அதிமுகவுக்கும் சரிவுதான்...!

ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமை பிடிக்காமல் தினகரன் தலைமையை ஏற்று அமமுகவுக்கு சென்றவர்கள், அமமுக செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால், மீண்டும் அதிமுகவுக்கு வராமல் திமுகவுக்கு செல்வது ஏன்?

அதிமுக அரவணைத்து செல்லவில்லையா?
அரவணைக்கவில்லை என்றால் அமமுகவைப்போல் அதிமுகவும் பலவீனம் அடைகிறதா?
என்ற கேள்வி எழுகிறது.

கே.சி.பழனிசாமி
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்தில்  அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வெளியிட்டதாகவல்கள் தான் இப்போது அதிமுக உள்ளே பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது..
 
89ல் ஜானகி அணி, ஜெ. அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டு, இரண்டு அணிகளும் தோல்வியை சந்தித்தது. திமுக வெற்றி பெற்றது. 
அதைப்போன்றுதான் இன்றைக்கு பாராளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலும் நிலைமை இருக்கிறது. 
தொண்டர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், சசிகலா, தினகரன் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா இருக்கையில் எப்படி இருந்ததோ அதைப்போல பொதுச்செயலாளர் பதவி வர வேண்டும். 

பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும். 
அப்படி பலப்படுத்தினால் மட்டும்தான் வரும் தேர்தலில் ஓரளவுக்காவது வெற்றி வாய்ப்பை பெற முடியும்.
 
நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதைவிட முக்கியமான விஷயம் வாக்கு வித்தியாசம். சில பாராளுமன்றத் தொகுதிகளில் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசம் உள்ளது.
இன்னும் சில தொகுதிகளில் நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசம்.
 சில தொகுதிகளில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசம். இந்த நிலை நீடித்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்ற தோற்றம் உருவாகிறது.
இதனால் அதிமுக தொண்டர்கள், கட்சியை ஒருங்கிணைத்து 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்து, காலப்போக்கில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். 
இதனை தினகரன் செய்யாததால், அதற்கு அவர் முன்வராததால், அவரை விட்டு வெளியேறுகிறார்கள். 

அமமுகவில் இருந்து வெளியேறுபவர்களை அதிமுக தலைமையில் இருப்பவர்கள் அரவணைத்து செல்வதில்லை. 
அவரவர்கள் அவர்களது நிலையை தக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
 
தங்க தமிழ்செல்வன் வந்தால் தேனியில் தனக்கு இடைஞ்சல் வரும் என ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார். செந்தில் பாலாஜி வந்தால் தனக்கு இடையூறு வரும் என எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். 
மார்க்கண்டேயன் வரக்கூடாது என்று கடம்பூர் ராஜு நினைக்கிறார்.
 கலைராஜன் வரக்கூடாது என ஜெயக்குமார் நினைக்கிறார். 
கோவையில் வேலுமணி, முன்னாள் மேயர் வேலுச்சாமியை, முன்னாள் மந்திரி தாமோதரனை புறக்கணிக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் ஓ.பன்னீர் செல்வம், முனுசாமி, மனோஜ் ஆகியோரை சேர்த்துக்கொண்டு ராஜகண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன் உள்பட மற்றவர்களை புறக்கணிக்கிறார்கள்.
 
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்., வேலுமணி, தங்கமணி ஆகிய நான்கு பேரும் தங்களுக்கு போட்டியாக கட்சிக்குள் யாரும் வந்துவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
 தங்களுக்கு போட்டியாக வருபவர்களை கட்சிக்குள் விடக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
 இதனால் கட்சி பலவீனமாகிறது என்பதை அவர்கள் நினைப்பதில்லை.
 இவர்களின் இந்த போக்கு அமமுகவுக்கு மட்டும் அல்ல, அதிமுகவுக்கும்தான் சரிவு.
 அதிமுகவும்தான் பலவீனம் அடைகிறது என்கிறார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கேரளாவும் இடதுசாரிகளும்.
கேரளாவில் மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் தற்போது நடைபெற்றுள்ள உள்ளாட்சி இடைத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டது.
அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு இந்த விவகாரம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 20 இடங்களில் ஓரிடத்தில் மட்டுமே இடதுசாரி கூட்டணி வென்றது.

19 தொகுதிகளை காங்கிரஸ் அணி கைபற்றியது. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.
அதற்கு காரணம் ராகுல் கேரளாவில் போட்டியிட்டதுடன் பலமுறை பரப்புரை செய்ததும்,மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது அதற்கு காங்கிரசுத்தேவை என காராளமக்கள் எடுத்த முடிவுதான்.

இந்தநிலையில், கேரளா மாநிலத்தில் காலியாக உள்ள 44 உள்ளாட்சி இடங்களுக்கு ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன.

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் நேற்று  வெளியானது. அதில், ஆளும் இடதுசாரி முன்னணி 22 இடங்களில் வெற்றி பெற்றது. காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 17 இடங்களில் மட்டுமே வென்றது. பாஜக கூட்டணி  5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் செல்வாக்கை இடது முன்னணி தக்க வைத்துக் கொண்டது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
சுவிட்சர்லாந்து (SWITZERLAND) நாட்டில் உள்ள வங்கிகளில் உலக நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் என அனைவரும் தங்கள் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வருகின்றனர்.
இந்த நாட்டில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யும் நபர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது விவரங்களை வெளியிடாமல் பாதுகாத்து வந்தது.
இதனால் இந்தியாவில் பெரும்பாலானோர் சுவிஸ் வங்கிகளில் பணத்தை சேமித்து வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியிருக்கும் பணத்தை இந்தியா கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

 இது தொடர்பாக இந்திய அரசு இந்தியர்கள் சுவிஸ் வங்கிகளில் தொடங்கியுள்ள வங்கிக்கணக்கு தொடர்பான விவரங்களை கேட்டு சுவிட்சர்லாந்து அரசிடம் தொடர்ந்து பேசி வந்தது.

இந்நிலையில் வெளிநாட்டினர் தங்கள் நாட்டு வங்கிகளில் சேமித்து வரும் பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து மத்திய வங்கி ஆண்டுதோறும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருந்த வெளிநாட்டினரின் மொத்த தொகை குறித்த புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டது.

 அதன் படி கடந்த 2018- ஆம் ஆண்டில் சுவிஸ் நாட்டு வங்கிகளில் இருந்த இந்தியர்களின் மொத்த சேமிப்பு தொகையின் சுமார் ரூபாய் 6,757 கோடி ஆகும்.

 இந்த சேமிப்பு தொகை முந்தைய ஆண்டை விட 6 சதவீதம் குறைந்து உள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த வங்கிகளில் சேமிக்கும் தொகை என்பது இந்திய அரசால் கருப்புப்பணமாக் கருதப்படுகிறது.

இந்த தகவலை அறிந்து மத்திய அரசு அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏனெனில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் லட்சக்கணக்கான கோடியில் பணம் சேமித்து வைத்திருப்பதாக அரசியல் கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில், சுவிட்சர்லாந்து அரசு வெளிட்ட அறிக்கையில் குறைவான தொகையே இடம் பெற்றுள்ளது.

அதே போல் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சேமித்து வரும் தொகை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.காரணமாக அந்த வங்கிகள் "முன்பு கார்ப்ரேட்கள்,பணமுதலைகளுக்கு அரசு பல கெடுபிடிகளை வைத்திருந்ததால் இந்தியர்கள் வெளிநாடுகளில் தங்கள் கருப்புப்பணத்தை வங்கிகளில் பதுக்கி வைத்திருந்தனர்.ஆனால் தற்போதைய அரசை அவர்கள் தங்கள் நலனை பாதுகாக்கும் அரசு  என்று எண்ணுவதால் வெளிநாட்டுக்களில் சேர்த்துவைப்பது குறைகிறது ."
என்றே கூறுகின்றன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஜி.எஸ்.டி.காமிக்ஸ்  
ஜி.எஸ்.டி. வரி நடைமுறைகளை, காமிக் புத்தக வடிவத்தில் விளக்கும் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புமுறை, கடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது.


இதன்மூலம் ஒரே பொருளுக்கு பல்வேறு இடங்களில் வரி விதிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன், பொருட்களின் விலை குறையும் என்று மோடி அரசு கூறியது.

 எனினும், அறிமுகப்படுத்தி 3 ஆண்டுகள் ஆகியும், பொருட்களின் விலை குறையவில்லை-
 என்பது ஒருபுறமிருக்க, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு நடைமுறையும், இப்போது வரை வணிகர்களுக்கு குழப்பமாகவும் ,தலைவலியாகவுமே உள்ளது.

இந்நிலையில், ஜி.எஸ்.டி. விதிகளை விளக்கும் வகையில், காமிக் கதைகள் பாணியில் புத்தகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
 “அட்வெஞ்சர்ஸ் ஆப் தி ஜி.எஸ்.டி. மேன்” என்ற தலைப்பிலான இந்த ஜிஎஸ்டி காமிக் புத்தகத்தை, ஸ்ரீநிவாஸ் கோட்னி என்பவர் எழுதியுள்ளார்.

இதில், ஜி.எஸ்.டி. வரி நடைமுறைகள் மற்றும் விதிகள், சுருக்கமாகவும் நகைச்சுவையாகவும் கேலிச்சித்திரங்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
புது தலைமைச் செயலாளர்
தமிழக தலைமைச் செயலாளர் பதவி பட்டியலில் முதலில் இருந்த ஆளுநரின் செயலாளர் ராஜகோபால், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் சரியாக செயல்படாமல் நக்கீரன் மீது எடுத்த அவசர நடவடிக்கை எடுத்து சொதப்பி நீதிமன்றத்தின் கண்டனத்தை பெற்றதால் அவரை தலைமைச் செயலாளர் பதவியில் நியமிக்க மத்திய அரசு தயங்கியது. 
கே.சண்முகம்                    திரிபாதி

 
இதனால் முதல்வர் பழனிச்சாமி நிதித்துறை செயலாளராக இருக்கும் சண்முகத்தை தலைமைச் செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுத்து அதற்கான பரிந்துரை கோப்பை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்தது. 

நேற்று அனுப்பிய அந்த கோப்பில் ஆளுநர் கையெழுத்துப்போடாமல் இருந்ததாகவும், நிர்மலா தேவி விவகாரத்தில் கவர்னர் மாளிகைக்கு ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து ராஜகோபால்தான் காப்பாற்றினார் என்பதால் அவர் தலைமைச் செயலாளராக வரவேண்டும் என்று கவர்னர் விரும்பியதாகவும் கூறப்பட்டது.
 
ஆனால்  டெல்லியில் இருந்து வந்த உத்தரவையடுத்து, இன்று காலை புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டுள்ளார் ஆளுநர்.
 இதையடுத்து நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தமிழக தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. மற்றபடி டிஜிபியாக திரிபாதியே முன் கணித்தபடி பதவியில் அமர்த்தப்படுகிறார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 சுற்றுசூழலைப்போலவே கல்லூரியும் தரங்கெட்டது ?
மாணவர்கள் படிக்க இயலாத தரமற்ற பொறியியல் கல்லூரிகள் என அண்ணா பல்கலைக்கழகம் ஒரு பட்டியல் போட்டுள்ளது. 
கருப்பணன்

அந்தப் பட்டியலில்  தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகளில் தரமற்றவை என விவரத்துடன் கூறியுள்ளது. 

அந்த 89 கல்லூரிகளில் பல முக்கிய விஐபிகள் நடத்தும் கல்லூரிகளும் அடங்குகிறது.

 இதில் குறிப்பாக தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சரான கே சி கருப்பனனின் கல்லூரியும் உள்ளது, சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன் ஈரோடு மாவட்டம் பவானி யைச் சேர்ந்தவர். 

இவர் ஈரோட்டிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியில் பல கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். 
அதில் ஒன்றுதான் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் இன்ஜினியரிங் காலேஜ். 

இந்தக் கல்லூரி தரமற்றவை இதில் மாணவர்கள் சேர்க்கை கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 அந்த பட்டியலில்  வருகிறது. 

ஒரு அமைச்சர் அதுவும் சுற்றுச்சூழல் அமைச்சர் தனது கல்லூரி தரமற்றது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருப்பது என்றால் அமைச்சரின் கல்லூரியின் லட்சணம் எப்படி இருக்கும்?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?