என்று தமிழ்நாடு தினம்

தமிழ்நாடு வாழ்க !

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களின் கோரிக்கை களின் வரலாறு 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணத்திலிருந்த ஒரிசாவில் 1895ம் ஆண்டு இந்தி திணிக்கப்பட்டபோது, தங்களை தனி மாகாணமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரிய மக்கள் போராட்டத்தை துவங்கினார்கள். 
 தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் 1935-ல் ஒரிசா தனி மாகாணமாக ஆனது.
இந்தியாவை பல்வேறு மொழி தேசிய இனங்கள் அடங்கிய கூட்டுநாடாக பார்க்கும் அறிவியல் பார்வை 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே வலுவடைந்தது.
மொழிவழி தேசிய இனங்களின் அரசியல் உரிமையை அங்கீகரிக்கும் வகையில், தேசிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் 1921ம் ஆண்டு முதலே அந்ததந்த மாநிலங்களில் உள்ள மொழிகளுக்கு, மொழிவழி மாகாண கமிட்டிகளை ஏற்படுத்தி இயங்கத் துவங்கியது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் வெளியேறுவது உறுதியாகிவந்த சூழ்நிலையில், 1940களுக்கு பிறகு மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை தீவிரமடைந்தது.

பிரிட்டிஷ் இந்தியாவில் தென்னிந்தியா என்பது சென்னை மாகாணாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.
சென்னை மாகாணம் என்பது முழுமையான தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவின் மலபார் பகுதிகள், கர்நாடகத்தின் பெல்லாரி மாவட்டம், உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்கள், ஒரிசாவின் தெற்குப்பகுதி, அந்தோமான் நிக்கோபர் தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பெரும்பகுதியாகும்.
 இந்தியா சுதந்திரம் அடைந்த போது, சென்னை மாகாணத்தின் பரப்பளவு சுமார் 1 லட்சத்து 97 ஆயிரம் சதுர மைல்கள். தென்னிந்தியாவில் கேரளத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம், கொச்சின் சமஸ்தானம், ஆந்திராவில் ஹைதராபாத் சமஸ்தானம், கர்நாடகத்தில் மைசூரு சமஸ்தானம், தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானம் ஆகியவை மட்டுமே பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்படாத தனி சமஸ்தானங்களாக இயங்கி வந்தன.

பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணமாக இயங்கி வந்தபோதே, ஆந்திராவை தனிமாநிலமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திர பகுதி மக்களால் எழுப்பப்பட்டது.
 1913இல் ஆந்திர மகாசபை என்ற அமைப்பு உருவானது. அன்றைய சென்னை மாகாண அரசின் வேலைவாய்ப்பில் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களும், மராத்தியப் பார்ப்பனர்களுமே அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர்.
 ஆந்திர மாணவர்களுக்குப் போதுமான இடம் கிடைக்க வில்லை.
இதன் காரணமாகவே தெலுங்குக்காரர் களுக்குத் தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை உருவானது என்கிறது ஆய்வாளர் இன்னையா.
ஆந்திர மொழி பேசுபவர்களுக்கென தனி அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காகவே, 1918 ஆண்டே நீதிபதி சுப்பராவ் என்பவர் தலைமையில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியை ஆந்திர காங்கிரஸார் அமைத்துக் கொண்டனர்.
 1921ல் மகாத்மா காந்தி மொழி வாரியாக காங்கிரஸ் மாகாண கமிட்டிகளை அமைப்பதற்கு முன்பே ஆந்திரர்கள் இப்படிச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 தெலுங்கர்கள் மட்டும் செயல்படுவதற்காக அமைக்கப்பட்ட இந்த ஆந்திர பிரதேச காங்கிரஸின் தலைமை பீடம், ஹைதராபாத்திலோ, வேறு தெலுங்கு பகுதியிலோ அமைக்கப்படவில்லை.
மாறாக, சென்னையில் இருந்தே ஆந்திர கமிட்டி செயல்படத் துவங்கினர். காரணம், தெலுங்கர்களை பொறுத்தவரை சென்னை என்பது ஆந்திரர்களுக்கு உரியது என்றே அவர்கள் நம்பினர்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதில் பிரதானமாக இரண்டு சிக்கல்கள் இருந்தன. ஒன்று இந்தியாவின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றாக இருக்கும் சென்னை ஆந்திராவோடு இருக்க வேண்டும் என தெலுங்கர்கள் விரும்பினர்.
இன்னொன்று திருத்தணி, திருப்பதி, திருக்காளத்தி என்கிற காளகஸ்தி, பல்லவனேரி, சித்தூர், புத்தூர், மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டம் யாருக்கு என்பது?

1947 ஆக்ஸ்ட் 15ம் தேதி இந்தியா பிரிட்டிஷிடமிருந்து விடுதலை பெற்ற மறுதினமே தமிழரசு கழகத்தின் நிறுவனர் மா.பொ.சி, மலங்கிழார், வேங்கடசாமி நாயுடு, பி.ஜனதார்த்தனம் போன்றோர் வடக்கு எல்லை காக்கும் போராட்டத்தை தொடங்கினர்.
வேங்கடத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று திருப்பதிக்காகவும், தணிகை தமிழருடயதே என்று திருத்தணிக்காகவும், சித்தூர் தமிழருக்கே என்று சித்தூர் தாலுக்காகவின் தமிழக பகுதிகளுக்காகவும் அவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்களை பிரிப்பதற்காக 1948 ஜூன் மாதம் நீதிபதி தார் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
 1948 டிசம்பர் மாதம் தனது அறிக்கையை அளித்த தார் கமிட்டி, எரிந்துகொண்டிருந்த ஒரு பிரச்னையை புதிய திசையில் திருப்பியது, அதுதான் சென்னை யாருக்கு என்கிற பிரச்னை!

தார் கமிட்டி கொடுத்தப் அறிக்கையில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில், 70 பேருக்கு மேல் ஒரே மொழியைப் பேசும் மக்கள் இருந்தால் தான் அதை ஒரு மொழிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் 70 பேருக்கு கீழாக ஒரே மொழியைப் பேசும் மக்கள் உள்ள பகுதியை ‘இரு மொழியாளர் பகுதி’ (அ) பல மொழியாளர் பகுதி என்றே கருதவேண்டும் என்ற கருத்தை அறிவித்தது.
 சென்னையில் தமிழர்கள், தெலுங்கர்கள் இருவருமே வசித்து வருவதாலும், சென்னை இந்திய அளவில் மிக முக்கியமான நகரமாக இருப்பதாலும் சென்னயை தனி மாகாணப்பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றது தார் கமிட்டி அறிக்கை.
தார் கமிட்டி அறிக்கைக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
தமிழ்நாடு மட்டுமல்ல, ஆந்திராவிலும், வட இந்தியாவின் பலபகுதிகளிலும் கூட எதிர்ப்பை சம்பாதித்த தார் கமிஷன் அறிக்கை தோல்வி பெற்ற அறிக்கையாக அத்தோடு நின்றுபோனது.
தார் கமிட்டி தோற்றுப்போன நிலையில், மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி முடிவெடுக்க ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீத்தாராமையா ஆகியோர் தலைமையில் மூவர் கமிட்டி அமைக்கப்பட்டது. நேரு தலைமையிலான இம்மூவர் கமிட்டி, ஆந்திராவை தனிமாநிலமாக பிரிக்க இசைவு தெரிவித்தாலும், சென்னையை தங்கள் மாநிலத்துக்குள் அமைக்க வேண்டும் என ஆந்திரர்கள் கோறுவதை நிறுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தது.
நேரு, பட்டேல், பட்டாபி அடங்கிய மூவர் குழுவின் பரிந்துரையின்படி, சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திராவை தனியாக பிரிப்பதற்காக, சென்னை மாகாண அரசாங்கம் ஒரு குழு ஒன்றை அமைத்தது. அன்றைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி ராசா தலைமையில் அமைக்கப்பட்ட அக்குழு 17 முறை கூடி விவாதித்தது.

சென்னை மாகாண அரசு எல்லாத் துறைகளைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்த அக்குழும், 1949 டிசம்பரில் தனது அறிக்கையை அளித்தது. தமிழ்நாடு - ஆந்திர பிரிவினை குழு அளித்த அறிக்கையில்,
சென்னை மாகாண அரசு சென்னைக்கு ஈடாக ஆந்திராவில் புதிய தலைநகரை ஏற்படுத்திக் கொள்ள ரூபாய் ஒரு கோடி கொடுக்க வேண்டும்
பிரிக்கப்படும் புதிய ஆந்திரத்தின் தலைநகர் ஆந்திர எல்லைக்குள் அமைய வேண்டும்
ஆந்திராவின் உயர்நீதி மன்றம் ஆந்திர எல்லைக் குள் அமைய வேண்டும்.
அன்றைக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் 16 பேரில் 7 நீதிபதிகள் புதிய ஆந்திர உயர்நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டும்.
சென்னை மாகாண அரசில் பணியில் இருந்த 28 IAS அதிகாரிகளில் 11 பேர் புதிதாக அமையும் ஆந்திராவுக்குச் செல்ல வேண்டும்
இந்தியா ஒரு குடியரசு நாடாக அறிவிக்கப்பட இருக்கும் 1950, ஜனவரி 26 அன்றே ஆந்திர மாநிலமும் அமைய வேண்டும்
என்று பரிந்துரைத்தது.

ஆனால், ஆந்திர பிரிவினைக்குழுவின் இந்த அறிக்கையை பெற்றுக்கொண்ட மத்திய அரசு சுமார் 3 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விளைவு, ஆந்திர மாநிலம் அமைவதற்காக சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்த துவங்கினார் பொட்டி ஸ்ரீராமுலு.
சென்னையிலுள்ள மயிலாப்பூரில் சுமார் 57 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த பொட்டி ஸ்ரீ ராமுலு 1952 டிசம்பர் 15ம் தேதி உயிர் நீத்தார். பொட்டி ஸ்ரீ ராமுலுவின் மரணத்தையொட்டி, “ஆந்திரர்கள் சென்னை தங்கள் மாநிலத்துக்கு வேண்டும் என்று கேட்காமல் இருந்தால் ஆந்திர மாநில பிரிவினை பரிசீலிக்கப்படும்” என அறிவித்தது. பொட்டி ஸ்ரீராமுலுவின் மரணத்தால், சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட ஆந்திர பகுதிகள் கலவர பூமியாகின.
 விஜயவாடா இரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர்.
துணை இராணுவப் படை வரவழைக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றுச் சிலர் கொல்லப்பட்டார்கள். மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்த பிறகு, புதிய ஆந்திர மாநிலத்தை உருவாக்குவதற்காக நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழுவை அமைத்தது மத்திய அரசு.
ஆந்திரா பிரிந்துசென்றாலும், தங்களின் நிரந்தர தலைநகரம் சென்னையிலேயே இருக்கவேண்டும் என்று ஆந்திரர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
 ஆனால், தற்காலிக தலைநகராகக்கூட சென்னை இருக்கக்கூடாது என்றும் அது தேவையில்லாத தொந்தரவை ஏற்படுத்தும் என்றும் தமிழ்நாடு சார்பாக வலியுறுத்தப்பட்டது.
இரண்டு மாநிலங்களின் குரலையும் கேட்ட நீதிபதி வாஞ்சு, தனது அறிக்கையை 1952 பிப்ரவரி மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தார்.

ஆனால், ஆந்திர பிரிவினை கமிட்டி தலைவர் வாஞ்சு அறிக்கையில், சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலை நகராக 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
ஆந்திரர்களுக்குச் சென்னையின் மீது எவ்வித உரிமையும் இல்லை.
விருந்தாளிகளைப் போல அல்லது வாடகைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம்.
 அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாது” என்று வலியுறுத்தியிருந்தார்.
வாஞ்சு கமிஷன் அறிக்கை வெளியான பிறகு, அன்றைய சென்னை மேயர் செங்கல்வராயன் தலைமையில் அனைத்துக்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் கலந்துகொண்ட அந்த ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, “சென்னையில் தற்காலிகமாகக்கூட ஆந்திர தலைநகர் அமையக்கூடாது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் ஆந்திர தலைநகர் அமையக்கூடாது என்பதை வலியுறுத்தி 1952 பிப்ரவரி 16ம் தேதி சென்னை கடற்கரையில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு பெரியார் உரையாற்றினார்.
சென்னையைக் காப்பதற்காக அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்திருக்கும் இணையில், இந்தி திணிப்பை எதிர்ப்பது உள்ளிட்ட மேலும் ஐந்து அம்சங்களை நமது நோக்கமாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற பெரியாரின் கருத்தை மா.பொ.சி உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், ஆந்திர பிரிவினை உச்சத்தில் இருந்தபோது சென்னைக்கு வருகைதந்த அன்றைய குடியரசுத்தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கு எதிராக சுமார் 5000 திராவிட கழகத் தொண்டர்கள் கருப்புக்கொடி காட்டி போராடினர்.
சென்னையை ஆந்திராவுக்கு அளிக்கக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களிலேயே திராவிடர் கழகம் நடத்திய இந்த போராட்டமே பெரும்போராட்டமாகும்.
தொடர்ச்சியாக வாஞ்சு அறிக்கை கண்டன நாள், “தமிழக உரிமைப் பாதுகாப்பு நாள்” போன்றவற்றை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் கடைபிடித்தது.
சென்னையில் தலைநகரை மட்டும் அமைத்துக் கொள்கிறோம் என்ற ஆந்திரர்களின் கோரிக்கை குறித்து , “வீட்டைவிட்டு கோபித்துக் கொண்டு செல்பவன், வீட்டைவிட்டுத்தான் போகவேண்டுமே ஒழிய, என் சமையலை மட்டுமே இங்கே நடத்திக் கொள்கிறேன் என சொல்லக்கூடாது” என்று சொன்னார் தந்தை பெரியார்.

தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, 1953 மார்ச் 25ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய நேரு, ஆந்திராவின் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என்றும், சென்னையில் அமையாது என்றும் அறிவித்தார். இதனால், சென்னை தமிழ்நாட்டுக்குரியது என்று முடிவானது.
1953 அக்டோபர் மாதம் ராயலசீமா, கோரமண்டல் கடற்கரை பகுதிகளை உள்ளடக்கிய 13 மாவட்டங்களோடு ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது.
கர்நூல் மாவட்டம் ஆந்திராவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது.
ஆனால், இப்போது இன்னொரு சிக்கல் இருந்தது.
தமிழ்நாடு - ஆந்திர மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை பிரிப்பதுதான் அது.
கூடுதலாக, ஆந்திர மாநிலப்பிரிவினையால் எழுச்சிபெற்ற மற்ற மொழி தேசிய இனங்கள் தங்களுக்கும் மொழி அடிப்படையில் தனிமாநிலம் வேண்டும் என்று குரல் எழுப்பத் துவங்கினர்.
ஆந்திரா பிரிந்தது போக மீதமிருந்த சென்னை மாகாணத்திலிருந்து கேரளம், கர்நாடகம், ஒரிசா ஆகிய தனி மாநிலங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
எல்லா கோரிக்கைகளிலிருந்தும் இருந்த ஒரே சிக்கல், மாநிலங்களைப் பிரித்தால் அவற்றுக்கு எது எல்லை என்பதுதான் அது !

கடுமையான போராட்டங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் 1953 டிசம்பர் மாதம், இந்தியாவை மொழிவாரியாக பிரிப்பதற்காக பஸல் அலி கமிஷன் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளம் என திராவிட இனத்தைச் சேர்ந்த தென்னிந்தியாவை நான்கு மாநிலங்களாக பிரிப்பதற்கான கோரிக்கை வலுவடைந்தபோது இந்தியாவே ஒருவரது குரலைத்தான் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது.
அவர்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் பேரறிஞர் அண்ணா. திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி வந்த அண்ணா, மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற குரலுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்டபோது அண்ணா சொன்னார்,
“மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதே இப்போதைய உடனடிய தேவையாகும். அப்படி மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்படும்போது ஒருமொழிப்பிரிவின் நிலப்பரப்பை மற்றொரு மொழிப்பிரிவு அபகரித்துக் கொள்ளாமல் அதிகாரத்தில் உள்ளவர்கள் பாதுகாக்க வேண்டும். அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும், மொழிவழி மாநிலங்கள் அமைய வேண்டும் என்பதன் சேர்க்கையே திராவிட நாடு ஆகும்”
அண்ணாவின் இந்த தெளிவு, எல்லைப் போராட்டத்தில் திமுகவை ஈடுபட வைத்தது.
 குறிப்பாக, தமிழ்நாட்டின் வடக்கு எல்லையைத் தீர்மானிப்பதற்கான போராட்டத்தில், பிரச்னைக்குரிய சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவினரே ஈடுபட்டனர்.
 இதற்கிடையில், தமிழ்நாடு - ஆந்திரா எல்லையை வரையறுக்க எல்லை கமிஷன் அமைக்கப்படும் என்று நேருவின் அறிவிப்பை ஏற்பதாக அறிவித்த மா.பொ.சி வடக்கு எல்லை போராட்டத்தை 1953 சூலையில் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார்.
தமிழ்நாட்டின் எல்லைப்பிரச்னைகளில் பிரதானமாக இருந்தவை ஆந்திராவை வடக்கு எல்லைப்பகுதியில் சித்தூர் மாவட்டப் பகுதிகள், கேராளவை ஒட்டிய தெற்கு எல்லைப் பகுதியில்கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதி, கர்நாடகத்தை ஒட்டிய மேற்கு எல்லையில் கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கொல்லங்கோடு காட்டுப்பகுதி ஆகியனவாகும்.
இதில், சித்தூர் மாவட்டம் என்பது 1911 வரை வட ஆர்க்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பிறகு அன்றைய சென்னை மாகாணத்தின் நிர்வாக வசதிக்காக திருத்தணி, திருப்பதி, திருக்காளத்தி என்கிற காளகஸ்தி, பல்லவனேரி, சித்தூர், புத்தூர் ஆகிய தமிழர் பெரும்பான்மை பகுதிகளையும், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய ஆந்திரர் பெரும்பான்மை பகுதிகளையும் இணைத்து சித்தூர் உருவாக்கப்பட்டது.

ஆந்திர பிரிவினை கோரிக்கை தொடங்கி நாட்களிலிருந்தே சித்தூர் மாவட்டப்பகுதிகள் யாருக்கு என்கிற சர்ச்சை நீடித்து வந்தநிலையில், மாநில சீரமைப்புக்குழு தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் தலையிடப்போவதில்லை என அறிவித்தது.
 எல்லைப் பிரச்னையைப் பொறுத்தவரை சென்னை மாகாண முதல்வரும் - ஆந்திர முதல்வரும் கலந்துபேசி முடிவெடுப்பதாக அறிவித்தனர். இதன்படி காமராஜரும், டி.பிரகாசமும் மூன்று முறை சந்தித்துப் பேசினர். ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இறுதியாக, 1960ம் ஆண்டு மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் படாஸ்கர் செய்த சமாதானத்தின் அடிப்படையில் திருப்பதி ஆந்திராவுக்கு என்றும், திருத்தணி தமிழ்நாட்டுக்கு என்றும் முடிவுசெய்யப்பட்டது.
ஆந்திர உடனான வடக்கு எல்லை பிரச்னை ஒரு அரசியல் பிரச்னை என்கிற அளவில் பெரியதாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியிலிருக்கும் கன்னியாகுமரி, திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட எல்லை பிரச்னை என்பது லட்சக்கணக்கான மக்களின் உணர்ச்சிப்பூர்வமான பிரச்னையாக உருவெடுத்திருந்தது.
1945களிலிருந்தே இந்தியாவின் தெற்கு எல்லையாக இருக்கும் நாஞ்சில் நாட்டின் மீது தமிழர்களுக்கு உரிமை குறித்து எழுச்சிகரமான மனநிலை உருவானது.
தெற்கு எல்லை வீரன் என போற்றப்படும் மார்ஷல் நேசமணி, 1945லேயே திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கி வெற்றிகரமான அமைப்பாக்கியிருந்தார்.
 1954ல் மாநில சீரமைப்புக்குழு அமைக்கப்பட்ட நேரத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் என தீவிரமான போராட்டங்களை நடத்தினார் நேசமணி.
 1954 ஆகஸ்ட் 11ம் தேதி, எல்லைப் போராட்டத்திற்காக தமிழர் விடுதலை நாள் அனுசரிக்கப்பட்ட போது கல்குளத்தில் 11 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மிகவும் உணர்ச்சிப்பூர்வமான நிலையையொட்டி போராட்டம் நகர்ந்தநிலையில், மாணவர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
காவல்துறை கடுமையான அடக்குமுறைகளை மக்கள் மீது நடத்தியது.
 நேசமணி உள்ளிட்ட நாஞ்சில் நாட்டு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
 அமளியான சூழலுக்கு மத்தியில் 1955 டிசம்பரில் வெளியான மாநில சீரமைப்புக்குழு அறிக்கை கல்குளம், அகஸ்தீஸ்வரம், தோவளை, விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய பகுதிகளை தமிழ்நாட்டோடும், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை கேரளாவோடும் இணைப்பதாக அறிவித்தது.

 முல்லைப் பெரியாறு அணையும், நெய்யாறு அணையும் கேரள எல்லைக்குள் வந்தது.
இறுதியாக, 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மாநில சீரமைப்புக் குழுவின் அறிக்கைபடி, மொழிவாரி மாநிலங்கள் அமலுக்கு வந்தது.
சென்னை மாகாணமாக இருந்த தென்னிந்திய பகுதிகள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரிசா என பிரிக்கப்பட்டன.
மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள், அவற்றின் மொழிக்கு ஏற்ற நிலப்பெயரை பெற்றன. ஆனால், தமிழ்நாட்டுக்கு மட்டும் தமிழ்நாடு என பெயர் வைக்க அனுமதிக்கவில்லை மாநில சீரமைப்புக் குழு. தமிழ்நாடு மெட்ராஸ் பிரசிடென்சி என்றே அழைக்கப்படும் என்றது.
தியாகி சங்கரலிங்கனார்
இதனை எதிர்த்தும், தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாக பெயரிட வேண்டும் என்று வலியுறுத்தியும் சட்டமன்றத்தில் விவாதங்கள் நடந்தது.

 தமிழ்நாடு என பெயர் வைக்க வலியுறுத்தி 1957ம் ஆண்டு உண்ணாவிரதப்போராட்டத்தை துவங்கிய தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள்  உண்ணாவிரதத்துக்குப் பிறகும், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் 1957 அக்டோபர் 13ம் தேதி மரணமடைந்தார். 

தியாகி சங்கரலிங்கனார் பழம்பெரும் காங்கிரஸ் தியாகி; நாட்டின் சுதந்தரப் போராட்டத்தில் ஈடுபட்டவர். நம் தாய்த் தமிழகத்துக்கு 'மதராஸ்' என்னும் பெயர் இருத்தல் கூடாது; ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைக்க வேண்டும் என உளமார விரும்பினார். 
தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை முன்னிட்டு 27.07.1956 ல் விருதுநகர் தேசபந்து திடலில் “உயிர் பெரிதன்று – மானமே பெரிது” என்ற இலட்சியப் பிடிப்புடன் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணா நோன்பை மேற்கொண்டார்.

உண்ணா நோன்பிருந்த சங்கரலிங்கனாரை அறிஞர் அண்ணா சந்தித்தார். அண்ணாவைக் கண்டவுடன் சங்கரலிங்கனாரின் உள்ளத்தில் புதுத்தெம்பு பிறந்தது. சங்கரலிங்கனார் அறிஞர் அண்ணா அவர்களிடம் மனம் திறந்து சில கருத்துக்களை வெளியிட்டார்.

 “அண்ணா! நீங்களாவது என்னுடைய கோரிக்கைகளையும் தலையாய கோரிக்கையான ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை’ நிறைவேற்றுங்கள்”, என்று கேட்டுக் கொண்டார்.

சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்  
“நான் ஒரு வேளை இறக்க நேரிட்டால், என் உடலைத் தயவு செய்து காங்கிரஸ்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
 எனக்கு உறுதுணையாக இருந்த கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படையுங்கள்” 
என பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
                அவர் கூறியது போலவே இரு தினங்களில் இறந்தார். அவர் வேண்டுகோளின்படியே கம்யூனிஸ்ட் தலைவர்கள் கே.பி.ஜானகியம்மாள், கே.டி.கே தங்கமணி ஆகிய இருவரும் கையொப்பமிட்டு அன்னாரின் உடலைப் பெற்றனர்.
                இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள், கம்யூனிஸ்ட்டு கட்சித் தொண்டர்கள், விருதுநகர் நகரசபைத் தலைவர், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்துக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு சங்கரலிங்கனாரின் ‘புகழ் உடலுக்கு’ இறுதி மரியாதை செலுத்தினர்.

                தியாகி சங்கரலிங்கனாரின் மறைவுச் செய்தி மாணவர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியது. சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உண்ணா நோன்பு இருந்தனர். 76 நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் மௌனம் அனுசரித்து அஞ்சலி செலுத்தினர்.
                சென்னை மாநகர அனைத்துக் கல்லூரி மாணவர்கள் 15.10.1956ல் வேலை நிறுத்தம் செய்து தியாகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.


அறிஞர் அண்ணா பாராளுமன்ற உறுப்பினரானபோது, சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்ற மசோதாவை 16.03.1962 நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். மத்திய அரசால் இம்மசோதா தள்ளுபடி செய்யப்பட்டது.
அறிஞர் அண்ணா தமிழகத்தின் முதல்வரான பின்னர் 14.04.1967 தமிழ்ப் புத்தாண்டன்று, சித்திரை முதல் நாளில் சென்னைக் கோட்டை முகப்பிலே “தமிழக அரசு தலைமைச் செயலகம்” என்னும் ஒளிவீசும் தமிழ்ப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார்.
                தமிழக சட்டமன்றத்தில் 18.07.1968 அன்று சென்னை மாநிலம் தமிழ்நாடு ஆகும் என்ற அரசியல் தீர்மானத்தை அறிஞர் அண்ணா முன் மொழிந்து பேசினார்.

                'இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலத்தின் பெயரைத் தமிழ்நாடு என்ற மாற்றியமைக்க வேண்டும் என்று இந்தியப் பேரரசை உறுதியாக கேட்டுக் கொள்வதுடன் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த அவை பரிந்துரை செய்கிறது’ –என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான மசோதா 23.11.1968 அன்று நிறைவேறியது.
                சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் விழா 01.12.1968 அன்று ‘பாலர் (கலைவாணர்) அரங்கில்’-சிறப்பாக நடைபெற்றது. அதே நாளில் தமிழ்நாடு பெயர் மாற்ற விழா தமிழ்நாடெங்கும் கொண்டாடப்பட்டது.
                சங்கரலிங்கனார் உண்ணா நோன்பின் போது அறிஞர் அண்ணாவிடம் நேரில் கோரியபடி, அறிஞர் அண்ணா தமிழக முதலமைச்சரானவுடன் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் தமிழ்நாட்டுக்குச் சூட்டப்பட்டது.


மனிதனை மனிதன் என அழைக்க வேண்டும் என்பதை போல தமிழ்நாட்டை தமிழ்நாடு என அழைக்க வேண்டும் என்கிற மிக அடிப்படையான கோரிக்கை பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு பேரறிஞர் அண்ணாவாலேயே நிறைவேற்றப்பட்டது. 

1967ம் ஆண்டு மார்ச் 8ம் நாள் ஆட்சிக்கு வந்த அண்ணா, ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் சென்னை தலைமைச் செயலகத்தின் பெயரை தமிழக அரசு என மாற்றினார். 

1967 ஜூலை 18ம் நாள் மெட்ராஸ் மாகாணம் என்பதை திருத்தி தமிழ்நாடு என அறிவிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றினார்.
தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, ‘தமிழ்நாடு’ என அண்ணா முழக்கமிட, ‘வாழ்க’ என 234 உறுப்பினர்களும் விண்ணதிர முழக்கமிட்டனர்.

 தமிழ்நாட்டில், தமிழ்நாட்டை ஆளும் சட்டமன்றத்தில், தமிழர்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் வரலாற்றிலேயே முதன்முறையாக அண்ணா ஆட்சியில் தான் முழக்கமிட முடிந்தது “தமிழ்நாடு வாழ்க” !
 அன்றுதாநே தமிழ்நாடு

------------------------------------------------------------------------------------------------------------------------------------

ந்நாளில் ,


 முன்னால் 

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது (1956)

இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ராஜ்தாதனி ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)

நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர மாநிலமாக்கப்பட்டது(1956)

மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)

மதராஸ் ராஜ்தாதனி


1956 - இந்தியாவின் மாநில மறுசீர மைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்தது. வரலாறு முழுவதும் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த, ஏராளமான அரசர்களாலும், சிற்றரசர்களாலும் ஆளப் படுவதாகவே இந்தியத் துணைக்கண்டம் இருந்து வந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் இவை பெரும்பாலும்  மாற்றியமைக்கப்படவில்லை. ஒப்பந்தங்களின்மூலம் இணைந்திருந்த மன்னராட்சிப் பகுதிகள், பிற நாடுகளுடனான உறவைத் தவிர மற்றவற்றில் தன்னாட்சியுடன் இருந்தன.
நேரடியாக ஆங்கிலேயரின் ஆளுகையின்கீழிருந்த பகுதிகள் மாநிலங்களாக (பிரெசிடென்சி) பிரிக்கப்பட்டிருந்தன. ஒரிசாவில் 1895இல் ஏற்பட்டதே முதல் மொழி அடிப்படையிலான மாநிலத்துக்கான கோரிக்கையாகும்.
 1912இல் வங்கத்திலிருந்து பிரிக்கப்பட்டு, பீகார்-ஒரிசா மாநிலம் உருவாக்கப்பட்டதுடன், 1936இல் தனி ஒரிசா மாநிலமே உருவாக்கப்பட்டது. 1947இல் விடுதலைக்குப்பின், இந்திய ஒன்றியத்துடன் இணையத் தொடங்கிய மன்னராட்சிப் பகுதிகள் பெரும்பாலும் மாநிலங்களுடன் இணைக்கப் பட்டாலும், சில பகுதிகள் தனியாக, ராஜ்பிரமுக் என்ற பதவியுடன் பழைய அரசர்களாலும், மத்திய அரசு நியமித்த தலைமை ஆணையர்களாலும் நிர்வகிக்கப்பட்டன.
அந்தமான்-நிக்கோபார் தீவுகள் மட்டும் துணைநிலை ஆளுனரால் நிர்வகிக்கப்பட்டது.
1950இல் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சட்டம், நாடுகளின்(மாநிலங்களின்) ஒன்றியமே இந்திய அரசு என்று வரையறுத்தது.
மெட்ராஸ் மாநிலத்திலிருந்த தெலுங்கு  பேசும் பகுதிகளைப் பிரித்து, ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதமிருந்து, பொட்டி ஸ்ரீராமுலு 1952 டிசம்பரில் உயிரிழக்க, அம்மாநிலத்தை 3 நாட்களில் அறிவித்தார்  நேரு.
 மொழிவாரி மாநிலங்களுக்கான ஆணையம் 1948இலேயே அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1953இல் மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மாநில மறு சீரமைப்புச் சட்டம் 1956 அக்டோபர் 31இல் நிறைவேற்றப் பட்டு, நவம்பர் 1இல் நடைமுறைக்கு வந்தது.
மெட்ராஸ் மாநிலத்திலிருந்து மலபார் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகள் திருவாங்கூர்-கொச்சியுடன் இணைக்கப்பட்டு, கேரளா என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது.
திருவாங்கூர்-கொச்சியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் பிரிக்கப்பட்டு மெட்ராசுடன் இணைக்கப்பட்டது.
குடகு உள்ளிட்ட கன்னடம் பேசும் பகுதிகள் மெட்ராசிலிருந்து பிரித்து மைசூருடன் இணைக்கப்பட்டு மைசூர் மாநிலமாகியது. ஹைதராபாத்  இணைக்கப்பட்டு, ஆந்திரா, ஆந்திரப் பிரதேசமாகியது.
மத்திய பாரதம் என்பதுடன் சில பகுதிகள் இணைக்கப்பட்டு மத்தியப்பிரதேசம் உருவாக்கப்பட்டதுடன், அசாம், பம்பாய்   உள்ளிட்ட மாநிலங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

பலமுறை முயற்சித்து, தோல்வியுற்ற   தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், அண்ணாத்துரை முதலமைச்சரானபின் தமிழ்நாட்டின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 1969 பொங்கலன்று நடைமுறைக்குவந்தது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
 தோழர் குருதாஸ் தாஸ்குப்தா
 நாட்டின் முதுபெரும் தொழிற் சங்கத் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா அக்டோபர் 31 வியாழனன்று கொல்கத்தாவில் காலமானார்.
கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த தோழர் குருதாஸ் தாஸ் குப்தா கொல்கத்தாவில் வியாழக்கிழமையன்று காலைமரணமடைந்தார்.
அவருக்கு வயது 84 ஆகும்.
தோழர் குருதாஸ் தாஸ்குப்தா 1936 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதியன்று கிழக்கு வங்காளத்தில் பிறந்தார். கல்கத்தாவின் புகழ்மிக்க கல்லூரியான அசுதோஷ்கல்லூரியில் எம்.காம். பட்டம் பெற்றார்.
தேசிய அளவில் மாணவர் தலைவராகவும் மேற்குவங் காள ஏஐடியுசி பொதுச் செயலாள ராகவும் பின்னர் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், தற்போது கட்சியின் திட்ட ஆணையத் தலைவராகவும் இருந்தார்.

இவரது துணைவியார், இவரைப் போன்றே தொழிற்சங்க ஊழியரான தோழர் ஜெயா தாஸ்குப்தா ஆவார். இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

 இந்தியாவின் முதல் மத்தியத்தொழிற்சங்கமாக,  தொழி லாளர் வர்க்க இயக்கத்தின் ஒற்றுமையை யும், போராட்டங்களையும் மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தில் தொழிலாளர்கள் தங்களை இணைத்துக் கொள்வதையும் அறிவித்து நூறாண்டுகளுக்கு முன் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி) உருவானது.
தோழர் குருதாஸ் தாஸ்குப்தா, ஏஐடியுசி உருவான அதே நாளில் தன் கடைசிமூச்சை விட்டிருக்கிறார்.
 மாணவர் பருவத்திலே கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார்.
தேசிய அளவில் சிறந்த மாணவர் தலைவர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தலைவராக வெகு காலம் இருந்தார். பின்னர், அவர் தொழிற்சங்க இயக்கத்துடன் இணைந்தார்.
 தொழிலாளர் வர்க்க இயக்கத்துடன் அவருடைய தொடர்பு ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலானதாகும்.தோழர் குருதாஸ் தாஸ்குப்தா,நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கையின் ஆட்சிக்குஎதிராக தொழிலாளர் வர்க்கப்போராட்டங்களை முன்னெடுத்துச்செல்வதற்காக, தொழிற்சங்கங் களின் ஒன்றுபட்ட மேடையை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங் களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளிலும் சுமார் 25 ஆண்டு காலம் உறுப்பினராக இருந்தார்.
அந்த சமயத்தில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விளிம்புநிலையில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் நாடாளுமன்றத்தில் எழுப்புவதில் முன்னணியில் இருந்தார்.
 இவை அவரை ஒரு முனைப்பான நாடாளு மன்றவாதியாக உருவாக்கியது.
 
தமிழகத்தில் நெய்வேலி லிக்னைட் காண்ட்ராக்ட் தொழிலாளர் போராட்டத்திற்கு முதுகெலும்பாய் நின்று அவர்களின்வேலைநிறுத்தங்கள் ஒவ்வொரு முறையும் வெற்றிபெற துணை நின்றவர்.
வரி ஏய்ப்புகளைக் கண்டறிய உதவியதற்காக அரசு தந்த பெரியவெகுமதித் தொகையை, காலிஸ்தான் மோதல்களில் இறந்தவர் களின் விதவைகள், குழந்தைகள் நல்வாழ்வுக்காகத் தந்தவர்.
விவசாயத் தொழிலாளர் நிலையை ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழுவின் தலைவராகப் பணியாற்றி யவர். பழைய செங்கல்பட்டு மாவட்டம் முழுக்க இதற்காகப் பய ணித்தவர்.
அவர் சமர்ப்பித்த அறிக்கை விவசாயத் தொழிலாளர் பற்றிய அரிய ஆவணமாகும்.அரசுப் பணியாளர் வேலைநிறுத்தம் செய்வதற்கு உரிமையில்லை என நீதிமன்றம் சொன்னபோது, அதனை வேலைநிறுத்தத் தால் முறியடிப்போம் என்று தொழிலாளர்களைத் திரட்டியவர்.
ஏஐடியுசியின் நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொண்டாட அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பேதிட்டமிட்டவர்.
அவர் நேசித்த ஏஐடியுசியின் நூற்றாண்டு பிறக்கும் நாளில் அவர் இயற்கையுடன் ஒன்றிவிட்டார். இந்தியத் தொழிற்சங்க இயக்கத்துக்கு மட்டுமல்ல, ஜன நாயகத்தை, மதச்சார்பின்மையை, சமூகநீதியை, சமதர்மத்தை நேசிக்கும் சக்திகளுக்கு அவரது மறைவு பேரிழப்பாகும்.
தோழர் குருதாஸ் தாஸ்குப்தாவுக்கு செவ்வணக்கம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

வேலை வாய்ப்புகள்

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-----------------------------------------------------------------------------------------------------
 ISRO-ல் உள்ள காலிப்பணியிடங்கள்
Indian Space Research Organisation (ISRO)-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 131
2. பணியின் பெயர்: Scientist/ Engineer (Mechanical)
காலியிடங்கள்: 135
3. பணியின் பெயர்: Scientist/ Engineer (Computer Science)
காலியிடங்கள்: 58
4. பணியின் பெயர்: Scientist/ Engineer (Electronics)
காலியிடங்கள்: 3
மேற்கண்ட பணிகளுக்கான சம்பளவிகிதம், வயதுவரம்பு, கல்வித்தகுதி விபரம் வருமாறு: 
சம்பளவிகிதம்: ரூ.56,100
வயதுவரம்பு: 4.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். EX-SM மற்றும் PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் BE/ B.Tech. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 12.1.2020.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம்.
எழுத்துத்தேர்வுக்கு தகுதியானவர்கள் குறித்த விபரம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.isro.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 4.11.2019.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி
இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
---------------------------------------------------------------------------------------------------------------------
ராணுவத்தின் கீழ் செயல்படும் “Border Roads Organisation 
-ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------


“Air India Engineering Services Limited”-ல் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Assistant Supervisor (General Admin/ Finance/ MMD)
காலியிடங்கள்: 170
சம்பள விகிதம்: ரூ.19,570
வயது வரம்பு: 1.8.2019 தேதியின்படி 33 வயதிற்குள்ளிருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும் SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும், அல்லது ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பு அல்லது Aircraft Maintenance/ Computer Science Engineering பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்து AVIATION துறையில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் தொழில் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை ஆன்லைன்மூலம் செலுத்த வேண்டும். (SC/ ST/ EX-SM பிரிவினர்களுக்கு ரூ.500).
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணயைதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 5.11.2019. மேலும் காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------
 
 லண்டன், பாரீஸ், நியூயார்க் நகரங்களை விட சிறந்த வடிகால் வசதிகளைத் தங்கள் ஆட்சி செய்துள்ளது
 - வேலுமணி.

"ஆமா... நான் லன்டன்ல இருந்து தான் பேசறேன்... மழை பெஞ்சி வூட்டுக்குள்ள தண்ணி வந்ததால சென்னைக்கு கெளம்பறேன்"

--------------------------------------------------------------------------

 திரிபுரா பாஜக  அட்டூழியம்

பாதல் சவுத்ரி, இடது முன்னணி அரசில் பொதுப்பணித் துறைஅமைச்சராக திறம்பட செயலாற்றியவர். கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னராக பணியாற்றி வருகிறார்.
அவர், அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் பொதுப்பணித்துறை மேற்கொண்ட பணிகளில் ஊழல் நடந்ததாக பொய்க் குற்றச்சாட்டுகளை புனைந்து, அவரை அராஜகமான முறையில் கைது செய்துள்ளது பாஜக அரசு. அதுவும் எப்படிப்பட்ட நிலையில் என்பதுதான் முக்கிய மானது.
 பாதல் சவுத்ரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில்  அகர்தலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அங்கேயே கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் கழித்து, மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி காவல்நிலையத்தில் ‘லாக் - அப்’பில் அடைத்து வைத்துள்ளனர்.
சில நிமி டங்களிலேயே பாதல் சவுத்ரிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை பரிசோதித்த அரசு மருத்து வர், உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லு மாறு அறிவுறுத்தியதன் பேரில் அவர் மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதல் சவுத்ரி மீதான பொய் வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீது திரிபுரா உயர்நீதிமன்றம், எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் ரிசர்வ் செய்து வைத்திருக்கும் நிலையில்தான் மாநில பாஜக அரசின் காவல் துறை இந்த அராஜகத்தை மேற்கொண்டிருக்கிறது.
பாதல் சவுத்ரி, நீரவ் மோடி அல்ல. பாதல் சவுத்ரி விஜய் மல்லையா அல்ல.
பாதல் சவுத்ரி, பாஜகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருக்கக் கூடிய மதவெறி பிடித்த, பாலியல் வக்கிரங்கள் கொண்ட கொடிய குற்றவாளிகளை போன்றவரும் அல்ல.
 தோழர் பாதல் சவுத்ரி 8 முறை திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினராக, அம்மாநிலத்தின் பழங்குடி மக்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் நேசத்தையும் பெற்ற மாபெரும் தலைவர்.
திரிபுரா வில் இடது முன்னணி அரசு நிகழ்த்திக் காட்டிய மகத்தான சாதனைகளில் இவருக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு.
திரிபுரா பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் அட்டூழியங்களை அம்மாநில மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், திரிபுரா மக்களுக்கு இடது முன்னணி ஜனநாய கத்தையும், நியாயத்தையும், நீதியையும் கற்றுக் கொடுத்திருக்கிறது.

 ரிபுராவில் அராஜகமான முறையில் ஆட்சியை கைப்பற்றியது முதல் பாரதிய ஜனதா கட்சி, அரசு அதிகாரத்தை பயன்படுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீதும், அதன் தலைமையிலான இடது முன்னம்ணி மீதும் கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
கட்சியின் செயல்பாடுகளை, இடது முன்னணியின் இயக்கங்களை தடுத்து நிறுத்திவிடலாம் என்ற பகல் கனவுடன் தொடர் தாக்குதல் நடத்தி வரும் பாஜக மாநில அரசு, சில நாட்களுக்கு முன்பு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாதல் சவுத்ரியை குறிவைத்து தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?