என்னதான் நடக்குதிங்கே?

வலி நிவாரினி
ஆன்டி பயாடிக் மருந்துகள்1940களில் இருந்து   பயன்பாட்டில் உள்ளன.
அப்போது இருந்ததைக் காட்டிலும், அதிக அளவில் இந்த மருந்துகள், தற்போது நம்மிடம் உள்ளன. இதில் கவனிக்க வேண்டியது, மருந்துகள் அதிகமாக அதிகமாக, கிருமிகளின் வலிமை, புத்திசாலித்தனம் அதிகரித்து கொண்டே போகிறது என்பது தான்.

பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளமிங், நோபல் பரிசு பெற்ற விழாவில் பேசும் போது, பென்சிலின் உட்பட, ஆன்டி பயாடிக் மருந்துகளை முறையாக கையாளவில்லை என்றால், பாக்டீரியா கிருமிகள் மருந்துகளுக்கு எதிராக வலிமை பெற்று விடும் அபாயம் உள்ளது என்று சொன்னார்.
அது தான் தற்போது நடந்திருக்கிறது.

கிருமிகள் வலிமை பெற்று விட்டால், அதற்கு தீர்வே கிடையாது. ஆன்டிபயாடிக் மருந்துகள் இருந்தாலும், அதனால் உபயோகம் இல்லாமல் போய்விடும். புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்து, அவற்றை உறுதி செய்யாமல், எந்த மருத்துவரும் மருந்து கொடுப்பதில்லை. ஆனால், ஆன்டி பயாடிக் மருந்துகளை எழுதுவதற்கு, எல்லா டாக்டர்களும் தயாராகவே உள்ளனர்.
ஆன்டிபயாடிக் நல்லது தான் தவறில்லை என்ற தவறான அபிப்ராயம் பொதுமக்களிடமும் உள்ளது. குழந்தைக்கு காய்ச்சல், சளி வரும் நேரங்களில் எல்லாம், ஆன்டிபயாடிக் தர வேண்டும் என்று தவிக்கின்றனர்; இது நல்லதல்ல. என் குழந்தைக்கு ஏழு வயதாகிறது.
இது வரையிலும், ஒரு முறை தான் ஆன்டிபயாடிக் மருந்து தந்துள்ளேன். 75 சதவீதம் குழந்தைகளுக்கு, ஓராண்டில், நான்கு முறை தரப்படுகிறது.
எதுக்காக இதை தருகிறோம் என, தெரிவதில்லை. வைரஸ் தொற்றிற்கு பாக்டீரியா தொற்றிற்கான மருந்து பயன்படுத்தக் கூடாது என்பதே புரிவதில்லை.
மருந்து எழுதி தருவதற்கு, எனக்கு ஒரு நிமிடம் போதும்; இந்த மருந்து கெடுதல் என்று புரிய வைப்பதற்கு, 20 நிமிடங்கள் ஆகின்றன.

அப்படி சொல்ல முடியாது.கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்தியதால், பாகிஸ்தான் மக்களுக்கு, டைபாய்டு பாதிப்பு வந்தால், தற்போது உள்ள எந்த மருந்தினாலும் சரிசெய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. நம் நாட்டிலும், குறிப்பிட்ட சில ஆன்டி பயாடிக் மருந்துகள் மட்டுமே பலன் தருகிறது.
 இன்னும் சில ஆண்டுகளில், எந்த ஆன்டி பயாடிக் மருந்தும் வேலை செய்யாது என்ற நிலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
 இவை எல்லாம் நாமாகவே உருவாக்கி கொண்ட பிரச்னை.சுவீடன், பின்லாந்து, நார்வே நாடுகளில் இதன் பயன்பாடு குறைவு. அதனால் தான், அவர்களின் உடல்நலம் நன்றாக உள்ளது.

அலர்ஜி, வாந்தி, பேதி, சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டல பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடிக்கடி பயன்படுத்துவதால், குறிப்பட்ட கிருமி வலிமையாகி விடும்.ஆன்டி பயாடிக் மருந்துகள் பயன்பாடு மிக குறைவாக இருந்தால், சாதாரண தொற்று பாதிப்பே ஏற்படும். வீரியம் குறைந்த மருந்துகள் போதும்.இதைவிட பெரிய பிரச்னை, கால்நடைகள், கோழிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை நேரடியாகவும், தீவனம், தண்ணீர் வழியாகவும் செலுத்துகின்றனர்.

மக்கள் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
 இருமல், சளி, காய்ச்சல், சாதாரண வாந்தி, பேதி, லேசாக அடிபட்ட காயம் போன்றவற்றிற்கு, ஆன்டி பயாடிக் பயன்படுத்த தேவையில்லை என்ற விழிப்புணர்வை, தாய்லாந்து மக்களிடம் ஏற்படுத்தி, அந்த நாட்டில் இதன் பயன்பாட்டில், 45 ஆயிரம் டன் மருந்தை குறைத்து உள்ளனர்.
 இதை நம்மாலும் செய்ய முடியும்.டாக்டர்கள், மருத்துவமனைகள், தனி நபர்கள் அரசுடன் இணைந்து, ஆன்டிபயாடிக் பயன்பாட்டை குறைக்க முன்வர வேண்டும்.
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், எதுவும் செய்ய முடியாது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னதான் நடக்குதிங்கே?

குடியரசுத் தலைவர் யார் பையில்?
 மகாராஷ்டிராவில், ஆட்சி அமைக்க முடியாத ஆத்திரத்தில், குடியரசுத்தலைவர் ஆட்சியை அமலாக்கி பகிரங்கமாக ஜனநா யகப் படுகொலையை அரங்கேற்றி யிருக்கிறது மத்திய பாஜக அரசு.
 மகாராஷ்டிராவில் அரசு அமைத்திட தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.க்களின் ஆதரவை அளித்திடுமாறு  தேசியவாதக் காங் கிரஸ் கட்சிக்கு ஆளுநர் காலக்கெடு கொடுத்திருந்த போதிலும் குடி யரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்த மோடி அரசின் அடாவடித்தனமான செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது.
 இதில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங் கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றிபெற்றன.
 ஆட்சியமைக்கும் அளவுக்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக- சிவசேனா கூட்டணிக்கு 161 இடங்கள் இருந்தன.
ஆனால்  முதல்வர்  பதவி வேண்டும்;சமமான அதிகாரப்பகிர்வு என்பதில்  சிவசேனா விடாப்பிடியாக இருந்தது.
 முதல்வர் பதவியை விட்டுத்தர பாஜக சம்மதிக்காததால் மகாராஷ்டிராவில் ஆட்சி யமைப்பதில் இழுபறி நீடித்தது.
 சில மாநிலங்களில் வேறு கட்சி எம்எல்ஏக்களிடம் பேரம் நடத்தி ஆட்சியமைத்த பாஜகவால், மகா ராஷ்டிராவில் சிவசேனாவுடன் பேரம் பேசவோ, அக்கட்சி எம்எல்ஏக் களை விலைக்கு வாங்கவோ முடிய வில்லை. 

இதனால் பாஜக ஆட்சி யமைக்க முடியாமல் தோல்வி யடைந்தது.

அப்போதே பாஜக தலைவர் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா ஒத்துக்கொள்ளவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் என்று எச்சரித்தார். 
பாஜக பையிலா குடியரசுத் தலைவர் இருக்கிறார் என சிவசேனாவும் கேட்டது.ஆனால் பாஜக எச்சரிக்கை நடந்துவிட்டது.
குடியரசுத் தலைவர் யார் பையில் என்பதும் வெளிச்சமாகிவிட்டது.

 ஆட்சியமைப்பதில் பாஜகவின் ‘ராஜதந்திரிகளாக’ சித்தரிக்கப்பட்ட மோடி, அமித்ஷாவிற்கு மிகப்பெரும் அடியாக மகாராஷ்டிரா அனுபவம் அமைந்துவிட்டது.

இந்நிலையில், முதல்வராக இருந்த பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் வேறுவழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் மறு நாள் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி, ஆட்சியமைக்க வருமாறு பாஜகவிற்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால் மகாராஷ்டிராவில் பாஜக  ஆட்சிஅமைக்காது என்று கட்சியின் மாநிலத் தலைவர் அறிவித்தார். பின்னர் இரண்டாவது பெரிய கட்சி யான சிவசேனாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
சிவசேனா, 3 நாட்கள் அவகாசம்கேட்டது.
ஆனால் ஆளுநர் அதை நிராகரித்து விட்டார்.
இதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
நவம்பர் 12 செவ்வாய்க்கிழமையன்று இரவு 8.30 மணிக்குள்  அரசு அமைத்திட தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல் ஏக்களின் ஆதரவுப் பட்டியலை அளித்திடுமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

ஒரு பக்கம் தேசியவாதக் காங் கிரசுக்கு காலக்கெடு நிர்ணயித்து விட்டு, மறுபக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க தேவை யான எம்எல்ஏக்களின் எண்ணிக்கை யை எந்த கட்சியாலும் காட்ட இயல வில்லை என்று ஆளுநர், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார்.
ஆளுநர் அனுப்பிய அறிக்கை யில், மகாராஷ்டிராவில் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைக்க முடி யாத சூழல் நிலவுவதாகவும், எனவே அரசியல் சாசனப் பிரிவு 356-இன் படி அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில்  பங்கேற்பதற்காக பிரே சிலுக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த பிரதமர் மோடி அவசரமாக மத்திய அமைச்சர வைக் கூட்டத்தை செவ்வாயன்று மாலை கூட்டினார். இதில், மகா ராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

 இதற்கு உடனடியாக குடியரசுத் தலை வரும் ஒப்புதல் வழங்கினார்.
இதனை யடுத்து மகாராஷ்டிராவில் குடியர சுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது.

குடியரசுத் தலைவர் ஆட்சி 6 மாத காலம் வரை இருக்கும் என்றும் அதற்குள் பெரும்பான்மை யை நிரூபித்தால் குடியரசுத் தலை வர் ஆட்சி வாபஸ் வாங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மத்தியில் உள்ள பாஜக அரசு எவ்விதமான அரசியல் சாசன நெறிமுறைகளுக்கும் உட்பட்டு தனது ஆட்சியை நடத்துவதாக தெரியவில்லை.

 தொடர்ந்து அனைத்து பிரச்சனைகளிலும் ஒரு சட்டவிரோத அணுகுமுறையையே மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் மகாராஷ்டிரா ஆளுநர்,  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்  சரத்பவாருக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து, நவம்பர் 12 இரவு 8.30 மணி வரை கால அவகாசம் அளித்த போதிலும், ஆளுநர் அளித்த அவகாசத்தையும் மீறி, மத்திய அமைச்சரவை அம்மாநிலத்தில் சட்டப்பிரிவு 356 இன்படி குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துள்ளது.

 பாரதிய ஜனதா கட்சி இந்திய அரசிய லமைப்பு சட்டத்திற்கு தொடர்ந்து பெரும் கேடு விளைவித்து வருகிறது.
கர்நாடாகா முன்னாள் முதல்வர் பொம்மை உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் / நாடாளுமன்றத்தில்தான் தங்கள் பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று வழங்கியுள்ள தீர்ப்புக்கு மாறாக,   சரத்பவார்  தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிப்பதற்கு முன்பாகவே, பாஜக மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர்  ஆட்சியை கொண்டு வந்து  மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை செய்துள்ளது.
 மத்திய  பாஜக அரசின் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் இத்தகைய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குடியரசுத்தலைவர் ஆட்சியை பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் தனது பெரும்பான்மையை நிரூபிக்க பல்வேறு தகிடுதத்தங்களை மேற்கொண்டு கொல்லைப்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா கட்சி முயல்வதாக தெரிகிறது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும், ஜனநாயக சக்திகளும், நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்து கண்டனக்குரல் முழங்கிட வேண்டும்.

சிவசேனா சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பிரபல வழக்கறிஞரு மான கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 
அந்தமனுவில், மகாராஷ்ராவில் பெரும்பான்மையைநிரூபிக்க  ஆளுநர் போதிய அவகாசம் தரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
 இந்த மனுவை அவசர  வழக்காக எடுத்துக் கொள்ளுமாறு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வில் முறையிடவும் சிவசேனா திட்டமிட்டுள்ளது.

----------------------------------------------------------------------------------------------------------------------------------

ந்நாளில்,

முன்னால் . 

உலக கருணை தினம்
கிரீஸ் நாட்டின் புதிய அரசியலமைப்பு பெறப்பட்டது(1864)
கார்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது(1957)
 உலக  வலைப் பின்னல்(WWW) ஆரம்பிக்கப்பட்டது(1990)



1841 - நவீன ஹிப்னாட்டி சத்தின் தந்தை என்று குறிப்பிடப்படும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ‘ஜெண்டில்மேன் சயிண்ட்டிஸ்ட்’ ஜேம்ஸ் ப்ரெய்ட், ‘அனிமல் மேக்னெட்டி சம்’ என்பதன் செயல்முறை விளக்கத்தை தன்முறையாகக் கண்டார்.

பல்கலைக்கழகங்கள், அரசுத் துறை அல்லது நிறுவனங்கள் அல்லது கார்ப்பரேட் நிதியுதவி போன்றவையின்றி, யாரையும் சாராமல் ஆய்வுகள் மேற்கொண்ட சுதந்திரமான ஆய்வாளர்கள், ஜெண்டில்மேன் சயிண்ட்டிஸ்ட் என்றழைக்கப்பட்டனர்.
 எல்லா உயிரினங்களிலும் உணர முடியாத ஓர் நேர்மறை சக்தி இருப்பதாகவும், அதை சிகிச்சை உள்ளிட்டவற்றிற்குப் பயன்படுத்தலாம் என்றும் நம்பிய ஜெர்மானிய மருத்துவர் ஃப்ரேன்ஸ் மெஸ்மெர், அதற்கு ‘அனிமல் மேக்னெட்டிசம்’ என்று பெயரிட்டார்.

இவர், 1774இல் ஒரு பெண் ஹிஸ்டீரியா நோயாளியை இரும்பு கலந்த கலவையொன்றைக் குடிக்கச்செய்து, அவரது உடலில் பல காந்தங்களை வைத்து ஒரு செயற்கை அலையை உருவாக்கினார்.
உடலில் இனம்புரியாத ஏதோ பாய்ந்ததாகவும், பல மணி நேரத்துக்கு பின் அவரது நோயிலிருந்து விடுவித்ததாகவும் அந்த நோயாளி குறிப்பிட்டாலும், காந்தங்களால் அது நிகழ்ந்ததாக மெஸ்மெர் நம்பவில்லை. விரைவிலேயே இந்தச் சிகிச்சையில் காந்தங்களைப் பயன்படுத்துவதை அவர் நிறுத்திவிட்டாலும், அனிமல் மேக்னெட்டிசம் என்றே அவர் அழைத்த பண்புதான் அவர் பெயராலேயே மெஸ்மெரிசம்(மெஸ்மெர்+இசம்) என்றழைக்கப்படுகிறது.
 இதைக்கொண்டு சிகிச்சையளிப்பவர்கள் மேக்னெட்டைசர் என்றும், இதைப்பற்றிய ஆய்வு மேற்கொள்பவர்கள் மேக்னெட்டி ஸ்ட் என்றும் அழைக்கப்பட்டனர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரெஞ்ச் மேக்னெட்டைசர் சார்லஸ் லாஃபோன்ட்டைனின் செயல்முறை விளக்கத்தைக்காண அழைக்கப்பட்ட போதுதான் ப்ரெய்ட் இதைக் கண்டார்.
லாஃபோன்ட்டை னின் மேலும் இரு செயல்முறை விளக்கங்களின்போது மேக்னெட்டைஸ் செய்யப்பட்டவர்களின் கண், கண்ணிமை ஆகியவற்றைச் சோதித்த ப்ரெய்ட், அவர்கள் வேறொரு நிலையிலிருப்பதை உணர்ந்தார்.
தன்னையே செல்ஃப் அல்லது ஆட்டோ-ஹிப்னாட்டைஸ் செய்து மேலும் ஆய்வுகளை மேற்கொண்ட ப்ரெய்ட், அந்த விளைவுகளுக்கும் காந்தத்திற்கும் தொடர்பில்லை என்றும், அது உளம் சார்ந்த உடலியல் என்பதையும் கண்டறிந்தார்.

ஹிப்னாட்டிசம், ஹிப்னோசிஸ் ஆகிய சொற்கள் பிரெஞ்ச் மேக்னெட்டைசரான கியூவில்லர்ஸ்  என்பவரால் உருவாக்கப்பட்டிருந்தாலும், ப்ரெய்டாலேயே  அவை புழக்கத்துக்கு வந்தன.
 தூக்கம் என்ற பொருளுடைய பண்டைய கிரேக்க மொழிச்சொல்லான ஹிப்னோஸ் என்பது, ஓசிஸ் சேர்க்கப்பட்டு ஹிப்னோசிஸ் என்றாகும்போது தூங்கச்செய்தல் என்ற பொருளைத் தருவதால் அதிலிருந்தே இச்சொற்கள் உருவாயின.
 சிகிச்சைக்காக ஹிப்னாட்டிசத்தைப் பயன்படுத்தும் ஹிப்னோதெரபி என்பதை முதன்முதலில் செய்தவரும் ப்ரெய்ட்தான்!

- அறிவுக்கடல்

------------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்கள் சேவையில் பாஜக.?

நாட்டின் மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து, ‘2018-19’ ஒரே ஆண்டில் மட்டும் ரூ. 700 கோடியை தேர்தல் நன்கொடையாக பாஜக பெற்றுள்ளது.
 இதனை பாஜகவே, தேர்தல்ஆணையத்திடம் அளித் துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாஜகவின் இந்த அறிக்கையில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக எவ்வளவு நிதி வந்தது என்பது குறித்துகுறிப்பிடவில்லை.
தனி நபர்களிடம் இருந்தும், நிறுவனங்களிடம் இருந்தும், ஆன்லைன் பரிமாற்றம், காசோலை ஆகியவை மூலம்பெற்ற நன்கொடையை மட் டும் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில், மொத்தநன்கொடைத் தொகையான ரூ.700 கோடியில் பெரும் பகுதி ‘டாடா’ நிறுவனம் நிர்வகிக்கும் அறக்கட்டளை மூலம்வந்துள்ளது.
டாடா நிறுவனத்தின் சார்பில் இயங்கும் ‘புரோகிரஸிவ் எலக்ட்ரோல் டிரஸ்ட்’ அமைப்பு மட்டும் ரூ.356 கோடியை பாஜக-வுக்கு நன்கொடையாக அள்ளிக் கொடுத்துள்ளது.
நாட்டின் பணக்கார அறக்கட்டளையாக கருதப்படும் ‘புரூடெண்ட் எலக்ட் ரோல் டிரஸ்ட்’ ரூ. 54 கோடியே 25 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.

 இந்த புரூடெண்ட் அறக்கட்டளையில், பார்தி குழுமம், ஹீரோ மோட்டார் கார்ப்,ஜூப்ளியன்ட் புட்வொர்க்ஸ், ஓரியண்ட் சிமெண்ட், டிஎல்எப், ஜேகே டயர்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசியல் கட்சிகள் ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்றால் அதை ரொக்கப் பணமாகப் பெறக் கூடாது. 
 காசோலை அல்லது ஆன்லைன் பரிமாற்றம் மூலம் பெற வேண்டும் என்ற விதிமுறை இருப்பது குறிப் பிடத்தக்கது.
இந்த விதியை விதித்தது தேர்தல் ஆணையம்தான் .
பாஜகவை கண்டுகொள்ளாமல் இருப்பதும்,அதற்கு தற்போது கூஜா தூக்குவதும் அதே தேர்தல் ஆணையம்தான்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

 வேலை வாய்ப்புகள் 
 SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்


பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.  ----------------------------------------------------------------------------------------------------------------------------
 சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவில் பாதுகாப்பு அதிகாரி, டேட்டா அனாலிஸ்ட் உள்ளிட்ட 13 வகையான பிரிவுகளில் மொத்தம் 105 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப அதிகாரி (ஐ.டி.,), பாதுகாப்பு அதிகாரி, ரிஸ்க் மேனேஜர், டேட்டா அனாலிஸ்ட், கிரெடிட் ஆபிசர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது
: குறைந்தபட்சம் 21, அதிகபட்சம்- 45, ஒவ்வொரு பணிகளுக்கும் மாறுபாடு உள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித்தகுதி:
தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு கம்ப்யூட்டர் சயின்சில் 4 ஆண்டு இன்ஜினியரிங் படிப்பு, ஐ.டி., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ரிஸ்க் மேனேஜர் பணிக்கு எம்.பி.ஏ.. (நிதி), எம்.எஸ்சி., (கணிதம்/புள்ளியியல்) உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
தமிழகத்தில் தேர்வு மையம் சென்னையில் மட்டுமே உள்ளது. இதில் மாற்றம் ஏற்படலாம்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி
: 21.11.2019

விபரங்களுக்கு
: https://www.centralbankofindia.co.in/pdf
 -------------------------------------------------------------------------------------------------------------------------------
 ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதியாக இருந்தது பற்றி ஆதாரம்

      விருது மேலே விருது வந்து கொட்டுகிற நேரமிது.

  
இதுக்கே ஒரு விருது தரணும்.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ?

 பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே நீங்களெல்லாம்
அற்ப மாயைகளோ? 

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?

முகநூலில் தாமோ சிவகுமார்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?