முகமூடி தீர்வாகுமா?

வைரஸ் பரவும் போதெல்லாம் மக்கள் முகத்துக்கு சர்ஜிக்கல் மாஸ்க் அணிந்து மூடிக் கொள்ளும் படங்களைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அவற்றைப் பயன்படுத்துவது உலகம் முழுக்க பல நாடுகளில் இது வழக்கமாகிவிட்டது.
சீனாவில் அதிகமான மாசுபாட்டில் இருந்து காத்துக் கொள்வதற்காக பலர் இதை அணிந்து வந்த சூழ்நிலையில், இப்போது கரோனா வைரஸ் பரவும் ஆபத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக அதிகமானோர் இதைப் பயன்படுத்துகின்றனர்.
காற்றில் வரும் வைரஸ் பரவுவதைத் தடுக்க இது எந்த அளவுக்கு திறன்மிக்கதாக இருக்கும் என்று வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
கைகளில் இருந்து வாய் மூலமாக தொற்று பரவாமல் தடுப்பதில் இந்த முகத்திரைகள் ஓரளவுக்கு திறன்மிக்கவையாக உள்ளன என்பதற்கு சில ஆதாரங்கள் இருக்கின்றன.
சர்ஜிக்கல் மாஸ்க் எனப்படும் இந்த முகத்திரைகள் அணிவது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மருத்துவமனைகளில் பழக்கத்துக்கு வந்தன. ஆனால் 1919ல் 50 மில்லியன் பேருக்கும் மேல் உயிரிழக்கக் காரணமாக இருந்த ஸ்பானிஷ் ஃப்ளூ பரவிய காலம் வரையில் இது பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.

முகத்தை மூடிக் கொள்வதால் வைரஸ் பரவுவதைத் தடுத்துவிட முடியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

``காற்றில் கலந்துள்ள வைரஸ் அல்லது பாக்டீரியாவைத் தடுப்பதில் வழக்கமான சர்ஜிகல் மாஸ்க் -குகள் திறன்மிக்க பாதுகாப்பு தருவது கிடையாது'' என்று லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் கேர்ரிங்டன் பிபிசியிடம் கூறினார். அதனால் தான் ``பெரும்பாலான வைரஸ்கள்'' தொற்றிக் கொள்கின்றன, ஏனெனில் அந்த முகத்திரைகளில் இழைகள் இடைவெளி உள்ளதாக உள்ளன, காற்றை வடிகட்டும் வசதி இதில் இல்லை, கண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர் தெரிவித்தார்.
ஒருவர் தும்மும் போதோ அல்லது இருமும்போதோ ``திடீரென வெளியாகும்'' கிருமிகள் நம்மைத் தாக்காமல் காப்பாற்ற அவை உதவியாக இருக்கும். கைகளில் இருந்து வாய் வழியாக கிருமிகள் தொற்றுவதும் ஓரளவுக்கு தவிர்க்கப்படும். மனிதர்கள் ஒரு மணி நேரத்தில் 23 முறை தங்கள் முகத்தைத் தொடுவதாக 2016ல் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நடத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

முகத்தை மூடிக் கொள்வதால் வைரஸ் பரவுவதைத் தடுத்துவிட முடியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மூலக்கூறு வைரஸ் ஆராய்ச்சித் துறை பேராசிரியர் ஜோனாதன் பால், ``மருத்துவமனை போன்ற நன்கு கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் நடத்திய ஆய்வில், ப்ளூ காய்ச்சல் தொற்றை தடுப்பதில் முகத்துக்கான மாஸ்க் -குகள் நல்ல பலன் தருவதாக கண்டறியப்பட்டது'' என்று கூறியுள்ளார். சுவாசத்துக்கான வலைமூடிக் கருவியைப் போன்ற பயனை இது தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுவாசத்துக்கான வலைமூடிக் கருவிகள், விசேஷமான காற்று வடிப்பான் அம்சங்கள் கொண்டதாக, காற்றில் மிதந்து வரும் நச்சுத் துகள்களை வடிகட்டி தடுக்கும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.
இருந்தபோதிலும், பொது இடங்களில் மக்கள் பயன்படுத்தும்போது அது எந்த அளவுக்கு திறன்மிக்கதாக இருக்கும் என்று பார்த்தால், தகவல்கள் ஊக்கம் தருவதாக இல்லை - அதிக நேரத்துக்கு அவற்றை அணிந்து கொண்டிருப்பது என்பது இயலாத விஷயமாக உள்ளது'' என்று பேராசிரியர் பால் கூறியுள்ளார்.
பெல்பாஸ்ட் குயின்ஸ் பல்கலைக்கழகத்தில், வெல்கம் - வுல்ப்சன் பரிசோதனை மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் கன்னோர் பாம்ஃபோர்டு, ``சாதாரணமான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது'' பெரும்பாலும் மிக திறன்மிக்கதாக இருக்கும் என்று கூறுகிறார்.
``தும்மும்போது வாயை மூடிக் கொள்வது, கைகளைக் கழுவுதல், கழுவாமல் கைகளை வாயில் வைப்பதை தவிர்த்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் சுவாசம் மூலம் வைரஸ்கள் பரவும் ஆபத்தைக் குறைக்க முடியும்'' என்று அவர் கூறுகிறார்.

முகத்தை மூடிக் கொள்வதால் வைரஸ் பரவுவதைத் தடுத்துவிட முடியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஃப்ளூ போன்ற வைரஸ்கள் பரவாமல் தடுக்க பின்வரும் வழிமுறைகள் சிறந்தவையாக இருக்கும் என என்.எச்.எஸ். கூறுகிறது:
•கைகளை இளம் சூடான நீரில் சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும்
•முடிந்த வரை கண்கள் மற்றும் மூக்கை கைகளால் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்
•ஆரோக்கியமான, உடல் தகுதியான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்
இங்கிலாந்து பொது சுகாதாரத் துறையில் தொற்றுநோய்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் பற்றிய ஆராய்ச்சித் துறையின் தலைவராக உள்ள டாக்டர் ஜேக் டன்னிங், ``முகத்துக்கு மாஸ்க் போட்டுக் கொள்வது பயன்தரும் என்ற எண்ணம் இருந்தாலும், மருத்துவமனை சூழலுக்கு வெளியில் உள்ள பகுதிகளில் இதைப் பயன்படுத்துவதால் எந்த அளவுக்குப் பயன் கிடைக்கும் என்பதற்கு மிகக் குறைந்த ஆதாரங்களே உள்ளன'' என்று கூறுகிறார்.
இவை நல்ல பலனைத் தர வேண்டுமானால், இவற்றை சரியாக அணிய வேண்டும், அடிக்கடி மாற்ற வேண்டும், பாதுகாப்பாக அதை அப்புறப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார்.
``குறிப்பிட்ட காலத்துக்கும் அதிகமாக மாஸ்க் அணிவதால், தொற்று நோய் பரவும் ஆபத்தைக் குறைக்க வேண்டுமானால், பரிந்துரைக்கப்பட்ட பழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன'' என்கிறார் அவர்.
மக்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கங்கள் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கங்கத்தைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர் டன்னிங் கூறியுள்ளார்.
--------------------------+---+++----++++---
பின்னி மில் கதை.
இன்று திரைப்படங்கள் எடுக்க ஸ்டூடியோக்கள்இல்லாத நிலையில் பின்னி மில்லில்தான் பல படங்கள் படப்பிடிப்பு நடக்கிறது.
வரலாற்றுப்பக்கங்களில் பின்னிமில்லுக்கென்று தனித்த இடமுண்டு. இந்த ஆலைக்கு கிட்டத்தட்ட 250 ஆண்டு வரலாறும் இரத்தம் சிந்திய மனிதர்களின் கதைகளும் உள்ளது. இங்கிலாந்திலிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் சார்பாக வியாபாரம் செய்ய வந்தவர்களில் ஒருவர்தான் சார்லஸ் பின்னி. 1769இல் மெட்ராஸ் வந்திறங்கினார் பின்னி. அன்றைய வாலாஜா நவாப்புடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்னி குடும்பத்தினர் மெல்ல மெட்ராஸ் மண்ணில் தங்கள் வணிகத்தை விரிவாக்க முயல்கிறார்கள்.  1876 மற்றும் 1881 ஆம் ஆண்டுகளில் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் மில்  என்ற இரண்டு  ஆலைகளை நிறுவுகிறார்கள். 1800இல் ஜான் பின்னி, டெனிசன் என்பவருடன் இணைந்து நிறுவனத்தை நடத்தினார். அந்த நிறுவனத்திற்கு பின்னி அண்ட் டெனிசன் என்று பெயர். 1814இல் பின்னி அண்ட் கோ என்று பெயர் மாற்றப்பட்டது.  கப்பலில் இருந்து சரக்கு மூட்டைகளை கரைக்கு கொண்டு வர இந்த நிறுவனம் முப்பதுக்கும் மேற்பட்ட சிறியரக படகுகளை வைத்திருந்தது. பின்னிமில்லின் பெயர் உலகமெங்கும் பரவியிருந்தது.  முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் இந்த ஆலையில் நெய்யப்பட்ட சீருடைகளுடன்தான் இந்திய இராணுவமும், பிரிட்டிஷ் இராணுவமும் உலகெங்கும் சென்று போரிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அமெரிக்க உள்நாட்டு யுத்தம் நடந்துக்கொண்டிருந்ததால் அங்கிருந்து பருத்தியை இங்கிலாந்துக்கு அனுப்புவதில் சிக்கல்கள் இருந்துள்ளன.  எனவே இந்தியாவில் பருத்தியை ஒரு பணப்பயிராக மாற்றி விவசாயிகளை விளைவிக்க வைக்கிறார்கள்.  1866-ல் அமெரிக்க உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. எனவே இந்திய பருத்திக்கான தேவை இங்கிலாந்தில் குறையத்துவங்கியது. அதேநேரம் அபரிமிதமான பருத்தி விவசாயத்தால் இந்தியாவில் பஞ்சின் இருப்பு கணிசமாக உயர்கிறது. இங்கு தேங்கிய பருத்தியைக் கொண்டு தமிழகம் முழுக்க பல நூற்பாலைகள் அக்காலகட்டத்தில் துவங்கப்பட்டன. ஹார்வி என்பவர் 1885-ல் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்திலும், 1889-ல் தூத்துக்குடியிலும், 1892-ல் மதுரையிலும் நூற்பாலைகளை அமைத்தார். ஸ்டேன்ஸ் என்பவர் 1895-ல் கோவையில் ஆரம்பித்தார்.
பருத்தி ஆலைகளுக்கு தேவையான பஞ்சு தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்து வந்தன. 1870-களுக்கு நாடெங்கும் ரயில் போக்குவரத்து பரவலாக்கப்பட பருத்தியை கொள்முதல் செய்து தேவையான இடங்களுக்கு உடனடியாக கொண்டு  செல்ல முடிந்தது. ஆனால் சற்றேக்குறைய பருத்தி விவசாயம் தொடங்கிய அதே காலத்தில்தான் இந்தியாவில் கொடுமையான தாதுப்பஞ்சம் ஏற்படுகிறது. உணவு கிடைக்காமல் நாடெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக சாகிறார்கள். மதராஸ் போன்ற பெருநகரங்களை நோக்கி இடம்பெயர்கிறார்கள்.   குறிப்பாக ஆங்கிலேயர்களின் வரிவசூல் கொடுமை தாங்கமுடியாமலும், ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்களின் கொடுமையாலும் பாதிக்கப்பட்ட இடைநிலை சாதியை சேர்ந்த சிறு விவசாயிகள் , தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் மதராஸ் , மதுரை, கோவை போன்ற  ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க செல்கிறார்கள்.    அப்படி குடியேறியவர்கள்தான் பின்னி ஆலையின் பெரும்பான்மை தொழிலாளர்கள். மதராஸில் அப்படி குடியேறிய மக்களை ஆங்கிலேயர்கள் கொத்தடிமைகள்போல நடத்தினார்கள். அதிக உழைப்பு நேரம், குறைந்த கூலி என்று அவர்களை நாள்முழுவதும் வேலைவாங்கி ஆலையை நடத்தினார்கள்.    அப்படி குடியேறிய காலனிகளில் அம்மக்களை விலங்கினும் கீழாக ஆங்கிலேயர்கள் நடத்தினாலும், கிராமப்புற சாதிய கொடுங்கோன்மையை விட இது சற்று மேம்பட்டதாக இருந்ததால் அதனை அவர்கள் சகித்துக் கொண்டனர். இருந்தாலும் பசியிலும், பஞ்சத்திலும் , ஜாதிய அடக்குமுறைகளிலும் ஏற்கனவே செத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த கஷ்டம் பெரிதாக தெரியவில்லை. உணவும், உடையும், தங்குமிடமும், ஓரளவு மரியாதையும் கிடைக்கிறது என்று தேற்றிக்கொண்டு சுமையை பொருட்படுத்தாமல் ஆலையில் பணியாற்றினார்கள்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஆலையின் கெடுபிடிகள் அதிகமாயின. சூரிய உதயத்தைகூட பார்க்கமுடியாதளவு வேலைவாங்கினார்கள். காற்றோட்ட வசதியோ, மருத்துவ வசதியோ, சத்தான உணவோ அவர்களுக்கு அங்கு கிடைக்கவில்லை. ஆலைத்தொழிலாளர்களின் குழந்தைகளின் இறப்பு விகிதம் பிற பகுதிகளை விட எட்டு மடங்கு அதிகமாக இருந்தது. இந்த நிலையில்தான் அந்த மாபெரும் புரட்சி வெடித்தது.
1920-ல் ஒன்றிணைக்கப்பட்ட பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் மில்  ஆலைகளில் முதன் முதலாக தொழிற்சங்கம் தொடங்கப்படுகிறது. 1921 ஜூனில் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற அந்த தொழிற்சங்கம் நடத்திய வேலை நிறுத்தம் இன்றும் வரலாற்றில் முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகிறது. ஆம் இந்தியாவில் அமைப்புரீதியாக தொடங்கப்பட்ட  முதல் தொழிற்சங்கம். அது நடத்தும்   வேலைநிறுத்தப்போராட்டம். இதற்கு முன்பே ஐஸ்ஹவுஸ் போன்ற சில சிறிய ஆலைகளில் வேலைநிறுத்தம் நடந்திருந்தாலும்  அவற்றையெல்லாம்  முறைப்படுத்தப்பட்ட அமைப்புரீதியிலான சங்கம் என்றோ போராட்டம் என்றோ சொல்லமுடியாது. ரஷ்யப்புரட்சி நடந்த மறு ஆண்டுதான் இந்தியாவின் உழைக்கும் வர்க்கம் ஒன்றாக இணைந்து இந்த சங்கத்தை ஆரம்பித்தார்கள்.
1915இல் துணி வியாபாரியான செல்வபதி செட்டியாரால் பின்னி மில்லில் தொடங்கப்பட்ட சிறு தொழிற்சங்கம்தான் இந்தியாவின் முதல் தொழிற்சங்கம். சென்னையில் முதன்முதலாக உழைப்பாளர்களின் திருநாளான மே தினம் கொண்டாட அவர்தான் முயற்சி எடுத்தார். பிறகு 1921இல் திரு வி.க தலைமையில் நடைப்பெற்ற பின்னிமில் போராட்டம்தான் பின்னிமில்லுக்கும் ஆலை தொழிலாளர்களுக்கும் வரலாற்றின் பக்கங்களில் தனித்த இடத்தை ஏற்படுத்தியது. அனால் இந்த வேலைநிறுத்தத்தில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஓர் அணியாகவும் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் இன்னொரு அணியாகவும் பிரிந்து நின்றார்கள். இதில் பிற்படுத்தப்பட்ட மக்கள் வேலைநிறுத்தத்திலும், தலித் மக்கள் வேலைநிறுத்தத்தை புறக்கணித்து ஆலைப்பணிக்கும் சென்றார்கள். இந்த நுட்பமான பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்களும், அவர்களிடம் சேவகம் புரிந்த சில ஜாதி இந்துக்களும் திட்டமிட்டு உருவாக்கி கலகம் ஏற்படுத்தினார்கள். இதில்  தலித் குடியிருப்புகளை தீவைத்து எரித்தார்கள். இந்த கலவரத்துக்கு புளியந்தோப்பு கலவரம் என்று பெயர். கலவரத்தில் சிலர் உயிரிழந்தார்கள். இன்றும் முதலாளித்துவம் இந்த பிரித்தாளும் உத்தியை பயன்படுத்திதான் தொழிலாளர்களை ஒன்றுசேராமல் பார்த்துக்கொள்வது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்தியா  போன்ற  பல்வேறு ஜாதிய அடுக்குகள் கொண்ட தேசத்தில் இதுபோன்ற போராட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வேலை எளிதே.  இந்த கலவரம் பற்றி திருவிக அவரது சுயசரிதையில் விரிவாக பதிவு செய்துள்ளார். இந்தியவரலாற்றில் முதல்முறையாக சுயமரியாதையோடு எழுந்த தலித்துகளும் எதிர்தாக்குதல் நடத்தியுள்ளார்கள். பெரம்பூரில் இருந்த  பின்னி ஆலை ஊழியர்களின் குடியிருப்புகள் மீது தலித் குழுக்கள் பதில்தாக்குதல் நடத்தினர். அதைத்தொடர்ந்து புளியந்தோப்பிலும் சுற்றுப்பகுதிகளிலும் பிரிட்டிஷ் போலீசார் காவலை அதிகப்படுத்தி பலரை கைது செய்தார்கள். ஆறு மாத காலம் நடந்த இந்த வேலை நிறுத்த முடிவில் புதிய தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாக்கப்பட்டன..
மதராஸ் லேபர் யூனியன்  பற்றி இன்னொரு சுவையான கதையும் உண்டு. அன்றைய ரயில்வே தொழிலாளர் தலைவராக இருந்தவர் ஜார்ஜ் அருண்டேல். கலாஷேத்ரா நிறுவனரும் பரதக்கலைஞருமான  ருக்மணி அம்மையாரின் கணவர்தான் ஜார்ஜ் அருண்டேல். இங்கிலாந்தில் பிறந்தவர். மதராஸ் வந்தவர் பிறகு  அடையாறில் இருந்த அன்னிபெசன்ட் அம்மையாரின் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தார். சங்கத்திலிருந்த நீலகண்ட சாஸ்திரியின் மகள் ருக்மணியை சந்தித்ததும் காதல் மலர்கிறது. ருக்மணி, ஜார்ஜ் அருண்டேல்  காதல் விவகாரம் வெளியில் தெரிகிறது. அந்தக்காதல் அந்நாட்களில் பலத்த சர்ச்சையை  ஏற்படுத்தியிருக்கிறது. அன்றைய நாளிதழ்களில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயமும் இதுதான்.  அன்னிபெசன்ட்டின் ஹோம் ரூலை எதிர்த்த எல்லாரும் இவர்கள் காதலையும் எதிர்த்துள்ளார்கள். சென்னைக்கடற்கரையில் நடந்த கூட்டத்தில் வ.உ.சி இந்த காதலை எதிர்த்து மிகக்கடுமையாக பேசினார். இந்து, சுதேசமித்திரன் போன்ற நாளிதழ்கள் இந்த காதலை எதிர்த்து கட்டுரைகள் எழுதின. தேசபக்தன் நாளிதழோ இவர்கள் காதலை ஆதரித்தது. ஒரு வெள்ளையன் நமது ஆச்சாரமான இந்துக்குடும்பப்பெண்ணை களவாடுகிறான். அதை நீங்கள் வெட்கமில்லாமல் ஆதரிக்கிறீங்களே என்று சுப்ரமணிய சிவா   திருவிகவை கடுமையாக திட்டியுள்ளார். அதற்கு திருவிக காதலின் அருமையும், வலிமையும் உங்களுக்கு புரியவில்லை. அதை புரிந்துக்கொள்ளாமல் காலத்தை வீணாக்கிவிட்டீர்கள். காதலையே உணராத நீங்கள் எப்படி இந்த நாட்டின் விடுதலையை பற்றி பேசமுடியும் என்று திருப்பி கேட்டுள்ளார். நீலகண்ட சாஸ்திரியின் மகள்தான் ருக்மணி   1920-ல்  அருண்டேலுக்கும், ருக்மணிக்கும் திருமணம் நடக்கும்போது ருக்மணிக்கு பதினாறு வயது. அருண்டேலுக்கு நாற்பத்திரெண்டு. திருவிக அவர்கள் இருவரையும் அழைத்து மதராஸ் லேபர் யூனியனுக்கு அழைத்து தொழிலாளர் முன்னிலையில் வாழ்த்தியுள்ளார்கள். இப்படி லேபர் யூனியன் ரத்தம் சிந்திய இடத்தில் பூக்களும் மலர்ந்துள்ளன.
1970ல் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் இந்த ஆலை முழுவதும் சேதமடைந்து தனது செயல்பாட்டை அடியோடு நிறுத்திவிட்டது.  பின்னர் இந்த ஆலை முற்றிலும் கைவிடப்பட்டு தமிழ் திரைப்பட இயக்குநர்களின்  சொர்க்கபுரியாக மாறியது. நாம் பார்க்கும் பல தமிழ்த்திரைப்படங்களின் பாடல் காட்சிகள், சண்டைக்காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவையே.
--------------------+++++---------------------------
குற்றவாளி.....
யெஸ் வங்கியின் அதிபயங்கரமான வீழ்ச்சி இந்திய வங்கித்துறையில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது  நாட்டில் உள்ள தனியார் வங்கிகளின் செயல்பாடு களைப் பற்றி அதிர்ச்சிகரமான கேள்விகளை எழுப்புவது மட்டுமல்ல; வங்கிகளை ஒழுங்காற்று செய்யும் இந்திய ரிசர்வ் வங்கியின் தலையீடு குறித்தும் அதில் அடைந்துள்ள தோல்வி குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது. அதனால்தான், யெஸ் வங்கியின் திவால் என்பது இந்திய நாட்டின் கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தின் மிக மிக மோசமான உதாரணம் என்று கடுமையான வார்த்தைகளால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு சாடியிருக்கிறது.  
யெஸ் வங்கியின் கடன் கணக்கு 5 ஆண்டுக் காலத்தில் மிகப்பெரும் உச்சத்தை எட்டி யிருக்கிறது. அந்தக் கணக்கே நமக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. மார்ச் 2014ல் வெறும்  ரூ.55,633 கோடியாக இருந்த யெஸ் வங்கியின் கடன் கணக்கு மார்ச் 2019ல் ரூ.2,41,999 கோடி யாக அதிகரித்திருக்கிறது. மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இந்தப் பெரும்  கடன் தொகைகள் கைமாற்றி விடப்பட்டுள்ளன. கடன் வாங்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அனைத்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் அக்கட்சிக்கும் சாதகமானவை. இதில் முக்கியமான ஒரு கார்ப்பரேட் கடனாளி அனில் அம்பானி என்பதும், அம்பானியின் நிறுவனங்களுக்கு மோடி அரசின் ஆதரவு உள்ளது என்பதும் யெஸ் வங்கியின் பணத்தை அனில் அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் கூட்டுக் களவாணிகள்தான் சூறையாடியிருக் கிறார்கள் என்பதும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
  யெஸ் வங்கியில் மக்கள் சேமித்த பணத்தை இதுபோன்ற கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல் களுக்கு கடன் என்ற பெயரில் கைமாற்றிவிட்ட தில் அந்த வங்கியின் தலைவருக்கும் வங்கி நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதுதொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், வங்கியின் நிறுவனர் ராணா கபூர், டி.எச்.எப்.எல் நிறுவனத்திற்கு அதிகமான தொகையை கடன் கொடுப்பதற்கு கைமாறாக ரூ.600 கோடி அளவிற்கு லஞ்சம் பெற்றிருப்பதாக அமலாக்கப்பிரிவின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. 
அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் டிஎச்எப்எல் நிறுவனம் மட்டுமல்ல, சுமார் ரூ. 2 லட்சம் கோடி அளவிற்கு யெஸ் வங்கியின் சேமிப்புப் பணத்தை அனில் அம்பானி உள்பட  பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திருப்பி விட்டதற்காக எத்தனை ஆயிரம் கோடிகள் யார் யாருக்கு கைமாறியதோ என்ற அதிர்ச்சிகர மான கேள்விகள் காத்திருக்கின்றன. 
 இதில் குறிப்பாக ரிசர்வ் வங்கியின் தலையீடு ஏதும் இல்லை என்பதும் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. டெபாசிட்தாரர்களின் நலன்கள் இவர்களால் காவு கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது, திவாலாகிப்போன யெஸ் வங்கியின் 49சதவீத பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி வாங்கிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி மூலமாக மோடி அரசு உத்தரவு போடுகிறது. ஸ்டேட் வங்கியை யும் திவாலாக்கும் முயற்சி இது. 
இதில் குற்றவாளிகள் யெஸ் வங்கியின் நிர்வாகிகள் மட்டுமல்ல, இதற்கு துணைபோன மோடி அரசும் தான்!
-------------------------8---------------------------0

கொரோனா வைரஸால் சீனா, தென் கொரியா, இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீன நாட்டில் மட்டும் இறப்பு எண்ணிக்கை 3,098 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டு 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை.
எனினும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் எளிதில் காப்பாற்றப்படலாம் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கொரோனாவின் எதிரொலியாக இறைச்சி, முட்டை சாப்பிடலாமா என்ற அச்சம் அசைவப்பிரியர்களுக்கு லேசாக எழுந்துள்ளது. சமூக ஊடகங்களிலும் கொரோனாவை குறித்து பீதி அளிக்கக்கூடிய வதந்திகள் பரவி வருவதால் நாளுக்கு நாள் மக்கள் சற்று நிம்மதியை இழந்து வருகின்றனர்.

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவிக்கையில், '' கோழி, ஆட்டிறைச்சி மற்றும் கடல் உணவை சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளது.
0---------8-----------0-----------8---------------------0



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?