இந்தியாவை வல்லரசாக்கப் போகும்

அறிவியல்  ஞானிகள்
ர்ஜுனன் போரில் அணுசக்தி கொண்ட அம்புகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்த மேற்கு வங்க ஆளுனர் ஜக்தீப் தன்கர் முதல், விநாயகருக்கு யானைத்தலையை ஒட்ட வைத்த பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பம், ஆதிகாலத்திலும் இந்தியாவில் இருந்தது என்று உறுதிபடக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி வரை பாஜக-வின் அறிவியல் அறிஞர்கள் படை விரிவடைந்து செல்கிறது.
ஒவ்வொரு மேற்கத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளும் ஏற்கெனவே வேதங்களிலோ அல்லது மகாபாரத்திலோ இருப்பதாக வலியுறுத்தும் தலைவர்களைக் கொண்டுள்ளது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி. இந்த தலைவர்களை இரண்டு பிரிவினராகப் பிரிக்கலாம்.
  1. முதல் வகையினர், காரண – காரியங்களை பரவவிடாமல் தடுப்பவர்களாகவும், அனைத்து அறிவியலையும் கைவிடுபவர்களாகவும் இருக்கின்றனர். அல்லது, அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளும், அறிவும் ஏற்கெனவே மகாபாரதத்திலும் வேதங்களிலும் அல்லது பண்டைய இந்தியாவில் அறியப்பட்டவை, நடைமுறைப்படுத்தப்பட்டவை என்று கூறுபவர்கள்.
  2. இரண்டாவது வகையினர், தொடர்ந்து பசுக்களையும், அவற்றின் சிறுநீரையும் சாணியையும் போற்றிப் புகழந்து கொண்டிருப்பவர்கள்.
பாஜக அறிவியல் அறிஞர்கள் குறித்த டெலிகிராப்-ன் கையேடு :



இந்துத்துவ ‘விஞ்ஞானிகள்’ (கேலிப்படம் – தியாஸ் தாஸ். நன்றி : டெலிகிராப் இந்தியா)

ஜக்தீப் தன்கர் (மேற்குவங்க கவர்னர்) :
கடந்த ஜனவரி 14, 2020 அன்று 45-வது கிழக்கிந்திய அறிவியல் காட்சியில், “ராமாயண காலத்தில் பறக்கும் இயந்திரங்கள் இருந்ததாகவும், அர்ஜுனன் பயன்படுத்திய அம்புகள் அணுசக்தி கொண்டவையாக இருந்தன என்றும் கூறி பார்வையாளர்களை  திடுக்கிடச் செய்தார். “வானூர்திகள் 1910 அல்லது 1911-ம் ஆண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது. நாம் நமது இலக்கியங்களுல் நுழைந்தால் ராமாயணத்திலேயே நாம் விமானங்களைக் காணலாம். மகாபாரதத்தில் அர்ஜுனன் பயன்படுத்திய அம்புகள் அணுசக்தி கொண்டவையாக இருந்தன”
பிப்லப் தேப் (திரிபுரா முதல்வர்) :
கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மகாபாரதத்தைப் பற்றி பேசிய திரிபுரா முதல்வர், பாரதப் போர் நடந்திருக்கும் போது அங்கு நடப்பவை அனைத்தும் உடனுக்குடன் கண் இல்லாத மன்னனான திருதிராஷ்டிரனுக்கு தெரியவந்தது; இது அந்தக் காலத்திலேயே செயற்கைக் கோள் தொலைதொடர்பும், இணையமும் இருந்ததைக் காட்டுகிறது” என்று கூறியிருந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் சிவில் (குடிமையியல்) சேவகர்களாவதற்கு இயந்திரப் பொறியாளர் மாணவர்களை விட சிவில் (கட்டிடக்கலை) பொறியாளர் மாணவர்களே பொறுத்தமானவர்கள் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ந்த்குமார் ஹெக்டே (முன்னாள் திறன் மேம்பாட்டு மத்திய அமைச்சர்) :
சமஸ்கிருதத்தின் தீவிர விசிறியான இவர் கடந்த பாராளுமன்றத்தில் சமஸ்கிருதத்தில்தான் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன்-21 அன்று சமஸ்கிருத மொழியே வருங்காலத்தைய சூப்பர் கம்யூட்டர்களின் மொழியாக இருக்கும் என்ற பார்வைக்கு உலகம் முழுவதும் பல அறிஞர்கள் வந்தடைந்துள்ளனர் என்று கூறியிருக்கிறார். ஆனால் தப்பித்தவறி கூட அந்த அறிஞர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.
நரேந்திர மோடி (இந்தியப் பிரதமர்) :
கடந்த அக்டோபர் 2014 அன்று மும்பை மருத்துவர்கள் முன்னிலையில் பண்டைய வேத காலத்துக்குப் பயணித்த மோடி, “நாம் வான்வெளி அறிவியலைப் பற்றி பேசுகையில், நமது முன்னோர்கள் வான்வெளி அறிவியலில் தங்களது பெரும் திறனைக் காட்டியுள்ளனர். ஆரியபட்டா சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சொல்லிச் சென்றதை அறிவியலாளர்கள் இன்று அங்கீகரித்துள்ளனர். நான் சொல்லவருவது என்னவென்றால், நாம் ஏற்கெனவே இத்தகைய திறனைக் கொண்டுள்ளோம்; அவற்றை நாம் மீண்டும்பெற வேண்டும்.” என்று பேசினார்.
திரிவேந்திர சிங் ராவத் (உத்தரகாண்ட் முதலமைச்சர்) :
கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 27 அன்று, உலகிலுள்ள விலங்குகள் சாம்ராஜ்ஜியத்தில் ஆக்சிஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியே விடும் ஒரே விலங்கின பசு மட்டுமே என்று புதிய திருப்புமுனைக் கண்டுபிடிப்பை வெளியிட்டார். மேலும் பசுவுக்கு அருகில் வாழ்ந்து வருவது காசநோயைக் குணப்படுத்தும் என்றும் தெரிவித்தார். என்ன…! சிறப்பாக குணமாக வேண்டுமெனில் பசுவுக்கு எவ்வளவு அருகில் வாழ வேண்டும் என்பதை மட்டும் அவர் தெரிவிக்கவில்லை. மற்றொரு நிகழ்வில் கர்பிணிப் பெண்கள் அறுவை சிகிச்சை மகப்பேறைத் தடுக்க பகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கருட கங்கா-வில் இருந்து வரும் குடிநீரைக் குடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ரஞ்சித் ஸ்ரீவத்சவா (உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்) :
பசுக்கள் அனைத்தும் இந்துக்கள் என்றும் அவை இறந்ததும் அவற்றை புதைக்கக் கூடாது. புதைத்தல் என்பது முசுலீம்களின் பண்பாடு. பசுக்கள் இறந்தால் அதன் உடலை வெந்நிறத் துணிகளால் சுற்றி, இந்து முறைப்படி தீயிட்டு எரிக்க வேண்டும் அல்லது மின் தகன மேடையில் இட்டு எரிக்கப்பட வேண்டும். அதற்காக தனியாக மயானங்கள் கட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பேச்சில் மறக்க முடியாத பகுதி எதுவெனில், “முசுலீம்களின் வீடுகளில் இருக்கும் பசுக்களை திரும்ப எடுத்துக் கொள்ளவேண்டும். நம் வீட்டுப் பெண்கள் முசுலீம்கள் வீட்டுக்குச் செல்வதை லவ் ஜிகாத் என்று நாம் பார்க்கும்போது, நாம் தாயாகக் கருதும் பசுக்கள் அவர்களது வீட்டில் இருப்பதையும் லவ் ஜிகாத் என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டும் ? பசுக்களுக்குப் பதில் அவர்கள் ஆடுகளை எடுத்துக் கொள்ளட்டும். ஆடுதான் அவர்களது தாய்” என்று பேசினார்.
கிரிராஜ் ஜிங் (மீன்வளம், கால்நடை – பால்வளத்துறை மத்திய அமைச்சர்) :
இவர் பேசியதைப் பற்றி பட்டியலிட இடம் பத்தாது. கடைசியாகக் கடந்த முறை (ஜனவரி14, 2020 அன்று) அறிவியலாளர்களிடம் மாட்டு மூத்திரம் மற்றும் சாணியை மேலும் ஆய்வுக்கு உட்படுத்துமாறும், இதன் மூலம் பசுக்கள் பால்தருவதை நிறுத்திய பின்னும் அவை கால்நடை விவசாயிகளுக்கு பணம் ஈட்டித் தரும் என்றும் அதனால் பால் கொடுப்பதை நிறுத்திய பசுக்களைக் கைவிடுதல் குறையும் என்றும் கூறியுள்ளார்.
சத்யபால் சிங் (உயர்கல்வி அமைச்சர்) :
மும்பையின் முன்னாள் போலிசு கமிசனரான சத்யபால் சிங், டார்வினின் பரிணாமக் கொள்கையைக் கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் பலமுறை கையில் எடுத்திருக்கிறார். பார்லிமெண்டில் அவர் பேசுகையில், “நமது கலாச்சாரம் நம்மை ரிஷிகளின் குழந்தைகள் எனக் கூறுகிறது. நான் நாம் குரங்குகளின் குழந்தைகள் என நம்புபவர்களை புண்படுத்த விரும்பவில்லை; ஆனால் நமது கலாச்சாரத்தின்படிநாம் ரிஷிகளின் குழந்தைகள்” என்றார். இதற்கு பாராளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்தார். தான் ஒரு ஹோமோசேப்பியன் என்றும் தமது பெற்றோர்கள் ‘சூத்திரர்கள்’ என்றும் குறிப்பிட்டார். ஆனால் பாராளுமன்றத்தில் சத்யபால் சிங்கின் படையினர் பரிணாமக் கொள்கை பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்படவேண்டும் என்றனர். அவரது முத்தாய்ப்பான வாதம் : குரங்கு மனிதனாக மாறியதற்கு எந்த ஒரு நேரடியான சாட்சியும் இல்லை.
பிரக்யா சிங் தாக்கூர் (போபால் எம்.பி – மாலேகான் குண்டுவெடுப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்) :
அனைத்து பாஜக தலைவர்களுமே பசுமாதாவின் முன் மண்டியிட்டு இருந்தார்கள் என்றாலும், பசு குறித்த விவாதத்தின் தலைசிறந்த நபர் பிரக்யாசிங் தாக்கூர் தான். மாட்டு மூத்திரத்தைக் குடித்ததால்தான் தனது புற்று நோய் குணமானதாகக் குறிப்பிட்டார். “நான் பசு மூத்திரம், பஞ்ச கவ்யம் மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் ஆகியவற்றை உட்கொண்டதன் மூலம்தான் புற்றுநோயிலிருந்து தானாக குணமடைந்தேன்” என்றார்.
பஞ்சகவ்யம் என்பது பசுவின் சாணமும், மூத்திரமும் பாலும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த கலவையாகும். அவரது மருத்துவர்கள் இதனை மறுத்து அறிக்கை விட்டனர். அவருக்கு புற்றுநோயைக் குணமாக்க, மார்பக நீக்கம் உட்பட சில அறுவை சிகிச்சைகள் செய்ததாகக் குறிப்பிட்டனர். பசுவுடன் நெருங்கியிருப்பதன் மூலம் பிற உடல்நலப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். பசுவை குறிப்பிட்ட வகையில் தேய்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை சரி செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்ஷ் வர்தன் (அறிவியல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர்) :
அல்ஜீப்ரா மற்றும் பித்தகோரஸ் தேற்றத்தையும் இந்தியாதான் கண்டுபிடித்தது என்றும், பின்னர், பிறர் அதை தங்களது கண்டுபிடிப்பாக அறிவித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்து விட்டது என்றும் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் கூறியிருக்கிறார். “நமது அறிவியலாளர்கள் பித்தகோரஸ் தேற்றத்தைக் கண்டுபிடித்தனர். நாம் அந்தப் பெருமையை கிரேக்கர்களுக்குக் கொடுத்துவிட்டோம். அதே போல, அல்ஜீப்ரா கண்டுபிடிப்பின் பெருமையை அரேபியர்களுக்குக் கொடுத்துவிட்டோம்.” என்றார்.
2018-ம் ஆண்டு மார்ச் மாதம், ஸ்டீபன் ஹாக்கிங் இறந்த பின்னர் மீண்டும் களத்தில் இறங்கிய ஹர்ஸ் வர்தன், ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியை விட சக்தி வாய்ந்த அறிவியல் கொள்கைகளைப் பற்றிய அறிவு வேதங்களில் பொதிந்திருக்கும் என்று ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தார். இது குறித்த விவரங்களை பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அதைக் கண்டுபிடிப்பது பத்திரிகையாளர்களின் பணி என்று கூறினார். கொடுமையென்னவென்றால், இந்த கண்டுபிடிப்பை இந்திய அறிவியல் மாநாட்டில் அவர் பேசியுள்ளார் என்பதுதான்.
சங்க பரிவாரத்தால் உந்துதல் பெற்ற பரப்புரையாளர்கள் சிலர் :
பசுக்களின் பண்புகள் மற்றும் சக்திகள் குறித்து தொடர்ச்சியாக புதிய புதிய கண்டுபிடிப்புகளை பலரும் படைக்க, பாஜக தலைவர்கள் உந்துதலாக இருக்கின்றனர். அவ்வாறு உந்துதல் பெற்ற சிலர் பின்வருமாறு
நாகேஷ்வர ராவ் :
ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மகாபாரதத்தில் குதித்துள்ளார். இந்திய அறிவியல் மாநாட்டில் பேசிய அவர் “மகாபாரதத்தில் 100 கவுரவர்கள் உருவானது ஸ்டெம் செல் மற்றும் டெஸ்ட் டியூப் தொழில்நுட்பத்தால் தான்” என்று பேசியுள்ளார். மேலும், “பகவான் விஷ்ணு ஏவுகணைகளை தனது விஷ்ணு சக்கரத்தின் மூலம் வழிநடத்தினார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜுனகத் விவசாய பல்கலைக்கழகம் :
இப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த “அறிவியலாளர்கள்”, ஐந்தாண்டு ஆய்வுக்குப் பின்னர், தங்கத்தின் சுவடுகளை பசு மூத்திரத்தில் கண்டறிந்ததாகத் தெரிவித்தனர். அதர்வண வேதக் குறிப்புகள் மூலம் தாம் இதனை அறிந்ததாகத் தெரிவிக்கின்றனர். மேலும் மழைக்காலத்தை விட வெயில் காலத்தில் அதிகமான தங்க சுவடு பசு மூத்திரத்தில் கிடைப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். இவர்களின் இந்தக் கண்டுபிடிப்புகள், மேற் சரிபார்ப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்  தெரிவித்துள்ளார்.
இப்போ சொல்லுங்க …. இந்தியா வல்லரசாகிடும் தானே !

தமிழாக்கம் : 
நந்தன்
நன்றி :  டெலிகிராப் இந்தியா

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?