இடித்தது சட்டவிரோதம்.

அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப் பட்டது சட்டவிரோதம் என்று கூறி கண்டித்துள் ளது. அப்படியானால் அந்த சட்ட விரோத காரி யத்தில் ஈடுபட்டவர்களுக்கு என்ன தண்டனை என்று கேள்வி எழுகிறது.
அவர்கள் தண்டிக் கப்படுவது ஒன்றே நீதி நிலைநாட்ட அடையாளமாக இருக்கும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஒரு தற்செயல் நிகழ்வு, ஒரு விபத்து என்றெல்லாம் எல்.கே.அத் வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறிவந்த நிலையில் இது திட்டமிட்டு செய்யப்பட்ட நடவ டிக்கை என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

1992 டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக் கப்பட்ட 10ஆவது நாளில் ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி எம்.எஸ்.லிபரான் தலைமையில் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக்குழுவின் பதவிக்காலம் 48 முறை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற பின்பு விசாரணையை தொடர்ந்த நீதிபதி லிபரான், 17 ஆண்டுகளுக்கு பிறகு தனது அறிக் கையை வழங்கினார்.

பாபர் மசூதி இடிப்பில் பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி, பஜ்ரங்தளம் ஆகிய அமைப்புகளின் தலைவர்களுக்கு முக்கியப் பங்குண்டு என அந்த அறிக்கை குற்றம் சாட்டியது.
உச்சநீதி மன்றத்தில் அளித்த உறுதி மொழிக்கு மாறாக மசூதியை இடிக்க அன்றைக்கு இருந்த கல்யாண் சிங் தலைமையிலான பாஜக அரசு அனுமதித்தது என்று அந்தக்குழு குற்றம்சாட்டியது.

வாஜ்பாய், அத்வானி, பால்தாக்கரே, அசோக் சிங்கால், கோவிந்தாச்சார்யா, கல்யாண் சிங், முரளி மனோகர் ஜோஷி, பிரமோத் மகாஜன், பிரவீன் தொகாடியா, சுவாமி சின்மயானந்தா, உமா பாரதி, விஷ்ணு கரி டால்மியா ஆகிய ஆர்எஸ்எஸ் பரிவார தலைவர்கள் மட்டுமின்றி, 11 அதிகாரிகளும் லிபரான் கமிஷனால் மசூதி இடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.

இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த 68 பேரில் சிலர் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட எவர் மீதும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த வழக்கில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட முக்கியமாக குற்றம்சாட்டவர்களை ரெபரேலி சிறப்பு நீதிமன்றம் விடுவித்த நிலையில் அலகா பாத் உயர்நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.
ஆனால் இவர்கள் விடுவிக்கப் பட்டதை ஏற்காத உச்சநீதிமன்றம் இரண்டு வரு டத்திற்குள் வழக்கை நடத்தி முடிக்க வேண்டு மென 2017 ஏப்ரல் 19ல் கூறியது. ஆனால் இதுவரை விசாரணை முடியவில்லை.

இந்த வழக்கு விரைவாக நடத்தி முடிக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படும் போதுதான் நீதிமுறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்.



அரசுப் பேருந்தில்   போலிக்குறள்.
நான் நேற்று (11/11/2019) காலை பள்ளி கொண்டாவில் இருந்து ஓசூருக்கு அரசு பஸ்ஸில் ( TN 23 N 2463 ) பயணித்தேன்.
பஸ்ஸில் என்ன திருக்குறள் உள்ளது என்பதை உற்றுக் கவனித்தேன். திருக்குறள் இடம் பெறும் இடத்தில் – அதாவது ஓட்டுநர் இருக்கையின் எதிரே மேல் பகுதியில் குறள் போல் தோற்றம் அளித்த வரிகள் அதிர்ச்சி அளித்தது.
"எண்ணத்தில் சிவனை வைத்தால்
எடுத்த காரியம் வெற்றியாகும். "
இந்தத் திருக்குறளை வள்ளுவர் எழுதவில்லையே! ஒரு வேளை ஹெச் ராஜாவோ அமைச்சர் மாஃபா பாண்டியராஜனோ எழுதியதாக இருக்குமோ?
இதனை அவர்கள் வீட்டிலோ , சொந்த அலுவலகத்திலோ. சொந்த வாகனத்திலோ .கோவிலிலோ வைக்க எந்தத் தடையும் இல்லை .அரசு பஸ்ஸில் திருக்குறள் பொறிக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் போலியாய் ஒன்றைப் பதிவது சரியா ?
பக்கத்து இருக்கையில் இருந்த இளைஞர் சொன்னார் நிறைய பஸ்களில் இப்படிப்பட்ட குறள் போன்ற போலிக் குறள் மூலம் பாஜக வள்ளுரை கொச்சைப் படுத்துகிறது என்றார்.
இது என்ன அரசு பஸ்ஸா? ஹெச் ராஜா,ஏ டி அப்பன் சொந்த பஸ்ஸா?
 -சு.பொ.அகத்தியலிங்கம்.
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாளில் ,
முன்னால் .
ஆஸ்திரியா குடியரசானது(1918)
சூடான், துனீசியா  நாடுகள் ஐ.நா.,வில் இணைந்தன(1956)
 ஜெனீவா, ஐ.நா.,வில் இணைந்தது(1968)
இணைய வலை பற்றிய  திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ் லீ அறிவித்தார்(1990)


1912 - அண்டார்டிக் பகுதியில் முதன்முதலாகத் தொல்லுயிர் படிவங்களைக் கண்டுபிடித்த ராபர்ட் ஃபால்கன் ஸ்காட்,  அவரது குழுவினர் ஆகியோரின் உயிரற்ற உடல்கள் உறைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
அண்டார்டிக்கின் பகுதிகளை அறியவும், அறிவியல் ஆய்வுகளை  மேற்கொள்ளவும் 1910இல் மேற்கொள்ளப்பட்ட டெர்ரா நோவா பயணம் என்னும் இங்கிலாந்தின் அண்டார்டிக் பயணத்தின் தலைவராக ஸ்காட் செயல்பட்டார்.

 இவர் ஏற்கெனவே 1901இல் மேற்கொள்ளப்பட்ட டிஸ்கவரி பயணம் என்னும் இங்கிலாந்து தேசிய அண்டார்டிக் பயணத்திலும் பணியாற்றியிருந்தார்.
அப்பயணத்தின் வெற்றிக்குப்பின் கப்பல் தளபதி யாக உயர்த்தப்பட்டிருந்தார்.
 இப்பயணத்தில் பயன்படுத்தப்பட்ட டெர்ரா நோவா கப்பலின் பெயராலேயே இப்பயணம் குறிப்பிடப்படுகிறது.

 டிஸ்கவரி பயணம் ராயல் ஜியாகரஃபிக்கல் சொசைட்டியால்(அரச புவியியல் கழகம்) அதன் மேற்பார்வை மற்றும் நிதியுடன் மேற்கொள்ளப்பட்டது.

 ஆனால், மீண்டும் அண்டார்டிக்குக்குப் பயணிக்க முழுமையான நிதியுதவி யைச் செய்ய புவியியல் கழகம் தயாராக இல்லாத நிலையில், நிதி திரட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இதற்கு, கடற்படையும், புவியியல் கழகமும் உதவின.

ஸ்காட்டைப் பொறுத்தவரை இந்தப் பயணத்தில் அறிவியல் ஆய்வுகளைவிடவும், தென் துருவத்தை அடைவதும், முதலில் தென் துருவத்தை அடைந்த பெருமையை இங்கிலாந்துக்குத் தருவதும் முக்கிய நோக்கமாக இருந்தன.
1912 ஜனவரி 17இல் ஸ்காட் மற்றும் அவர் அணியின் நான்கு உறுப்பினர்களும் தென் துருவத்தை அடைந்தபோது, அவர்களுக்கு 34 நாட்கள் முன்பாகவே நார்வேயின் ருவால்ட் அமுண்ட்சென்-னும் அவர் அணியினரும் தென் துருவத்தை அடைந்து, ஸ்காட்டை இரண்டாவதாக்கிவிட்டிருந்தனர். தென் துருவத்திலிருந்து திரும்பும் பயணத்தில், எஞ்சிய பயணக்குழுவினர் தங்கியிருந்த முகாமிலிருந்து இவர்களுக்கு உதவிக்கு வரவேண்டிய நாய்க்குழுக்களைச் சந்திக்க முடியாமற்போனது.
இதனால், முகாமிலிருந்து 240 கி.மீ. தொலைவில் ஐவரும் உயிரிழந்தனர்.
உரிய நேரத்தில் இக்குழுவினர் திரும்பி வராததால் தேடும் பணிகள் தொடங்கப்பட்டு, நவம்பர் 12இல் அவர்கள் தங்கியிருந்த கூடாரமும், அதற்குள் உறைந்த நிலையில் ஐவரின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

அவர்களது உடல்களுடன், 25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய தாவரங்களின் படிவங்கள் உள்ளிட்ட, அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களும் கிடைத்தன. இவையே அண்டார்டிக் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் தொல்லுயிர்ப் படிவங்கள் என்பதுடன், அண்டார்டிக் பகுதியும் வனங்கள் நிறைந்ததாக இருந்தது என்பதை உணர்த்தும் ஆதாரங்களாகவும் அமைந்தன.

- அறிவுக்கடல்

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருட தொழில் நுட்பம் தேவை .
டெல்லியில் உள்ள நகைக்கடை ஒன்றில் கடந்த சனிக்கிழமை வாடிக்கையாளர்கள் போல நுழைந்த கொள்ளையர்கள் சிலர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் மாட்டிக்கொள்வோம் எனக் கருதிய திருடர்கள், சிசிடிவி யூனிட் என நினைத்து டிவியுடன் பொருத்தியிருந்த செட்-டாப் பாக்ஸை கழற்றி எடுத்துச் சென்றனர்.

பின்னர், இந்த திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார் நகைக்கடை உரிமையாளர்.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலிஸார் நான்கு திருடர்களில் ஒருவரை அடையாளம் கண்டுள்ளனர்.

சிசிடிவி டிவிஆர் பாக்ஸுக்கு பதிலாக டிவி செட்-டாப் பாக்ஸை எடுத்துச் சென்றதால் கொள்ளையர்கள் மாட்டிக்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்பு  ஏ.டி.எம் இயந்திரத்திற்கு பதிலாக பாஸ்புக் அச்சடிக்கும் இயந்திரத்தை திருடர்கள் தூக்கிச்சென்றது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 ஜே.என்.யூ-வை கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்ற திகழும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜே.என்.யூ என்று பரவலாக அறியப்படுகிறது.

இந்தியாவின் சிறந்த தலைவர்களை உருவாக்கிய பெரிய பங்கினை ஜே.என்.யூ கொண்டுள்ளது.
இது மற்ற கல்வி நிலையங்களை விட மாறுமட்டவை.
கடந்த காலங்களில் ஜே.என்.யூ மாணவர்கள் நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு கவனம் ஈர்க்கும் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

கருத்து சுதந்திரம் பன்முகத்தன்மையை இன்றளவில் தாங்கி பிடித்துள்ளது ஜே.என்.யூ. நாட்டின் முக்கிய பிரச்சனைக்கு ஜே.என்.யூ-வில் உள்ள மாணவர்கள் தான் முதலில் குரல் கொடுப்பார்கள்.

 எங்கு உரிமை மீறல் நிகழ்ந்தாலும் ஜே.என்.யூ சார்பில் கண்டனக்குரல் எழும்.
இங்குள்ள மாணவர்கள் கருத்துச் சுதந்திரத்தையும், உரிமைக்கான போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதால் பிற கல்வி நிலைய மாணவர்களுக்கு முன்னோடிகளாக உள்ளனர்.
அப்படி மீண்டும் ஒரு பெரிய போராட்டத்தை ஜே.என்.யூ மாணவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

சமீபகாலமாக பா.ஜ.க ஆட்சியில் மாணவர்களின் நலன்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. துணை வேந்தராக ஆர்.எஸ்.எஸ்.சார்ந்தவர் பதவியமர்த்தப்பட்டார்.
.சிண்டிகேட் உறுப்பினர்களும் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் உள்ளவர்களாக அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஜவஹர்லால் நேரு பெயரை மாற்றவும் முயற்சி நடக்கிறது.
மாணவர் தேர்தலில் பாஜகமாணவர் அமைப்பை Abvp வெற்றி பெறவைக்க முறைகேடு நடந்தது.அதை மீறி இடதுசாரி மாணவர் அமைப்பு SFI வென்றுள்ளது.  
 விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டது, உணவு ,தண்ணீர் தனியாரிடம் விடப்பட்டு விலை உயர்த்தப் பட்டது,ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவர்களின் உரிமையில் தலையிடுவதாக கடந்த வாரம் முதல் இடதுசாரி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மாணவர்களின் இந்த போராட்டத்தில் பல்கலைக்கழகம் செவி சாய்க்காததால் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி இன்றும் போராட்டம் தொடர்ந்தது.

அதே நேரம் இன்று ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்க இருந்தார்.
இப்பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக்கத்திற்குள் நுழையவிடாமல், போலிஸார் இரும்பு தடுப்புகள் கொண்டு தடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் போலிஸாரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். அப்போது போலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 மேலும் சில மாணவர்களை போலிஸார் வழுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் ஜே.என்.யூ வளாகத்தில் பதற்றமான சூழல் உருவாகியது.
இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மோடி அரசாங்கம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கையில் எடுத்துள்ளது.

குறிப்பாக அண்மையில் மாணவர்களின் விடுதி கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது.
இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களும் மிகுந்த சிரமங்களை சந்தித்துவருகின்றனர். அதேபோல் விடுதி நிர்வாக அமைப்பில் தண்ணீர், உணவு போன்ற சில பிரிவுகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராடும் மாணவ சங்கங்களை ஒடுக்கும் வகையில், கல்லூரிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சுமார் 20 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஆடை விசயத்தில் ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல மாணவர்களின் உரிமையில் தலையீடுவது ஜனநாயக விதிமுறல். இதனை நிர்வாகம் நிறுத்திக்கொள்ளவேண்டும்”என அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் பெருமளவில் திறண்டு போராட்டம் நடத்தி வருவதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
 --------------------------------------------------------------------------------------------------------------------------------
 வேலை வாய்ப்புகள் 
 SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்


பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
 ----------------------------------------------------------------------------------------------------------------------------
 சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி, டேட்டா அனாலிஸ்ட் உள்ளிட்ட 13 வகையான பிரிவுகளில் மொத்தம் 105 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது
: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:
தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி
: 21.11.2019

விபரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/pdf
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
 திருநெல்லை நாராயணன் சேஷன்
என்ற டி .என்.சேஷன் இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் வரை, இந்திய தேர்தல் ஆணையம் குறித்து ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் குறைவான அறிவே இருந்தது.  இதை மிகவும் தெளிவாக கூற இயலும். 
1990ம் ஆண்டு சேஷன் இந்த பணியில் சேரும் போதும்  அங்கு பணியாற்றியவர் கூறியதாவது.
 இந்திய தேர்தல் ஆணையம் குறித்த பயத்தை அரசியல் கட்சிகளுக்கு, வேட்பாளர்களுக்கு அரசாங்கத்திற்கு அவர் உருவாக்கினார். அரசு அவருடைய அதிகாரத்தை குறைக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தில் கூடுதலாக ஆணையர்களை நியமனம் செய்தது.
தேர்தல் ஆணையத்தில் இவர் முக்கிய பங்கு வகித்த போது தேர்தல் ஆணையம் புதிய உயரத்தை எட்டியது. தேர்தல் ஆணையம் குறித்து யாருக்கும் எந்த விதமான சிரத்தையும் இல்லாத காலங்களையும் நான் பார்த்திருக்கின்றேன். எங்களால் ஒரு ப்யூனைக் கூட சொந்தமாக நியமிக்க இயலாது.
எங்களுடைய கடிதம், அறிக்கைகள் அனைத்தும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தில் பல்வேறு மாற்றங்களை அவர் உருவாக்கினர்.
தேர்தல் ஆணையத்திற்கும் மாநில அரசுக்கும் இடையேயான உறவை முற்றிலுமாக மாற்றினார் என்பதை உறுதியாக கூற இயலும்.

1990ம் ஆண்டு தேர்தல் பேனல், மேற்கு வங்கத்திற்கான தலைமை தேர்தல் தலைவரை தேர்வு செய்வதில் பெறும் சவாலை சந்தித்தது.
மேற்கு வங்க மாநிலம் தேர்தல் ஆணையத்துடன் ஒத்துப்போகவில்லை.

தேர்தல் ஆணையம் அறிவித்த அதிகாரிகளை குறிப்பிட்ட இடங்களில் பணியில் அமர்த்த மறுத்துவிட்டது மேற்கு வங்க அரசு.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்துடனான அனைத்து தொடர்பினையும் முற்றிலுமாக நிறுத்திக் கொண்டார் சேஷன்.
பிறகு நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு மேற்கு வங்க மாநிலம் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை பின் தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
நேரம் தவறாமையை எப்போதும் கடைபிடித்து வந்தார் சேஷன்.
இந்த நிமிடத்திற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றால் அந்த நேரத்தில் அது நடந்தே தீரும். அதன் பின்பு ஒரு நிமிடம் கால தாமதமாக அதிகாரிகள் வந்தாலும் அவர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது.

தன்னுடைய அலுவகத்தில் பணியாளர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு வந்துவிட்டார்களா என்பதை அறிந்து கொள்ள வீட்டில் இருந்தே ரேண்டமாக அலுவலகத்திற்கு போன் செய்வது வழக்கம்.
அப்போது ரிசீவரை எடுக்கும் நபர் ஹெலோவுக்கு பதிலாக தன்னுடைய பெயரை கூற வேண்டும்.
அந்த 15 நிமிடத்துக்கு யாரும் எங்கேயும் செல்ல மாட்டார்கள்.

தனி ஒரு சுதந்திர அரசியலமைப்பு அதிகாரியாக இந்தியாவில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதை தெளிவாக உணர்த்தியவர் சேஷன். அவருடைய மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவாகும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------
மிசா கைதி ஸ்டாலின் ?

முன்பு அதிமுக பேணர்

இப்போ அதிமுக கொடி .

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா.
 இவர் சின்னியம்பாளைத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று  காலை வழக்கம் போல பணிக்குச் செல்வதற்காக, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அனுராதா. செல்லும் வழியில் போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுக கட்சிக்கொடி கம்பம் இருந்ததாதக் கூறப்படுகிறது.

அதனால் கோல்டுவின்ஸ் பகுதியில் அனுராதா சென்றுக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராதவிதமாக கட்சி கொடி கம்பம் சரிந்து விழுந்துள்ளது.
 அதனால் சடன் பிரேக் போட்ட அனுராதா, வண்டியுடன் சறுக்கி கீழே விழுந்திருக்கிறார். அப்போது அந்த வழியே வந்த லாரி அனுராதாவின் கால் மீது ஏறியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனுராதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது கால்களில் அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது.
அதிமுக கட்சி பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருக்கிறது.
 அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கட்சி கொடி கம்பங்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.

”அதிமுக  கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்கு காரணம். அதனை காவல் துறையினர் மறைக்கிறார்கள். அனுராதாவின் ஒரு காலில் எலும்பு வெளியே வந்துவிட்டது.
 மற்றொரு காலில் நரம்புகள் துண்டாகிவிட்டன. அறுவை நடந்து கொண்டிருக்கிறது. விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விபத்துக்குள்ளான அனுராதாவின் உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 
--------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு உணவு குப்பை என்று தெரிந்தும் அதையே நாம் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்றால் என்ன அர்த்தம்? நாம் முட்டாள்கள் என்று அர்த்தம்.

அஜினோ மோட்டோவின் வரலாற்றை ஆதியோடு அந்தமாக வாசித்து அறியும் போது இப்படித்தான் சொல்ல வேண்டியதாகிறது. நமக்குத் தெரியும்.. எதைச் சாப்பிட வேண்டும்? எதைச் சாப்பிடக்கூடாது என்று! ஆனால், சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டதையே தொடர்ந்து நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ நம் குழந்தைகளுக்கு வாங்கித் தந்து கொண்டிருக்கிறோம் என்றால் அதை வேறு எப்படித்தான் சொல்வது?
அஜினோ மோட்டோ சேர்ப்பதால் தான் குர்குரே, லேய்ஸ், சில வகை பிரியாணிகள், புலாவ்கள், நூடுல்ஸ்கள் எல்லாம் அதீத சுவையுடன் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அப்படி நாவின் சுவை அரும்புகளில் மாயம் செய்யும் இந்த அஜினோ மோட்டோவின் பிடியிலிருந்து நம்மால் மீளவே முடியாதா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?