 நாட்களுக்கு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

=====================================================================================
ன்று,
ஜூலை-30.
பாக்தாத்


  • பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)
  • பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)
  • முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது(1930)
  • ஜெருசலம் அரசியலமைப்பு சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது(1967)

அரசு ஊழியர் இயக்க முன்னோடி 

தோழர் ஆர்.முத்துசுந்தரம் 

காலமானார்

தமிழக அரசு ஊழியர் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஆர்.முத்துசுந்தரம் காலமானார். அவருக்கு வயது 66.
சமீப மாதங்களாக நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஈரோடுமாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்தார். 
 சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை (29.7.2017) மாலை 6 மணி அளவில் மருத்துவ மனையிலேயே மரணமடைந்தார். அவரது மரணச் செய்தி அறிந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஊழியர்களும் , இடதுசாரி இயக்கங்களின் தோழர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூரைச் சேர்ந்த தோழர் ஆர்.முத்துசுந்தரம், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கல்வித்துறையில் அமைச்சுப் பணி ஊழியராக தனது அரசுப்பணி வாழ்க்கையை துவக்கினார். 
கல்வித் துறை ஆணையரின் தனிச்செயலாளர் பதவிவரை அரசுப் பணியில் உயர்ந்தார். 
1978-80 காலக்கட்டத்தில் தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தை உருவாக்குவதற் காக பணியாற்றிய முன்னோடித் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர் தோழர்முத்துசுந்தரம். 
சங்கத்தை கட்டி அமைப்ப தற்காக மாநிலம் முழுவதும் இடைவிடாமல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு ஊழியர்களை அணி திரட்டியவர்.
தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், தமிழக அரசு ஊழியர்களின் போரா ட்ட குணமிக்க தோழராக - அவர்களது அன்புக்குரிய தலைவராக உயர்ந்தவர். பின்னாட்களில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக, அகில இந்திய தலைவராக, அகில இந்திய கவுரவத் தலைவராக பொறுப்பு வகித்து, நாடு முழுவதும் அரசுஊழியர்களை அணிதிரட்டுவதில் முன்னணிப் பாத்திரம் வகித்தவர் தோழர் முத்துசுந்தரம்.அகில உலக தொழிற்சங்க சம்மேள னத்தின் தலைவர்களில் ஒருவராகவும் பரிணமித்தவர் அவர்.
 பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தொழிற்சங்க சம்மேளன மாநாடுகளில் பங்கேற்றவர்.
ஆர்.எம்.எஸ் என்று அன்புடன் அரசு ஊழியர்களால் அழைக்கப்படும் முத்து சுந்தரம் இழப்பு ஊழியர்களுக்கு பேரிழப்பு.
======================================================================================

நாள் தோறும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், உங்கள் உடல் நலம் தேறும்.
வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு.
 அனைத்து வகை வாழைப்பழங்களிலும் விதவிதமான சத்துக்கள் இருக்கின்றன. 
5cf48bcc8b2cbb126da4226631cee84d
இதில் ஹீமோ குளோபின் அதிகமாக இருக்கிறது. தினமும் நேந்திரம் பழமும், பாலும் சாப்பிட்டால், உடல் எடை அதிகரிக்கும். 
மஞ்சள் வாழைப்பழம், செவ்வாழைப் பழம் குடல் புண்ணை ஆற்றும். 
மலை வாழைப்பழம், மலச்சிக்கலை போக்கும். பேயன் பழம் குடல் நச்சுகளை அழிக்கும்.
=======================================================================================
திராட்சை பச்சையாக உள்ளபோதும், உலர்ந்திருக்கும் போதும் அதன் மருத்துவ குணம் ஒரே மாதிரி சிறப்புடன்தான் உள்ளது. திராட்சையில் சுமார் 60 வகைகள் உள்ளன. இதில் புளிக்கும் இனத்தை விடப் புளிப்பு இல்லாத இனமே மிகச் சிறந்த பலன் தருவதாகும்.
* திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும்.
* குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை 3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம்.

* 20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய் விட்டுப் பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல் மட்டுப்படும்.
* அசைவ உணவு உண்ணாதவர்கள்; அன்றாட வாழ்வில் திராட்சையைச் சேர்த்துக் கொண்டால், அசைவ உணவினால் கிடைக்கக் கூடிய தேவையான பலன்களைத் திராட்சையால் பெறமுடியும்.
* தொடர்ந்து திராட்சை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு உடலில் நோய் தடுப்புச் சக்தி வலுப்படும். குளிர்ச்சியும், சீரான சக்தியும் தருவது திராட்சை.
* காலை எழுந்தவுடன் திராட்சை ரசம் ஒரு கோப்பை பருகி வந்தால், நாட்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி இவை தரும் தீராத தொல்லைகள் தீரும்.
* மாதவிடாய் கோளாறுடைய பெண்களும், கர்ப்பிணிகளும் நாள்தோறும் காலை வெறும் வயிற்றில் திராட்சை ரசம் பருகுவது நல்ல பலனளிக்கும்.
* குழந்தைகளுக்கேற்ற நல்ல மருத்துவ பயன் நிறைந்தது திராட்சை. பல் முளைக்கும் பருவத்தில் ஏற்படும் மலக்கட்டு, பேதி, காய்ச்சல் போன்றவற்றிற்கு 2 வேளை ஒரு தேக்கரண்டி சாறு பிழிந்து கொடுத்தால் பலன் தெரியும்.
=====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?