முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதியின் வேகம்.

விரைவு நீதிமன்றங்கள் 2000ஆவது ஆண்டில் தொடங்கப்பட்டது. கீழைமை நீதிமன்றங்களில் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து விசாரிக்க இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. விரைவான நீதியை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்த நீதிமன்றங்களில் பல வழக்குகள் தற்போது தேங்கி நிற்கின்றன.
வழக்குகளில் நீதி வழங்க பத்து ஆண்டுகள் வரை ஆகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் நிஜம். சமீபத்தில் 'திஷா' வழக்கில் ஒரு விரைவு நீதிமன்றத்தை அமைப்பதன் பின்னணியில் நாட்டில் பரவலான விவாதம் நடைபெற்றது.
அறிவித்துள்ளது .அந்த வகையில், நாட்டில் விரைவான நீதியை வழங்கும் முதல் இரண்டு மாநிலங்களில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. அதே நேரத்தில் பீகார் மற்றும் தெலுங்கானா ஆகியவை மோசமான நிலையில் உள்ளன

இதற்கு மற்றொரு  உத்தரப் பிரதேசம். இந்தாண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் 6 லட்சம் வழக்குகள் விரைவு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை உத்தரப் பிரதேசத்தில் உள்ளன.
தேசிய குற்றவியல் புள்ளிவிவர பணியத்தின் அறிக்கை, கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில், “கிட்டத்தட்ட 12 சதவீத வழக்குகளில், மாநில விரைவு நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்க 10 ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொள்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
விரைவு நீதிமன்றங்கள் என்ற பெயரில் வழக்குகளை ஜவ்வாக இழுக்கும் மாநிலமாக பிகார் திகழுகிறது. இங்கு மூன்றில் ஒரு பங்கு வழக்குகளை தீர்க்க, பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் ஊழியர் பற்றாக்குறை மிக முக்கிய காரணம்.

நாட்டில் தற்போது 581 விரைவு நீதிமன்றங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான நீதிமன்றங்கள் ஊழியர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக நாடு முழுவதும் 1023 விரைவு நீதிமன்றங்கள் நிர்பயா நிதியில் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------













காவலன்

2012–ல் டெல்லியில் நிர்பயா என்ற இளம்பெண் காமுகர்களால் கதற கதற கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பிறகு மத்திய அரசாங்கம் உருவாக்கியுள்ள நிர்பயா நிதியில் இருந்து மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்புக்காக வகுக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப் படுகிறது. அந்த வகையில் தமிழக அரசுக்காக 19 ஆயிரத்து 68 கோடியே 36 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 600 கோடி ரூபாய் தமிழக அரசு பயன்படுத்தி யதாக பயன்பாட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்காக அனுமதிக்கப்பட்ட முழுத்தொகையையும் பெறவும், அதற்குரிய பல திட்டங்களை வகுத்து, அதற்கான முழுத்தொகையையும் செலவழிக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

இந்த நிலையில், தமிழக காவல்துறையில் இப்போது பெண்கள் கையில் வைத்திருக்கும் செல்போன் மூலமாகவே ஆபத்து நேரங்களில் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களுக்கும், அவர்களது பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என்ற வரிசையில் மூவருக்கும் தகவல் கொடுக்க ‘காவலன்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக ‘காவலன்’ செயலியை அனைத்து பெண்களும் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்தால் அவர்கள் செல்போனே ஆபத்து நேரங்களில் பாதுகாப்பு ஆயுதமாக மாறும். இந்த செயலியை அனைத்து ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்களிலும் பதிவிறக்கம் செய்ய முடியும். ஏதாவது ஆபத்து நேரங்களில் காவல்துறையின் அவசர உதவிக்கு அவசர நேரத்துக்கான எஸ்.ஓ.எஸ். பட்டனை ஒருமுறை தொட்டால் போதும் இல்லையெனில் 

3 முறை உதறினால் போதும். ஒரே நேரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அபாய மணியும், மற்ற 3 எண்களுக்கு அவசர செய்தியும் சொல்லும். இதை பயன் படுத்தும் பெண்ணின் இருப்பிட தகவல்கள் மற்றும் அந்த இடத்தின் வரைபடம் போலீசார் உள்பட 4 எண்களுக்கும் தானாகவே பகிரப்படும். இதுமட்டுமல்லாமல், இந்த அவசரகால பட்டனை தொட்டவுடன் செல்போனில் உள்ள கேமரா தானாகவே 15 வினாடிகள் வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பிவிடும். அலை தொடர்பு இல்லாத இடங்களிலும் இந்த எச்சரிக்கை செய்தியை அனுப்பும் வசதி உள்ளது. 

சென்னை நகரில் இந்த ‘காவலன்’ செயலியை பெண்கள், முதியோர், சிறு குழந்தைகள் மத்தியில் பிரபலப்படுத்தும் முயற்சியில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இந்த பிரிவுக்கான துணை கமி‌ஷனர் எச்.ஜெயலட்சுமி ஆகியோர் தீவிர முயற்சி எடுத்துள்ளனர். சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த ‘காவலன்’ செயலியை பதிவிறக்கம் செய்து இருக்கிறார்கள். தொடங்கிய 2, 3 நாட்களிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இழைக்க முயற்சி செய்யப்படும் நேரத்திலேயே ‘காவலன்’ செயலி மூலம் அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த ‘காவலன்’ செயலி நிச்சயமாக வரவேற்புக்குரியது, பாராட்டுக்குரியது. போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, இந்த ‘காவலன்’ செயலி குறித்த விழிப்புணர்வை அனைத்து காவல் நிலையங்களில் உள்ள போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். சென்னை நகர போலீசாரை போல, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண்களும், முதியோர்களும், இளம்பெண்களும், சிறார்களும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசாரின் உதவிக் கரமான இந்த ‘காவலன்’ செயலியை பயன்படுத்த வேண்டும். ‘ஸ்மார்ட் போன்’ இல்லாதவர்கள் அவசர காலத்தில் 100, 1091, 1098 ஆகிய எண்களோடு தொடர்பு கொள்ளலாம் என்பதையும் விளம்பரப்படுத்த வேண்டும். ‘காவலன்’ செயலி போல பெண்கள் பாதுகாப்புக்காக நிர்பயா நிதியில் இருந்து மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
----------------------------------------------------------------
பற்றி எரியும் வடகிழக்கு
----------------------------


ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்துள்ளனர். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்கள் பற்றி எரிகிறது. பெரும் பதட்டம் நிலவுகிறது.
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதை சமாளிக்க அஸ்ஸாம், திரிபுராவுக்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தாமல் போராட்டக்காரர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். போராட்டம் நடத்தும் இடம் வழியாக சென்ற ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்தியதால் போலீஸார் லேசாக தடியடி நடத்தி கலைத்தனர். மோதல் போக்கு இந்தநிலையில் அஸ்ஸாமில் புதன்கிழமை தெரு வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் கூடினர். மாணவர்களும் இந்த போராட்டத்தில் உள்ளனர். போலீஸாருடன் மோதல் போக்கில் ஈடுபட்டனர்.
துணை ராணுவம் சட்டம் ஒழுங்கை காக்க ஏற்கெனவே ஜம்மு காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கத்தை அடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த 2000-க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் வடகிழக்கு மாநிலங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிஆர்பிஎஃப், எல்லை பாதுகாப்பு படையினர், எஸ்எஸ்பி உள்ளிட்டோரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கண்ணீர் இந்த போராட்டம் அஸ்ஸாம் தலைமை செயலகம் முன்பும் நடைபெற்றது. ஊர்வலமாக சென்ற போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்தெறிந்தனர். அங்குள்ள வாகனங்களை தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் தடியடி நடத்தினர்.
இணையதள சேவைகள் வன்முறை களமாக மாறிய அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் நீடித்து வருகிறது. மேலும் இன்று இரவு முதல் அஸ்ஸாமில் இணையதள சேவைகள் முடக்கப்படுகிறது. குவாஹாத்தியில் உள்ள திப்ருகார் மாவட்டத்திலும் போராட்டக்காரர்கள் மீது ரப்பர் குண்டுகளை வீசினர். பதிலுக்கு போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் நிருபர் ஒருவர் காயமடைந்தார்.
குடியுரிமைத் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும். குடியிருப்பு மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேச மக்களின் ஊடுருவலுக்கு எதிராக நீண்ட காலம் போராட்டம் நடத்தி வரும் அசாம் மக்கள், இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?