உளவு உரிமை

'மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 10 அமைப்புகளுக்கு, நாடு முழுவதும் உள்ள கம்ப்யூட்டர்களை உளவு பார்க்க, முழு அதிகாரம் வழங்கப்படவில்லை. 'ஒவ்வொரு நடவடிக்கை எடுப்பதற்கு முன்னும், சம்பந்தப் பட்ட உளவு அமைப்பு, முன் அனுமதி பெற வேண்டும்' 
என, மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

உளவு அமைப்புகள்நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள கம்ப்யூட்டர், மொபைல் போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களை, இடைமறித்து தகவல்களை பெற, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட, 10 உளவு அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக, சமீபத்தில் தகவல் வெளி யானது.

 இதற்கு, பல்வேறு அமைப்புகளும், எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. 
 இருப்பினும், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த நட வடிக்கை எடுக்கப்படுவதாக,மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை கூர்வதவது:

கம்ப்யூட்டர்களில் உளவு பார்ப்பதற்கு, அரசு அமைப்புகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை.

ஒவ்வொரு நடவடிக்கை எடுக்கும் முன், சம்பந்தப் பட்ட உளவு அமைப்பு,அதற்கான முன்அனுமதியை, அரசிடம் பெற வேண்டும்.

இந்த விஷயத்தில், புதிய சட்டம், புதிய விதிகள், புது நடைமுறை, புதிய அமைப்பு,புதிய அதிகாரம் என, எதுவும் ஏற்படுத்தப் படவில்லை. 

முன்பிருந்த சட்டமே தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. 

தற்போது அமலில் உள்ள விதிகளில், சிறு மாற்றமும் செய்யப்படவில்லை.

அரசு வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்ற,10 அமைப்புகளுக்கு,2011 முதல், ஏற்கனவே, அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

கடந்த, 2011 முதல் பின்பற்றப்படும் நடைமுறை களை குறிப்பிட்டு, 20ல், மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. 


இந்த அறிவிப்பு, சம்பந்தபட்ட தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கான தகவல் தொடர் பாகும். 

அதிகாரம் பெற்ற அமைப்புகள் மட்டுமே, தகவல்களை பெற முடியும் என்பதை உறுதி செய்வதற்காகவே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. 
என்று கூறுகிறது.
நம்முடைய பயமெல்லாம் இந்த ஒட்டுக்கேட்ப்புப்பணியை அரசே செய்தால் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும்.
மோடி பாஜக அரசு வழக்கப்படி அல்லது கொள்கைப்படி இந்த உளவு உரிமையை ஜியோ போல் அம்பானிகளுக்கு வழங்கி விடக்கூடாது என்பதுதான்.
----------------------------------------------------------------------------------------------------------------
 
உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் கும்பமேளாவுக்காக துப்புரவுப் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. ஏராளமான துப்புரவுத் தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், மத்தாதீன் என்ற துப்புரவுத் தொழிலாளி, வழக்கம்போல பணிகளை செய்து கொண்டிருந்தபோது, அவர் துப்புரவு செய்த இடத்தில் இருந்த வாளியை சற்று நகர்த்தி வைத்து சுத்தம் செய்தாராம். 

சாமி"யார்?"

இதைப்பார்த்த சாமியார் கடும் கோபமடைந்துள்ளார்.

அந்த வாளி பூஜைக்காக வைக்கப்பட்டு இருந்ததாகவும், அதை மத்தாதீன் தொட்டு தீட்டுப்படுத்தி விட்டதாகவும் கூச்சலிட்ட அந்த சாமியார், மத்தாதீனை பிரம்பால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

மத்தாதீனின் வலதுகையில் எலும்பு முறிவு ஏற்படும் வரை வெறித்தனமாக அவர் நடந்து கொண்டுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட மத்தாதீன் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மத்தாதீனை தாக்கிய சாமியார் மீது, ஜூன்ஸி பகுதி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சாமியார்?
 தலைமறைவாகி இருக்கிறார்!.
====================================================


ன்று,
டிசம்பர்-31.
கனடாவின் தலைநகராக ஒட்டாவா தேர்ந்தெடுப்பு(1857)
வெள்ளொளிர்வு விளக்கு முதல் முறையாக தாமல் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது(1879)
மான்கட்டன் பாலம் திறக்கப்பட்டது(1909)
பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவிற்கான தனது கப்பல் பயணத்தை ஆரம்பித்தது(1599)
====================================================
  மிருணாள் சென்

தாதா சாகேப் பால்கே உள்பட பல்வேறு சிறப்பு விருதுகளை பெற்ற புகழ்பெற்ற வங்காள மொழி திரைப்பட இயக்குநர் மிருணாள் சென்  கொல்கத்தாவில் நேற்றிரவு (30.12.18) காலமானார்.

அவருக்கு வயது 95.
1923 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதிவங்காளத்தில் உள்ள பரித்பூரில் மிருணாள் சென் பிறந்தார்.
தற்போது பரித்பூர் வங்கதேசத்தில் உள்ளது.

இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய திரைப்பட இயக்குநர்களில் முக்கியமானவர் மிருணாள் சென்.

இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்காளம் ஆகிய 4 மொழிகளில் சுமார் 30 திரைப் படங்கள்,
 14 குறும்படங்கள் மற்றும்
4 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார்.

முதுமை காரணமாக உருவான நோயால் அவதிப்பட்டு வந்த மிருணாள் சென் (டிசம்பர் 30) ஞாயிறு காலை 10.30 மணியளவில் இறந்தார்என்று அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளார்கள் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கூகுள் பிளஸ் 

கூகுள் தனது சமூக வலைத்தளமான கூகுள் பிளசை, ஆகஸ்ட் 2019ல் இழுத்து மூடப்போவதாக அறிவித்திருந்தது.

 அந்த தளத்தை இயக்கும் மென்பொருளில் இருந்த சில தவறுகள் இருப்பதனால் கூகுள் பிளஸ் தளம் பயனர்களுக்கு பாதுகாப்பற்றதாக இருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன.


இந்த குறைபாட்டால் 5.22 கோடி கூகுள் பிளஸ் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் சமூகவிரோதிகளுக்கு கிடைக்கும் ஆபத்து உள்ளது .

எனவே  கூகுள் பிளஸ்க்கு  அறிவிக்கப்பட்டதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக அதாவது  ஏப்ரல் 2019லேயே  மூடுவிழா நடத்தப்போவதாக கூகுள்  அறிவித்துள்ளது.

இன்னும் நுறு  நாட்கள் மட்டும்  கூகுள் பிளஸ் இணையத்தில் இருக்கும்,இயங்கும் .

  கூகுள் பிளஸ் மூடப்படுவது மிகவும் வருந்தத்தக்க செயல்.
அழகான புகைப்படங்கள்,அனிமேசன்கள்,gif ,காணொளிகள் எல்லாமே தரமாக எளிதில் தரவிறக்கி நாம் பயன்படுத்தம் விதமாக இருந்தது.
அந்த எளிதான செயல்தான் நம்பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி விட்டது.

ஆனால் பாதுகாப்பான் முகநூலில் என்ன நடக்கிறது.அமெரிக்க தேர்தலில் முகநூல் பயனர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுத்தது பரபரப்பாக பேசப்படவில்லையா?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓராண்டு நிறைவு விழா வாழ்த்துகள் !

 நடிகர் ரஜினிகாந்த்  ஆன்மிக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து, இன்றுடன் ஓராண்டு நிறைவு!
ரஜினிக்கு வாழ்த்துகள்!
கட்சியை எதிர்பார்த்து,பார்த்து வயோதிகர்களான ரசிகர்களுக்கு அனுதாபங்கள்!!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 "தொண்டர்களின் வியர்வை, ரத்தத்தினால் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்!" - தமிழிசை
அதற்கு தொண்டர்களுக்கு எங்கே போவீர்கள் தாமரைச் செல்வி?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?