கொரோனாவை விடக் கொடூரர்கள்

சரியான எண்ணிக்கை இல்லை.
கொரோனா வைரஸ் இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் இருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன.
ஆனாலும் அரசின் தடுப்பு நடவடிக்கை தீவிர தன்மையோடு இல்லையென்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. குறிப்பாக, கொரோனா ஆய்வு குழு, வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களை இந்தியா கண்டறியவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளது.




இதுதொடர்பாக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய COVID19 ஆய்வுக் குழு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
அதில், “வைரஸ் தொற்றின் ஆரம்ப கட்டத்தில் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா வைரசை கட்டுப்படுத்த சிறப்பாக செயலாற்றியுள்ளது. ஆனாலும், இந்தியாவில் உண்மையிலேயே ‘வைரஸ் பாதித்தோரின் சரியான எண்ணிக்கை’ என்ற முக்கிய கூறு இல்லை.
மேலும், இந்தியாவில் பரிசோதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவு. பரவலான சோதனை இல்லாத நிலையில், சமூக பரிமாற்றத்தால் வைரஸ் பரவியவர்கள் எண்ணிக்கையை மதிப்பிடுவது முடியாததாக உள்ளது.




மேலும், மருத்துவமனையை தாண்டி, மருத்துவ வசதிகளுக்கு அப்பாற்பட்டு, எந்த அறிகுறியும் இல்லாமல் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் எவ்வளவு பேர் என்பதையும் இதுவரை கண்டறியவில்லை” என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட பாதிப்புகளின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் ஆய்வு குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------
தெய்வங்களின் நிலை்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
அரசுடன் இனைந்து மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ ஊழியர்கள் இரவு பகலாக கடினாம உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிகப்படியான நேரங்கள் உழைக்கும் அவர்களுக்கு பணியில் மத்தியில் மற்றொரு பெரிய பிரச்சனையை சந்திப்பதாக கவலையுடம் தெரிவித்துள்ளனர். அதாவது, கொரோனா அச்சம் காரணமாக கொரோனா சிகிச்சை அளிப்பதால் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் தங்களை வீட்டில் இருந்து வெளியேறும் படி கட்டாயப்படுத்துக்கிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.



“கொரோனா சிகிச்சை அளிப்பதால் வீட்டைக் காலி செய்ய சொல்கிறார்கள்”: மருத்துவ ஊழியர்களுக்கு நேர்ந்த அவலம்!
இதனையடுத்து, இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடித்ததில், “கொரோனா மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவ துறையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவ துறைச் சார்ந்த ஊழியர்களால் கொரோனா பரவி விடும் என்ற அச்சத்தால் தாங்கள் தங்கியிருக்கும் வீட்டில் இருந் தங்களை வெளியேறும்படி வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
பலரைக் கட்டாயப்படுத்தி, வீட்டைக் காலி செய்துள்ளனர். வாடகை வீட்டில் வசித்துவந்த மருத்துவர்கள் தற்போது நடுத்தெருவிற்கு வந்துள்ளனர். இத்தகைய மோசமான செயலைக் கண்டிக்கின்றோம். அதேவேலையில், மருத்துவ துறையில் பணியாற்றும் ஊழியர்களை வீட்டின் உரிமையாளர் வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிராக உத்தரவு ஒன்றை அரசு கொண்டுவரவேண்டும்.
அதுமட்டுமின்றி, நாடுமுழுவதும் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பல ஊழியர்கள் வீட்டில் இருந்து மருத்துவனைக்கோ, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கோ செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர்.
 மருத்துவமனைக்கு வரும் வழியில்,வீடு திரும்பும் வழியில் அடையாள அட்டையை கவனிக்காமல் பார்த்த உடனே பல இடங்களில் காவலர்கள் அடித்து விடுகிறார்கள்.பின்னர் டாக்கடர் என்று ஏன் முதலியே சொல்லவில்லை என்கிறார்கள்.இதற்கு அரசு காவலர்களை விசாரித்து விட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
அதனால், உரிய வாகன வசதியை ஏற்படுத்தவேண்டும். இந்த பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டு வருவதன் மூலம் ஒய்வின்றி உழைக்கும் எங்களது சேவையை உறுதிப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
வெளிநாடுகளில் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு. முழுக் கவச உடை,முகக் கவசம் அரசால் தரப்படுகிறது.அப்படியும் பல மருத்துவர்கள் கொரோனா தாக்கி பலியாகியுள்ளனர்.
ஆனால் இங்கோ சாதாரண உடையில்தான் மருத்துவர்கள் பணிபுரிகின்றனர்.முக கவசம் கூட வழங்க வக்கற்றவைகளாக இருக்கிறது மத்திய,மாநில அரசுகள்.
அனைத்திலும் கொடூரம் தன்னிடம் மருத்துவர்கள்,செவிலியர்களுக்கு முக க் கவசம் முறையாக வழங்கக்  கேட்ட மருத்துவரை ஸ்டான்லி மருத்துவ மனையில் இருந்து தூத்துக்குடி மருத்துவமனைக்கு உடனே மாறுதல் செய்துள்ளார் அமைச்சர் விஜய பாஸ்கர்.
கொரோனாவை விட அரசுகள் செயல்படும் விதம்தான் பயத்தை தருகிறது்
-----------------------------

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர்.
கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் பொதுவான இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது.
உலகளவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களின் இறப்பு விகிதம் 4 சதவீதமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தரவுகள் கூறுகின்றன. பிரிட்டனில் மார்ச் 23ஆம் தேதிவரை இறப்பு விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஏனெனில், அனைத்து தொற்றுகளும் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்படுவதில்லை.
யார் யாருக்கெல்லாம் பரிசோதனை செய்யவேண்டும் என்ற முடிவை அந்தந்த நாடுகளே எடுக்கின்றன. அதனால், ஒவ்வொரு நாட்டிலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அந்நாட்டின் இறப்பு விகிதத்தை தரவுகளுக்காக எடுத்துக் கொள்ள முடியாது.
Image copyrightGETTY IMAGESகோப்புப்படம்
மேலும் இறப்பு விகிதம் என்பது ஒருவருடைய வயது, உடல்நலம் மற்றும் அவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை கிடைத்திருக்கிறது போன்றவற்றை பொருத்ததாகும்.

என்னென்ன அபாயங்கள் உள்ளன?

கொரோனா வைரஸ் தொற்றால் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்கள் உயிரிழக்கும் அபாயம் அதிகம் உள்ளது.
80 வயதுக்கு மேலானவர்கள் இறப்பு விகிதம் சுமார் 10 முறை அதிகமாக இருப்பதாகவும், அதுவே 40 வயதிற்கு கீழ் இருப்பவர்களின் இறப்பு விகிதம் குறைந்து காணப்படுவதாகவும் லண்டன் இம்பீரியல் கல்லூரி கணக்கீடுகள் கூறுகின்றன.
"வயதானவர்களுக்கான இறப்பு விகிதம் அதிகமாக இருந்தாலும், பெரும்பான்மையான முதியவர்களை, மிதமான அளவிலேயே கொரோனா தாக்கியுள்ளது. அதே நேரத்தில் இது இளம் வயதினரை தாக்காது என்று கூறமுடியாது. இளம் வயதை சேர்ந்த சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று எச்சரிக்கிறார் பிரிட்டன் அரசாங்கத்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் பேராசிரியர் கிரிஸ் விட்டி.
இந்த கொரோனா தொற்றின் ஆபத்தை தீர்மானிப்பது வயது மட்டுமல்ல.
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் 44,000 பேரை ஆய்வு செய்ததில், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் அல்லது மூச்சுப் பிரச்னை இருந்தவர்கள் மத்தியிலேயே ஐந்து முறை அதிகம் உயிரிழப்புகள் நேர்ந்தது தெரிய வந்தது.
Image copyrightGETTY IMAGESகோப்புப்படம்
இந்த காரணிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. எந்தெந்த இடத்தில் எந்த மாதிரியான நபர்கள் அபாயத்தில் இருக்கிறார்கள் என்ற தெளிவு இதுவரை இல்லை.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதில் இதுவரை உயிரிழந்தவர்களை வைத்துப் பார்த்தால் யார் மிகுந்த அபாயத்தில் இருக்கிறார்கள் என கூற முடியும் என்றாலும், இதனை துல்லியமாக கூறுவது கடினமாகும்.
கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் இடையே இருக்கும் இறப்பு விகிதம், ஒட்டு மொத்த இறப்பு விகிதம் கிடையாது
வைரஸ் தொற்று இருக்கும் பலர் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது கிடையாது. ஏனெனில் லேசான அறிகுறிகள் இருக்கும் பலரும் மருத்துவரிடம் செல்வது கிடையாது.
பிரிட்டனில் மார்ச் 17 வரை சுமார் 55,000 பேருக்கு கொரோனா தொற்று இருக்கும் என கணக்கிடுவதாக அந்நாட்டின் தலைமை அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வாலன்ஸ் தெரிவித்தார். ஆனால் அப்போது உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,000க்கு கீழ்தான் இருந்தது.
உயிரிழப்புகளை 2,000த்தால் வகுப்பது, 55,000ஆல் வகுக்கப்படுவதை விட அதிக இறப்பு விகிதத்தை உங்களுக்கு வழங்கும்.
இந்த காரணத்தினால்தான் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களிடையே இருக்கும் இறப்பு விகிதங்கள் உண்மையான இறப்பு விகிதங்களின் மோசமான மதிப்பீடாகும்.

இறப்பு விகிதங்கள் நாடுகளுக்கு இடையில் ஏன் வேறுபடுகின்றன?

வெவ்வேறு நாடுகள், லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்களை கண்டுபிடிக்க சிறப்பாக அல்லது மோசமாக செயல்படுவதால் இந்த வேறுபாடு இருப்பதாக இம்பீரியல் கல்லூரி ஆய்வு கூறுகிறது.
ஒவ்வொரு நாடும் கொரோனா தொற்று பரிசோதனைகளுக்கு வெவ்வேறு முறைகளை பின்பற்றுகின்றன. அதேபோல ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள சோதனை செய்யும் திறனில் வேறுபாடு உண்டு. மேலும், யாரெல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற விதிகளும் வேறுபடும். அதோடு, இவை அனைத்தும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றமடையும்.
உதாரணமாக பிரிட்டன் அரசாங்கம், ஆரம்பக்கட்டத்தில் நாள் ஒன்றுக்கு சோதனை செய்வோரின் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. நான்கு வாரத்தில் அதை 25,000 ஆக்க வேண்டும் என்பதே நோக்கம். தற்போது மருத்துவமனைகளில் உள்ளவர்களே அங்கு பரிசோதிக்கப்படுகிறார்கள்.
நாள் ஒன்றுக்கு 20,000க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யும் திறன் ஜெர்மனியிடம் இருக்கிறது. வைரஸ் தொற்றின் லேசான அறிகுறி இருப்பவர்களுக்கும் அந்நாடு பரிசோதனை செய்கிறது.
அதனால் ஜெர்மனியில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களிடையே காணப்படும் இறப்பு விகிதம் ஐரோப்பிய நாடுகளிலேயே குறைவானதாகும். ஆனால், பரிசோதனை செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மாற்றமடைவதால் இந்த விகதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் எந்த விதமான சிகிச்சை அளிக்க வாய்ப்பிருக்கிறது, அதனை சுகாதாரத்துறை அளிப்பது சாத்தியமா, மேலும், வைரஸ் தொற்று பரவுதல் எந்த கட்டத்தில் இருக்கிறது என்பதையும் இது சார்ந்திருக்கிறது.
அதிகளவிலான நபர்கள் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவுகளில் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கும் கருவிகள் இல்லை என்றாலும், இறப்பு விகிதம் உயரும்.

உண்மையான இறப்பு விகிதத்தை விஞ்ஞானிகள் எவ்வாறு கணக்கிட முடியும்?

இந்த கேள்விகள் ஒவ்வொன்றையும் பற்றிய தனிப்பட்ட ஆதாரங்களை ஒன்றிணைத்து இறப்பு விகிதத்தின் கணக்கீட்டை விஞ்ஞானிகள் உருவாக்குவார்கள்.
இறப்பு விகிதம் அதிகமாகலாம் அல்லது குறைவாகவும் ஆகலாம் என்கிறார் ஈஸ்ட் அங்க்லியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியர் பால் ஹன்டர்.
"இபோலா வைரஸை பொறுத்தவரை தொடர்ந்து சிகிச்சை அளிக்க ஒரு கட்டத்தில் இறப்பு விகிதம் குறைந்தது. ஆனால், அவை உயரவும் செய்யலாம்" என்று அவர் கூறுகிறார்.
அதனால், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தரவுகளுடன், தற்போதைய சிறந்த மதிப்பீட்டையும் வழங்குகிறார்கள்.
--------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?