கோழிக்கறிஅரசியல்

இந்தியாவின் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கோழிப்பண்ணைத்துறையின் பங்களிப்பு, ஒரு டிரில்லியன் ரூபாய் ஆகும்.
 நாட்டில் ஆண்டுக்கு சுமார் 9,000 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியா (சீனாவுக்கு பிறகு), உலகில் அதிக முட்டைகளை உற்பத்தி செய்யும் இரண்டாவது பெரிய நாடு.
 நாடு முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 400 மில்லியன் பிராய்லர் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
கோழித்தொழிலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது, முதல் மற்றும் இரண்டாமிடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன.

ஏழை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவாக முட்டையை பயன்படுத்த வேண்டுமென்று உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைக்கிறது.

இந்தியாவின் தனிநபர் முட்டை நுகர்வு, தேசிய ஊட்டச்சத்து அமைப்பு (என்ஐஎன்) பரிந்துரைத்த 180 முட்டைகள் என்பதற்கு பதிலாக ஆண்டுக்கு வெறும் 68 முட்டைகளாகவும், பரிந்துரைக்கப்பட்ட 11 கிலோ கோழிக்கறி என்பது, 3.5 கிலோ நுகர்வு என்றளவில் உள்ளது.

இந்த அளவிற்கு பொருந்தும் வகையில், தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள், இங்கு ஏராளமாக உள்ளன. உள்நாட்டு கோழித்தொழித்துறையில் சுமார் 40 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். 
அவர்களில் சுமார் 20 மில்லியன் மக்கள், மக்காச்சோளம் மற்றும் சோயா விவசாயிகளால் வேலை பெறுகின்றனர். இந்தியாவில், கோழித்தீவனம் முக்கியமாக சோளம் மற்றும் சோயாபீன்களால் ஆனது. கோழித்தொழிலில் தீவனத்தேவையை மையமாக கொண்டு, இந்த பயிர்களை விவசாயிகள் நடவு செய்கின்றனர். இவற்றின் அறுவடையில் பாதி, கோழித்தொழிலின் நுகர்வுக்கு செல்கிறது. 
இந்திய கோழித்தொழில் பாதிக்கப்பட்டால், அது விவசாயிகளுக்கு ஆபத்தானது. ஏனெனில் கோழி வளர்ப்பை சார்ந்து இந்தியர்களின் உணவுப்பழக்கம் வேகமாக மாறி வருகிறது.
 அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்குச் சென்றிருந்தபோது, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கோழிகள் மீதான இறக்குமதி கட்டணம் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டதாக தெரிகிறது.

இதை, வரும் அமெரிக்க தேர்தலில் தனக்கு பயன் தரக்கூடிய ஒரு கருவியாக, அவர் பயன்படுத்துகிறார். இறக்குமதி கட்டணம் குறைக்கப்பட்டால், அது இந்திய கோழிப்பண்ணைத் தொழிலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்று இங்குள்ள தொழில் வட்டாரங்கள் கவலைப்படுகின்றன.
 ட்ரம்பின் உத்திகளுக்கு பணிந்துவிடக்கூடாது என்று இந்திய அரசுக்கு இந்திய கோழிப்பண்ணை விவசாயிகள் வேண்டுகோள் விடுத்து, அழுத்தமும் தர முயன்று வருகின்றனர்.
 உலகளவில் கோழி இறைச்சியின் நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளதால், இந்திய கோழிப்பண்ணைத் தொழில் மீண்டு வருகிறது. 
இச்சூழலில், அமெரிக்காவில் இருந்து சிக்கன் லெக்பீஸ் பெருமளவில் இறக்குமதி செய்யப்படுவது பற்றிய தகவல்கள், உள்நாட்டு கோழிப்பண்ணை சமூகங்கள் மத்தியில் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. 
அவ்வாறு நடந்தால், கோழி இறைச்சியின் விலை கணிசமாகக் குறைந்து, உள்நாட்டுத் தொழிலுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும்.
 தற்போது, கோழி சார்ந்த இறக்குமதிக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதை 30 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். கடந்த காலங்களில், இறைச்சி மற்றும் கோழிகளின் விலை வீழ்ச்சியால் கோழித்தொழில் பாதிக்கப்பட்டது.

ண்மையில் இறைச்சி நுகர்வு அதிகரித்திருப்பது கோழி விவசாயிகள், மக்காச்சோளம் மற்றும் சோயா விவசாயிகளுக்கு, வர்த்தகம் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையைத் தருவதாக உள்ளது.
 இத்தருணத்தில், வெளிநாட்டு உற்பத்திக்கு கதவுகளைத் திறப்பது என்பது பெரும் ஆபத்தானது என்று தொழில் வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

அமெரிக்காவிலிருந்து சிக்கன் லெக் பீஸ் இறக்குமதி செய்வதற்கு பின்னால் சுவையான காரணங்கள் உள்ளன. அமெரிக்கர்கள் பொதுவாக கொழுப்பு குறைவாக இருக்கும் கோழியின் நெஞ்சு பகுதியை சாப்பிட விரும்புகின்றனர்; சிக்கன் லெக் பீஸ் சாப்பிடுவதில் நாட்டம் கொள்வதில்லை. 
கோழியில் நெஞ்சுப்பகுதியில் இருப்பதை விட அதன் காலில் உள்ள கொழுப்பின் அளவு அதிகம். எனவே, தான் கோழியின் நெஞ்சுக்கறி மீது அமெரிக்கர்களுக்கு இவ்வளவு மோகம்! அமெரிக்கர்கள் உணவு சாப்பிடும்போது முட்கரண்டி, கத்திகளை பயன்படுத்துகின்றனர். 
அவர்களின் தயக்கத்திற்கு இன்னொரு காரணமும் உள்ளது; உணவு மேஜை மீது வைத்து கோழிக்காலை சாப்பிடுவதில் அவர்களுக்கு தடுமாற்றமும் சங்கடமும் இருக்கிறது. 
எனவே அமெரிக்காவில் சிக்கன் லெக்பீஸ் தேவை என்பது மிகவும் குறைவு. அவை குளிர்பதன அறைகளிலேயே முடங்கி கிடக்கின்றன.
முன்பு அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளான ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவுக்கு சிக்கன் லெக் பீஸ்களை ஏற்றுமதி செய்தது. 

ஆனால், அந்தந்த நாடுகளின் சந்தைகள், இறைச்சி பொருட்களில் தன்னிறைவு பெற்றுவிட்டன. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வளர்ந்து வரும் வணிகப்போட்டி மற்றும் சீனாவில் கோழி உற்பத்தியில் சீரான அதிகரிப்பால் அமெரிக்காவின் கவனம் இப்போது இந்தியா பக்கம் திரும்பியுள்ளது.

 135 கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தை, அமெரிக்காவிற்கு அதிக நம்பிக்கையை தருவதாக உள்ளது. 
இந்தியர்கள் கோழிக்கால்களை (லெக் பீஸ்) விரும்புகிறார்கள், இது, அமெரிக்க கோழிப்பண்ணை தொழிலில், அவர்களின் அனைத்து பொருட்களையும் நம்மீது திணிப்பதற்கு சாத்தியமான சந்தையை ஏற்படுத்தித் தருகிறது. 
கோழி இறைச்சி அமெரிக்காவில் மலிவானது. எனவே இந்த தயாரிப்புகள் மிகமலிவு என்ற முத்திரையோடு இந்திய சந்தைகளை மூழ்கச்செய்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

   இளைஞர்கள் பீஸா மற்றும் பர்கர்கள் போன்ற ‘துரித உணவு’ வகைகளுக்கு மாறி வருகின்றனர். ஹோட்டல்களில் அசைவ உணவை சாப்பிடுவது அதிகரித்துள்ளது. அவ்வகையில் அமெரிக்காவிலிருந்து கோழிகளுக்கான தேவை என்பது நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இருப்பினும், இந்தியர்கள் பிரெஷ் ஆனதையே விரும்புகிறார்கள். மேற்கத்திய கலாச்சாரங்கள் விரிவடைந்தாலும் - பெரும்பான்மையான இந்தியர்கள் இன்னும் புத்தம்புது காய்கறிகளையும் இறைச்சியையும் உட்கொள்கின்றனர்.
இந்த காரணத்திற்காகத்தான், இந்தியாவின் பெருநகரங்கள் மற்றும் நகரங்களின் ஒவ்வொரு பகுதியிலும் காய்கறி சந்தைகள் மற்றும் கோழி இறைச்சிக்கூடங்கள் அமையப் பெற்றுள்ளன. எனவே இந்தியாவில் குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சி தேவை இருக்கிறதா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
கோழி இறைச்சிக்கான இறக்குமதி கட்டணத்தை குறைப்பது, பல லட்சம் உள்நாட்டு தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்று தொழில் பிரதிநிதிகள் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளனர்.

 இதனால் கோழி பண்ணைகள் மற்றும் பதப்படுத்தும் பிரிவுகளை மூடுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும் என்று, அவர்கள் எச்சரிக்கின்றனர். இது கிராமப்புற பொருளாதாரத்தைப் பாதிக்கும். 
பல தசாப்தங்களாக இந்திய கோழித்தொழில் அரசின் எவ்வித ஆதரவும் இல்லாமலேயே நன்கு வளர்ந்து வருகிறது. 
இத்தகைய சூழலில், இறக்குமதி கட்டணங்களை குறைக்க அமெரிக்காவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொண்டால், அது வெகு சீக்கிரமே இந்த தொழில் வீழ்ச்சியடைய வழிவகுக்கும்.
அடுத்து வரும் ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரத்தை இருளில் மூழ்கச் செய்துவிடும். மேலும் இத்தொழில் கடுமையாக பாதிக்கப்படும்.

மிகவும் மோசமாக சரிவு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு  ஆண்டில் 4.5 சதவீதமாக சரிந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

 இந்தியாவின் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம்  வரையிலான நடப்பு நிதியாண்டுக் கான இரண்டாம் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக் கான கணக்கெடுப்பு முடிவுகள் வெள்ளியன்று மாலை வெளி யிடப்பட்டது.
 அதில் நடப்பு நிதி யாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவடைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 5 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 4.5 சதவீதமாக  மிகவும் மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதே இரண்டாம் காலாண்டில் கடந்த  2018 ஆம் ஆண்டில் பொரு ளாதார வளர்ச்சி 7 சதவீதமாக  இருந்தது.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை யிலான காலாண்டில் 4.3 சத வீதத்தில் பொருளாதாரம் வளர்ச்சி இருந்தது. மத்திய பாஜக அரசு, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பொருளாதாரம் மிகவும் மந்த நிலைக்கு சென்று அதன் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் என்ற அளவில் மேலும் சரிந்துள்ள தால் வேலைவாய்ப்பின்மை, தொழில் வளர்ச்சியின்மை போன்ற பல்வேறு இன்னல்களை நாடு சந்திக்க நேரிடும் என்று பொரு ளாதார வல்லுநர்கள் எச்சரித்துள் ளனர்.

மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமையன்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது ஏறும், இறங்கும்.
ஆனால்  பொருளாதார மந்தநிலை இப்போ தல்ல, எப்போதுமே ஏற்படாது’ என்று தெரிவித்தார்.

ஆனால் அமைச்சர்  நிர்மலா சீதாராமனின் கூற்று பொய்யாகி, 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.


------------------------------------------------------------------------------------------------------------------------------------

ந்நாளில்,
முன்னால்.

ஸ்காட்லாந்து தேசிய தினம்
பார்போடஸ் விடுதலை தினம்(1966)
வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது(1995)
இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜகதிஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1858)

1782 - அமெரிக்க விடுதலைப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த, பாரிஸ் ஒப்பந்தத்தின் வரைவு உருவாக்கப்பட்டது.
இதுவே, முதல் ஆங்கிலேயப் பேரரசின் முடிவைத் தொடக்கிவைத்து, (புதிய நிலப்பரப்புகளின்) கண்டுபிடிப்புக் காலம் என்றழைக்கப்படுகிற 15,16ஆம் நூற்றாண்டுகளில், போர்ச்சுகலும், ஸ்பெயினும் கடற்பயணங்கள்மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் தங்கள் ஆட்சியை உருவாக்கின. கடல்கடந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளிலிருந்து இந்நாடுகளில் குவிந்த செல்வமே, இங்கிலாந்து, பிரான்சு, நெதர்லாந்து(டச்சுக்காரர்கள்) ஆகியவற்றையும் இதில் இறக்கியது.
 16ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், புதிய நிலப்பரப்புகளைக் கண்டறிய மட்டுமின்றி, செல்வங்களுடன் திரும்பும் பிற நாடுகளின் கப்பல்களைக் கொள்ளையிடவும் இங்கிலாந்து அரசு அனுமதியளித்தது!

தொடக்கத்தில், கடல் கடந்த பகுதிகளை உரிமை கோரினாலும், குடியேற்றங்களை உருவாக்கத் தவறிய இங்கிலாந்து, 1700களின் தொடக்கத்தில் வடஅமெரிக்காவின் முக்கியச் சக்தியாக மாறியது.
1757இன் ப்ளாசிப் போருக்குப்பின் முகலாயர்களை ஓரங்கட்டி, இந்தியத் துணைக் கண்டத்திலும் காலூன்றியது.
1583இலிருந்து, அமெரிக்க விடுதலை ஒப்பந்தம் கையெழுத்தான 1783 வரையானது முதல் ஆங்கிலேயப் பேரரசு என்று குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்கா கைவிட்டுப்போனதும், ஆசியா, ஆஃப்ரிக்கா, பசிஃபிக் பகுதிகள் ஆகியவற்றின்மீது கவனம் செலுத்தத்தொடங்கிய இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில், 1783-1815 காலத்தில் இருந்தவை இரண்டாம் ஆங்கிலேயப் பேரரசு என்று குறிப்பிடப்படுகின்றன.
 1815-1914 காலம், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் நூற்றாண்டு என்று குறிப்பிடப்படுகிறது. 1900களின் தொடக்கத்தில் புவியின் மொத்த நிலப்பரப்பில் 24 சதவீதத்துக்கு, உலகம் முழுவதும் பரவியிருந்த இங்கிலாந்துப் பேரரசின் ஏதாவதொரு பகுதி பகலாக இருந்ததால், சூரியன் மறையாத பேரரசு என்று பெருமிதப்பட்டுக்கொண்டது.
உலக மக்கள்தொகையில் 23 சதவீதத்தை தங்களது ஆளுகையின்கீழ் கொண்டு, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய பேரரசாகவும், உலகின் முதற்பெரும் சக்தியாகவும் இது விளங்கியது. 1783இல் அமெரிக்காவுக்குப்பின், 1919இல் விடுதலைப்பெற்ற ஆஃப்கானிஸ்தான் தொடங்கி 63 நாடுகள் இங்கிலாந்திடமிருந்து விடுதலைப்பெற்றிருக்கின்றன.
 1997இல் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்ததுடன் இங்கிலாந்துப் பேரரசு முழுமையாக முடிவுக்கு வந்தது.
1995இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் இங்கிலாந்திடமிருந்து விடுதலைப்பெறுவதை 73.6 சதவீத பெர்முடா மக்கள் ஏற்காததால், இங்கிலாந்தின் ஆளுகையின்கீழேயே பெர்முடா மட்டும் இன்றுமிருக்கிறது.

கிரேட் பிரிட்டன் ஆகக் காரணமான வடஅயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவையும் அவ்வாறே மக்கள் விருப்பத்
தின்பேரில் இங்கிலாந்தின் பகுதிகளாகத் தொடர்கின்றன.
- அறிவுக்கடல்
 -----------------------------------------------------------------------------------------------------------------------------------

  வீட்டிற்குள் தோட்டம்
மொட்டை மாடியில் இடம் கிடைத்தால், மாடி தோட்டம் போடலாம். இல்லாதவர்கள் வீட்டுக்குள்ளேயே, அதாவது, 'பிளாட்'டுக்குள்ளேயே போட்டுக் கொள்ள வேண்டியது தான்.
பெங்களூரில் சிலர், வீட்டினுள் சுவர்கள், தனி தாங்கிகள் மற்றும் தொட்டிகளில், கண்களை கவரும் செடிகளை வைக்க ஆரம்பித்து விட்டனர்.

 ஜன்னல், சமையலறை பக்கத்தில், வழியில், கதவை ஒட்டி என, பல இடங்களில் வைத்துள்ளனர். உள்நாட்டு, வெளிநாட்டு தாவரங்கள் இதற்கு வாகாக அமைந்து, அழகை கூட்டுகின்றன.
வீட்டிற்குள் செடி வைத்திருந்தாலும், அதற்கும் சூரிய வெளிச்சம் தேவை. குறைந்தபட்சம் சனி, ஞாயிற்று கிழமைகளில் அவற்றை குறிப்பிட்ட நேரம் வெயிலில் வைத்திருந்து, மீண்டும் வீட்டுக்குள் வைப்பது நல்லது.
வீட்டினுள் வளரும் தாவரங்களுக்கு, குறைந்த தண்ணீரே போதும், கூடுதலாக தண்ணீர் ஊற்றினால், அழுகி விடும்.
பால்கனிகளில் வைக்கும் தாவரங்களுக்கு, ரசாயன உரம் அவசியமில்லை. சமையலறை கழிவுகளை போட்டாலே போதும். ஆனால், அவ்வப்போது சுத்தம் செய்வது நல்லது.
தாவரங்களை பூச்சிகள் மொய்த்து தொல்லை தராமல் இருக்க, வேப்ப எண்ணையை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்; பூச்சிகள் அண்டாது.

------------------------------------------------------------------------------------------------------------------------
 ஸ்மார்ட் போன் டாக்டர்
ஒருவர் அனுபவிக்கும் உடல் மற்றும் மன அழுத்தத்தைக் கண்டறிய ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்தப்படலாம். இத்தாலியின் பாலிடெக்னிகோ டி மிலானோவைச் சேர்ந்த பேராசிரியர் என்ரிகோ கியானி தலைமையிலான குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு நடத்தினர்.
 இந்த ஆய்வில், ஸ்மார்ட் ஃபோனை ஒருவரின் ஆரோக்கியத்தை எளிமையாகக் கண்காணிப்பதற்கு உடனடியாகக் கிடைக்கக்கூடிய ஒரு கருவியாக பயன்படுத்தலாம் என்பது தெரியவந்துள்ளது.

அந்த வகையில், இதய துடிப்பு விகிதம் மற்றும் மன அழுத்த நிலை போன்ற முக்கிய அளவுகளை துல்லியமாக கண்டறிய ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்தலாம். 

ஸ்மார்ட் ஃபோனுக்குள் இருக்கும் கருவிகள் இதய செயல்பாட்டுடன் கூடிய சமிக்ஞையை பெற பயன்படுகிறது. இது ஒவ்வொரு துடிப்பிலும் இதயத்தின் அதிர்வுகளால் கண்காணிக்கப்படுகிறது. 
ஆக, தொலைபேசியை உடலின் குறிப்பிட்ட பாகங்களில் வைப்பதன் மூலம் இதனை உணர முடியும்.
அதுமட்டுமின்றி ஸ்மார்ட் ஃபோனை அடிவயிற்றில் பகுதியில் வைப்பதன் மூலமும் சில மாற்றங்களை கண்டறிய முடியும்.
 இதய துடிப்பு, மன அழுத்தம் குறித்த அளவீடுகளையும் பெறலாம்.
இந்த ஆய்வின் மூலம், ஸ்மார்ட் ஃபோனை ஒருவரின் ஆரோக்கியத்தை எளிமையாக கண்காணிக்க உதவும் எளிதான கருவியாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது தெளிவாகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
...9999999999999

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw

  வேலை வாய்ப்புகள்

பெய்ய இரு...

Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/heavy-rain-for-4-districts-q1io4e?fbclid=IwAR1C5nZchDFUkT48HkP03O74GHDUwvsCMHbTxBiD1g_DkUjyLPoUfB3mqxw
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
நிறுவனத்தில் 55 இடங்களுக்கு அறிவிப்பு .

காலியிடம்: ஜூனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், புரடெக்சன், இன்ஸ்ட்ருமென்டேசன்), ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (பயர் & சேப்டி), ஜூனியர் மார்க்கெட்டிங் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்ட், ஜூனியர் நர்சிங் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.

வயது:
1.11.2019 அடிப்படையில் சில பதவிகளுக்கு 30 வயது மற்றும் சில பதவிகளுக்கு 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:
பதவி வாரியாக கல்வித்தகுதி மாறுபடும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.

கடைசி தேதி
: 3.12.2019

விபரங்களுக்கு
: www.cpcl.co.in
--------------------------------------------------------------------------------------------------------------------------
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் 
 காலியாக உள்ள 92 இடங்களுக்கு அறிவிப்பு.
 காலியிடங்கள்: உதவி பாதுகாப்பு அதிகாரி- 19, பாதுகாவலர்- 73

வயது: 6-12-2019 அடிப்படையில் குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் பொதுப் பிரிவினர்-27, எஸ்.சி.,/எஸ்.டி.,- 32, ஓ.பி.சி.,- 30 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி வயது தளர்வு சலுகை உண்டு.



கல்வித் தகுதி: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு. பாதுகாவலர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி.

தேர்ச்சி முறை: உடற்தகுதி மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ. 150, பாதுகாவலர் பணிக்கு ரூ. 100, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை
: 'ஆன் லைன்' https://recruit.barc.gov.in
கடைசி நாள்
: 6.12.2019
---------------------------------------------------------------------------------------------------------------------------
மத்திய தொழில் பாதுகாப்பு படை
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 300 'தலைமை கான்ஸ்டபிள்' பதவிக்கு விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: தடகளம், குத்துச்சண்டை, கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கால்பந்து, ஹாக்கி, ஹேண்ட் பால், ஜூடோ, கபடி, துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், வாலிபால், பளுதுாக்குதல், மல்யுத்தம், டேக்வாண்டோ ஆகிய 15 பிரிவுகளை சேர்ந்த வீரர்களுக்கு காலியிடங்கள் உள்ளன.

வயது: 1.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 -23 வயதுக்குள் இருக்க வேண்டும். 2.8.1996 முதல் 1.8.2001க்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி நிறுவனம் சார்பில் மாநில, தேசிய, சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதி: குறைந்தபட்சம் ஆண்கள் உயரம் 167 செ.மீ., பெண்கள் உயரம் 153 செ.மீ., இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: தொடர்புடைய விளையாட்டில் திறமை, எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, உரிய சான்றுகளுடன் அனுப்ப வேண்டும். விளையாட்டு பிரிவு வாரியாக அனுப்ப வேண்டிய முகவரி மாறுபடுகிறது.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி தேதி: 17.12.2019

விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_4_1920b.pdf
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

கால்நடை உதவி மருத்துவர்

காலிப்பணியிடம் : 1141 . 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.

  • TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : கால்நடை உதவி மருத்துவர்  .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1141  .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.12.2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 23.02.2020 .
  • இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு 1141 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு கால்நடைத் துறையில் கால்நடை உதவி அறுவைச் சிகிச்சை மருத்துவர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 1141 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 30 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.எஸ்., பி.சி.எம். பிரிவினர் மற்றும் விதவை ஆகியோருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி:

கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இவர்கள் தமிழை ஒரு பாடமாக படித்து மேல்நிலைக் கல்வியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

கட்டணம்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் விதிவிலக்கு பின்பற்றப்படுகிறது. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்ப பதிவு செய்தவர்களுக்கும் கட்டணத்தில் சலுகை உண்டு.

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வழியாகவே விண்ணப்பிக்க முடியும். டிசம்பர் 17-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். டிசம்பர் 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கான எழுத்துத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி நடைபெறுகிறது. விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
நினைவுக்கு
நவ.30 - ஐ.பி.பி.எஸ்., பி.ஓ., மெயின் தேர்வு
டிச.1 - இந்திய வனத்துறை மெயின் தேர்வு
டிச.7, 8, 14, 21 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் பிரிலிமினரி தேர்வு
டிச.28, 29 - ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி பிரிலிமினரி தேர்வு
2020, ஜன. 19 - ஐ.பி.பி.எஸ்., கிளார்க் மெயின் தேர்வு
ஜன.25- ஐ.பி.பி.எஸ்., சிறப்பு அதிகாரி மெயின் தேர்வு

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 

 கடவுள் இல்லை.

கடவுள் இல்லை என்று நம்புவதற்கான உரிமை தனக்கு உள்ளது என்பதற்காக இந்தியர் ஒருவர் போராடி வருகிறார்.
கடவுள் இல்லை என்ற நம்பிக்கையை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் வகையிலான ஆவணம் பெற வேண்டும் என்ற அவருடைய முயற்சிக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவின் டோஹானா கிராமத்தில்  .
''நாத்திகர்'' என்று பொருள்படும் 'ATHIEST' எனும் ஆங்கிலச் சொல்லை இரண்டு கைகளிலும் பெரிதாக பச்சை குத்தியுள்ள 33 வயதான ரவிக்குமார், கடவுள் இல்லை என்பதை தனது ஆறு அல்லது ஏழாவது வயதில் உணர்ந்து கொண்டதாகக் கூறுகிறார்.

''ஒவ்வோர் ஆண்டு தீபாவளியின் போதும் என் தந்தை லாட்டரி சீட்டு வாங்கி வந்து லட்சுமியிடம் வேண்டிக் கொள்வார். ஆனால் ஒருபோதும் பரிசு விழுந்தது கிடையாது.
 ஒரு நாள் நான்கு பையன்கள் என்னை அடித்தபோது, கடவுள் கிருஷ்ணரிடம் வேண்டிக் கொண்டேன். ஆனால் அவர் என்னைக் காப்பாற்றவில்லை,'' என்று அவர் கூறுகிறார்.

தலைநகர் டெல்லியில் இருந்து 250 கிலோ மீட்டர் (155 மைல்கள்) தொலைவில் டோஹனா என்ற கிராமத்தில் இரண்டு அறைகள் கொண்ட தனது வீட்டில் அமர்ந்திருக்கும் அவர் ''உயர் மதிப்புமிக்க சொத்து'' என குறிப்பிடும் சான்றிதழ் ஒன்றை காட்டினார்.
''எந்த சாதியும், எந்த மதமும் இல்லை, கடவுள் இல்லை,'' என்ற பிரிவைச் சார்ந்தவர் என அவருக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ் அது.

ஹரியாணா மாநில அரசால் ஏப்ரல் 29 ஆம் தேதி வழங்கப்பட்ட இந்தச் சான்றிதழில், உள்ளூர் அதிகாரி ஒருவர் கையெழுத்திட்டுள்ளார்.
ஆனால், துரதிருஷ்டவசமாக, ஒரு வாரம் கழித்து அதை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர். ''தங்களது அதிகார வரம்பை மீறி'' சான்றிதழ் வழங்கிவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சான்றிதழைத் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டனர்.
அதைத் திருப்பித் தர மறுத்துவிட்ட ரவிக்குமார், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் அவருடைய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ''தன்னை ஒரு நாத்திகர் என கூறிக் கொள்வதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது'' என்று அரசியல்சட்டத்தின் 25வது பிரிவு கூறுகிறது என்றும், அதற்கான சான்றிதழாக சட்டபூர்வ ஆவணம் எதுவும் தேவையில்லை,'' என்றும் நீதிபதி கூறினார்.
ரவிக்குமாரின் குடும்பம் ஒடுக்கப்பட்ட பிரிவு சமூகத்தைச் சேர்ந்தது.

ஆனால் அரசின் சலுகைகள் எதையும் கேட்பதில்லை என்று அவர் உறுதி எடுத்துக் கொண்டுள்ளார்.
தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அவர் இந்த சான்றிதழைக் கோருகிறார்.
தனது பெயரின் இறுதியில் நாத்திகர் என சேர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரி உள்ளூர் நீதிமன்றத்தில் 2017 செப்டம்பரில் அவர் சட்டபூர்வ நடவடிக்கையை ஆரம்பித்தார்.

மூன்று மாதங்கள் கழித்து, 2018 ஜனவரி 2ஆம் தேதி, அவருக்கு ஆதரவாக சிவில் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் ''ரவிக்குமார் நாத்திகர்'' என பதிவு செய்து கொள்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது என அவர் தீர்ப்பளித்தார்.

பள்ளிக்கூட விலகல் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி அட்டைகளில் பெயரை மாற்றிக் கொண்ட பிறகு, ''எந்தச் சாதியும் இல்லை, எந்த மதமும் இல்லை, கடவுள் இல்லை,'' என சான்றிதழ் கோரி உள்ளூர் அதிகாரிகளை அணுகினார். அதன்படி சான்றிதழும் பெற்றார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?