திவாலாக என்ன காரணம்?

இந்தாண்டுக்கான பட்ஜெட்டில் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் அறிவித்தார். எல்ஐசி நிறுவனம் பாலிசி தாரர்களுக்கு நேர்மையான, வெளிப்படையான சிறந்த சேவையை வழங்கி வருவதோடு, நாட்டின் பொருளாதாரத்துக்கும் மிகப் பெரிய பங்களிப்பை செய்து வருகிறது. இந்த நிலையில் எல்ஐசி பங்கு களை தனியாருக்கு விற்பதால் வெளிப்படை யான நிர்வாகம் ஏற்படும் என்று கூறுவது அப்பட்ட மான பொய்வாதமாகும்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது. ஒரே நேரத்தில் சுமார் லட்சம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வெளியேற்றப்பட்டதால் அத னுடைய சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதைக் காரணம் காட்டி அம்பானியின் ஜியோ போன்ற நிறுவனங்களை வளர்த்துவிடுவதுதான் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது.  இந்த நிலையில் பத்து பொதுத்துறை வங்கி களை நான்கு வங்கிகளாக ஒருங்கிணைக்கப் போவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த இணைப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறை க்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார். எல்ஐசி, பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை வங்கிகளையும் சீரழிப்பது தான் மோடி அரசின் நோக்கமாக உள்ளது. 
தனியார் வங்கிகள் எந்த நேரமும் திவாலா கலாம் என்பதற்கு பல உதாரணங்கள் இருந்த போதும், சமீபத்திய உதாரணமாக யெஸ் வங்கியின் தடுமாற்றம் உள்ளது. இதேபோல பல்வேறு தனியார் வங்கிகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இதன் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். 
கடந்த முப்பது ஆண்டுகளாகவே சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத் துறை வங்கிகளை கார்ப்ப ரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வேலையை மத்திய ஆட்சியாளர்கள் செய்து வருகின்றன. இதன் உச்சக்கட்டமாக வங்கித்துறையை முற்றி லும் கார்ப்பரேட் மயமாக்க மோடி அரசு முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு  பகுதியே பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு நடவடிக்கையாகும். இப்போதும் கூட ஆயிரக்கணக்கான கிரா மங்களில் வங்கி சேவை இல்லை. அனைத்து கிராமங்களுக்கும் மக்களுக்கும் வங்கி சேவையை உறுதிப்படுத்துவதுதான் அரசின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் ஏற்கெனவே கிடைத்துக் கொண்டிருக்கிற வங்கி சேவையையும் பறிக்கிற வேலைதான் நடந்து கொண்டிருக்கிறது.
பத்து பொதுத்துறை வங்கிகள் நான்கு வங்கிக ளாக இணைக்கப்படும் என்றால் அதன் பொருள் ஆறு வங்கிகள் மூடப்படும் என்பதுதான். வங்கி கள் இணைப்பை எதிர்த்தும் ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்குவதை எதிர்த்தும், வாராக்கடன் என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை யடித்த பணத்தை வசூலிக்கக் கோரியும் மார்ச் 27ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இது வங்கி ஊழியர்களின் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டு மொத்த நாட்டு மக்களின் பிரச்சனையுமாகும்.
+------------------+-------------------+---------------------+
என்னடா இது ?
தெய்வத்திற்கே சோதனை.
தனியார் வங்கியான யெஸ் வங்கி நிதி நெருக்கடியில் தத்தளிக்கிறது. நிதி நிலைமை மோசமாகி இருப்பதால், அந்த வங்கியின் இயக்குனர்கள் குழுவின் செயல்பாடுகளை பாரத ரிசர்வ் வங்கி ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் ரூ.50 ஆயிரம் மட்டுமே திரும்ப எடுக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கியில்தான், நாட்டின் புகழ்பெற்ற ஒடிசா மாநிலம், பூரி ஜெகநாதர் கோவிலின் ரூ.545 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது இப்போது பக்தர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி அந்த கோவிலின் மூத்த தைத்யபதி (சேவகர்) விநாயக்தாஸ் மோஹோபத்ரா கூறுகையில், “ஒரு தனியார் வங்கியில் ஏதோ கொஞ்சம் கூடுதல் வட்டி தருகிறார்கள் என்பதற்காக இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் செய்ய காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

ஜெகநாத் சேனா ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷி பட்நாயக் கருத்து தெரிவிக்கையில், “ தெய்வத்தின் பணத்தை ஒரு தனியார் வங்கியில் டெபாசிட் செய்தது சட்ட விரோதம், நெறிமுறைக்கு மாறானது. இதற்கு கோவில் நிர்வாகத்தையும், நிர்வாக குழுவையும் பொறுப்பேற்க வைக்க வேண்டும்” என்று கூறினார்.
மக்களுக்கு பணக்கஷ்டம் வந்தால் தெய்வத்திடம் முறையிடலாம்.
அந்த தெய்வதுக்கே கஷ்டம் வந்தால் மோடியிடம்தான் முறையிடனுமா.
+------------------+--------------------------------+

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால்  சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.
மறைந்த க. அன்பழகன் திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் மற்றும் சுவர்ணம்பாள் தம்பதியருக்கு டிசம்பர் 19ம் தேதி, 1922 ம் ஆண்டு பிறந்தார். இவர் இயற்பெயர் ராமையா.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. தமிழ் (ஹானர்ஸ்) படித்தார். 1944-ம் ஆண்டு முதல் 1957-ம் ஆண்டு வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றினார்.

1945-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி வெற்றிச்செல்வி என்பவரை தனது இல்லற வாழ்க்கை துணையாக ஏற்றார். இவர்களுக்கு அன்புசெல்வன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். வெற்றிச்செல்வி மறைவிற்கு பிறகு சாந்தகுமாரி என்பவரை மணந்தார். இவர்களுக்கு புருஷோத்தமராஜ், ராஜேந்திரபாபு என்ற இரு மகன்களும், ஜெயக்குமாரி எனும் மகளும் உள்ளனர்.
திராவிட சிந்தனைகளில் ஆர்வம் கொண்டவர். இதனால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக்கொண்டார். கல்லுாரியில் பணிபுரிந்தபோதும், இயக்கப்பணிகளை தொடர்ந்தார். இவரை அண்ணா 'பேராசிரியர் தம்பி' என அழைத்தார். அன்பழகன், முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். 1957-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக(எம்.எல்.சி.) இருந்தார். 1967-ம் ஆண்டு முதல் 1971-ம் ஆண்டு வரை நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினராக இருந்தார். 1971-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை புரசைவாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பூங்காநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரை அண்ணாநகர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றினார்.

1971-ம் ஆண்டு முதல் 1976-ம் ஆண்டு வரை கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 1989-1991, 1996-2001 தி.மு.க. ஆட்சியின் போது கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டார். 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நிதித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
1977-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்ட அவர், தோல்வியை தழுவினார். அவரது அரசியல் வாழ்வில் ஒரு முறை மேல் சபை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராக 8 முறையும், நாடாளுமன்ற உறுப்பினராக ஒரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி உள்ளார்.

எழுத்தாளராக பல தமிழ் சமூக கட்டுரைகளையும், நூல்களையும் க.அன்பழகன் எழுதி உள்ளார். இன-மொழி வாழ்வுரிமை போர், உரிமை வாழ்வு, 1956, பாரி நிலையம், தமிழர் திருமணமும் இனமானமும், தமிழின காவலர் கலைஞர், தமிழ்வானின் விடிவெள்ளி தந்தை பெரியார் உள்பட பல நூல்களை அவர் எழுதி உள்ளார்.
-------------------------------------------++--

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?