வளர்ச்சியை நோக்கிய கல்வி

"ஆசிரியர்களின் பொறுப்பு தன்னைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளைப் புரிந்து  கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதாகும். ஆசிரியரின் உதவியுடன் தானாகவே உருவாக்கிய வார்த்தைகளை மாணவர்கள் குழு ஆராய்கிறது. ஒரு குழு சிந்திக்கும் வார்த்தைகள் தான் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குகிறது என்றும் சிந்தனை இல்லாத வார்த்தைகள் செத்துப்போனவை "என்று பாலோஃபிரெயர் கூறுகிறார்."
பிரேசில்  நாட்டில் விழிப்புணர்வுக்கான கல்வியை கொண்டு சென்றதோடு உலகத்திற்கே வழிகாட்டிய  பாலோஃபிரெயரின் பிறந்தநாள் செப்டம்பர் 19.
அவரது பிறந்தநாளில் நாம் கல்வியும் விழிப்புணர்வும் பற்றி விவாதிப்பது மிகச் சரியாக அமையும்.

சமூகத்தின் ஜனநாயக சூழ்நிலைக்குள் இருந்தபடியே கலாச்சாரத்தை ஜனநாயகமாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.  பிரேசிலில் 1964இல் 40 லட்சம் மாணவர்களுக்கு கல்வி  கிடையாது.

14 வயதுக்கு  மேல் உள்ளவர்கள் 160 லட்சம் மக்கள் எழுத்தறிவு அற்ற நிலையில்  இருந்தார்கள். இவை நாட்டின் வளர்ச்சிக்கும் ஜனநாயக மனோபாவத்திற்கும் பெரும்  தடைகளாக இருந்தன.
அறியாமை என்றால் எழுத்தறிவில்லாமை மட்டும் தான் என்று ஒரு வரையறைக்குள் வைக்கவில்லை.


வரலாற்றுப் பூர்வமான நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஈடுபாடு கொள்ளவும் இயலாத அனுபவமின்மையும் அறியாமை யில் உள்ளடங்கியதே!
மனிதனுடைய தாக்கம் உலகில் அவனுடைய வாழ்நிலையில் மட்டுமின்றி உலகுடன் அவன் மேற் கொள்ளும் உறவு மற்றும் படைப்பிலும் கலாச்சாரத்தின் வாயிலாகவும் வெளிப்படுகிறது. இந்த உறவை எழுத்தறிவு பெற்றவர்களும், பெறாதவர்களும் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்துவார்கள்.
யதார்த்தத்தைப்பற்றிய வெற்று  விழிப்புணர்வுக்கும் மாய்மால விழிப்புணர்விற்கும் மேலாக விமர்சனப் பூர்வமாக விழிப்புணர்வு தான் மக்களின்  வளர்ச்சியை நோக்கி அமையும்.
  • செயல்துடிப்புமிக்க ஆக்கப்பூர்வமான கருத்து விவா தங்களைக் கொண்ட விமர்சனப்பூர்வமான விமர்சனங்க ளை ஊக்குவிக்கும் வழிமுறைகள்.
  • கல்வியின் உள்ளடக்கத்தின் மாறுதல்
  • விஷயங்களை கிரகித்துக்கொள்ள சுருக்கி அளிக் கும் முறையும், மற்றும் சூழ்நிலைக்கும் உறவு ஏற்படுத்திய  வழிகள்.  கூட்டான தேடுதலில் ஏற்பட்டிருக்கும் இரண்டு துருவங்களுக்கிடையான இரண்டறக்கலக்கும் உறவு, அன்பு, பணிவு, எதிர்பார்ப்பு, நம்பிக்கை, விமர்சனம் போன்ற அச்சில் தான் துவங்கப்படுகிறது.
விமர்சனப் பூர்வமான ஒரு தேடலுக்கு அவர்கள் கூட்டு சேரல் அவசியம் உண்மையில் விவாதம் மட்டும் தான், யதார்த்தமான கருத்து பரிமாற்றத்தை நிகழ்த்துகிறது.
இந்த விவாதங்கள் எல்லாம் லட்சிய உணர்வும் கொண்டதாக இருக்க வேண்டும். படிப்பதை புரிந்து கொள்ளவேண்டும். புரிந்து கொள்வதை எழுத வேண்டும்.
எழுத்துக்கள் மூலம் கருத்து பரிமாற்றத்தை  நிகழ்த்த வேண்டும்.
ஆசிரியர்களின் பொறுப்பு தன்னைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளைப் புரிந்து  கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதாகும். ஆசிரியரின் உதவியுடன் தானாகவே உருவாக்கிய வார்த்தைகளை மாணவர்கள் குழு ஆராய்கிறது. ஒரு குழு சிந்திக்கும் வார்த்தைகள் தான் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குகிறது என்றும் சிந்தனை இல்லாத வார்த்தைகள் செத்துப்போனவை என்று பாலோஃபிரெயர் கூறுகிறார்.

வயது வந்துள்ளவர்களுக்கு கல்வியில் பயிற்சி அளிக்கும் போது திரும்பத் திரும்பச் சொல்லி மனப்பாடம் செய்யும் இயந்திரமான முறைகளை கைவிட்டு சுயமாக விமர்சனமான  விழிப்புணர்வோடு சாத்தியக் கூறுகளை அவர்களிடம் உருவாக்கி அதன் மூலம் தானாகவே எழுதவும், படிக்கவும் அவர்களிடம் திறன் ஏற்படச்செய்ய வேண்டும்.
 மக்கள் விழிப்புணர்வு அடையாததற்கான கல்வித் திட்டத்தை பிரேசிலில் உருவாக்கினார்கள். குழுக்களின் வாயிலாக, பிரேசிலில் மக்கள் பிரச்சனைகளை ஆராய்ந்து  கற்பிப்பதற்கேற்ற சிறு குழுக்களை உருவாக்கினார்கள்.
 அக் குழுக்களிடமிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சென்று கற்பித்தார்கள். ஜனநாயகத்தை பகுத்தறிவற்றதாக   மாற்றுவதன் மூலம்  ஜனநாயகம் வெளியேற்றப்படுகிறது. தனி நபர் மரியாதையிலும், அன்புச் சூழ்நிலையிலும் தான் ஜனநாயகம் மலர்கிறது.
பலம் வாய்ந்த ஜனநாயகம் என்றால் மக்களைக் கண்டு அஞ்சாமலும்  மக்கள் அரசை கண்டு  அஞ்சா மலும் இருக்கவேண்டும்.

மற்றவர்களுடனும்  உலகத்துடனும் உறவு  வைத்துக் கொண்டிருக்கும் போதுதான்  நாம் மனிதர்களாகிறோம். நம்மிடமிருந்து தனித்திருக்கும் உண்மை நிலைப் பாட்டை அறிந்து கொள்ளும் போதும் தெரிந்து கொள்ளும் போதும்தான் நாம் மனிதர்களாகிறோம். விலங்குகளால் உலகத்துடன் உறவுகொள்ள முடியாது.
 மனிதர்களின் உறவு பலவகையானது. இச் சூழ்நிலை யில் ஒரே மாதிரியான சவால்களையும் மிகவும் மாறுபட்ட சவால்களையும் மனிதர்கள் ஒரே பாணியில் எதிர்கொள்ள வில்லை.
அவர்கள் தாங்களாகவே  ஒன்றுபடுகிறார்கள். மிகச்சிறந்த படிப்பினைகளைக் கற்று  தீர்வுகாண்கிறார்கள். மனிதர்கள் விமர்சனப் பூர்வமாக தான் உலகுடன் உறவு கொள்கிறார்கள். மனிதக் கலாச்சார வரலாற்றின் அடிப்படைக் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் காலம்.
 எழுத்தறிவு அற்ற சமூகத்தில் காலத்தின் அழிவைப்பற்றி அறியாததால் காலத்தை இழந்தார்கள்.  ஒரு பூனைக்கு விழிப்புணர்வு கிடையாது. மனிதர்கள் காலத்திற்குள் நிலைத்து நிற்கிறார்கள். காலத்திலிருந்து வெளியே  வந்து காலத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறார்கள்.
மனிதன் சூழ்நிலைகளுடன் இணங்க மறுக்கும் போது பிணைப்பு ஏற்படுத்தும் நிகழ்வு வெவ்வேறானது. யதார்த்தத்துடன் ஒன்று சேரும் திறனும் அந்த யதார்த்தத்தை உருவாக்கு வதற்கு தேர்ந்தெடுக்க வேண்டிய விமர்சனப் பாங்குடைய திறனும் ஒன்று சேரும்போது தான் பிணைப்பு உருவாகிறது.
தேர்ந்தெடுக்கும் திறனை மனிதன் இழந்து  பிறருடைய முடிவுக்கு கீழ்படியும் வரை அவருடைய முடிவுகள் பொருத்த மானதாக இருக்காது. மாறாக ஒத்துப்போனவர்கள், நீக்குப் போக்கு உடையவர்கள் சாதாரண மனிதர்கள். சமூக மாற்றத்திற்கான கருத்துடையவர்கள் ஒத்துப்போக மாட்டார்கள்.
 அவர்கள் நீக்குப் போக்கு அற்றவர்கள் என்றும் விமர்சனப்படுத்துகிறார்கள்.  மக்களோடு இருப்பவர் படைப்பாளியாகிறார். ஒத்துப் போகின்றவன் படைப்பாகின்றான். ஒத்துப்போவது என்பதில் தன்னை தற்காத்துக் கொள்ளும் இயலாமை வெளிப்படு கின்றது. சூழ்நிலையின் சவால்களை எதிர்க்கும் மனிதர்கள் உலகத்துடன் உறவுகொள்ளும் போது யதார்த்தத்தில் இணைகிறார்கள்.
உலகத்துடன் இருந்த மனிதர்களின் பிணைப்புகள் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அசைவற்ற நிலையை அனுமதிப்பதில்லை.
தனக்கு பிடித்தமான முறையில் சிந்திக்கவும் செயல்பட வும் அனுமதிக்காத வெளிப்படையான பிணைப்புகளிலி ருந்து மனிதன் விடுதலை பெற்றுவிட்டான்.
 தனக்கு எது பிடிக்கும் என்று அறிந்துகொள்ளவும் சிந்திக்கவும் சீர்தூக்கிப் பார்க்கவும் விரும்பினால் அதற்கேற்பச் செயல்படும் உரிமை மனிதனுக்கு இருக்கின்றது.  ஒத்துப்போகும் போது அவன் மேலும் பலவீனமடை கிறான்  ஒத்துப்போகும் போது மேலும் தூண்டப்படுகின்றான்.
 பலவீனத்தால் ஆன  மனிதன் வாத நோய் பிடிக்கப்பட்ட வனை போல் தன்னை நெருங்கிக் கொ ண்டு இருக்கும்  கொடுமைகளை அவன் உற்றுப்பார்த்துக்  கொண்டு இருக்கின்றான். பிறருடைய  எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் போது முடிவுகள் மாயையாகி விடுகின்றன.
வகுப்புவாதம் முக்கியமாக உணர்ச்சிப் பெருக்கானதும் விமர்சன பாங்கற்றதுமாகும். அதோடு கர்வம் நிரம்பியதும் பேச்சுவார்த்தைக்கு எதிரானதும்     கருத்துப் பரிமாற்றத்திற்கு இசைவற்றதுமாகும்.பிறவி அடிப்படையிலேயே வகுப்புவாதத்தை பேசும் வலதுசாரிகளால் வகுப்பு வாதம் கடைப்பிடிக்கும் போக்கு கண்டனத்திற்கு உரியதா கும்.

வகுப்புவாதி எதையும் ஆக்கப்பூர்வமாக சிந்திப்ப தில்லை.
அவர்கள்  எதையும் படைப்பதில்லை.
ஏனென் றால் அவர்களால் அன்பு செலுத்த முடியாது.
 பிறருடைய முடிவுகளை அவமதித்து தன்னுடைய முடிவை  பிறர் மீது திணிக்க முயற்சிக்கிறான். மக்கள் பிரச்சனை களில் விழிப்புணர்வு பெற்றால் தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
 சமூக மாற்றத்திற்கான சூழல் உருவாகும்.

                                                                                                                                      -அ.மணவாளன்


கட்டுரையாளர் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 
புதுக்கோட்டை
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவில் கொள்ளுங்கள்.

 செப்டம்பர் .20 - யு.பி.எஸ்.சி., சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு
22 - இரண்டு & மூன்றாம் நிலை அதிகாரி ஒரு கட்ட தேர்வு (ஐ.பி.பி.எஸ்.)
 23 - 27 - எஸ். எஸ். சி., ஜூனியர் இன்ஜினியர் தேர்வு
29 - ஐ.பி.பி.எஸ்., ஆபீஸ் அசிஸ்டென்ட் மெயின் தேர்வு 


அக்டோபர் 

.12,13,மற்றும் 19, 20 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ.,முதல் நிலைத் தேர்வு 

நவம்பர் .
17 - என்.டி.ஏ., தேர்வு
30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு 


டிசம்பர் 

.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு 
7,8,மற்றும் 14,15 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் முதல் நிலைத்தேர்வு
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மூன்றே ஆண்டுகளில்...,
கேரள மாநிலம் மேலக்காவு என்ற இடத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது

"தற்போதுள்ள கேரள மாநிலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருத்தது அல்ல.
கேட்பாரற்ற வகையில் ஊழல் முறைகேடுகள் நடந்த ஆட்சியிலிருந்து முறைகேடுகள் கடுமையாக ஒடுக்கப்பட்ட மாநிலமாக கேரளம் மாறியுள்ளது.
இதைமத்திய அரசும் அங்கீகரித்துள்ளது.
ஆனால் அது போதாது, ஊழல் சிறிதளவும் இல்லா மாநிலமாக மாற வேண்டும்.
 கேரளத்தில் இன்று யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நிலை ஏற்பட்டுள்ளதுஎன தெரிவித்தார்.
இடதுசாரி அரசு எப்போதும் ஏழைகளின் பக்கம் நிற்கும். ச
சமூக  பாதுகாப்பு ஓய்வூதியம் இதை தெளிவுபடுத்தும்.

மூன்றேகால் ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியம் வழங்க வேண்டிய ரூ.1800 கோடியை கடந்த  அரசு நிலுவையில் வைத்திருந்தது.
 அந்தத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் புதிதாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது .

பெருவெள்ளத்தில் வீடுகளை இழந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்பட்டன.. மூன்றாண்டுகளில் பொதுக்கல்வி நிறுவனங்களில் 5 லட்சம் வரையிலான மாணவ - மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர்.
 இதே போல் கேரள மாநிலத்தில் அரசுப் பணியாளர் நியமனத்துக்கு முந்தைய காங்கிரஸ் அரசு விதித்திருந்த தடையை விலக்கியதுடன் 3 ஆண்டுகளில் ஒருலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், 22,500 புதிய பணியிடங்களையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது."
என  முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் தமிழகத்தை சீரழித்து வரும் தமிழ்நாடு ஆட்சியாளர்களைப்பார்த்தால் பேசாமல் கேரளா சென்று விடலாமா என்றிருக்கிறது.
மத்திய அரசுப்பணிகளை இந்தி மாநிலத்தவர்களுக்கு தாரைவார்க்கும் போது,அரசுப்பணிகளையும் வட மாநிலத்தவர்களுக்குவிட்டுக்கொடுத்து மன்னன் மைந்தர்களை வேலையின்றி அலைய வைக்கும் எடப்பாடி பழனிசாமி பக்கத்து மாநிலம் கேராளவை கொஞ்சம் பார்க்கவேண்டும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
முன்னால் 

 சிலி ராணுவ தினம்
சுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்(1893)
நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது(1893)
அமெரிக்கா, நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது(1957)

1796 - குடி யரசுத் தலைவர் பதவியி லிருந்து விடைபெறும் நிலையில், ஜார்ஜ் வாஷிங்டனின் விடைச் செய்தி, அமெரிக்கன் டெய்லி அட்வர்ட்டைசர் இதழில், ‘அமெரிக்க குடியரசுத் தலைவர் பதவியை மறுக்கிற நிலையில், தளபதி வாஷிங்டன் அமெரிக்க மக்களுக்கு விடுக்கும் செய்தி’ என்ற தலைப்பில் வெளியானது.
1796இன் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஏறக்குறைய 10 வாரங்கள் இருக்கும் நிலையிலேயே வெளியான இந்தச் செய்தி, உண்மையில் 1792இலேயே எழுதப்பட்டுவிட்டது.
 இரண்டாவது முறை அதிபராகப் போட்டியிட விரும்பாததால், ஜேம்ஸ் மேடி சனைக்கொண்டு அப்போதே விடைச் செய்தியை  எழுதிவிட்டார் வாஷிங்டன்.

 ஆனால், செயலாளர்களாக (அமைச்சர்களாக) இருந்த தாமஸ் ஜெஃபர்சன், அலெக்சாண்டர் ஹாமில்ட்டன் உள்ளிட்டோருக்கிடையே கடுமையான மோதல்கள் நிலவிய அச்சூழலில், வாஷிங்டனும் இல்லையென்றால், அமெரிக்காவின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று மேடிசன், ஜெஃபர்சன் உள்ளிட்டோர் வற்புறுத்தியதால், தொடர ஒப்புக்கொண்டார் வாஷிங்டன்.

1788, 1792 ஆகிய இரு தேர்தல்களிலுமே போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்ட வாஷிங்டன், இரண்டாவது பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்குமுன்பே, ஏற்கெனவே எழுதிய விடைச்செய்தி யை திருத்தியமைத்து வெளியிட்டு, மூன்றாவதுமுறை குடியரசுத் தலைவராகப்போவதில்லை என்பதை அறிவித்துவிட்டார்.
வெறும் விடைச் செய்தியாக இல்லா மல், அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கை யாகவும், அடுத்து வரும் தலைமுறைகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய வழிகாட்டுதலாகவும் இருந்த இது, அமெரிக்க வரலாற்றின் மிக முக்கிய ஆவ ணங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.
 மதம், ஒழுக்கம், கல்வி முதலானவை குறித்தும், அந்நிய உறவுகளில் அமெரிக்கா நடுநிலை வகிக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இச்செய்தியில் வாஷிங்டன் குறிப்பிட்டிருந்தவையே, இருபதாம் நூற்றாண்டிலும் அமெரிக்க அரசியல் விவாதங்களில் வழிகாட்டியாக விளங்கின. வாஷிங்டனின் சொற்களை, அமெரிக்காவின் நாயகனின் வழிகாட்டுதலாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது.
அமெரிக்க உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தபோது, வாஷிங்டனின் 130ஆவது பிறந்தநாளையொட்டி, நாடாளுமன்றத்தில் இந்த விடைச் செய்தியை வாசிக்கவேண்டுமென்று ஃபிலடெல்ஃபியா மக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து, பிரதிநிதிகள் அவையில் 1862இல் வாசிக்கப்பட்டது.
இரு அவைகளிலும் இந்தச் செய்தியை வாசிப்பது 1899இலிருந்து வழக்கமாகியது.
1984இல் பிரதிநிதிகள் அவை இந்த  வழக்கத்தை முடிவுக்குக்கொண்டுவந்தாலும், ஆண்டு தோறும் வாஷிங்டனின் பிறந்த நாளன்று, செனட் அவை யில் இன்றுவரை இந்த விடைச் செய்தி வாசிக்கப்படு கிறது. இதை வாசிப்பதற்கான உறுப்பினர்கள் இரு கட்சிகளிலிருந்தும் மாறி மாறித் தேர்ந்தெடுக்கப்படு கின்றனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

 மோடி மூடி ஆட்சி 
பொதுத்துறை வர்த்தக நிறுவனங்களான ‘எஸ்டிசி, எம்எம்டிசி, பிஇசி’ ஆகிய மூன்று நிறுவனங்களையும் மூடும் முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
பிற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக ‘ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன்’ (எஸ்டிசி) என்ற நிறுவனம் 1956-ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது.

 குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்காக இந்நிறுவனம் உருவாக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ரயில்வே மற்றும்பொறியியல் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக புராஜெக்ட் மற்றும் எக்யூப்மெண்ட் கார்ப்பரேஷன் (பிஇசி) என்ற நிறுவனம் எஸ்டிசி-யின் ஒரு அங்கமாக 1971-ஆம் ஆண்டுஉருவாக்கப்பட்டது.
அதன் பிறகு 1997-ஆம்ஆண்டு இந்நிறுவனம் தன்னாட்சி நிறுவனமாக மாற்றப்பட்டது.இதற்கிடையே உலோகங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் ஏற்றுமதிக்கென்று தனியாக ‘எம்எம்டிசி’ என்று நிறுவனம் 1963-ஆம்ஆண்டு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், மேற்கண்ட 3 நிறுவனங்களின் பயன்பாடும் தற்போது குறைந்து விட்டதாக கூறி, அவற்றுக்கு மூடுவிழா நடத்துவது, அல்லது மூன்றையும் ஒரே நிறுவனமாக மாற்றுவது என்று முடிவுக்கு மோடி அரசு வந்துள்ளது.‘இந்த நிறுவனங்களுக்கானத் தேவை இப்போது இல்லை.
 வெறும் தங்கம் இறக்குமதிக்காக மட்டும் ‘எம்எம்டிசி’ போன்ற பெரிய நிறுவனங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை. அதுமட்டுமல்லாமல், இவ்வகையான வர்த்தகத்தில் ஈடுபடுவது அரசின் வேலையும் அல்ல. இப்போதைய நிலையில் அரசின்முன்பு இரண்டு வழிகள் உள்ளன
. ஒன்று இம்மூன்றுநிறுவனங்களையும் மூடுவது அல்லது இம்மூன்றையும் ஒன்றாக இணைப்பது. இதுகுறித்து கலந்தாலோசித்து வருகிறோம். விரைவில் திட்டவட்டமான முடிவுஅறிவிக்கப்படும்’ என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
குமாரி மாவட்டத்தில் பிறந்த இவன்( சிவின்குமார்) அம்மா தமிழ்நாட்டுக்காரர்தான்.தாய் மொழி தமிழ்தான்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
 பள்ளிப்படிப்பை கைவிட்டால்
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தமிழகப் பள்ளிகளில் 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அரசின் இந்த முடிவுக்கு பெற்றோர், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு  தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

 அந்த வீடியோவில்,
“ஒரு தும்பியின் வாலில் பாறாங்கல்லை கட்டி பறக்கவிடுவது எவ்வளவு கொடுமையோ அதைவிடக் கொடுமை 10 வயது மாணவன் மனதில் பொதுத்தேர்வு எனும் சுமையைக் கட்டிவைப்பது.
இந்தக் கல்வி திட்டம் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையே கற்றுக்கொடுக்கும். இந்தத் திட்டத்தால் தேர்வு விகிதம் அதிகரிக்காது. மாறாக, குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் தேர்வு பயம்தான் அதிகரிக்கும்.

 ஜாதி, மதங்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைவிட மதிப்பெண்களால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால்தான் இப்போது பாதிப்பு அதிகம்.
இதனால் ஒரு குழந்தை சமூகத்தில் நாம் வாழ தகுதியே இல்லையோ என்ற தாழ்வு மனப்பான்மைக்குள் மூழ்கிப் போகும்.
இனி ஏதாவது ஒரு குழந்தை தனது பள்ளிப்படிப்பை கைவிட்டால் அதற்கு மாநில அரசு அமல்படுத்தியிருக்கும் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமே முக்கிய காரணம்.
பள்ளி குழந்தைகளுக்கு எள்ளளவும் பயன்படாத இந்தத் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது.
 இத்திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது”
என கமல்ஹாசன்  பேசியுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
  ‘ஆயுஷ்மான் பாரத்’ஊழல்.
 நாட்டில் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள குடும்பங்களின் நலனுக்காக என்ற பெயரில், ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற திட்டத்தை மத்திய பாஜக  அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

பணம் செலவழிக்கத் தேவையில்லாத மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்றும், இந்த திட்டத்தில், இதுவரை 39 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் அண்மையில் கூட மோடி அரசு தம்பட்டம் அடித்திருந்தது.
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ், மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு, சுமார் 18 ஆயிரம் மருத்துவமனைகள் முன் வந்துள்ளதாகவும், இதுவரை மக்களின் சிகிச்சைக்காக ரூ. 7 ஆயிரத்து 500 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் மத்திய அரசு தகவல் ஒன்றை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமலேயே பொய்யான பெயர்களில் சிகிச்சை அளித்ததாக கூறும் 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கும், 
இல்லாத மருத்துவமனைகளின் பெயர்களிலும்  பல கோடி ரூபாயை மோடி அரசு வாரி இறைத்து  மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.புகார்கள் குவிந்து வருகின்றன..

இது தொடர்பாக 376 மருத்துவமனைகளிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 338 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேலும், 6 மருத்துவமனைகள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் மற்றும் சில மருத்துவமனைகளுக்கு ரூ.ஒன்றரைக் கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் இணைந்திருந்த 97 மருத்துவமனைகள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன என்றும், மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கூறியுள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?