பாரதீய தேர்தல் ஆணையம்?

பேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக, மத்திய அரசாங்கம் எழுப்பியபூர்வாங்க ஆட்சேபணைகளை உச்சநீதி மன்றம் நிராகரித்தது.
 இது தொடர்பாகத் தாக்கல்செய்யப்பட்டுள்ள மறுஆய்வு மனுக்கள் அனைத்தும் மற்றும் தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ள விவரங்கள் உட்பட ஊடகங் களில் வெளியான அனைத்து விவரங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளார்கள்.
ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில்ஊழல்கள் நடந்துள்ளதாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


தி இந்து நாளிதழில் என்.ராம் இது தொடர்பாக பல ஆவ ணங்களின் அடிப்படையில் ஊழலின் பல்வேறுஅம்சங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.
ஆயினும் இவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மத்திய அரசாங்கத்தின் தரப்பில் ஆட்சேபணை செய்யப்பட்டு வந்தது.

இவற்றின் மீது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வாயம் புதனன்று தீர்ப்புஅளித்துள்ளது. மத்திய அரசாங்கத்தின் தரப்பில் எழுப்பப்பட்ட பூர்வாங்க ஆட்சேப ணைகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தள்ளுபடி செய்தார்.

“ரபேல் கொள்முதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று ஆவணங்களின் அடிப்படையிலும் ஆய்வு செய்து தீர்ப்பளிக்க வேண்டியதும், இது தொடர்பாக அர சாங்கத்தின் தரப்பில் எழுப்பப்படும் ஆட்சேபணைகள் தள்ளுபடி செய்யப்பட வேண்டியதும் முறையாகும் என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று தலைமை நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

கே.எம்.ஜோசப் தனி தீர்ப்பு
தீர்ப்புரையின் முக்கிய பகுதிகளைப் படித்துக் காண்பித்த தலைமை நீதிபதி, தானும், நீதிபதி எஸ்.கே. கவுல் அவர்களும்இணைந்து இந்தத் தீர்ப்பினை எழுதி யிருப்பதாகவும், நீதிபதி கே.எம்.ஜோசப் எங்கள் கருத்துடன் உடன்பட்டிருப்பதுடன் தனியே ஒரு தீர்ப்புரையும் எழுதி யிருப்பதாகவும் கூறினார்.
அவரும் நாங்கள் எடுத்தமுடிவிற்கே வந்திருக்கிறார்.
 எனினும் வேறொரு வித்தியாசமான முறையில் அவர் அதனைச் செய்திருக்கிறார் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
பாஜக அருண்ஷோரி
மறுஆய்வு மனுக்கள் விசாரிக்கப்படும் தேதிகள் பின்னர் முடிவு செய்யப்படும்.

உச்சநீதிமன்றம் 36 ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்தது தொடர்பாக முன்பு 2018 டிசம்பர் 14 அன்று பிறப்பித்திருந்த தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ரபேல் போர் விமான ஊழல் வழக்கில் தொடர்ந்து பாஜக தலைமையிலான மோடிஅரசு மக்களை மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தையும் ஏமாற்றி வந்தது.
ஆனால் இந்த முறை மோடி அரசின் கோரிக்கைகளை நிராகரித்த உச்சநீதிமன்றம், சீராய்வு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மீது  விரிவானவிசாரணை நடத்தப்படும் என தீர்ப்பளித்திருக்கிறது.
இந்த தீர்ப்பு  மக்களுக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

ரபேல் போர்விமான கொள்முதலில் மோடிஅரசு செய்துள்ள மெகா ஊழல் தொடர்பானஆதாரங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி வருகின்றன.
 பிரதமர் மோடியே நேரடியாக ஈடுபட்டுள்ள இந்த ஊழலில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என பாஜகவினர் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இந்த முறை உச்சநீதிமன்றம் ஏமாறுவதாக இல்லை என்பதை தற்போது வழங்கியிருக்கும் தீர்ப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறது.
ஏற்கனவே ரபேல் ஊழல் தொடர்பாக நீதிமன்றம் கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும்.
 தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஊழல் நடைபெறவில்லை என தீர்ப்பளித்தது.

காரணம் அந்த மனு விசாரணைக்கு வந்த போது மோடிஅரசு ரபேல் விமானங்களின் விலை விபரங்கள் மத்திய தணிக்கை குழுவுடன் பொதுக்கணக்குக்குழுவுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவலை தெரிவித்து ஏமாற்றியதுபின்னர்தான் தெரியவந்தது.

இந்திய வரலாற்றில் இதுவரை எந்த ஒரு மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தை பாதுகாப்பு விவகாரங்களில் இப்படி ஏமாற்றியது இல்லை.
  பொதுக்கணக்கு குழு தலைவராக உள்ள மல்லிகார்ஜூன கார்கே அப்படி ஒரு அறிக்கையை நான் பார்க்கவே இல்லை என்றார். உடனே தாக்கல் செய்யப்பட்ட விபரங்களை உச்சநீதிமன்றம் தவறாக புரிந்து கொண்டது என மீண்டும் மோடி அரசு அந்தர் பல்டி அடித்தது.

அதற்கடுத்து, ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவனத்திற்காக பிரதமர் மோடி நாட்டின் பாதுகாப்பு விதிகளை மாற்றியதைதி இந்து ஆங்கில நாளேடு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது. உடனே ஆவணங்கள் திருடப்பட்டிருக்கிறது என நீதிமன்றத்தில் ஒப்பாரி வைத்தது.
அதைக்கூட பாதுகாக்கமுடியவில்லையா என்று கேள்வி எழுந்தவுடன் இல்லை இல்லை நகல்தான் எடுக்கப்பட்டிருக்கிறது என பின்வாங்கியது.

அப்போதும் கூட பிரதமர் மோடி வாய்திறக்கவில்லை.
மாறாக ரபேல் ஒப்பந்தம் தேசத்தின் ரகசியம் என தொடர்ந்து ஓடி ஒளிந்து வருகிறார்.
தற்போது உச்சநீதிமன்றம் மத்திய அரசின் உள்நோக்கத்தை புரிந்து கொண்டு, சீராய்வுமனுவில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்கக் கூடாது என்ற மத்திய அரசின் வாதத்தை நிராகரித்திருக்கிறது.
 மேலும் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது.

இதோடு நின்றுவிடாமல் வழக்கு விசாரணையை விரைந்து நடத்தி இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கும் பிரதமர் உள்ளிட்ட அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுதான் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பாரதீய தேர்தல் ஆணையம்?
இந்தியத் தேர்தல் ஆணையம் மீது, இதுவரை இருந்துவந்த நம்பகத்தன்மை அண்மைக்காலத்தில் கேள்விக்குறியாகி விட்டதாகவும், இது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பிரதமர் மோடி மற்றும் ஆளும் பாஜக-வினர் தொடர்ந்து நடத்தைவிதிகளை மீறிவரும் நிலையில், தேர்தல்ஆணையம் உறுதியான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தங்களின் இந்த குற்றச்சாட்டை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராஆகியோருக்கு கடிதமாகவும் அனுப்பி வைத்துள்ள அதிகாரிகள், தற்போதைய மக்களவைத் தேர்தல் நேர்மையாக நடைபெறுமா? என்ற சந்தேகமும் தங்களுக்கு எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜிலியோ ரிபெய்ரோ, முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர மேனன், தில்லியின் முன்னாள் ஆளுநர் துணைநிலை நஜீப் ஜங், டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் ராகுல் குல்லார், முன்னாள் பாதுகாப்புத் துறைசெயலாளர் கேசவ் தேசிராஜூ, முன்னாள்பிரசார் பாரதியின் சிஇஓ ஜவஹர் சிர்கார்,முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி மீரன்போர்வன்கர் உள்ளிட்ட 66 அதிகாரிகள், இந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள் ளனர்.

“எத்தனையோ பெரிய சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்தபோதும், தேர்தல்களை நேர்மையாக நடத்தியதற்கான கௌரவத்தை இதுவரை இந்திய தேர்தல் ஆணையம் கொண்டிருந் தது.
ஆனால் இன்று அதன் நம்பகத்தன் மைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம், நியாயம்,பாரபட்சமின்மை மற்றும் திறமை ஆகியவை சமரசம் செய்து கொள்ளப்பட்டுள் ளது. தேர்தல் நடைமுறைதான் இந்திய ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானம் ஆகும். ஆனால், அந்த தேர்தல் நடைமுறையின் நேர்மைக்கே தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது” என்று ஐஏஎஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 “ஐஏஎஸ் அதிகாரிகளின் குழு என்றஅடிப்படையில் தங்களுக்கு எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லை என்றாலும், கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவில் தேர்தல் நடத்தை குறித்து, தங்களதுகுழுவில் இடம்பெற்றுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் ஆய்வு செய்து வருகின்றனர்” என்றும் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுக்கும், ஆளும் பாஜக-வின்விதிமீறல்களையும் ஐஏஎஸ் அதிகாரிகள் வரிசைப்படுத்தி, தங்களின் புகாரில் பட்டியலிட்டுள்ளனர்.

“கடந்த மார்ச் 27ஆம் தேதியன்று இந்தியாவின் முதல் ‘ஏ-சாட்’ ஏவுகணைசோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட் டது.
 இதை பொது அறிவிப்பாகப் பிரதமர்மோடி வெளியிட்டார்.
 இந்த அறிவிப்பு வெளியான நேரம் கேள்விக்குரியது.


ஏப்ரல் 11-ஆம் தேதியன்று ‘பிஎம்நரேந்திர மோடி’ திரைப்படம் வெளியாகவுள்ளதாக ஊடக செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
பின் வாசல் வழியாக அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாகத்தான் இதைக் கருதுகிறோம்.இதேபோல பிரதமரின் வாழ்க்கையை மையப்படுத்திய வெப்சீரிஸின் முதல் ஐந்து எபிசோடுகளும் ‘எரோஸ் நவ்’ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
 இவ் விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மார்ச் 31ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட ‘நமோ டிவி’ விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் மெத்தனமாகச்செயல்பட்டு வருகிறது.
 இதற்கு மத்தியதகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறப்படவில்லை. இந்த சேனல் எல்லா சந்தாதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது ஜனநாயக விதிமுறைகளை மீறுவதாகும்.


அவர்கள் மீது குற்றச்சாட்டே இல்லா நிலையில் பாரதிய ஜனதா மனு கொடுத்ததால் ஆந்திர மாநிலத்தின் தலைமைச் செயலாளரையும், மூன்று தலைமை காவல் துறை அதிகாரிகளையும், மேற்குவங்கத்தின் நான்கு தலைமை காவல் துறை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவுபிறப்பித்துள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தலைமைச்ச்செயலாளர்,குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள டிஜிபிக்கு (குட்கா டி.கே.ராஜேந்திரன்) இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப் படவில்லை என்பது வியப்பூட்டுகிறது.
ஏற்கனவே பனி ஒய்வு பெற்ற அவரை அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமென தமிழக எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன்  தொடர்ந்துகோரிக்கை எழுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

‘நாட்டின் பாதுகாப்புப் படைகள் எல்லாம் நரேந்திர மோடியின் படைகள்’ என்று அண்மையில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
 இதேபோல பாஜகவின் மூத்த பொறுப்பாளரான முக்தார் அப்பாஸ் நக்வியும் பேசியுள்ளார்.

இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகள் எல்லாம்மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கான திட்டம் என்றும் பாதுகாப்புப் படைகளின் பாரம்பரியத்தை அரசியலாக்கும் திட்டமாகவும் இதைக் கருதுகிறோம்.

ஏப்ரல் 1ஆம் தேதியன்று மகாராஷ்டிராவின் வர்தா பகுதியில் நரேந்திர மோடியின் பேச்சை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
 “காங்கிரஸ் இந்துக் களை அவமதித்தது. இந்தத் தேர்தலில் காங்கிரசை மக்கள் தண்டிக்க வேண்டும். பெரும் பாலான இந்துக்கள் வசிக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர்கள் போட்டியிட அஞ்சுகின்றனர். அதனால்தான் சிறுபான்மையினர் அதிகமாக வாழும் பகுதிகளில் காங்கிரஸினர் போட்டியிடுகின்றனர்” என்று மோடி பேசியதாக ஊடகச் செய்திகளின் வாயிலாக அறிகிறோம்.

இதுபோன்ற பிரிவினைவாதப் பேச்சுகளெல்லாம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்.
எந்தக் கட்சியும்,வேட்பாளரும் சாதிகள், மதங்கள், சமூகங்கள், மொழியினக் குழுக்களிடையே பதற்றத்தை உருவாக்கும் வகையிலோ, வெறுப்பைத் தூண்டும் வகையிலோ பேசக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிகளில் மிக முக்கியமானது.இரட்டை இலை சின்னத்துக்கு கையூட்டு அளித்த தினகரன்,தரகர் கைது .வழக்கு.ஆனால் கையூட்டை தேர்தல் ஆணையத்தில் யார் பெறறார்கள்.அவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்பது இதுவரை தெளிவு படுத்தவில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 
"இந்திய பாரதீய தேர்தல் ஆணையர் ஆய்வு.
எதிர்க்கட்சிகள் செய்த தவறுகளைமட்டும் பூதக்கண்ணாடியில் பார்த்து நடவடிக்கை ."
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?