தற்போதைய ஆய்வு முடிவுகள்

சிந்துச் சமவெளி மக்கள் பேசியது 
" திராவிட மொழி"
----------------------------------------------------------------------
சிந்துச் சமவெளியில் வாழ்ந்த மக்கள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று செல் இதழிலும் சயின்ஸ் இதழிலும் வெளியான கட்டுரை பலரைத் தொந்தரவுக்குள்ளாக்கியிருக்கிறது.

ராக்கிகடியில் கிடைத்த எலும்புக்கூட்டை வைத்து செய்யப்பட்ட ஆய்வில், சிந்துச் சமவெளி மக்களிடம் ஸ்டெப்பி புல்வெளிகளில் இருந்து வந்தவர்களின் மரபணுத் தொகுதிகள் இல்லை - என்ற முடிவு எட்டப்பட்டிருக்கிறது.

சிந்துவெளி காலத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு வந்த ஸ்டெப்பி புல்வெளிகளைச் சேர்ந்தவர்களால்தான் இந்தோ - யுரேப்பிய மொழிகள் இங்கு வந்தன இந்த முடிவு முன்வைத்தது.


இந்த முடிவு வெளியானதும் இந்தியா முழுவதும் அவரவருக்கு ஏற்படி இந்த முடிவை திரித்து முன்வைத்தனர். அதுகூடப் பரவாயில்லை.
தில்லி ஊடகங்கள் பல இதனை அப்படியே மாற்றிவெளியிட்டன.
எகனாமிக் டைம்ஸ், தி பிரிண்ட், தி வீக் ஆகியவற்றில் முற்றிலும் மாறுபட்டு, ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து இந்தியாவுக்கு வந்தனர் என்ற தியரி பொய்யாகிவிட்டது என தலைப்பிட்டு கட்டுரைகளை வெளியிட்டனர்.
ஆனால், அட்லாண்டிக், ஸ்மித்சோனியன் போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் இதனைச் சரியாக வெளியிட்டன.

குறிப்பாக ஸ்மித்சோனியன் "The authors suggest Indo-European languages may have reached South Asia via Central Asia and Eastern Europe during the first half of the 1000s B.C., a theory evidenced by some genetic studies and similarities between Indo-Iranian and Balto-Slavic languages." என்று குறிப்பிட்டது.

அதாவது, "இந்தோ- ஐரோப்பிய மொழிகள் மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா வழியாக தெற்காசியாவுக்கு வந்திருக்கக்கூடும். இது கிறிஸ்துவுக்கு முந்தைய முதல் ஆயிரம் ஆண்டுகளின் முற்பாதியில் நடந்திருக்கலாம். இந்தோ - இரானியன் மற்றும் பால்டோ - ஸ்லாவிக் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை, சில மரபணு ஆய்வுகளின் மூலம் இந்த கருத்தாக்கம் எட்டப்பட்டது" எனக் குறிப்பிட்டது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட டெக்கான் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வசந்த் ஷிண்டேவே தன் முடிவுகளில் இருந்து மாறுபட்டு கருத்துத் தெரிவித்தார். "ஹரப்பர்கள் சமஸ்கிருத மொழியை பேசினார்கள்" என்று சொன்னார்,
ஆனால், அமெரிக்க மரபணு ஆய்வாளரான ரிஸித், இதை ஏற்கவில்லை. ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தார்கள்.
வட இந்தியாவில் வசிக்கும் எல்லா இனக் குழுவிலும் ஸ்டெப்பி புல்வெளி மக்களின் மரபணு இருக்கிறது. அதன் மூலம்தான் இந்திய - ஐரோப்பிய மொழிகள் பரவியிருக்கின்றன என்றார்.

அதாவது, சிந்துச் சமவெளி மக்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மக்களின் மரபணு இல்லை.
 ஆனால் தற்போதைய வட இந்திய மக்களிடம் அந்த மரபணுக் கூறுகள் இருக்கின்றன. ஆகவே, சிந்து சமவெளிக் காலகட்டத்திற்குப் பிறகு ஸ்டெப்பி புல்வெளிகளில் இருந்து இந்தியாவுக்கு இடப்பெயர்வு நடந்திருக்கலாம்.
 அதனால், சிந்து சமவெளி நாகரீகம் என்பது ஆரிய நாகரீகமோ, வேதகால நாகரீகமோ இல்லை என்பதுதான் முடிவு.

வேறு சில முக்கியமான முடிவுகளும் எட்டப்பட்டன.
அதாவது “A possible scenario combining genetic data with archaeology and linguistics is that proto-Dravidian was spread by peoples of the IVC [Indus Valley Civilisation],”
 இதன் அர்த்தம், மரபணு தகவல்கள், அகழ்வாராய்ச்சி, மொழி ஆய்வு ஆகியவற்றின் மூலம் சிந்துச் சமவெளி மக்கள் பேசியது முற்கால திராவிட மொழி என்ற முடிவுக்கு வரலாம்.

மேலும், தெற்காசிய மக்களின் மரபணுக்களுக்கு அதிக அளவில் பங்களிப்புச் செலுத்தியது சிந்துச் சமவெளி மக்களின் மரபணுவே.

இந்த முடிவுகளை ஊடகங்கள் எப்படி தங்கள் வசதிக்கு திரித்து வெளியிட்டன என்பது குறித்து ஸ்க்ரோலில் விரிவான ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

 ரொம்பவும் அரிதான கட்டுரை அது.

அகழ்வாராய்ச்சி, வரலாறு போன்றவற்றில் அரசியல் புகுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நிகழ்கால சாட்சி அந்தக் கட்டுரை.

https://scroll.in/…/two-new-genetic-studies-upheld-aryan-mi…
https://www.theatlantic.com/…/indus-valley-civiliza…/597481/
https://www.smithsonianmag.com/…/rare-ancient-dna-south-a…/…
https://scroll.in/…/is-jallikattu-hindu-or-dravidian-an-ind…
முகநூலில் எழுதியவர் : முரளிதரன் காசிவிஸ்வநாதன்.
            இப்படியும் இந்தியைத் திணிக்கலாம்.
 தமிழில் விளம்பரம் தருகிறதாம் மத்திய மோடி அரசு.
இப்படி கொடுப்பதால் யாருக்கு புரியும்,என்ன பயன்,
அரசுப்பணம் கோடிகளில் வீண்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மோடி குரல்கள்!
"100 நாள் வெறும் ட்ரெய்லர்தான்... ஆட்டத்தை இனிமேல்தான் முழுசா பார்க்கப்போறீங்க..".
 மோடி அதிரடி..!
வலது சாரி ஊடகங்கள் .

பழைய அதிரடிகள்.
 
2014 - நன்னாட்கள் வரவிருக்கின்றன. (அச்சே தின் ஆனே வாலே ஹேன்.)
2016 - கறுப்புப்பணம் ஒழியா விடில் என்னை உயிரோடு கொளுத்துங்கள்.

2017 - வரி வசூல் உயர்ந்து இந்தியா கொழிக்கப் போகிறது.
2018 - வேலை வாய்ப்பு பெருமளவு அதிகரித்திருக்கிறது. எத்தனை லாரிகள் பதிவாகி இருக்கின்றன, எத்தனை பக்கோடா கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றன, பாருங்கள்.
2019 ஏப்ரல் - பொருளாதாரம் கடும் வேகத்தில் முன்னேறப்போகிறது.

2019 ஜூன் - மந்த நிலையா, எங்கே?
2019 ஜூலை - மந்த நிலையா, சும்மா வெறும் கார், ஸ்கூட்டர் விற்காமல் போனதை எல்லாம் மந்த நிலை என்று சொல்ல முடியாது.
2019 ஆகஸ்ட் - மந்த நிலை இருக்கிறது, ஆனால் அதற்குக் காரணம் மாசுக்கட்டுப்பாடு வாரியம்தான்.

2019 செப்டம்பர் - மந்தநிலைக்கு காரணம் ஓலா, ஊபர் டிரைவர்கள்தான்.

2020 - பொருளாதார தேக்கம் நிலவுவதற்கு ராஜிவ் காந்திதான் காரணம்.
2021 - பொருளாதார தேக்கம் நிலவுவதற்கு தீபிகா படுகோன்தான் காரணம்.

2022 - பொருளாதார வளராமல் இருப்பதற்கு உண்மையில் நேருதான் காரணம். அவர் மட்டும் சோஷலிசம் கொண்டு வராமல் இருந்திருந்தால்...
2023 - பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. அதனை மீட்டெடுக்க இந்தியர்கள் தியாகம் செய்ய வேண்டும். ஆகவே...
2024 - ஃபிர் ஏக் பார், மோடி சர்க்கார்
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜக்கி வாசுதேவின் 
நதிகளை இணைக்கும் திட்டம் 
என்ன ஆயிற்று?
ஜக்கி வாசுதேவ் என்பவர் தனது மோசடித்தனம் மூலமாகத்தான் பெரிய கார்ப்பரேட் சாமியாராக உருவானார்.

இவர் மீது உள்ள குற்றசாட்டுகள் அனைத்தும் உண்மையானவை.ஆனால் நம் அரசியல்வாதிகளை கையில் வைத்திருப்பதால் இவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
முதலில் இவரது ஆசிரமத்தில் கஞ்சா  போன்ற போதை பொருட்கள் உருமாற்றி,மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக விற்பதாக செய்தி உள்ளது.

இவரது மனைவியை இவரே கொலை செய்ததாக அவரது ஆசிரமத்தில் முதலில் பணியாற்றியவர்கள் கூறியுள்ளனர்.காவல் நிலையத்தில் பதிவும் உள்ளது.ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்கள் பலர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.அவர்களின் உறவினர்களுக்கு சொல்லாமலேயே பிணங்கள் எரிக்கப்பட்டு சமாதியாக்கப்பட்டுள்ளனர்.

தன்னை அமைதி வேண்டி நாடிவரும் இளம்பெண்களை எல்லாம் கண்டிப்பாக துறவு மேற்கொள்ளச்செய்யும் அளவு மூளை சலவை செய்து குடும்பத்தில் இருந்து பிரிப்பது இவர் வழக்கம் பல குற்றசாட்டுகள் காவல் நிலையத்தில் பெற்றோர்களால் கொடுக்கப்பட்டு குப்பைக்கூடையில் உள்ளது.
ஆனால் தனது  மகளை மட்டும் 100 கோடிகள் செலவில் திருமணம் ஆடம்பரமாக செய்து  வைத்துள்ளார் ஜக்கி.
உண்மையாகவா?


தனது மீது குவியும் குற்றசாட்டுகளை நீர்த்துப்போக வைக்க அவ்வப்போது சமூகநல வேடம் போடுவது ஜக்கி வழக்கம்.தமிழனாக இவர் தமிழே தெரியாதவர் பேசுவது போல் பேசுவது பக்தர்களை ஏமாற்ற.

முன்பு நதிகளை இணைப்பதற்கு தனக்கு மிஸ்ட் கால் கொடுங்கள் என்று விளம்பரம் செய்தார்.அதுவும் பல ஆயிரங்களில் மிஸ்ட்கால் வந்தால் தான் நதிகளை இணைத்த விடுவதாக தம்பட்டம் அடித்தார்.
ஆனால் அதன் மூலம் ஒரு அலைபேசி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு காசு பார்த்ததார் என்பதைத்தவிர வேறு பலன் இல்லை.

வாகன பேரணி ஒன்றை நடத்தி மாசுவை உருவாக்கினார்.

முதலில் ஒன்றைப்புரிந்து கொள்ளுங்கள் நதிகளை அதன் வழித்தடத்தை மாற்றி இணைத்து நாம் புதுத்தடம் காட்டுவது இயற்கைக்கு மாறான செயல்.அந்த நதியை இல்லாமலாக்கி விடும்.
ரஷ்யாவில் அப்படி இணைக்கப்பட்ட நதிகள் காணாமல் போனதாக பதிவுகள் உள்ளது.
நதிகளை அதன்வழியிலேயே போகவிட்டு உபரி நீர் வெள்ள நீரை வாய்க்கால்கள் மூலம் ஏரிகள்,குளங்களை நிரப்பி சேமிப்பதே நமது பண்டைய முறை.அதன் மூலம் முப்போகமவிளைவிக்கலாம்.நிலத்தடி நீரை சேமிக்கலாம்.
முன்பு அப்படி சேகரிக்கப்பட்ட ஏரிகள்,குளங்களை நாம்தான் காணாமலாக்கிவிட்டோம்.குடியிருப்புகளாக மாற்றி விட்டோம்.பின் அங்கு தேங்கும் நீரை கூக்குரலிட்டு வெளியேற்றி கடலில் வீணாக அனுப்புகிறோம்.

வெள்ளியங்கிரி மலையையே மொட்டையடித்து மரங்களை வெட்டி விற்று காசு பார்த்தார்.யானையின் வழித்தடத்தையும் ,பல ஏரிகள்,குளங்களையும் அழித்து அரசு நிலங்களை அமுக்கிக்கொண்டார்.பிரதமர் மோடியை கொண்டுவந்து பெரிய சிலையை திறந்து வைத்ததன் மூலம் அரசு அதிகாரிகள் தன மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் தனது செல்வாக்கை காண்பித்தார்.
தற்போதைய ஆளுநர் நவராத்திரி விழாவில் இவர் ஆசிரமம் சென்று இவருடன் ஆடிப்பாடி கொண்டாடினார்.
பின் இந்த திருட்டு சாமியார் மீது எந்த அதிகாரி நடவடிக்கை எடுக்க முடியும்.
நதிகளை இணைப்பதாகக் கூறிய இந்த ஜக்கிவாசுதேவ் தற்போது நதிகள் இணைப்பு தவறு.மரங்களை வளர்ப்போம் அதற்கு எனக்கு ஒரு மரத்துக்கு 42 ரூபாய் தந்தால் நான் வளர்த்து மழையைக்  கொட்டோ ,கொட்டு என கொட்டவைப்பேன் என்று ஏமாற்ரித்திரிக்கிறார்.மரக்கன்று விலை 8 ரூபாய்கள்தான் ஆனால் ஜக்கி கொடுப்பது சந்தனமரமா?
அரசு கட்டை மொட்டையடித்து ஆசிரமம்,ஹெலிபேட் அமைத்தவன் மரங்களை வழக்கப்போகிறானாம்.ஆனால் அதற்கு காசு நாம் கொடுக்க வேண்டுமாம்.
இவனே தன்னை கடவுள்.சிவ வடிவம் என்கிறான்.
இவனால் மழையைக்கொண்டு வர முடியாத கடவுள் வடிவம் என்ன கடவுள்?
ஏற்கனவே சேலத்தில் 9 லட்சம் மரங்களை நட்டியதாக ஜாக்கி 2017ல் கணக்கு காண்பித்தார்.அவை எங்கு நட்டப்பட்டது ,இப்போதைய நிலை என்ன என்பது யாருக்குமே புரியா நிலை.

தற்போது காவிரியின் கூக்குரல் என்று கிளம்பியிருக்கிறார்.குடியரசுத்தலைவர்,பிரதமர்,ஆளுநர் எனப்பெரிய இடங்களைக் கையில் வைத்துள்ள ஜக்கிவாசுதேவ் நினைத்தால் அவர்களுடன் பேசி காவேரி நீரை வாங்கித்தர முடியும்.கடவுள் வடிவமான அவர் நினைத்தால் மழையைப்போலியவைக்க முடியும்.
ஆனால் அதை செய்யாமல் மிஸ்ட்கால் கொடுங்கள் நதியை இணைக்கிறேன்.42 ரூபாய் கொடுங்கள் மரம் நட்டு மழையை வரவைக்கிறேன் என்பது அவரின் பணவரவுக்கான செயல் .மக்களை ஏமாற்றும் செயல் மட்டும்தான்.
ஏனென்றால் மக்களின் அறியாமையை பயன்படுத்தி சொகுசாக வாழும் ஏமாற்று சாமியார்களில் அவரும் ஒருவர்.
                                                                                                                                QUARO தளத்தில் இருந்து.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
 "துணிமணிகள்,உள்ளாடைகள் வீழ்ச்சிக்கு காரண"மாக 
இதை நம் நிதியமைச்சர் நிர்மலா சொல்லலாமே?






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?