முதல்வரின் கூடுதல் பொறுப்பு ஆளுநர்.

தமிழ் நாட்டில் முதல்வராக உட்கார்ந்திருக்கும்  எடப்பாடி பழனிசாமிக்கு இணையான இன்னோர் அரசாங்கத்தை ராஜ்பவன் மோடியின் ஆசியுடன் வெளிப்படையாகவே  நடத்தத் துணிந்து விட்டது தெளிவாகிறது.

இது எந்த காலத்திலும் காலூன்றி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியா பாஜகவின் கொல்லைப்புற ஆட்சியாகவே அமையும்.
கோவையில் தமிழக ஆளுநர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தினார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பினாலும் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்கள் நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. 
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் (நடுவில்).  
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில்  நிதின் கட்கரி உடன் .


அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக ஆளுநர் மாளிகையில் கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டிருக்கிறது. 

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையான, புதிய கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற அறிவிப்பின் மூலம் மத்திய அரசு தமிழகத்தில் ஆளுநர் மாளிகை மூலம் இணை அரசு நடத்தி வருவது வெளிப்படையாகிவிட்டது.

செவ்வாய்க்கிழமை (நவம்பர் 28) இரவு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறார்.
“தமிழ்நாடு ஆளுநருக்குக் கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு அப்பதவியில் ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்படுகிறார். 

இவர் ஒரு வருட காலத்துக்கு இப்பதவியில் இருப்பார்.எதற்கு இதற்கு எதற்கு அவசரம்,அவசியம்?.
ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி எனப்படுவது தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு நிகரானதாகும்.

இதுவரை தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா தமிழ்நாடு தொழில்மேம்பாட்டுக் கழகத்துக்கு மாற்றப் பட்டிருக்கிறார்” என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில், பிரதமர் அலு வலகத்தில் கூடுதல் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.சோமநாதன் தமிழகத் திட்டம், வளர்ச்சிசிறப்பு செயலாக்கத் துறை செயலா ளராக நியமிக்கப்பட்டார். 
டி.வி.சோமநாதன்பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்க மானவர் என்றும் மோடியின் கண் களாகவே அவர் கோட்டையில் இருப்பார்என்றும் கூறப்பட்டது. 

அத்துடன் ‘தமிழகத்தின் தலைமைச் செயலகத்தில் டி.வி.சோமநாதன் என்றால், மத்திய உள்துறையின் முக்கிய அதிகாரியான ராஜகோபால் ஐ.ஏ.எஸ். தமிழக ஆளுநர் மாளிகைக்கு வருகிறார்’ என்றும் கூறப்பட்டது.
அதன்படியே செவ்வாயன்று தமிழக ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ராஜகோபால் தலைமைச் செயலா ளர் அந்தஸ்தில் உள்ள 1987ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரி. 
அவர் ஆளுநர் மாளிகையில் இருக்கும் ரமேஷ் சந்த் மீனா என்ற 1991 பேட்ச் அதிகாரியின் இடத்தில் எப்படி நியமிக்கப்படுவார் என்று கடந்த வாரத்தில் இருந்து குழப்பம் நிலவியது. 

இந்நிலையில் ஆளுநருக்கென புதிய பதவியாகக் கூடுதல் தலைமைச் செயலாளர் என்ற பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார். 

இவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையானவர் என்ற ஆணையை தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனே வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கோவையில் தமிழக அரசுஅதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார். 

இதற்கு ஆளுங் கட்சியைத் தவிர்த்து மற்ற அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால், சட்டப்படிதான் ஆளுநர் ஆய்வுகளை நடத்துகிறார் என்று ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது.

அதேநேரம் சட்ட வல்லுநர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியபோது ஆளுநர் நேரடியாக களத்தில் இறங்க முடியாது என்பதும் ஆனால், மாநில அரசின் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு இணையாக ஆளுநர் ஒரு தலைமைச் செயலாளரைத் தனக்கென வைத்துக் கொள்ளலாம் என்றும் சட்டத்தில் உள்ள ஓர் அம்சம் மத்திய அரசுத் தரப்புக்கு எடுத்துச் சொல்லப்பட்டதாகவும், அதன்படி இந்திய ஆட்சிப் பணி சட்டம் 1954இன் 4(2)இன்படி ஆளுநருக்குத் தலைமைச் செயலாளர் என்ற தற்காலிக பதவியை உருவாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.


இனி தமிழக தலைமைச் செயலாளர்கிரிஜா வைத்தியநாதனுக்கு இருக்கும் அத்தனை அதிகாரமும் ஆளுநரின் தலைமைச் செயலாளர் ராஜகோபா லுக்கும் உண்டு.  

அதிமுக முதல்வர்களை கட்டுப்படுத்தத்தான் கிரிஜா வைத்தியநாதன் தலைமைச் செயலாளரானார்.

அவரின் பணிக்கு ஆதரவாக செயல்படவே ராஜகோபாலை பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.

இருவருமே கவுடில்யர் வம்சம்.

இனி தமிழகத்தை பாஜக கோலோட்சும்.

ஆளுநர் ஆய்வை வரவேற்ற அடிமை ஆட்சியாளர்களுக்கு இனி கட்டளைகளைப் பெற டெல்லிக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை.

சுடச்சுட ராஜ்பவனிலேயே பெற்றுக்கொள்ளலாம்.தமிழ்நாடு தனித்தன்மையாக கூறிவந்த மாநில சுயாட்சி இனி மெல்ல ..........!
 ======================================================================================

"நவில்தொரும் நூனயம் போலும் பயில்தொரும் 

பண்புடை யாளர் தொடர்பு"





படிக்கப்படிக்க நல்ல நூல்போல பழகப்பழக இன்பம் தரும் பண்பாளர் நட்பு

ன்று,
நவம்பர் -30.
ஜகதிஷ் சந்திர போஸ்


  • ஸ்காட்லாந்து தேசிய தினம்

  • இந்திய விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1858)

  • பார்போடஸ் விடுதலை தினம்(1966)

  • வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)
======================================================================================
புதிய போலி இந்தியா.
இந்தியாவில் விற்பனையாகும் மருந்துகளில் 10ல் ஒன்று போலியானது என உலக சுகாதார நிறுவன, வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 10 சதவீதம் போலியானவை அல்லது நம்பகத்தன்மை இல்லாதவை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலக சுகாதார நிறுவனம் சார்பில் சர்வதேச கண்காணிப்பு மற்றும் பரிசோதனை முறை கடந்த 2013 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இது சர்வதேச அளவில் 3 கட்டமாக ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தது. 
அப்போது 1500 தயாரிப்புகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
முடிவில் ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
குறிப்பாக மலேரியா மற்றும் ஆன்டி பயாடிக் எனும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரையிலேயே போலிகள் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவன ஆய்வு கூறியுள்ளது. 
இதன்மூலம் பொதுமக்களின் உயிர் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய மருத்துவ அமைப்பும்,சுகாதார தர நிர்ணயத்துறையினரும் இது போன்று மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்வதை விட என்ன வேலையை செய்து கிழிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
பதஞ்சலி நிறுவனத்தின் மருந்து பொருட்களில் தரமே இல்லை. அதனால் அந்த பொருட்களை திரும்பப்பெற நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது.
போலிச்சாமியார் பாபாராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தில் ஆயுர் வேத முறையில் மருத்துகள் தயாரிக்கப்படுவதாக கோடிக்கணக்கில் விளம்பரம் செய்யப்படுகிறது. 
விளம்பரங்களை நம்பி மக்கள் பதஞ்சலி பொருட்களை வாங்கத்துவங்கி உள்ளனர். மேலும் ஆளும் அரசும் பதஞ்சலி நிறுவனப்பொருட்களுக்கு பல வகைகயில் ஆதரவு அளித்து வருகிறது. 
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள திவ்யா பார்மசியில் தயாரிக்கப்பட்டுள்ள 6 பொருட்கள் நுண்ணுயிர் சோதனை மூலம் தரமற்றது என்று கண்டு படிக்கப்பட்டுள்ளது.
 இதனால் தரக்குறைவானது என்று நிரூபிக்கப்பட்ட ஆம்லா சூர்ணா, திவ்ய கஸ்ஹர் சூர்ணா, திரிபாலா சூர்ணா, பகுச்சி சூர்ணா, அஸ்வகந்தா, அதிவ்யா சூர்னா, ஆகிய 6 மருந்து பொருட்களை விற்பனை நிலையங்களில் இருந்து திரும்பப்பெறும் படி பதஞ்சலி நிறுவனத்திற்கு நேபாள் அரசு நோட்டீஸ் வழங்கி உள்ளது. 
மேலும் இந்த பொருட்களை பரிந்துரை செய்யவும் தடை விதித்துள்ளது.
ஏற்கனவே ஆம்லா சூஸ்(நெல்லி சாறு) தரமற்றது என்று ஆய்வக சோதனையில் தெரியவந்தது. 
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள ராணுவ கேண்டீன்களில் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆம்லாசூஸ்சை(நெல்லி சாறு) திரும்பப்பெற உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
=========================================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?