அவசரப் பிரிவில்

இந்திய பொருளாதாரம் ஐசியூ நோக்கி செல்வதாக பொருளாதார வல்லுனர் கூறியுள்ளார்.
அவர் மோடி அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பிரபல ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச வளர்ச்சி மையத்திற்காக அரவிந்த் சுப்பிரமணியன் தயாரித்துள்ள வரைவு அறிக்கையில் இத் தகவல் இடம் பெற்றுள்ளது.
 தற்போது இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு வழக்கமானது அல்ல என்று கூறியுள்ள அரவிந்த், வாராகடன், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு என்று குறிப்பிட்டுள்ளார்.
பணமதிப்பிழப்புக்கு பின் மோசமாக பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் துறையில் இருந்து திருப்பி செலுத்தப்படாத கடன் மட்டும் 5 லட்சம் கோடி என்று கூறியுள்ள அரவிந்த், இதில் 50% வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியது என்பதால், அந்த நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

 கடந்த ஜூன் மாத நிலவரப்படி, நாட்டின் முக்கிய 8 நகரங்களில் மட்டும் 10 லட்சம் கோடி மதிப்புள்ள குடியிருப்புகள் விற்கப்படாமல் தேங்கி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
 மத்திய அரசின் சார்பு நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எப் கடனில் மூழ்கிய பிறகே ரியல் எஸ்டேட் துறை மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதனால் கடந்த ஆண்டு 20 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள், நடப்பு நிதியாண்டில் கடன் கொடுப்பதை கிட்டதட்ட முற்றிலும் நிறுத்திவிட்டதாக அரவிந்த் சுப்பிரமணியம் கூறியுள்ளார்
 வாரா கடன், பணமதிப்பிழப்பு போன்றவை இந்திய பொருளாதாரத்தை பின்னோக்கி வேகமாக தள்ளிக் கொண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், விலை உயர்வு மற்றும் கடன் கிடைக்காதது போன்றவை அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது நிலை தொடர்ந்தால் 1991ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை மீண்டும் ஏற்படும் என்றும் அரவிந்த் சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

_-------------------------------------------------------------
காலத்தின் கட்டாயம்.
19 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கடவுள்தான் மனித இனத்தை படைத்தார் என மக்கள் நம்பினர்.
பிரிட்டனின் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் மக்களுக்கு அறிமுகம் ஆகும்வரை எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என அனைவரும் நம்பினர்.
டார்வின்தான் முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என விளக்கினார்.
மனிதனின் தோற்றம் குறித்து புதிய விளக்கம் அளித்தார். இந்த விளக்கம் தான் வரலாற்றில் டார்வினை முக்கிய விஞ்ஞானி ஆக்கியது.
தனது ஆராய்ச்சியை பரிசோதித்து செம்மைப்படுத்த, 20 ஆண்டுகள் ஆனது. 22 வயதில், தான் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை விட்டுவிட்டு நீண்ட பயணம் மேற்கொண்டார்.
எச்.எம்.எஸ் பீகிள் என்ற கப்பலில் ஏறி டார்வின் தென் அமெரிக்காவிற்கு பயணித்தார்.
மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து தனக்கு முதல் தடயம் அளித்த தொல்லுயிர் படிவங்களை அங்கு சேகரித்தார்.
டார்வின் கலபகோஸ் தீவுகள் சென்றபோது, பிரம்மாண்ட அளவிலான ஆமைகளை அங்கு கண்டார்.
அந்த ஆமைகள் வெவ்வேறு தீவுகளில், வெவ்வேறு விதமான தனித்துவ பண்புகளோடு விளங்கின.
எங்கெல்லாம் நிறைய உணவு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தனது கழுத்தை சுருக்கிக்கொண்டன. ஆனால், வறண்ட தீவுகளில் நீளமான கழுத்துடன் காணப்பட்டன.
புதிய வகை விலங்குகளை உருவாக்க எப்படி கலப்பினத்தை ஆர்வலர்கள் உருவாக்குகிறார்கள் என்பதை டார்வின் கவனிக்க ஆரம்பித்தார்.
பிழைப்பதற்கு இயற்கையாகவே போராட வேண்டியுள்ளது என்பதை உணர்ந்தார்.
எந்த இனம் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறதோ அந்த இனம் உயிர் வாழ முடியும்.
தன்னை மாற்றிக்கொள்ளாத இனம் அடுத்த சந்ததியினரே இல்லாமல் மறைந்து விடுகிறது.
மிகவும் ஆரோக்கியமாக வாழும் உயிரினங்கள் தங்கள் பண்புகளை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்கின்றனர்.
மாற்றத்தால் புதிய இனமாக மாறாத வரை தங்கள் குட்டிகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
ஆமைகளில் உள்ள வேறுபாடுகள் பரிணாம வளர்ச்சியின் விளைவாகும்.
ஒருபுறம் தீவில், நீண்ட கழுத்துடன் உள்ள உயிரினங்கள், உணவுக்காக உயர்ந்த இடம் வரை செல்ல முடியும். மற்றொருபுறம் மிக குறுகிய கழுத்து உள்ள உயிரினங்கள் தரைமட்டத்தில் உள்ள புல் செடிகளை உண்டு, எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள முடியும்.
மேலும் அனைத்து உயிரினங்களும் ஒரு பொதுவான மூதாதையர் இனத்தில் இருந்து உருவானது என டார்வின் கூறுகிறார்.
அப்போதிலிருந்து இந்த கிரகத்தில் வாழும் உயிரினங்களின் வாழ்க்கை பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்தது.
டார்வின் 1859ம் ஆண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த தனது புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு அறிவியலுக்கு அப்பாற்பட்ட பிரபலம் ஆனார்.
அவரது கண்டுபிடிப்புகள் பிரிட்டனின் 19 ஆம் நூற்றாண்டின் ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையை உலுக்கியது.
பன்முகத்தன்மை கடவுளிடம் இருந்து வந்தது அல்ல, அறிவியலில் இருந்து வந்தது என விளக்கம் அளித்து மேலும் ஆராய்ச்சி செய்வதற்கான வழியை வகுத்தவர் டார்வின்.
எல்லா உயிரினங்களையும் வைக்கும் அதே தளத்தில் தான் மனிதனையும் டார்வின் வைத்தார்.
அதே சமயத்தில், பரிணாம வளர்ச்சி நம்பிக்கையோடு தொடர்புடையது என கத்தோலிக்க தேவாலயம் அறிவித்தது.
இன்று, 160 ஆண்டுகளுக்குப் பிறகு டார்வினின் கோட்பாடு பரவலாக அறியப்படுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது உண்மை என்பதை நாம் அறிவோம். கிரகம் மாறிக்கொண்டே இருக்கிறது, நாமும் அவ்வாறே பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

_---------------------------
அதிசயம் செய்ய பயமா?
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தீவிரப் போராட்டம் நடைபெற்று வருவதால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேகாலயா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்கள் தவிர்த்து ஹிந்துக்கள், சீக்கியா்கள், பெளத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
இதற்கிடையே, குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் போராட்ட களமாக மாறியுள்ளன. இது வெள்ளிக்கிழமை டெல்லியிலும் பரவியது. இதனால் நாடெங்கும் அசாதாரன சூழ்நிலை உறுவாகியுள்ளது.
இதன் காரணமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மேகாலயா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருகிற 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அமித் ஷா, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிற்கு செல்லவிருந்தார். ஆனால், தற்போது நிலைமை சீராக இல்லாததால், அமித் ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------+

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?