தாவூத் இப்ராகிடம் BJPநன்கொடை வாங்கியதா

பா ஜ க  திருவிளையாடல்

நேற்று மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்குப் பிறகு சிவசேனா தலைவரான உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ஏற்க வேண்டும், அதேபோல் கூட்டணியின் தலைவராக அவரே இருக்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
 ஆனால் உத்தவ் தாக்கரே இதுகுறித்து தனது கருத்து என்ன என்பதை இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் மும்பையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இந்த தகவலை தெரிவித்திருந்தார்.

இன்று இந்த கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது திடீரென மஹாராஷ்டிரா ஆளுநர் முன்பு மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டனர்.

மகாராஷ்டிரா தலைநகரான மும்பையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று காலை திடீரென பாஜக ஆட்சியமைத்தது.

மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் பதவி ஏற்றுக்கொண்டனர். 

 இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், “பாஜகவுடன் கூட்டணி என்பது, அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. பாஜக ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தரவில்லை. 
அதேபோல அஜித்பவாரின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை" என தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அஜித் பவாரின் இந்த திடீர் கூட்டணியை விமர்சித்துள்ள சிவசேனாவின் சஞ்சய் ராவத், "அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களையும், எங்களையும் முதுகில் குத்தியுள்ளார். உத்தவ் தாக்கரே மற்றும் ஷரத் பவார் ஆகியோர் நட்புறவிலேயே உள்ளனர். 
அவர்கள் இன்று நேரில் சந்தித்து பேச உள்ளார்.
 மேலும் அவர்கள் ஊடகங்களை ஒன்றாக சந்திக்கவும் திட்டமுள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், அஜித் பவாரும் அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏக்களும் சத்ரபதி சிவாஜி மற்றும் மகாராஷ்டிராவை அவமதித்துள்ளனர்" என தெரிவித்துள்ளனர். 
---------------------------------------------------------------------------------------------------------------------------------- 
முகநூலில் 
 Aburayan

அம்மாவுக்கு எம்புட்டு மனிதாபிமானம் தெரியுமா பிச்சாண்டின்னு ஒருத்தன் பொண்டாட்டிக்கூட சண்டைபோட்டு மண்ணெண்ணெய் ஊத்தி தீ வச்சுட்டான் .... அவன் உடம்பெல்லாம் கொப்பளமாயிடுச்சு ஒருநாள் அம்மா வரும்போது அம்மா கார் முன்னாடி சட்டையை கழட்டிட்டு ஓடுனாண் .... உடனே அம்மா என்ன எதுன்னு கேட்டு அவனுக்கு அப்பல்லோவுல அறுபது லட்சம் ரூபாய் செலவு செய்து மருத்துவம் பாத்து சரியாக்குச்சு ....
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
# இட்லி துன்னதுக்கே ஒன்றரை கோடி ரூபாய் கணக்கு காணிச்சவங்க நீங்க அதனால பிச்சாண்டி கொப்பளம் கணக்கை அப்புறம் வச்சிக்கலாம் ....
சந்திரலேகா ன்னு ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி மூஞ்சில ஆசிட் அடிச்சு அதோட மூஞ்சு உடம்பெல்லாம் கொப்பளம் ஆச்சுதே அமைச்சரே அதை எந்த லிஸ்டில் சேர்ப்பது ...???
கேக்குறவன் கேனப்பயலா இருந்தா ....
---------------------------------------------------------------------------------------------------------------------------------


------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் 
 முன்னால்
கவிஞர் சுரதா பிறந்த தினம்(1921)



அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது(2007)




முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது(1936)

1890  - உலகின் முதல் ஜூக்பாக்ஸ்,  அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், பேலைஸ் ராயேல் சலூன் என்ற கேளிக்கை விடுதியில் நிறுவப்பட்டது.
 சலூன் என்ற ஆங்கிலச் சொல், ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான, (உதாரணமாக மது, கேளிக்கை, விளையாட்டுகள், சூதாட்டம் போன்றவை நடத்தப்படும்) பொது அரங்கினையும், ஓட்டுனர் பகுதியிலிருந்து பயணிகள் பகுதி பிரிக்கப்பட்ட கார்களையும் குறிக்கும்.
சலோன் என்ற ஆங்கிலச்சொல் அலங்காரம் (குறிப்பாக சிகை) செய்யுமிடத்தையும், பெரிய வீட்டின் வரவேற்பறையையும் குறிக்கும். ஜூக்பாக்ஸ் என்பது, இணையத்தின் வருகைக்குமுன் நமக்கு(இந்தியர்களுக்கு) அதிகம் பரிச்சயமில்லாத பெயர்.

ஆனால், மேற்கத்திய நாடுகளில், கேளிக்கை விடுதி போன்ற இடங்களில், விரும்பிய இசையைத் தேர்ந்தெடுத்துக் கேட்பதற்காக, பொதுவாக நாணயங்கள்மூலம் இயக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் புழக்கத்திலிருந்த கருவி.
இதற்கு முன்னரே பிளேயர் பியானோ என்ற தானியங்கி இசைக்கருவி புழக்கத்திலிருந்தாலும், 1877இல் எடிசன் கண்டுபிடித்த போனோக்ராஃப் கருவி இசையைப் பதிவுசெய்யும் வசதியை அளிக்க, 1889இல் நாணயத்தால் இயக்கும் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட, இவை நாணயம் போட்டு இசை கேட்கும் கருவிக்கு வழிவகுத்தன.
விரும்பிய இசையை வீடுகளில் கேட்பதற்கான வசதிகள் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே பெற்றிருந்த அக்காலத்தில், தேர்ந்தெடுத்து இசை கேட்பதற்கான வசதி மிகப்பெரிய முன்னேற்றமாகப் பார்க்கப்பட்டது.

இந்த முதல் ஜூக்பாக்சில், ஸ்பீக்கர்கள் இன்றி, ஸ்டெதாஸ்கோப் போன்று பொருத்தப்பட்டிருந்த நான்கு குழல்களை நான்குபேர் காதில் மாட்டிக்கொண்டு இசையைக் கேட்கலாம். 5 செண்ட் நிக்கல் நாணயம் 20 சேர்ந்ததுதான் ஒரு டாலர்.
ஒரு நிக்கல் நாணயத்தால் இயங்கிய இக்கருவியில், முதல் ஆறு மாதங்களில்மட்டும் ஆயிரம் டாலருக்குமேல் வசூலானது என்பதிலிருந்து, இதற்கான வரவேற்பு புரியும்.
பின்னர் ஒன்றுக்கு மேற்பட்ட இசைத்தட்டுகளை தனித்தனி போனோக்ராஃப் கருவிகளிலும், அதன்பின் இசைத்தட்டுகளை மாற்றும் வசதியுடைய ஒரே கருவியுடனும் உருவாக்கப்பட்ட இந்த ஜூக்பாக்சில், எந்த இசையை எவ்வளவு பேர் கேட்டார்கள் என்று கணக்கிடும் வசதியிருந்ததால், இசைத்தட்டு வெளியீட்டாளர்களின் முக்கிய சந்தையாக இருந்தது.
வானொலி, ஒலிநாடா வரவால் மதிப்பிழக்கத் தொடங்கியது.
- அறிவுக்கடல்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அறிவியல் சாதனையாளர்கள் விருது
 2018ம் ஆண்டிற்கான, அறிவியல் சாதனையாளர்கள் விருது பெற, டிச., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:அறிவியல் நகரம் சார்பில், &'தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது மற்றும் தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகள்&' வழங்கப்படுகின்றன. 

விருதுக்கான முன்மொழிதல் படிவம், விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்க அடிப்படை தகுதிகள் மற்றும் விதிகள், www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 
விருப்பம் உள்ள அறிவியலாளர்கள், முன்மொழிதல் மற்றும் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, டிச., 20க்குள் பூர்த்தி செய்து, தபால் வாயிலாக அல்லது நேரடியாக அளிக்கலாம்.

&'அறிவியல் நகரம், காந்தி மண்டப சாலை, பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய வளாகம், சென்னை - 25&' என்ற முகவரிக்கு, விண்ணப்பங்களை அனுப்பலாம். 
மேலும் விபரங்களை, 044 - 2445 4054 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வேலை வாய்ப்புகள் 

  பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் 30 இடங்கள் 
 மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 30 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடங்கள்: அசிஸ்டென்ட் டேட்டாபேஸ் அட்மினிஸ்டிரேட்டர் (ஏ.டி.ஏ.,) 1, கம்ப்யூட்டர் இன்ஜினியர் 13, ஜூனியர் இன்ஜினியர் (சிவில், எலக்ட்ரிக்கல்) 16 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
வயது: ஏ.டி.ஏ., பதவிக்கு 35 வயதுக்குள்ளும், கம்ப்யூட்டர் இன்ஜினியர் 25 -40 வயதுக்குள்ளும், ஜூனியர் இன்ஜினியர் 25 -35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : ஏ.டி.ஏ., பதவிக்கு எம்.இ., / எம்.சி.ஏ., படிப்பும், மற்ற பதவிகளுக்கு தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை
: எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ஏ.டி.ஏ., பதவிக்கு ரூ. 1,000. மற்ற பதவிகளுக்கு ரூ. 500. கடைசிநாள்: 29.11.2019

விபரங்களுக்கு
: https://www.nift.ac.in/sites/default/files/2019-10/NIFT%20Website%20Advt_Advt-10_Group-A%26B%20Posts_Direct%20Rectt.pdf
 ----------------------------------------------------------------------------------------------------------------------------
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனத்தில் 55 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது:
1.11.2019 அடிப்படையில் சில பதவிகளுக்கு 30 வயது மற்றும் சில பதவிகளுக்கு 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி தேதி
: 3.12.2019

விபரங்களுக்கு
: www.cpcl.co.in
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு அறிவிப்பு.
காலியிடங்கள்: உதவி பாதுகாப்பு அதிகாரி- 19, பாதுகாவலர்- 73

வயது: 6-12-2019 அடிப்படையில் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் பொதுப் பிரிவினர்-27, எஸ்.சி.,/எஸ்.டி.,- 32, ஓ.பி.சி.,- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது தளர்வு சலுகை உண்டு.
கல்வித் தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு. பாதுகாவலர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி.

தேர்ச்சி முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
: 'ஆன் லைன்' https://recruit.barc.gov.in
கடைசி நாள்
: 6.12.2019
---------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய தொழில் பாதுகாப்பு படை
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை கான்ஸ்டபிள்' பதவிக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதுாக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.
வயது: 1.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 -23 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.8.1996 முதல் 1.8.2001க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனம் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 153 செ.மீ., இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: தொடர்புடைய விளையாட்டில் திறமை, எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 17.12.2019

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf

------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவுக்கு
நவ.30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிச.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
டிச.7, 8, 14, 21 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வு
டிச.28, 29 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு
2020, ஜன. 19 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு
ஜன.25- ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

Ksb Boobathi பெறுநர் Puthiyathalaimurai tamil live


#BJP_நன்கொடை_வழங்கிய #பயங்கரவாதிகளுடன்_மும்பைக்_குண்டுவெடிப்புத்_தொடர்பு_DawoodIbrahim_RKWDevelopers_Ltd ) தொடர்புடைய கம்பனி 

செய்தி- 👉-https://thewire.in/…/bjp-donations-companies-terror-f…/amp/…
 குற்றம் சாட்டப்பட்ட பயங்கரவாதியின் மனைவியிடமிருந்து ஒரு சொத்தை வாங்கியதாக என்சிபி தலைவர் பிரபுல் படேல் தேசத் துரோகம் என்று அமித் ஷா குற்றம் சாட்டிய சில வாரங்களுக்குப் பிறகு, ஆளும் கட்சியைக் கடிக்க 'மிர்ச்சி' காரணி மீண்டும் வந்துள்ளது.

"பயங்கரவாத நிதியுதவிக்கு" உதவுவதற்காக அமலாக்க இயக்குநரகம் (ED) இப்போது விசாரித்து வரும் ஒரு நிறுவனத்திடமிருந்து பாரதிய ஜனதா கட்சி ஒரு பெரிய நன்கொடை எடுத்தது, பாஜகவின் நிதி அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன.

1993 ஆம் ஆண்டு மும்பை வெடிகுண்டு குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் மாஃபியா முதலாளி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் - மறைந்த இக்பால் மேமன் அல்லது இக்பால் மிர்ச்சியிடமிருந்து பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கும் வாங்குவதற்கும் ED மேற்கொண்ட விசாரணையின் மையத்தில் உள்ள ஆர்.கே.டபிள்யூ டெவலப்பர்ஸ் லிமிடெட். பாஜக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த படி, ஆளும் கட்சிக்கு பணம் கொடுத்தது.

2014-15 ஆம் ஆண்டில், தடுமாறிய திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆர்.கே.டபிள்யூ, கட்சிக்கு ரூ .10 கோடியை வழங்கியது. இதை 2019 ஜனவரியில் கோப்ரா போஸ்ட் சுட்டிக்காட்டியது.

பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடைகளைத் திரட்டுகின்ற பல்வேறு தேர்தல் அறக்கட்டளைகளிலிருந்து பாஜக தொடர்ந்து பெரிய தொகைகளைப் பெறுகிறது, எந்தவொரு தனிப்பட்ட நிறுவனமும் சொந்தமாக நன்கொடை அளிக்கவில்லை, ஆர்.கே.டபிள்யூ கொடுத்ததை விட கட்சிக்கு அதிகம்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான சர்ச்சையின் வெளிச்சத்தில், 2014-15 ஆம் ஆண்டில் மோடி அரசாங்கம் இந்த அநாமதேய அரசியல் பரப்புரையை அறிமுகப்படுத்தியிருந்தால், ஆர்.கே.டபிள்யூ நன்கொடை ஒருபோதும் வெளிச்சத்திற்கு வந்திருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான ரஞ்சீத் பிந்த்ரா, பாதாள உலகத்தின் சார்பாக ஒப்பந்தங்களை எளிதாக்கியதாக ED யால் கைது செய்யப்பட்டுள்ளார். மிர்ச்சிக்கும் நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை "தரகு" செய்த பிந்த்ராவை ஒரு "முகவர்" என்று வர்ணிக்கும் ED ஆதாரங்களை செய்தி அறிக்கைகள் மேற்கோளிட்டுள்ளன.

ஆனால் அதெல்லாம் இல்லை.

மிர்ச்சியின் சொத்துக்களை வாங்கியதாக ED குற்றம் சாட்டிய ஒரு நிறுவனம், சன்பிளிங்க் ரியல் எஸ்டேட், ஒரு பொதுவான இயக்குனர் வழியாக, மற்றொரு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது பாஜகவுக்கு ரூ .2 கோடி நன்கொடை அளித்தது.
கொடுக்கவில்லை.
 சன்பிளிங்கில் இயக்குனரான மெஹுல் அனில் பவிஷி, ஸ்கில் ரியல் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் இயக்குநராகவும் உள்ளார். 2014-15 ஆம் ஆண்டில் திறன் ரியல் எஸ்டேட்டர்களிடமிருந்து பாஜக ரூ .2 கோடியைப் பெற்றதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் காட்டுகின்றன ..

ஆர்.கே.டபிள்யூ டெவலப்பர்களில் இயக்குநரான பிளாசிட் ஜேக்கப் நரோன்ஹா, தர்ஷன் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார். தர்ஷன் 2016-17 ஆம் ஆண்டில் பாஜகவுக்கு ரூ .7.5 கோடியை நன்கொடையாக வழங்கியதாக தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் நரோன்ஹாவின் பங்கை ED ஆய்வு செய்து வருவதாக இந்தியா டுடே அறிக்கை கூறுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?