இந்த கொடுமைக்கு முடிவெப்போ ??


எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்கிற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் ஊர் ஊராக சுற்றி வருகின்றனர். 

முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தில் தங்களது கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது போல அரசு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். 

ஒரு மாவட்டத்துக்கு 3கோடிகள் எனக்கணக்கிடப்பட்டு வருவாய்த்துறை மூலம் இந்த நூற்றாண்டு விழாக்கள் மக்கள் வரிப்பணத்தில் நடக்கின்றன.


ஏன் இதை நடத்த அதிமுகவிடமும்,அமைச்சர்களிடம் பணம் இல்லையா?

வருமானவரி ஆய்வில் பிடிபடும் கணக்கைப் பார்த்தால் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல அவர் அம்மா சத்ய பாமா ,சந்தியா,ஜெயலலிதா ஆகியோருக்கும் கோடிகளைக்கொட்டி விழா கொண்டாடலாம்.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் மட்டுமல்ல,சம்பளமும் கொடுக்க முடியாமல் போக்குவரத்துக்கு கழக பணிமனைகள் ,கட்டிடங்களை தனியாரிடம் அடகுவைத்து நிர்வகிக்கும் கையாலாகாத அரசுதான் மக்கள் பணத்தை இறைத்து விளம்பரம் தேடுகிறது.கொடுமை.

முதல்வரும், துணை முதல்வரும் தங்களதுஆட்சியை யாரும் அசைக்க முடியாது என்று சவால் விடுவதற்கே இந்த மேடைகளை பயன்படுத்துகின்றனர். உண்மையில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும்தான் ஒருவரை ஒருவர் கவிழ்க்க முயல்கின்றனர். இருவரது ஆதரவாளர்களும் போட்டியிட்டு வைக்கும் பேனர்கள்,கட்டவுட் களில் இருவருக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நூற்றாண்டு காணும் எம்.ஜி.ஆர் தான் பாவம்,காணாமல் போய் விடுகிறார்.

இந்த கலெபரத்தில் எடப்பாடி அறிவிக்கும் திட்டங்கள் யாருக்கும் பயனின்றி யார்யாரையோ திருப்தி படுத்த முனைகிறது.
தமிழ்நாட்டில் தினசரி நடத்தி பல்லாயிரம் கோடிகளை குவித்து வைத்திருக்கும் தினத்தந்தி சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அரசு காட்டுகிறதாம்.

இதனால் மக்களுக்கு என்ன பயன்?சிவந்தி ஆதித்தனார் தமிழக மக்களுக்கு செய்த சேவை,நன்மைகள் ஒன்றை இந்த அரசு சொல்ல முடியுமா?
தினத்தந்தி,மலைமுரசு,மாலைமலர்,ராணி,ராணி முத்து,ராணிகாமிக்ஸ்,aside ,கோகுலம் கதிர் என்று இவர்கள் வெளியிட்ட வெளியீடுகளை இலவசமாக மக்களுக்கு கொடுத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்களா?தமிழை வளர்த்தார்களா?


வழக்கமான பக்கங்ளுக்கு அதிகமாக விளம்பரம் கிடைத்தால் அதிக பக்க விளம்பரம் வெளியிட்டு அதற்கும் பத்திரிக்கை விலையை இரண்டு ரூபாய் வாங்கி கல்லாவை நிரப்பிய சுத்தமான வியாபாரிக்கு அரசு செலவில் மக்கள் வரிப்பணத்தில் மணிமண்டபம் கொடுமையான செயல்.

பிரதமர் மோடியிடம் நெருக்கமாக இருப்பது யார் என்பதில் இவர்களுக்குள் பெரும் போட்டியேநடக்கிறது. மத்திய அரசின் தயவில் இரட்டை இலைச் சின்னம் கிடைத்துவிட்ட நிலையில், அவர்களிடையே மோதல் முற்றியுள்ளது.

பெரும்பான்மை இல்லாத இந்த ஆட்சிக்கு ஆளுநர் முட்டுக்கொடுத்து வருகிறார். இந்த பின்னணியிலும் கூட முந்தைய ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்ததுபோல ஆடம்பரம், படாடோபத்தில் ஈடுபடுகின்றனர். 

தாங்கள் நடத்தும் விழாக்களுக்கு மக்கள் வர தயங்குவதால் நலத்திட்ட உதவி என்கிற பெயரில் முதியவர்களை, எளிய மக்களை அலைக்கழிக்கின்றனர். 


கலைநிகழ்ச்சி என்ற பெயரில் பள்ளி மாணவர்களை விழாவுக்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்ததை பொதுநல வழக்குஒன்றில் அளித்த தீர்ப்பின்மூலம் உயர்நீதிமன்றம் தடை செய்துள்ளது.
உயிரோடு உள்ள தலைவர்களுக்கு கட்அவுட்வைக்கக்கூடாது என்பதும் நீதிமன்ற தீர்ப்பு. 


ஆனால் இதை மீறி முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்களின் கட்அவுட்கள் வைக்கப்படுகின்றன. அமைச்சர்கள் போட்டிபோட்டுக்கொண்டு தங்களது செல்வாக்கை காட்ட அலங்கார வளைவுகள் அமைக்கின்றனர். 

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதன் உச்சகட்டமாக கோவையில் எம்ஜிஆர்நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட அலங்கார வளைவின் மீது மோதி ரகு என்றஇளம் வயது பொறியாளர் பரிதாபமாக இறந்துள்ளார்.

இது தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் ஆடம்பர அரசியலால் நிகழ்த்தப்பட்டுள்ளஒரு படுகொலையாகும். இந்த கொடிய விபத்தை மூடி மறைக்கும் வகையில் காவல்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர். 

விபத்து தொடர்பாக பதிவாகியுள்ள கேமரா காட்சிகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். 

அலங்கார வளைவு அமைத்தவரை பலிகடாவாக்கி பெரிய மனிதர்கள் தப்பிக்க அனுமதிக்கக்கூடாது.
கட்அவுட் கலாச்சாரம் என்பது தமிழக அரசியலில் ஒரு நோய் போல பரவியுள்ளது. 

மக்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் போது ஆள்வோர்கள் ஆடம்பரத்தில் திளைப்பதும் அரசு செலவில் ஊர் ஊராக உலா நடத்துவதும் ஏற்கத்தக்கதல்ல. 

அரசியலின் பெயரில் செய்யப்படும் ஊதாரித்தனம் குறித்து பொது வெளியில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.
=======================================================================================
ன்று,
நவம்பர்-29.


  • தாமஸ் ஆல்வா எடிசன், போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதல் தடவையாக காட்சிப்படுத்தினர்(1877)

  •  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம்(1908)

  • பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா முடிவெடுத்தது(1947)
=====================================================================================
சிரிக்கவும் சிந்திக்கவும் கற்றுக் கொடுத்த கலைவாணர்.

“அண்ணே.. நம்ம தெருக்கோடி செல்லமுத்தண்ணன் நடக்குறது கொஞ்சம்கூட சரியில்லேண்ணே..’

கலைவாணர்: ”ஏன் அவருக்கு காலுல கட்டி வந்திருக்கோ?”

“அது இல்லண்ணே.. பொண்டாட்டிய ஆத்தா வூட்டுக்கு அனுப்பிட்டு.. எவளோ ஒருத்தியை கொண்டாந்து வீட்டுல வச்சிருக்காரு. ஊரு முழுக்க கடன்.. குருசாமி செட்டியாரு ஆளைப்புடிக்கிறதுக்கு வாரண்ட்டோட அலையுறாராம்.’

“அப்படியா? அப்ப செல்லமுத்து அண்ணன் குளோஸ். நல்லா தெரிஞ்சு வச்சிருக்கே.. அப்படித்தானே? அது இருக்கட்டும்.. தம்பி உன் ஜேப்புல (பாக்கெட்) என்ன இருக்கு?''

“அதுவாண்ணே கொஞ்சம் சில்லறை, அப்புறம் பேப்பரு, பேனா இதெல்லாம் இருக்கு”

“அப்படி சொல்லக்கூடாது.. சில்லறைண்ணா எவ்வளவு சில்லறை.. பேப்பருன்னா எத்தனை பேப்பரு.. அதுல என்னன்ன எழுதியிருக்கு? எல்லாத்தையும் விவரமா சொல்லணும்”


“இருங்கண்ணே.. ஒரு முறை பார்த்துட்டு சொல்றேன்..”

“பார்க்காம சொல்லணும் தம்பி”

“பார்க்காம எப்படிண்ணே முடியும்?”

“சரிதான்.. ஜேப்புல இருக்கிறத பார்க்காம சொல்ல முடியாது. செல்லமுத்தண்ணன் விசயம்னா பார்க்காமலேயே சொல்ல முடியும். அப்படித்தானே.. இப்படித்தான் நம்ம நாட்டுல, தன் தப்பை தெரிஞ்சிக்காம பிறத்தியானைப் பத்தியே பேசிக்கிட்டிருக்காங்க.... ”

https://www.youtube.com/watch?v=9mBRhw0u0zM
-கலைவாணர் தயாரித்து நடித்த ‘மணமகள்’ (1951) படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி இது. 
வசனகர்த்தா, கலைஞர். 
இந்தப் படத்திற்கு வசனம் எழுதியதற்காக கலைஞருக்கு கார் வாங்கித் தந்தார் கலைவாணர். 
அப்போது கலைஞருக்கு வயது 28. 
இத்தனை இளம் வயதில், எழுத்துத்திறமையால் கார் சம்பாதித்த ஒரே தமிழ் எழுத்தாளர் கலைஞர்தான். 

“தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும்மகான் கிருஷ்ணன். 
தமிழர்கள் தங்கள் துயரத்தைச் சில நிமிஷங்களேனும் மறக்கும் படியாகச் செய்யும் பெரிய உபகாரியான கிருஷ்ணனை மதிக்காதவர்கள் நாட்டின் பொது நன்மைக்குப் பாதகம் நினைப்பவர்கள் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை. 
கிருஷ்ணன் தமது சொந்த வாழ்க்கையிலும் பரம ரசிகர் என்பது மதுரத்தைத் தோழியாகக் கொண்டதே தெளிவாகக் காண்பிக்கிறது. கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாள் வாய்த்தது போல, கிருஷ்ணனுக்கு மதுரம்வாய்த்திருக்கிறார்.
இல்லை; தப்பிதம்.சுந்தராம்பாளுக்குக் கிட்டப்பா வாய்த்ததுபோல மதுரத்துக்குக் கிருஷ்ணன் வாய்த்திருக்கின்றார். 
இது தமிழ்நாட்டின் பாக்கியமாகும்” 1943-ஆம் ஆண்டிலேயே கலைவாணர்என்.எஸ்.கிருஷ்ணனையும் டி.ஏ.மதுரத்தையும் இப்படி நெஞ்சாரப் புகழ்ந்து எழுதியவர் அக்கிரகாரத்து அதிசய மனிதர் எனச் சிறப்பிக்கப்பெறும் அறிஞர் வ.ரா.கலைவாணர் என்.எஸ்.கே. என்று தமிழகமக்களால் போற்றிப் புகழப்பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன் பெருமித உணர்வோடு தமக்குத் தாமே சூட்டிக்கொண்ட பட்டப் பெயர் நாகரீகக் கோமாளி என்பதாகும்.
 “நாட்டுக்குச் சேவை செய்யநாகரீகக் கோமாளி வந்தான் அய்யா:ஆட்டம் ஆடிபாட்டுப் பாடி நல்ல அழகான ஜதையோடு வந்தான் அய்யா!” என்று தமது சொந்தப் படமான நல்ல தம்பியில் தம்மைப் பற்றிய கொள்கை முழக்கத்தை ஒரு பாடலின் வாயிலாக வெளியிட்டார் கலைவாணர்.
ஒரு முறை சென்னை வானொலியில் உரையாற்ற நேர்ந்த போதும் அவர் ‘என்கடன் களிப்பூட்டல்’ என்றே குறிப்பிட்டார். தம் தனி வாழ்விலும் சரி, திரையுலக வாழ்விலும் சரி கலைவாணர் நகைச்சுவை உணர்வுக்குத் தந்த இடம் முக்கியமானது; முதன்மையானது.
கலைவாணரின் நகைச்சுவை உணர்வுக்குக் கட்டியம் கூறும் சில சுவையான நிகழ்ச்சிகள்...மதுரை வீரன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி:அத்தே! என்பாள் அரசிளங்குமரி (பானுமதி). 
அக மகிழ்ந்து போவார் மதுரை வீரனின் தாய் (டி.ஏ.மதுரம்); அப்போது இரண்டே சொற்களில் தமது விமர்சனத்தைச் சொல்லுவார் மதுரைவீரனின் தந்தையாக வரும் கலைவாணர்: “நீ செத்தே!” திரை அரங்கமே இதைக் கேட்டுச் சிரிப்பில் அதிரும்.
இப்படத்தில் பிறிதொரு காட்சியில் கலைவாணரும் மதுரமும் வைகை ஆற்றைக் கடந்து மதுரைமாநகருக்குச் செல்வார்கள். அப்போது இருவருக்கும் இடையே நிகழும் சுவையானஉரையாடல்: “என்ன மச்சான்! வைகையிலே தண்ணியே இல்லை?” “வை அண்டான்னானா? 
குண்டான்னானா? வை, கைன்னு தானே சொன்னான்?
”1956-ல் இந்தியப் பேசும் படத்தின் 25-ஆம் ஆண்டு(வெள்ளி) விழா சென்னையில் நடந்தது.“லேடீஸ் அண்ட்ஜெண்டில்மேன்!” என்று கலைவாணர் பேச்சைத் தொடங்கினார். 
கலைவாணர் ஆங்கிலத்தில் உரையாற்றப் போகிறார் என்று பலரும் நினைத்தனர். “அவ்வளவுதான் எனக்குத் தெரிந்த இங்கிலீஷ்” என்று கூறிவிட்டு தமிழில் பேசினார்.ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணன் கல்கியிடம் “எனக்குக் கதை எழுத வேண்டும் என்று ஆசை” எனச் சொன்னார்.
“அதற்கு நான்கு மை வேண்டுமே?” என்றார் கல்கி.
“என்னென்ன கலர்களில்?” - இது என்.எஸ்.கிருஷ்ணன்.“பேனா மை, திறமை, தனிமை, பொறுமை” எனக் கல்கி சொன்னதும் உடனடியாக, “நீங்கள் சொன்னது மிகஅருமை...” என்றார் என்.எஸ்.கிருஷ்ணன்!'
என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். 
அந்தச் சரித்திரநாடகத்தில் வந்த சக்கரவர்த்தி, தமக்கு எந்தெந்த ராஜாக்கள் கப்பம் கட்டினார்கள் என்று மந்திரியைக் கேட்டார்.
“வங்க ராஜாதங்கம் கட்டினார்; கலிங்க ராஜா நவமணிகள்கட்டினார்” என்றெல்லாம் அடுக்கிக் கூறினார் மந்திரி. உடனே சக்கரவர்த்தி, “சோழராஜா என்ன கட்டினார்?” என்று கேட்க,வசனம் மறந்த மந்திரி விழிக்க, வேலைக்காரனாக நின்ற கலைவாணர் “வேஷ்டி! வேஷ்டி!” என்று சொல்லி விட்டுப்போக,அனைவரும் வயிறு குலுங்கச் சிரித்தனர்.'
திரைப்பட ஆய்வாளரான அறந்தை நாராயணன் நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன் என்ற கலைவாணரைப் பற்றியநூலின் முடிவில் எழுதியிருக்கும் வரிஇது:“1936 முதல் 1957 வரை லட்சக்கணக்கான தமிழர்களைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்து கொண்டிருந்த கலைவாணர் ஆகஸ்ட் முப்பதாம் நாள் முற்பகல் பதினொரு மணி பத்து நிமிடத்தில் இருந்து, தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டார்”. அனைவரது நெஞ்சங்களையும் நெகிழச் செய்யும் ஓர்அரிய தற்செயல் நிகழ்வு; ஒப்புமை;
“பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமான போது அவருக்கு வயது 29; பாரதியார் காலமானது அவரது 39-ஆவது வயதில்; கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனோ 49-ம் வயதில் காலமானார்.தமிழ் கூறும் நல்லுலகை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நிகரற்ற கலைஞர் கலைவாணர் சோஷலிச சோவியத் ரஷ்யாவிற்குச்சென்று அங்கு கண்டு வந்ததைப் பற்றி வெகுவாகப் பாராட்டிப் பேசியவை காலத்தால் அழியாதவை.
சோவியத் ரஷ்யா குறித்து கலைவாணர்“மதபீடத்தில் சாயாத, மதியை இழக்காத நாடு” எனப் புகழ்ந்தார். மேலும் “பொன்னாடு, தர்மபுரி, உல்லாசமிருந்த சோலைவனம், அறிவு நிறைந்த கலைக்கூடம்” என்றெல்லாம் வாயாரப் புகழ்ந்து பேசினார். கலைவாணர் அந்நாட்டுடன் நம் நாட்டை ஒப்பிட்டுப் பேசியதும் குறிப்பிடத்தக்கது. 
“ உலகம், மாயை, காயம், பொய்என்ற வேத பாராயணம் அல்ல.
தொழில் பெருக்கம், அறிவு வளர்ச்சி, நல்ல ஆற்றல்,வாழ்க்கையில் இன்பம் எல்லாம் காண்கிறோம் அங்கு ரஷ்யாவில்! கடவுள், மதம்,சாதிமதம், பழைய புராணப் பண்பாடுகளுக்கு இருப்பிடம் இங்கு இந்நாட்டில் நிலவுவது’’ என்றார். மேலும் “வாழ்கின்ற மக்கள்முப்பத்து முக்கோடி என்றால், சூழும் பேதங்கள் அந்தத் தொகை இங்கு நம்நாட்டில் காண்பது. 
எல்லோரும் ஓர் குலம்,எல்லோரும் ஓரினம், எல்லோரும் சரிசமம் என்னும் நிலை அங்கு ரஷ்யாவில் காணப்படுவது எனப் புகழ்ந்தார். சோவியத் ரஷ்யாவிற்குச் சென்று வந்த எந்தக் கலைஞரும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைப் போல் சோஷலிச சோவியத் ரஷ்யாவின் அருமை பெருமைகளை விரிவாக வியந்தும்புகழ்ந்தும் பேசியதில்லை. 
அந்தளவிற்கு மண்ணில் சொர்க்கம் எனும் மாண்புகளை நேரடியாகக் கண்டும் கேட்டும் ஒன்றிப் போனவராய்த் திகழ்ந்தார் கலைவாணர்.

=======================================================================================

விழித்தெழும் இந்தியா?
இந்தியாவில் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வுஅதிகரித்துள்ளது.
 இயற்கையை பேணுவது குறித்த விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. 
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெளிநாட்டு பானங்களுக்கு எதிராக இளைஞர்கள் ஆர்ப்பரித்ததால் தமிழகத்தில் பன்னாட்டு மென்பானங்கள்  விற்பனை குறைந்ததுள்ளது. 
மேலைநாடுகள் தங்கள் மென்பானங்களை நம்நாட்டில் திணித்து   பொருளாதாரத்தை மட்டுமல்ல இயற்கைவளங்களையும் சீர்குலைப்பதை இளம்தலை முறையினர் உணர்ந்து விட்டனர்.
குடிக்க நீர் இல்லாமல் மக்கள் அலையும் இடத்திலேயே கோககோலா ,பெப்சி நிறுவங்கள் நிலத்தடி நீரை பகல்கொள்ளை அடிப்பதுடன் ,தனது ரசாயன கழிவுகளை விவசாய நிலங்களில் கொட்டி நிலங்களையும் விஷமாகி விட்டன.
யார் போட்டோ எடுத்தாலும்
 போஸ் கொடுக்காரே பாஸ்
.

அரசிடம் நிலத்தடி நீரை 100 லிட்டர்கள் ஒரு ரூபாய் அளவில் வாங்கி அதையே கோலாவாக்கி 180 மி.லிட்டர் 30 ரூபாய்க்கு விற்கிறது கோலா . 
இருக்கும் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளை  பார்க்கும் கோலா,பெப்சி நிறுவங்கள் ரசாயன கழிவுகளை மட்டும் விவசாய நிலங்களில் போட்டு விட்டு,பல்லாயிரக்கணக்கான கோடிகளில் லாபத்தை அமெரிக்காவிற்கு  செல்கிறது
 இதற்கு எதிராக கேரளாவில் மக்கள் கிளர்ந்தெழுந்து கோககோலா தொழிற்சாலையை மூட வைத்தது வரலாறு.
ஒருபக்கம் இளைய தலைமுறை விழிப்புணர்வு.
மறுபக்கம் இந்தியா முழுக்கவும் கோக் ,பெப்சி உறிஞ்சுவதை நாகரிகமாக கருத்திய மேட்டுக்குடி  மக்கள்,கோககோள ,பெப்சியில் சேரும் ரசாயனங்களை ,கழிப்பறை கழுவும் அமிலம் போல் அவை உள்ளதை அறிந்து  ஆரோக்கிய பானங்களை நோக்கி நகர ஆரம்பித்துள்ளனர்.
இன்னும் லாபம்தான் இதுபோன்ற காரணங்களால் கோலா உற்பத்தியாளர்கள், விற்பனை சரிவை சந்தித்து வருகிறார்கள். தற்போது நாடு முழுக்க கோககோலா நிறுவனத்திற்கு 21 ஆலைகள் உள்ளன. 

2017ம் ஆண்டில் மார்ச் மாத நிலவரப்படி, கோககோலா நிறுவன வருவாய் ரூ.9,472 கோடியாக இருந்தது.
இதனால் கோக்கோ கோலா உற்பத்தி மையங்கள் பலவும் கடந்த இரு வருடங்களில் மூடப்பட்டு வருகின்றன. 

மேலும் புதிதாக உற்பத்தி மையங்களை அமைக்கும் இடங்களில் உள்ளூர் மக்களும் விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.


எனவே இந்த நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மட்டத்தில்  சுமார் 250 பேர்களை கோலா வீட்டுக்கு அனுப்ப  செய்துள்ளதாம். நிதிப்பிரிவு, மனிதவள பிரிவுகளில் பணியாற்றியவர்கள் அதிகம்பேர் இதில்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
==================================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?