திமிங்கலங்கள் சிக்குவது என்னாளோ?

2020ம் ஆண்டு குரூப்4 தேர்வில்  நடைபெற்ற முறைகேடு பூதாகரமாககிளம்பியிருக்கிறது.  சிவகங்கை அருகேயுள்ள பெரிய கண்ணணூரைச் சேர்ந்த
போலீஸ்காரர் சித்தாண்டி ஜெயக்குமார் ஆகியோர் கைவரிசையில் இராமநாதபுரம்மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் 99 பேர்களில் ஒருவர் மாநில அளவில்முதலிடம் பெற்றார். ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் நூறுரேங்க் பட்டியில் இடம் பிடித்திருந்தது கூடுதல் சந்தேகத்தைஏற்படுத்தியிருக்கிறது. ‘திருடத் தெரியாதவன் தலையாரி’ வீட்டில் திருடினகதையாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கதைஅமைந்திருக்கிறது.
 இந்த கொள்ளைக்கூட்டத்தின் தலைவன் திமிங்கலங்கள் இன்னும் மாட்டவில்லை.மீன் குஞ்சுகள் தான் ட்டியிருக்கிறது பெரிய மீன்கள் மாட்டவில்லை என்றுதிமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.இது ஜாபர்சேட்க்கு கூடுதாகவெறியை ஏற்படுத்தியது.
காலம்காலமாக டிஎன்பிஎஸ்சியில் ஊழல் நடைபெற்றுக்கொண்டுதான்  இருக்கிறது.அவ்வப்போது இந்த ஊழல் முறைகேடு தீயாய் கிளம்பி அமர்வது வழக்கமானதாகஇருக்கும். 
ஆனால் இந்த முறை நடைபெற்ற ஊழல் புயலாய் பூதமாய் கிளம்பமுக்கிய காரணமே காவல்துறை டிஜிபிகளாக இருக்கும் ஜாபர்சேட், திரிபாதிஇவர்களுக்குள் இருக்கும் மோதல்கள் தான் காரணம் என்கிறார்கள் விபரம்அறிந்த ஐபிஎஸ் அதிகாரிகள். அப்படி என்ன மோதல்கள்? டிஎன்பிஎஸ்சி விவகாரம்பூதமாக வெடிக்க என்ன காரணம் என்றெல்லாம் அலச ஆரம்பித்தோம்.சிபிசிஐடி டிஜிபியாக இருக்கும் ஜாபர்சேட். திமுக ஆட்சியில் கலைஞருக்குநம்பிக்கைக்குரிய நபராக வலம் வந்தவர். அரசியல் கட்சி தலைவர்கள்பேச்சுக்கள் எல்லாம் ஓட்டுகேட்பதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்ததுநினைவிருக்கலாம். திமுகவின் விசுவாசியாக இவர் முத்திரை குத்தப்பட்டதால்தான் ஜெயலலிதா முதல்வராக வந்ததும் மண்டபம் முகாமிற்கு மாற்றப்பட்டார்.ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜாபர்சேட்டால் காவல்துறைக்குள் நல்லபோஸ்டிங்க்கு வரமுடியாமல் டம்மியான இடங்களிலேயே வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் எடப்பாடி முதல்வராக வந்ததும் ஏதோ ஒரு வழியில்சிபிசிஐடிக்கு வந்து விட்டார். ஆனால் அவருக்கே தெரியாது...டிஎன்பிஎஸ்சியில்இப்படியொரு ஊழல் பூதம் கிளம்பும் என்று. என்ன தான் தமிழக காவல்துறைக்குடிஜிபியாக திரிபாதி இருந்தாலும். அதிமுக அரசிற்கு நம்பிக்கைக்குரியவராகஇருந்தாலும் ‘ஜாபர் சேட்’ அடக்க முடியவில்லை. 
அதிமுக ஆட்சியில்டிஎன்பிஎஸ்சியில் வரலாறு காணாத அளவிற்கு முறைகேடு நடந்திருக்கிறது என்பதைநிருபிக்க வேண்டும் என்பதற்காகவும் அதிமுக அரசிற்கு கேட்ட பெயரை
ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தன்னுடைய விசுவாசத்தை திமுகவிற்கு காட்டிவருகிறார் என்கிறார்கள்.

தமிழக அரசின் டிஜிபியாக திரிபாதி இருந்தாலும் ஜாபர்சேட்டை அடக்கிவைக்கமுடியவில்லை. டிஎன்பிஎஸ்சியில் நடைபெற்ற முறைகேட்டிற்கு யார் காரணம்எந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஐபிஎஸ் ஈடுபட்டிருக்கிறார்கள். 
இதில் அமைச்சர்கள்யார் என்றெல்லாம்  ஆதாரத்தோடு ஆவணங்களை எடுத்து வைத்திருக்கிறார்ஜாபர்சேட். டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் மூளை யார் என்றுகண்டு பிடித்து முற்றுப்புள்ளி வைக்க போகும் நேரத்தில் தான் ஜெயகுமார்சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார். 
இ;ந்த முறைகேட்டில் இன்னொரு ஜெயக்குமார்
சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் இந்த சரண்டராம். இந்த நேரத்தில ;ஜாபர்சேட்டை பணிமாற்றம் செய்தால் அரசியல் ரீதியாகஎதிர்கட்சிகளின் கண்டத்திற்கும் பொதுமக்களின் கோபத்திற்கு ஆளாகிவிடுவோம்என்று திரிபாதியை முதல்வர் எடப்பாடி அடக்கி வாசிக்கும் படி சொல்லியிருக்கிறாராம்.
ஜாபர்சேட்டிற்கு வேண்டிய ஐபிஎஸ் அதிகாரிகள்முதல்வர் சொன்ன சில விசயத்தை  அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். அதனால்
தான் அமைச்சர்கள் ஐஎஎஸ் அதிகாரிகள் பெயர்கள் இ;ன்னும் வெளியிடாமல்இருக்கிறார் ஜாபர் சேட். இந்த பூத விவகாரம் அடங்கிய பிறகு ஜாபர்சேட்மீண்டும் மண்டபம் முகாமிற்கு மாற்றப்படுவார். அதில் எந்த சந்தேகமும்இல்லை. என்கிறார்கள்.

டிஜிபி திரிபாதி எப்படியாவது ஜாபர்சேட்டை சிபிசிஐடி யில் இருந்துமாற்றியே தீரவேண்டும். இல்லையென்றால் அதிமுக அரசிற்கு கெட்ட பெயரை மக்கள்மத்தியில் கொண்டு சேர்த்துவிடுவார் ஜாபர்சேட். என்கிற மனக்குமுறலில்இருக்கிறாராம் திரிபாதி.
டிஎன்பிஎஸ்சி முறைகேடு எப்படியெல்லாம் நடைபெற்றிருக்கிறது என்பதைகண்டுபிடித்து கொடுத்த பெருமை ஒருபக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம்திமுகவிற்கு விசுவாசத்தைக்காட்டி விட்டார் ஜாபர்சேட்.  எது எப்படியோஅதிமுக திமுக டிஜிபிக்களால் டிஎன்பிஎஸ்சி முறைகேடு வெட்டவெளிச்சத்திற்கு
வந்து விட்டது.
------___------___--------____
வாக்கிடாக்கி
இது 
காவல்துறை முறைகேடு.
காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு,போலீஸ் அதிகாரிகள் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது. இதை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு காவல்துறையில் வாக்கி டாக்கியதில் ஊழல் நடைபெர்றிருப்பதாக திமுக தமிழக ஆளுநரிடம் புகார் கொடுத்ததோடு ஆர்,எஸ் பாரதி திமுக சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக நிரஞ்சன்மாடி 11 கேள்வி கேட்டு காவல்துறை தலைவருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இதனை தொடர்ந்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
Image
தமிழ்நாடு காவல்துறைக்கு கேமரா, சி.சி.டி.வி, டிஜிட்டல் மொபைல் ரேடியோ உள்ளிட்ட தகவல் தொடர்புச் சாதனங்கள் கொள்முதல் செய்யும் 350 கோடி ரூபாய் டெண்டரில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடந்த 2017-18வது ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் காவல் துறையை நவீனமயமாக்க 47 கோடி ரூபாய் நிதிதான் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் இந்த மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இந்த முறைகேடு தொடர்பான புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் காவல் துறை அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். காவல் துறை கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. 
Image
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 15 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 12 குழுக்களாக ரெய்டு நடத்தி வருகின்றனர். 2016-ஆம் ஆண்டு காவல் துறையில் தொழில்நுட்பப் பிரிவில் பணிபுரிந்த அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்படுவதால் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த ஊழலில் முன்னாள் காவல்துறை தலைவர் சிக்கவார் என்று தெரிகிறது,
------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?