‘குஜராத் மாடலின்’ கோர வடிவம்

பிரதமர் நரேந்திர மோடியாலும், பாஜகவினராலும் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ‘குஜராத்மாடல்’,

 பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குஜராத்திலிருந்து வெளியேறிச் சென்றுகொண்டிருப்பதன் மூலமாக மீண்டும் ஒருமுறை தன் கோர வடிவத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. 

அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை வெறியாட்டங்களின் காரணமாகவும், அவர்களுக்கெதிரான பிரச்சாரங்கள் மூலமாகவும் மோடியின் ‘குஜராத் மாடல்’ எந்த அளவிற்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது என்பதைஇன்னும் முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 
குஜராத்திலிருந்து அச்சத்துடன் மீண்டும் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பும் தொழிலாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 

உண்மையில் இவர்கள் அனைவரும், 2014 மக்களவைத் தேர்தலின்போது மோடிக்காகவும் பாஜகவிற்காகவும் ‘குஜராத் மடலை’ப் பிரச்சாரம் செய்வதற்காக குஜராத் வந்தவர்கள்.புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் தற்போதைய வன்முறை வெறியாட்டங்களின் விளைவாக, வெளியேறுவது என்பது, எப்படித் தொடங்கியது? 

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் ஹிம்மத்நகர் அருகில் 14 மாதப் பெண்குழந்தை வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளானது. 
இதற்கு பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர்தான் காரணம் என்றுகுற்றம் சாட்டப்பட்டு, “அயலார்களை விரட்டியடிப்போம்” என்று வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதுதான் காரணமாகும்.

கடந்த நான்கு நாட்களாக, புலம் பெயர்ந்து வந்தஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வட குஜராத்திலிருந்து, ரயில்கள், பேருந்துகள், லாரிகள் என எந்தவிதமானபோக்குவரத்து கிடைத்தாலும் அதன்மூலம் தங்கள் ஊரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். 

மீண்டும்தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ள ஒருசிலர் மட்டும் வஸ்த்ரால் என்னுமிடத்தில் உத்தர்பாரதிய விகாஸ் பரிஷத் என்னும் அமைப்பின் தொண்டர்களால் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.குஜராத் காவல்துறைத் தலைவர் சிவானந்த் ஜா, செய்தியாளரிடம் கூறுகையில், வன்முறையாளர்களுக்கு எதிராக இதுவரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 342 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

தொழிலாளர்கள் நவராத்திரி, தீபாவளி மற்றும் தங்கள்மாநிலத்தில் நடைபெறும் சில பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காகத்தான் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறிக் கொண்டார், அது பொய் என்பது அவருக்கே தெரியும்.

குஜராத் வளர்ச்சி என்னும் மாயை

குஜராத் மாநிலத்தில் சமீப காலங்களில் வன்புணர்வுக் கொடுமைகள் ஏராளமாக அரங்கேறியிருக்கின்றன. 
எனினும் இப்போது ஒரு குழந்தை வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறது.கடந்த சில ஆண்டுகளாகவே, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் ‘குஜராத் மாடலை’ இந்தியா முழுமைக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்கள். 


பாஜகவின் வெறுப்பு அரசியலின் ஓர் அங்கமாக, குஜராத்திற்கு புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராகவும்பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தவர்கள் வேலையில்லாஇளைஞர்கள்தான். ஆனால் அவர்களுக்கும்கூட கவுரவமான வேலை எதுவும் கிடைத்திடவில்லை. 

இவர்கள் தங்கள்கோபத்தை, இதற்குக் காரணமான ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திருப்பாமல், எவ்விதத்திலும் காரணமற்ற, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகத் திருப்பி இருக்கிறார்கள். 

இவ்வாறாவது தங்களுக்கு வேலை கிடைக்கலாம் என நம்புகிறார்கள்.

அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சலுகைகள் பெற்றுநிறுவனங்களை அமைத்திடும் தனியார் தங்கள் நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு – அதாவது 80 சதவீதம் - உள்ளூர் ஆட்களுக்கு வேலை அளித்திட வேண்டும் என்பதுமாகும். 
இதனை அவர்கள் நிறைவேற்றத் தவறியதும் இப்போது ஏற்பட்டிருக்கிற பிரச்சனைக்குக் காரணமாகும்.

இந்த அம்சத்தை, காங்கிரஸ் எம்எல்ஏ அல்பேஷ் தாகூர் என்பவர் சமீபத்தில் பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர்தான் வன்முறையைத் தூண்டிவிடுகிறார் என்று தற்போது சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
குஜராத்தில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் குறித்து சமூக விஞ்ஞானியும், எழுத்தாளருமான அச்யுத் யக்னிக்கூறுகையில், “இதன்மூலம், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் தோல்வி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. 

வேலையற்ற இளைஞர்களின் பிரச்சனைகளைத் தீர்த்திட, அரசாங்கம் தவறிவிட்டது. மாநிலத்தில் மிகவும்வலுவாக உள்ள தாகூர்கள் என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில்கூட இன்றைய தினம் வேலையின்மை மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது” என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், “சிறிய அளவில் நிலம்வைத்திருந்த விவசாயிகள், ‘குஜராத் மாடல் என்பதன்கீழ் வளர்ச்சி’ என்கிற மாயைக்குப் பலியாகி, தங்கள் நிலங்களை விற்றுவிட்டு, தொழிலாளியாக மாறத் தயாரானார்கள்.

எனினும், பிற மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் எந்த வேலையையும், எந்த சம்பளத்திற்கும் செய்யத்தயாராய் இருந்த நிலையில், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளால் அவர்களுடன் போட்டிபோட முடியவில்லை. 
இதுவும் பிற மாநிலத்தவருக்கு எதிராக உள்ளூர்வாசிகளுக்கு கோபம் ஏற்படுவதற்குக் காரணமாகும்” என்கிறார்.


வெறுப்பு அரசியல்

குஜராத் மாநிலத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் மோசமான நிலைமைக்கு காரணம் ‘குஜராத் மாடலின்’ பொருளாதாரத் தோல்வி மட்டுமல்ல; மாறாக, கடந்த முப்பதாண்டு காலமாக இந்துத்துவா அமைப்புகளும், பாஜகவும் அங்கு முஸ்லிம்கள் உட்பட மதச் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் இப்போது புலம்பெயர்ந்து வந்துள்ளஅயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொண்டுவந்த வெறுப்பு அரசியல் பிரச்சாரமும் காரணங்களாகும். 
இவ்வாறான ‘வெறுப்பு அரசியல்’ என்னும் பூதம்தான் குஜராத்தை இப்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

“வெறுப்பு அரசியல் இப்போது புதியதொரு வடிவத்தில் வந்திருக்கிறது. 
1980களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உருவான கிளர்ச்சிப் போராட்டங்கள், 
1985வாக்கில் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் வகுப்புவாதமோதல்களாக மாற்றப்பட்டன. 

பின்னர் 1986-87 மற்றும்1990-92களில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பிரச்சனையைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறி வன்மம் நிறைந்த சம்பவங்களாக மாற்றமடைந்தன. 
பின்னர் 2002 கலவரங்கள் வெடித்தன,” என்று யாக்னிக் விளக்குகிறார்.

2002 கலவரங்களுக்கு முன்னர், 1998களில் தெற்கு குஜராத்தின் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் தொடக்கி வைக்கப்பட்டன. 
இவர்களுடைய வெறுப்பு அரசியலானது கடந்த இரண்டு ஆண்டுகளாக, தலித்துகளுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்திருப்பதை நன்குகாண முடிகிறது. 

இதற்கு உனா சம்பவம் முக்கிய எடுத்துக்காட்டாகும். இப்போது பிற மாநிலத்தவர்களை “வெளிநபர்கள்” என்று முத்திரை குத்துகிற பிரச்சாரமாக உருவெடுத்திருக்கிறது.
‘குஜராத் மாடலின்’ இருண்ட பக்கம் இப்போது தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. விவசாய நெருக்கடி, வேலையின்மை, வெறுப்பு அரசியல் ஆகியவற்றால் குஜராத் பீடிக்கப்பட்டிருக்கிறது. 

இதரபகுதி மக்களுக்கு இது ஓர் எச்சரிக்கை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லாது, ‘குஜராத் மாடலை’ இன்னமும் மக்கள் நம்பினார்கள் என்றால், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இதுபோன்ற பதற்ற நிலைமைகள் இன்னும் உருவாக்கப்படக்கூடும்.
நன்றி: தி ஒயர் இணைய இதழ் 
தமிழில்:ச.வீரமணி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஜக அடிமை பினாமி அதிமுக அரசின் நிலக்கரி ஊழல்..
Coal India , எனப்படும் அரசு நிறுவனத்தில் ஒரு டன் நிலக்கரியின் விலை : டன்னுக்கு 2,000 ரூபாய்
அதானி நிறுவனத்தில் ஒரு டன் நிலக்கரியின் விலை : டன்னுக்கு 5,000 ரூபாய் .
அதாவது, அதிமுக அரசு ஒரு டன்னுக்கு 3,000 ரூபாய் அதிகமாக அதானி நிறுவனத்திற்கு கொடுக்க ஒப்பந்தம் போடுகிறது.
இது குறித்து பேச வேண்டிய, நம்முடைய முகநூல்  போராளிகள் அனைவரும் வைரமுத்துவை நோண்டிக்கொண்டே இறக்கிறார்கள்.
Don Vetrio Selvini
========================================================================================
ன்று,
அக்டோபர்-12.


  • ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)
  • கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)
  • சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட் விற்பனை 
=========================================================================================

பாஜக  தடையை உடைத்த 

"தேசர்கதா" !

திரிபுரா மாநிலத்தில் 40 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை தேசர்கதா. நாளிதழாக வெளிவந்துகொண்டிருந்த அந்த பத்திரிகையை புதிதாக அங்கு ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு முடக்க முனைந்தது.
 அந்தப் பத்திரிகை, பத்திரிகைகள் பதிவு விதிகளை மீறியிருப்பதாக பொய்க்காரணம் காட்டி, பத்திரிகையின் பதிவை நீக்கி  மாவட்ட ஆட்சியர் மூலமாக ஆணை  பிறப்பிக்கச் செய்தது.

 
இதையடுத்து கடந்த 10 நாட்களாக அந்த பத்திரிகை வெளிவரவில்லை. 

இச்செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டோம்.

மாவட்ட ஆட்சியரின் ஆணையை  எதிர்த்து திரிபுரா உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரின்ஆணையை தடை செய்து அதை நீக்கி தீர்ப்பு வழங்கியது.
 அதைத் தொடர்ந்து அந்த பத்திரிகை இன்று காலை வெளியானது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மாசு கட்டுப்பாட்டு வாரியமா?

மாசு உருவாக்க  வாரியமா??


தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் காவிரி டெல்டா பகுதியை அழிக்க மத்தியஅரசும் தனியார் பெரு நிறுவனங்களும் துடித்துக்கொண்டிருக்கின்றன.

ஹைட்ரோ கார்பன், பாறையிடுக்கு வாயு (ஷேல்,கேஸ்) எடுத்தல் போன்றநாசகரமான திட்டங்களை இப்பகுதியில்அமல்படுத்த தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றன. 

தமிழகத்தில் இரண்டு இடங்களில்ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதி,ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு முத்துநகரைநாசமாக்கிய வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில்தான், தமிழகத்தை சுற்றுச்சூழல்மாசுவில் இருந்து பாதுகாக்கவேண்டிய மாநிலமாசுகட்டுப்பாட்டு வாரியம் மோசமான கோரிக்கையை மத்திய அரசிடம் விடுத்துள்ளது. 

மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் சமயத்தில் அதுகுறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தும் போது, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அக்கூட்டம் தடைபட்டால் அடுத்த கூட்டத்தை நடத்துவதில் இருந்துவிலக்கு அளிக்கவேண்டும் என்பதுதான் அந்தகோரிக்கை.இதன் அர்த்தம் என்னவென்றால் மீண்டும் கூட்டம் நடத்தாமல் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தானாக அனுமதி அளிக்கவேண்டும் என்பதுதான்.


புதுதில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை இதுபோன்ற பல கோரிக்கைகளை மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அளித்துள்ளார். 

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, நகராட்சிக்கழிவுகள் மேலாண்மை வசதி, அபாயகரமானகழிவுகளை பராமரிக்கும் மையம், எண்ணெய்மற்றும் இயற்கை எரிவாயுயை கொண்டு செல்லகுழாய் பதித்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு உடனடியாகஇதில் தலையிட வேண்டும் என்று அந்தமனுவில் கோரப்பட்டுள்ளது. 

இது ஏதோ இந்தமாநில அரசின் கோரிக்கை போன்று தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலை, சேலம்-சென்னைஎட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் பதித்தல்போன்ற திட்டங்களுக்கு தமிழக மக்களிடையே கடும்எதிர்ப்பு உள்ளது. 
களத்திலும் நீதிமன்றங்களிலும் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். 

நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் ஹைட்ரோ கார்பன்எடுக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெருநிறுவனங்கள்தங்களது கொள்ளை லாபத்திற்காக தமிழகத்தின் இயற்கையை எளிதாக சூறையாடமுடியவில்லை. 
எனவே தான் மாநில அரசை ஒருகருவியாக பயன்படுத்தி இந்த கோரிக்கை எழுப்பப்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

மக்களை பாதிக்கும் திட்டங்களை தடையில்லாமல் அமல்படுத்த மத்திய அரசிடம் இவர்கள் அனுமதி கோருகிறார்கள். 
வேண்டுமென்றே விஷமிகளை வைத்து மக்கள் மீதுதாக்குதல் நடத்தி கருத்துக் கேட்புகூட்டங்களை கலைத்த வரலாறும் உண்டு. 

எனவே மாநில அரசின் இந்த ஜனநாயக விரோதமான மக்கள் விரோதமான ஆபத்தான யோசனை துவக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
==========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?