விஸ்வரூப கமலஹாசன்,



ஐந்து வயதில் சினிமாவில் அறிமுகமான கமலஹாசன், சகலகலா வல்லவனாக இன்றும் திகழ்கிறார்.
அவரது கலைப்பயணம் இன்னமும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 

 நடனக்கலைஞர், பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமை கொண்ட இவர், 'உலக நாயகனாக' உச்சம் தொட்டுள்ளார். 

நவ., 7ல் சினிமா துறையில் 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

தமிழ் மண்ணின் மைந்தனான கமல், 1954 நவ., 7ல் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிறந்தார். 
ஐந்து வயதில் 'களத்துார் கண்ணம்மா'வில் அறிமுகமானார்.


1974ல் 'கன்னியாகுமரி' என்ற மலையாள படத்தில் 'ஹீரோ'வாக அறிமுகமானார். 

தமிழில் 1975ல் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் 'உணர்ச்சிகள்' படத்தில் தனி 'ஹீரோ'வாக ஒப்பந்தமானார். 'சென்சார்' பிரச்னையால் இப்படம் வெளியாக தாமதமானது. 

இதனால், ஏ.எஸ்.பிரகாசம் இயக்கத்தில் 1975 பிப்., 21ல் வெளியான 'பட்டாம்பூச்சி' தான் 'ஹீரோ'வாக கமலின் முதல் தமிழ் படம். 

அதே ஆண்டு வெளியான பாலசந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படம் திருப்புமுனை ஏற்படுத்தியது.
 1976, ஜூன் 25ல் தான் 'உணர்ச்சிகள்' 'ரிலீஸ்' ஆனது.

ஆரம்ப காலங்களில் காதல் இளவரசனாக அவதாரம் எடுத்தார்.
 சொல்லத்தான் நினைக்கிறேன்,
 நினைத்தாலே இனிக்கும்,
அவள் ஒரு தொடர்கதை, 
மன்மத லீலை, 
மூன்று முடிச்சு, 
16 வயதினிலே,
 இளமை ஊஞ்சலாடுகிறது, 
சட்டம் என் கையில், 
சிகப்பு ரோஜாக்கள்,
 நீயா,
 வறுமையின் நிறம் சிவப்பு, 
மீண்டும் கோகிலா, 
ராஜ பார்வை போன்ற படங்களில் முத்திரை பதித்தார்.

 அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளமானவர், 
அவ்வை சண்முகியில் பெண்,
 இந்தியன் படத்தில் முதியவர் என பல்வேறு தோற்றங்களில் களில் மக்களின் நெஞ்சங்களை கொள்ளை அடித்தார்.




மூன்றாம்பிறை,
 புன்னகை மன்னன், 
நாயகன், 
மைக்கேல் மதன காமராஜன்,
 குணா, 
மகாநதி, 
தேவர் மகன், 
அவ்வை சண்முகி, 
இந்தியன்,
 தெனாலி,
 தசாவதாரம், 
விஸ்வரூபம்,
 பாபநாசம் உட்பட்ட படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. 

அனைத்து மொழிகளிலும் சேர்த்து 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இளையராஜா இசையில் அதிக படங்களில் நடித்துள்ளார் கமல். 
இருவரும் இணைந்து பல 'ஹிட்' பாடல்களை கொடுத்துள்ளனர்.

பாலசந்தர் இயக்கத்தில் 23 படங்களில் நடித்துள்ளார் கமல்.

கமலுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதேவி. 
இருவரும் இணைந்து 24 படங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்:
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி .
 முதல் படம் ராஜபார்வை (1981)-கடாரம் கொண்டான் (2019) வரை 27 படங்களை தயாரித்துள்ளார்.

இயக்கிய படங்கள்:
அவ்வை சண்முகியின் இந்தி பதிப்பான சாச்சி 420,
 ஹேராம், 
விருமாண்டி, 
விஸ்வரூபம், 
விஸ்வரூபம் -2

உதவி நடன இயக்குநராக
எம்.ஜி.ஆரின் 'சங்கே முழங்கு',நான் ஏன் பிறந்தேன்,
 சிவாஜியின் 'சவாலே சமாளி',
 ஜெய்சங்கரின் 'நுாற்றுக்கு நுாறு', 
எஸ்.பி.முத்துராமனின் 'காசி யாத்திரை' உட்பட பல படங்களில் உதவி நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.


தமிழக அரசின் கலைமாமணி விருது - 1980
பத்மஸ்ரீ - 1990
கவுரவ டாக்டர் பட்டம் - 2005
பத்ம பூஷன் - 2014
பிரான்சு நாட்டின் செவாலியே விருது - 2016
ஒன்பது முறை தமிழக அரசின் திரைப்பட விருது 
மூன்று முறை  ஆந்திராவின் நந்தி விருது


நான்கு தேசிய விருது:
களத்துார் கண்ணம்மா - 1960
மூன்றாம் பிறை - 1983
நாயகன் - 1988
இந்தியன் - 1996

19 'பிலிம்பேர்'விருது
ஐந்து மொழிகளில் 19 முறை 'பிலிம்பேர்' விருது பெற்று உள்ளார். இனி 'பிலிம்பேர்' விருது தனக்கு வேண்டாம், புதியவர்களுக்கு வழங்கும்படி 2000ல் கேட்டுக்கொண்டார்.

சின்னத்திரையிலும் கால் பதித்த இவர், தனியார் 'டிவி' சேனலின் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை மூன்று முறை தொகுத்து வழங்கினார்.


தசாவதாரம் (2008) படத்தில் அமெரிக்க அதிபர் புஷ் உள்பட பத்து வேடங்களில் நடித்தவர்.


'ஆஸ்கர்' விருதுக்கு இந்தியாவில் இருந்து இவரது படங்களான நாயகன், தேவர்மகன், குருதிப்புனல், இந்தியன், ஹேராம், சுவாதி முத்யம் (தெலுங்கு), சாகர் (இந்தி) ஆகிய படங்கள் அனுப்பப்பட்டது.


சொந்த குரலில் 90க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் கமல்
இதில் சில...

'ஞாயிறு ஒளி மழையில்' - அந்தரங்கம்
'நினைவோ ஒரு பறவை' - சிகப்பு ரோஜாக்கள்
'தென்பாண்டி சீமையிலே' - நாயகன்
'சுந்தரி நீயும்' - மைக்கேல் மதன காமராஜன்
'கண்மனி அன்போடு' - குணா
'இஞ்சி இடுப்பழகி' - தேவர் மகன்
'கலக்கபோவது யாரு' - வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,

மதுரையில் 2018 பிப்., 21ல் நடந்த விழாவில் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை தொடங்கினார். 2019 ,மக்களவைத்  தேர்தல், 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் (ஓட்டு சதவீதம் 3.72) தமிழகத்தில் நடந்தஇவரது கட்சி போட்டியிட்டது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ந்நாள் ,
முன்னால்
 டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது(1844)
  போலந்தில் 2வது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது(1918)
 எட்வின் ஆம்ஸ்ட்ராங், எஃப்.எம்., ஒளிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்(1935)

 புளூட்டோனியம் முதல் முறையாக ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது(1944)
 தஜிகிஸ்தான் அரசியலமைப்பு தினம்(1994)


1947 தொலைக் காட்சி வரலாற்றில் மிக நீண்டகாலமாக(72 ஆண்டுகளாக) ஒளிபரப்பப் பட்டுக்கொண்டி ருக்கும் நிகழ்ச்சியான ‘மீட் த பிரஸ்’ முதன்முறையாக ஒளிபரப்பானது.
தொலைக்காட்சி நிலையத்திற்கு முக்கிய மனிதர்களை அழைத்து நடத்தப்படும் ‘காஃபி வித்...’ போன்ற நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி விவாதங்கள், செய்தியறிக்கையின்போது முக்கியச் செய்திக்குத் தொடர்புடையவர்களை அழைத்து கருத்துக் கேட்பது உள்ளிட்ட இன்றைய பல நிகழ்ச்சிகளுக்கு இதுவே முன்னோடி என்று கூறமுடியும்.
என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இது உண்மையில் ஒரு வானொலி நிகழ்ச்சியாகும்.
(நேஷனல் பிராட்காஸ்ட்டிங் கம்பெனி என்னும் என்பிசி என்பது நமக்கு அறிமுகமான சிஎன்பிசி-யின் தாய் நிறுவனம்! சிஎன்பிசி என்பது கன்ஸ்யூமர் நியூஸ் அண்ட் பிசினஸ் சேனல் என்பதன் சுருக்கம்!)

த அமெரிக்கன் மெர்க்குரி என்ற இதழை 1935இல் வாங்கிய லாரன்ஸ் ஸ்பைவேக் என்பவர், அதன் விற்பனையை மேம்படுத்துவதற்காக, ‘அமெரிக்கன் மெர்க்குரி பிரசண்ட்ஸ் மீட் த பிரஸ்’ என்ற நிகழ்ச்சியை, மிச்சுவல் பிராட்காஸ்ட்டிங் சிஸ்டம் என்ற வானொலியில் 1945இலிருந்து ஒலிபரப்பிவந்தார்.
 அதனால் இந்நிகழ்ச்சியை உருவாக்கியவராக அவர் குறிப்பிடப்பட்டாலும், உண்மையில், அந்த வானொலி நிலையத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த மார்த்தா ரவுண்ட்ரீ என்ற பெண்மணியே இந்நிகழ்ச்சியை வடிவமைத்தார்.
 வானொலியில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தபோதே, 1947இல் இந்நிகழ்ச்சிக்கான தொலைக்காட்சி உரிமையை ஜெனரல் ஃபுட்ஸ் என்ற நிறுவனம் வாங்கி, ‘மீட் த பிரஸ்’ என்று  பெயரைச் சுருக்கி, என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பத்தொடங்கியது.
அதைத்தொடர்ந்து, வானொலி நிலையம், தங்கள் நிகழ்ச்சிக்கு வேறு பெயர் சூட்டிக்கொண்டது. தொடக்கத்தில் 30 நிமிட பேட்டியாக இருந்த இந்நிகழ்ச்சிக்கு முதல் அழைப்பாளராக, முன்னாள் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும், குடியரசுத் தலைவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்டின் பரப்புரை மேலாளருமான ஜெம்ஸ் ஃபேர்லி அழைக்கப்பட்டார்.
அடிப்படையில், ஒருவரை மட்டும் பேட்டிகாணும் நிகழ்ச்சியான இதில், பின்னாளில் இருவர் அல்லது, பலரின் நேரடி விவாதங்களும் இடம்பெற்றன.
1980களில், பிற தொலைக்காட்சிகளின் இத்தகைய நிகழ்ச்சிகளின் (குறிப்பாக ஏபிசி தொலைக்காட்சியின் திஸ் வீக் வித் டேவிட் பிரிங்க்லி) போட்டியால் பாதிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி, அதுவரை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த  ஞாயிற்றுக்கிழமை நண்பகல் நேரத்திலிருந்து, காலை 9மணிக்கு மாற்றப் பட்டதுடன், 1992இல் 60 நிமிடங்களாவும் நீட்டிக்கப்பட்டது.
 அமெரிக்காவின் குடியரசுத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய மனிதர்கள் அனைவரும் ஒருமுறையாவது இந்நிகழ்ச்சியில் தோன்றிவிடுவார்கள் எனுமளவுக்கு முக்கியத்துவத்துடன், இன்றுவரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

- அறிவுக்கடல்

----------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ’’விவாதத்திற்கே இடமின்றி இயல்பாக...

Read more at: https://tamil.asianetnews.com/politics/not-enough-to-degrade-cinema-come-on-degrading-politics-attack-rajini-q0hrpg?utm_source=izooto&utm_medium=push_notifications&utm_campaign=Politics&utm_content=&utm_term=
திருவள்ளுவர்..
இந்த உருவபடத்திற்கு காப்பிரைட் தரவேண்டுமெனில் அது கலைஞருக்குதான் தரவேண்டும்..உருவமே இல்லாமல் இருந்த வள்ளுவனக்கு உருவத்தை வரைய செய்து அதை உலகுக்கு அறிமுகம் செய்தவர்.. அதை நாடும் மக்களும் ஏற்கும் விதத்தில் உருவாக்கியவர் ..
திருவள்ளுவனையும் குறளையும் வெகுமக்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு கலைஞரின் அரசிற்கு உண்டு
பேருந்துகளில் கடவுள் படங்கள் தான் இருக்கும் அதை மாற்றி திருக்குறளை
எழுத செய்து மக்கள் படிக்க செய்தவர் கலைஞர்.
வான் புகழ் வள்ளுவனுக்கு கோட்டம் அமைத்தவர் அதை தலைநகரில் அமைத்தவர்.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குமென எழுதிய வடிவம் தான்
உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் சின்னம்
வேலூரில் திருவள்ளுவர் பெயரில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைத்தவர் கலைஞர். கல்விகூடங்களில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தி மாநில மாவட்ட வாரியாக பரிசு தந்த ஊக்கமளித்தவர் .. குமரியில் வானுயர சிலையை வள்ளுவனுக்கு வடித்து தெற்கை திரும்பிபார்க்க வைத்தவர் கலைஞர் ..


வள்ளுவனுக்கு காவி உடை அணிவிக்கும் சங்கிகள் முதலில் திருக்குறளை படிக்கவேண்டும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" அறிந்தால் இந்த சாதிமத நிலையில் இருந்து மீண்டு வருவீர்கள் .. 

வள்ளுவனை சொந்தம் கொண்டாட நினைக்கிறவர்கள் முதல் வள்ளுவனை அறிந்திருக்கவில்லை அல்லது வள்ளுவனை வெகு மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை இவர்களிடம் எத்தனை மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யபட்டிருக்கிறதென கேளுங்கள் 
தெரியாது திருக்குறளையாவது படித்திருக்கிறார்களா என்றால் அதுவும் கிடையாது .. வள்ளுவனை ஒரு மத கோட்பாட்டிற்குள் அடைக்க நினைக்கிறார்கள் பாவம் பிழைகள் ..
..
இந்த நேரத்தில் ஒரு தகவலை தர எண்ணுகிறேன் உலகத்தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் குவைத்..
சார்பில் வரும் நவம்பர்29 வெள்ளியன்று குவைத் ரிக்காய் சிம்பொனி அரங்கில்
திருக்குறள் மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறோம் எனது ஆசான் மானமிகு. ச.செல்லபெருமாள் அவர்கள்
தலைமையில் இயங்கும் பெரியார் நூலகம் இதை ஏற்பாடு செய்கிறது ..
திருக்குறளை அரபிமொழியில் மொழிபெயர்த்த பேராசிரியர் டாக்டர். அ.ஜாஹிர் உசேன் ,
சென்னை பல்கலைகழக அரபு உருது துறை பேராசிரியரும் திராவிட கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றனாரும் கலந்துக்கொள்கிறார்கள் அதற்கான பணிகளில் நானும் இணைந்து செயல்படுகிறேன் ..

வள்ளுவனை உலகுக்கு கொண்டு சேர்ப்போம் ..

குறுகிய வட்டத்திற்குள் எல்லாம் அடைத்திட முடியாத பெருவெள்ளம் .. எடுக்க எடுக்க வற்றாத அறிவெனும் ஊற்று அறிவுடை மாந்தார்க்கு பெருமழையாய் பொழியும் வானம் .. வள்ளுவனின் புகழ் பாட காத்திருப்போம் ஆலஞ்சியார்

--------------------------------------------------------------------------------------------------------------------------------
 அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிவிட்டது.

இது மேலும் வலுவடைந்து நாளை புயலாக மாறுகிறது.

அப்போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வரை வங்கக்கடலில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம்.

புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்லும்.
இதன் காரணமாக தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,
 ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் இவ்வாறு கூறினார்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 வேலை வாய்ப்புகள் 

 இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணி 
இந்தியன் வங்கியில் பாதுகாவலர் பணிக்கான 115 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 
பணியின் பெயர்: Security Guard-Cum-Peon
காலியிடங்கள்: (தமிழ்நாடு) 48 (UR-23, OBC-12, SC-9, EWS-4)
சம்பளவிகிதம்: ரூ.9,560 - 18,545
வயதுவரம்பு: 1.7.2019 தேதியின்படி 45 வயதிற்குள்ளிருக்க வேண்டும். SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும் உச்ச வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.indianbank.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 8.11.2019.
---------------------------------------------------------------------------------------------------------------------

  SAIL நிறுவன காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான SAIL நிறுவனத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1. பணியின் பெயர்: Operator - Cum -Technician(Trainee) (OCT-Trainee)
காலியிடங்கள்: 123

சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
2. பணியின் பெயர்: Attendant - Cum -Technician(Trainee) (ACT-Trainee)
காலியிடங்கள்: 53
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
3. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Mining Mate - 30
II) Minig Foreman - 14
III) Surveyor - 4
சம்பள விகிதம்: ரூ.15,830 - 24,110
4. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: 
I) Jr.Staff Nurse (Trainee) - 21
II) Pharmaist - 7
சம்பள விகிதம்: ரூ.16,800 - 24,110
5. பணியின் பெயர்: Sub Fire Station Officer
காலியிடங்கள்: 8 (UR-5, ST-2, EWS-1
சம்பள விகிதம்: ரூ. 16,800 - 24,110
6. பணியின் பெயர்: Fireman Cum Fire Engine Driver
காலியிடங்கள்: 36 (UR-14, SC-4, ST-12, OBC-2, EWS-4)
சம்பள விகிதம்: ரூ.15,830 - 22,150
வயது வரம்பு: அனைத்து பணிகளுக்கும் 18 முதல் 28 வயதிற்குள்ளிருக்க வேண்டும். வயதுவரம்பு 15.11.2019 தேதியின்படி கணக்கிடப்படும். வயதுவரம்பில் SC/ ST/ OBC/ PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: SAIL நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் உடற்திறன் தேர்வு, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ACT - Trainee, Fireman & Engine Driver, Mining Mate பணிகளுக்கு ரூ.150 செலுத்த வேண்டும். இதர பணிகளுக்கு ரூ.250 செலுத்த வேண்டும். (பொது/ OBC/ EWS பிரிவினர்கள் தவிர இதர பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது) இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sail.co.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2019.
மேலும் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியில் பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------

 “Border Roads Organisation” 
ராணுவத்தின் கீழ் செயல்படும் -ல் உள்ள 540 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியின் பெயர்: Multi Skilled Worker (Driver Engine Static)
காலியிடங்கள்: 540 (UR-221, SC-81, ST-40, OBC-145, EWS-53)
சம்பளவிகிதம்: ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.

SC/ ST பிரிவினர்களுக்கு 5 வருடமும், OBC பிரிவினர்களுக்கு 3 வருடமும், PWD, EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechanic Motor/ Vehicles/ Tractors தொழிற்பிரிவில் ITI படிப்பை முடித்து அப்ரண்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தேர்வு நடைபெறும் இடம்: GREF Centre, Dighi Camp, Alandi Road, Pune - 411015.
உடற்தகுதி: உயரம் 157 செ.மீ., எடை 50 கிலோ, மார்பளவு 75 செ.மீட்டரும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.bro.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune - 411015.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 20.11.2019. மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள்  
மற்றும் வங்கிகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலியிடங்கள்:  300
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும். BC/ BCM/ MBC/ DC/ SC/ SCA/ ST/ PWD/ EX-SM பிரிவினர்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. பொதுப்பிரிவைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருட சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர்களுக்கு 48 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:  ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை SBI வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC/ SCA/ ST/ PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tncoopsrb.in என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 22.11.2019
மேலும் கூட்டுறவு நிறுவனத்தின் வகை, காலியிடங்கள், சம்பளம், பணியின் பெயர், காலியிடப்பகிர்வு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியை பார்க்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
குழியை   இவனை உள்ளே தள்தது தப்பு .
------------------------------------------------------------------------------------------------------------------------------------

’’விவாதத்திற்கே இடமின்றி இயல்பாக யாரும் ஒத்துக் கொள்வார்கள் - ரஜினிகாந்த் வெகுஜன ஈர்பில் வெற்றியின் ...

Read more at: https://tamil.asianetnews.com/politics/not-enough-to-degrade-cinema-come-on-degrading-politics-attack-rajini-q0hrpg?utm_source=izooto&utm_medium=push_notifications&utm_campaign=Politics&utm_content=&utm_term=
’’விவாதத்திற்கே இடமின்றி இயல்பாக யாரும் ஒத்துக் கொள்வார்கள் - ரஜினிகாந்த் வெகுஜன ஈர்பில் வெற்றியின் ...

Read more at: https://tamil.asianetnews.com/politics/not-enough-to-degrade-cinema-come-on-degrading-politics-attack-rajini-q0hrpg?utm_source=izooto&utm_medium=push_notifications&utm_campaign=Politics&utm_content=&utm_term=

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?