2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் தற்போது உலகின் 160க்கும் மேலான நாட்டில் உள்ள மக்களை அசாத்தியமாக புரட்டி போட்டு வருகிறது.
இந்த வைரஸ் தாக்குதலால், இதுவரையில் சீனாவில் மட்டுமே 80 ஆயிரத்துக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு 3,000-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பாதிப்பில் சீனாவை விட பின்தங்கியுள்ள இத்தாலி கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகின் முதல் நாடாக உள்ளது.
கோவிட்19 என பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் வயது வித்தியாசம் பாராமல் சகட்டுமேனியாக அனைவரையும் தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. நோய் தாக்காமல் இருக்க தடுப்பூசியோ, தொற்று ஏற்பட்டால் மருத்துவம் பார்ப்பதற்கு மருந்து என இதுவரை இந்த கொரோனாவுக்கு எந்த மருந்துகளும் கண்டுபிக்கப்படவில்லை.
ஆனால், அதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க, ஜெர்மனி என பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில், சுமார் 3 மாதங்களுக்கு பிறகு சீனாவில் நிலைமை சீரடையத் தொடங்கியுள்ளது. அண்மை காலங்களாக வூஹானில் எந்த புதிய கொரோனா பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு செல்பவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் சீனாவில் குறைந்துள்ள போது, புதிதாக ஹன்டா வைரஸ் (HantaVirus) எனும் நோய் ஒன்று உருவாகியுள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து ஷடாங் எனும் பகுதிக்கு பேருந்தில் பயணித்த ஒருவர் திடீரென மரணித்திருக்கிறார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அந்த நபர் ஹன்டா வைரஸூக்கு ஆளாகியிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹன்டா வைரஸானது, எலிகளின் கழிவுகள் மூலம் உருவாகக் கூடியது. உபயோகத்தில் இல்லாத வீட்டில் அல்லது அறைகளில் உள்ள பொருட்களில் எலிகள் எச்சம் வைப்பதும், மலம் கழிப்பதும் வழக்கமாக இருக்கும். வெகுநாட்களாக அந்த கழிவுகள் அகற்றப்படாமலோ கண்டறியப்படாமல் இருந்தால் நாளடைவில் அவைகள் தூசாக மாறும்.
அந்த தூசித் துளிகளை சுவாசிக்கும் போது இந்த ஹன்டா வைரஸ் நோய் உண்டாகும். இந்த வகையான வைரஸ் கொரோனாவை போன்று ஒருத்தரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது. ஆனால், இந்த ஹன்டா வைரஸுக்கு உடனடி சிகிச்சையே தீர்வு. இல்லையே மரணத்தையே உண்டாக்கும்.
காய்ச்சல், தலைவலி, தசைவலி, வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஆகியவை முதலில் இந்த ஹன்டா வைரஸால் ஏற்படும். தீவிரமடைந்த பிறகு வறட்டு இருமல், மூச்சுத் திணறல், ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி உயிரிழக்க நேரிடும்
அதிக உச்சம் தொடும். யுபிஎஸ் அறிக்கையின்படி, தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,750 அமெரிக்க டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தங்கத்தின் ஈர்க்கக்கூடிய 29 சதவீதம் உயர்வு, வலுவான முதலீட்டுத் தேவை, பலவீனமடைந்து வரும் அமெரிக்க டாலர் மற்றும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் கவலைகள் ஆகியவை காரணமாக இருக்கிறது. 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 2,850 டாலராகவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2,900 டாலராகவும் உயரும் என்றும் யுபிஎஸ் கணித்துள்ளது. உலோகமான தங்கத்தின் தற்போதைய உயரமான தொடக்கப் புள்ளி வரவிருக்கும் மாதங்களில் ஆதாயங்களுக்கான அதிக வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக ETF தேவை துரிதப்படுத்தப்படுவதால் யுபிஎஸ் நம்புகிறது. தங்கத்திற்கான சீன தேவை குறைவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், உள்ளூர் முதலீட்டாளர்களிடமிருந்து அடிப்படை தேவை குறைவதை விட, நாட்டின் இறக்குமதி ஒதுக்கீட்டின் சோர்வு இதற்குக் காரணம் என்று யுபிஎஸ் கூறுகிறது. பன்முகப்படுத்தப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான போர்ட்ஃபோலியோவிற்குள் தங்கத்தை மூல ஹெட்ஜ...
சோதனையைச் சாதனை ஆக்கிய ‘இந்திய மகள்’ வினேஷ் போகத். அவருக்கு பதக்கம் கிடைக்காமல் போயிருக்கலாம், ஆனால் அவரை உலகமே கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. இந்தியா சார்பில் போட்டியில் பங்கெடுக்கச் சென்றார். உலக நாடுகளின் பிரதிநிதியாக உயர்ந்து நிற்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 3 தங்கம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் 88 பதக்கங்கள், உலக சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கங்கள் வென்ற வீரர்தான் வினேஷ் போகத். வினேஷ் போகத் நடத்திய மல்யுத்தமானது மைதானத்தில் மட்டுமே நடந்தவை அல்ல. இந்தச் சமூகத்துக்கு எதிராக, ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக, பாலியல் குற்றவாளிக்கு எதிராக, ஆணாதிக்க கொடூரத்துக்கு எதிராக யுத்தம் நடத்தினார். அதிலும் அவரை வீழ்த்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 2023 ஆம் ஆண்டு முழுக்கவே அவரது மல்யுத்தம், ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்கொள்வதாக இருந்தது. 2023 ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். பா.ஜ.க.வின் எம்.பி.யான...
முகேஷ் அம்பானிக்கு நெருக்கடி! ஒன்றிய அரசு சமீபத்தில் வஃக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்தது, பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. அதற்கு ஜனாதிபதியும் உடனே ஒப்புதல் கொடுத்துள்ளார். வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம் மத்திய அரசின் இம்முடிவுக்கு எதிராக முஸ்லிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஆனால் மசூதிகள் இருக்கும் இடத்தை பிடுங்கமாட்டோம் என்று மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கிறது. நாட்டில் அதிகமான மற்றும் முக்கியமான கட்டிடங்கள் இருக்கும் நிலங்கள் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானதாக இருக்கிறது. கடும் விவாதத்திற்கு பின் மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேற்றம்! - அடுத்து என்ன? அந்த நிலம் பல்வேறு காலக்கட்டங்களில் பலரின் கைகளுக்கு மாறி இருக்கிறது. அந்த வகையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி தென்மும்பையில் கட்டி இருக்கும் பல அடுக்கு சொகுசு மாளிகையான ஆன்டிலியா கட்டிடம் இருக்கும் நிலமும் வஃக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் பணக்கார வீடாக பார்க்கப்படும் முகேஷ் அம்பானியின் வீட்டின் மதிப்பு மட்டும் ரூ.15000 கோடியாகும். இந்த வீடு இருக்கும் நிலத்தை மு...