சில கேள்விகள் தமிழா........


நிலவேம்பு குடிநீர், கப சுர  குடிநீர் நோய் வராமல் இருக்க குடிப்போம். ஆனால் எல்லா நோய்க்கும் ஆங்கில மருந்தை மட்டுமே உபயோகிப்பாயா தமிழா ?

கற்றாழை ( Alovera )  சோப்பில் இருக்கலாம்,
வேம்பு துணி துவைக்கும் பவுடரில் இருக்கலாம்.
மஞ்சள் முக கிரீமில் இருக்கலாம்....
வெளி பிரயோகத்திற்க்கு இயற்கை மருந்து -உள்ளே மட்டும் கெமிக்கல் உள்ள ஆங்கில மருந்தா?. உங்கள் அடுப்படி மருந்து ஆயுர்வேதம் சித்த மருத்துவம் உங்கள் முக்கிய மருத்துவமாக ஆக கூடாதா .. தமிழா ?

பாரம்பரிய மருத்துவத்தை  தர வேண்டியது அரசு கடமை மட்டும் இல்லை.. நமது பாரம்பரிய மருத்துவத்தை  உபயோகிப்பது நமது உரிமை இல்லையா தமிழா? நமது பாரம்பரியம் மறக்கலாமா தமிழா ?

என்ன படித்து இருக்கிறார் ? எங்கே மருத்துவம் கற்றார் ?  இதற்க்கு முன் என்ன வேலை பார்த்தார் ? உண்மையில் பாரம்பரிய மருத்துவரா ? திடீர் யூ டியூப் -டிவி மருத்துவாரா? அரசாங்க அனுமதி இருக்கிறதா ? மனிதம் உள்ளவரா ? மற்றவரின் பலகீனத்தை பணமாக்குபவரா - என்றால் நீங்கள் மருத்துவரை கேட்க மாட்டீர்களா  தமிழா ?

எளிதாக நம்பி ஏமாந்து போவானா தமிழன் ?. . வெளுத்தது எல்லாம் பால் என்று,  யார் எதை சொன்னாலும் யூ டி யூப் யூனிவர்சிட்டி யை மட்டும் நம்பிடுவாயா  தமிழா ?

அறம்  வளர்த்து, மனிதம் வளர்த்து -ஆங்கே மருத்துவம் வளர்க்க வேண்டும் என்றால் அறம் இல்லாத மருத்துவத்தை, மருத்துவரை நாடி ஏமாந்து போவாயா தமிழா ?

வீரத்தில் புலியை முறத்தால் அடித்து விரட்டு விட்டு, நீ ஏன் எந்த நோய்  கொண்டாலும் பயந்து ஒதுங்கி  ஆங்கில மருத்துவத்ததை மட்டுமே  எடுத்து கொள்கிறாய் தமிழா ?

ஆயுர்வேத, சித்த மருத்துவத்தில் மருந்தில் பக்க விளைவுகள் உள்ளதா என்று கேள்வி கேட்கும் நீங்கள் ....பயமின்றி கலப்பட அவசர உணவையும், பக்க விளைவுள்ள மருந்தை ஏன் கேள்வி கேட்காமல் எடுத்து கொள்கிறாய் ?

உணவே மருந்து ..என்கிறது எங்கள் சித்தாந்தம் .. நீங்கள் அவசர காலத்திற்கு மட்டுமே பயன் பட கூடிய ஆங்கில மருந்தையே உணவாக எடுத்து கொள்கிறாய் தமிழா ?
ஆயுர்வேத சித்த மருந்துகள் தாமதமாக வேலை செய்யும் என்றும், எவ்வளவு நாளில் சரியாகும் என்று பெரிய நோய்க்கு சிகிச்சை பெற  வந்த நீங்கள் .. எந்த மாற்று முறை மருத்தவரிடமாவது இரத்த கொதிப்பை .. நோய்களை ஏன் சரி செய்ய முடியவில்லை தமிழா ?

நம்மை அடிமையாக்கிய வெள்ளை காரனின் மருத்துவத்தோடு ஆயுர்வேத , சித்த , நமது பாரம்பரிய மருத்துவத்தை ஒருங்கிணைந்து எடுத்து கொள்வது தவறு இல்லை என்று எப்போது நம்ப போகிறாய் தமிழா ?

நீ தமிழனாய் இருந்தால் ஷேர் செய் என்றவுடன் உனது தமிழ் பாசத்திற்க்கு முன்னாள் உனது பகுத்தறிவு எங்கே போகிறது தமிழா ?

பால் விலையேற்றம், விவசாய பொருட்கள் விலை ஏறினால் மட்டும் ஏழை பாதிக்கபடுகிறார்கள் என்று விவசாயத்தை, விவசாய பொருட்களை , விவசாயியை ஏன்  இன்னும் ஏழையாய் வைத்திருக்கிறாய் தமிழா ?

முல்லைக்கு தேர் கொடுத்தான், புறாவுக்கு  சதை கொடுத்தான் என்று கதை சொல்லிவிட்டு அடுத்த வீட்டுக்காரனை, நமது தெருவில் உள்ள ஏழையை ஏன் மறந்தாய் தமிழா?

பிரித்து ஆளும் சூழ்ச்சியில்  மாட்டி  கொண்டு ஏன் அடுத்தவரின் மதத்தில், மனித உணர்ச்சியில், மானத்தில், விட்டு கொடுப்பது தமிழர் குணம், வந்தாரை வாழ வைப்பது தமிழர் என்ற பழமொழிக்கு அடையாளமான நீங்கள் ஏன் விளையாடுகிறீர்கள்!!!!

தமிழ் எங்களது வாழ்வு
தமிழர் எல்லோரும், இந்தியர் அனைவரும் ஓர் தாய் மக்கள் என்று நாம் வாழ்வோமா தமிழா ?

பின் குறிப்பு- ஆங்கில மருத்துவம் சிறந்த மருத்துவம் தான் மறுப்பதற்க்கு  இல்லை. எல்லா நோய்க்கும் ஆங்கில மருந்து மட்டுமே  தீர்வாகாது. எல்லா நோய்க்கும் ஆயுர்வேதம் சித்த மருத்துவம் பாரம்பரிய மருத்துவம் தீர்வு  தரும் என்பதற்க்கு உத்தரவாதமுமில்லை.. ஆனால் எல்லா நோய்களையும் வராமல் தடுக்க  நமது தமிழ் மருத்துவம்  உதவும் என்பதில் எள்  அளவும் சந்தேகம் இல்லை

தமிழர் என்றும் இந்தியர் என்றும் பெருமிதம் கொள்வோம். இந்திய மருத்துவத்தாலே நலம் பெறுவோம்.
-------------------------------------
தமிழ்ப் புத்தாண்டா சார்வாரி?

தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா என்ற ஒரு விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வருகின்றது. தமிழறிஞர்கள், தை 1-ம் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று வலியுறுத்தி வந்தனர். அதனையடுத்து, 2008ம் ஆண்டு தை 1-ஐ தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க அரசு, காழ்ப்புணர்ச்சியில் அதனை ரத்து செய்தது.
கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.
மறைமலை அடிகளார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், பேராசிரியர் கா.நமசிவாயர், இ.மு.சுப்பிரமணியனார், மு.வரதராசனார், இறைக்குருவனார், வ.வேம்பையனார், பேராசிரியர் தமிழண்ணல், வெங்காலூர் குணா, கதிர். தமிழ்வாணனார், சின்னப்பத்தமிழர், கி.ஆ.பெ.விசுவநாதர், திரு.வி.க, பாரதிதாசனார், கா.சுப்பிரமணியனார், ந.மு.வேங்கடசாமியார், சோமசுந்தர பாரதியார், புலவர் குழுவினர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்துரைத்தனர்.

மலையகத்தில் கோ.சாரங்கபாணியார், சா.சி.குறிஞ்சிக்குமரனார், அ.பு.திருமாலனார், பேராசிரியர் இர.ந. வீரப்பனார், கம்பார் கனிமொழி குப்புசாமி, மணி. வெள்ளையனார், திருமாறன், இரெ.சு.முத்தையா, இரா.திருமாவளவனார், இர.திருச்செல்வனார் உள்ளிட்ட 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.
இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.
1. பிரபவ, 2. விபவ, 3. சுக்கில, 4. பிரமோதூத, 5. பிரஜோத்பத்தி, 6. ஆங்கீரஸ, 7. ஸ்ரீமுக, 8. பவ, 9. யுவ, 10. தாது, 11. ஈஸ்வர, 12. வெகுதான்ய, 13. பிரமாதி, 14. விக்கிரம, 15. விஷு, 16. சித்ரபானு, 17.சுபாணு, 18. தாரண, 19. பார்த்திப, 20. விய, 21. சர்வகித்து, 22.சர்வதாரி, 23. விரோதி, 24. விக்ருதி, 25. கர, 26. நந்தன, 27. விஜய, 28. ஜய, 29. மன்மத், 30. துர்முகி, 31. ஹேவிளம்பி, 32. விளம்பி, 33. விகாரி, 34. சார்வரி, 35. பிலவ, 36. சுபகிருது, 37. சோபகிருது, 38. குரோதி, 39. விசுவாசு, 40. பராபவ, 41. பிலவங்க, 42. கீலக, 43. செமிய, 44. சாதரண, 45. விரோதிகிருது, 46. பரிதாபி, 47. பிரமாதீச, 48. ஆனந்த, 49. ராஷஸ, 50. நள, 51. பிங்கள, 52. காளயுக்தி, 53. சித்தாத்திரி,54. ரெத்திரி, . 55. துன்பதி, 56. துந்துபி, 57. ருத்ரோகாரி, 58. ரக்தாஷி, 59. குரோதன, 60. அக்ஷய,
இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை யாராவது சொல்ல முடியுமா?
தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரமிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை, காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள்.
அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1,440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1,440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்துவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1,440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
  1. இளவேனில் - (தை-மாசி)
  2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
  3. கார் - (வைகாசி - ஆனி)
  4. கூதிர் - (ஆடி - ஆவணி)
  5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
  6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)
மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.
சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தை மாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.
காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினை கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.



“கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார்?” - பொய்ப் பிரசாரங்களை உடைக்கும் கட்டுரை!
தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன்
அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆகவேண்டுமெனில் சித்திரை திருநாளாகக் கொண்டாடுங்கள். பகுத்தறிவு என்பது கடவுளை மறுப்பது மட்டும் அல்ல, பகுத்து அறிவது நான் பகுத்தறிவு.
(இக்கட்டுரையை எழுதியவர் யார் என்று சரிவரத் தெரியவில்லை. இருப்பினும் தமிழ்ச் சமூகத்திற்கு மிகப்பெரிய உண்மையை நெற்றிப்பொட்டில் அறைவது போல எழுதியுள்ளதன் பொருட்டு பகிரப்படுகிறது.) 
பகிர்வு உதவி : வசந்தகுமார்
-----------------------------------------------------
தமிழக அரசை செயல்பட வைத்தவர்கள்.
ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் முக ஸ்டாலின் இவர்கள் இருவரும் மாறி மாறி தந்த அழுத்தம்தான் முதல்வரின் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்புக்கு காரணமாக அமைந்துவிட்டதாக பரபர பேச்சுக்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு  முடிவுக்கு வருகிறது என்றாலும், இது நீட்டிக்கப்படுமா என்பது குறித்த கேள்வி போன வாரமே எழுந்துவிட்டது.. இதற்கு காரணம் இந்தியாவில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போவதால்தான்!

இதனால் அந்தந்த மாநில முதல்வர்களே லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.. அதுபோலவே நம் முதல்வரும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.. இது சம்பந்தமான முதல்வர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள், மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தப்பட்டது.
அந்த வகையில் கடந்த 3 நாட்களாகவே டென்ஷன் எகிறி கிடந்தது.. ஊரடங்கு நீட்டிப்பினை முதல்வர் அறிவிப்பாரா? பிரதமர் சொல்வாரா என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.. காரணம் பல மாநிலங்களில் நீட்டித்து அறிவித்து விட்டார்கள். தமிழகம் மட்டும் அறிவிக்காமல் இருந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ மத்திய அரசு இது தொடர்பாக அறிவிக்கட்டும் என கூறியிருந்தார். இது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.
உத்தரவு
ஒரு கட்டத்தில் முக ஸ்டாலின் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா இல்லையா என்பதை தாமதமின்றி அறிவிக்க வேண்டும் ஒடிசா, பஞ்சாப் முதல்வர்கள் நீடித்துள்ள நிலையில் தமிழகத்தின் முடிவினை இனியும் காலதாமதம் செய்யாமல் எடுத்து, மக்களின் மனநிலையைத் தயாரித்திட முன்கூட்டியே அறிவித்திட வேண்டும்" என்று முதல்வருக்கு கடிதம் எழுதினார்.
இதனிடையே ஆஸ்பத்திரிகளில் வென்டிலேட்டர்கள் பிரச்சனை முதல் செந்தில்பாலாஜி நிதியை பெற்று கொள்ளாதது வரை அனைத்தையும் ட்வீட் போட்டு கேள்வி கேட்டார் முக ஸ்டாலின்.. முதல்வரையும் கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார் ஸ்டாலின்... இது அதிமுக தரப்பை கொஞ்சம் அதிர்ச்சி அடையவே வைத்தது.
இன்னொரு பக்கம் ஒரு வாரமாகவே மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் பதிவுகளும் ட்வீட்களும் டெல்லியையே அலறவிட்டன.. இந்த சமயத்தில் பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்கும் துணிச்சல் நாட்டில் எந்த கட்சி தலைவருக்கும் வராத நிலையில் கமல் மாறுபட்டு கருத்தை முன் வைத்திருந்தார்..
. பிரதமருக்கு எழுதிய ஓபன் லெட்டர் அதிமுகவையும் சற்று உற்று கவனிக்கப்பட வைத்தது. ஆளும் தரப்பே நிதியை பெற மத்திய அரசுக்கு போதுமான அழுத்தம் தரவில்லை என்ற அதிருப்தியை பெற்று வரும் நிலையில், கமல் இப்படி பொசுக்கென பிரதமரை கேள்வி கேட்பார் என்று யாரும் யோசித்து பார்க்கவில்லை.
எஜமானர்
மேலும் தடாலடியாக யூ-டர்ன் போட்டு அதிமுக பக்கமும் திரும்பினார் கமல்ஹாசன்.. "லாக்டவுன் நீட்டிப்பு குறித்து பிற மாநில முதல்வர்கள் அறிவித்துவிட்டனர்.. நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் என் மாண்புமிகு முதல்வர் அவர்களே? உங்களது எஜமானரின் உத்தரவு குரலுக்காகவா காத்திருக்கிறீர்கள்? என்னுடைய குரல் மக்களிடம் இருந்து மக்களுக்காக வருகிறது" என்று கமல் பதிவிட்டது முற்றிலும் யாரும் எதிர்பாராதது.
"பிற மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்கான முடிவை தாங்களே எடுக்கும் நேரத்தில் தமிழக முதல்வர் அவ்வாறு எடுக்கவில்லை என ட்விட்டர் வாசிகள் கேள்விகளை எழுப்பினர்.. தன்னிச்சையாக எந்த முடிவையும் முதல்வரால் எடுக்க முடியவில்லையா என்றும், "மற்ற மாநில முதல்வர்கள் ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிக்கை விடும் நேரத்தில் இன்று தமிழ்நாட்டில் தலைமை செயலர் அதை பிரதமர் மோடி அறிவிப்பார் என்றால் நீங்கள் யார் எடப்பாடி அவர்களே??" என்றும் காட்டமான கேள்விகளும் எழுந்தன.
அழுத்தங்கள்
இப்படி நாலாபக்கமும் நெருக்கடிகள், அழுத்தங்கள் எழுந்த நிலையில், திடீரென முதல்வர் தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார்.. பிரதமர்தான் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பார் என்று நாள்கணக்கில் காத்திருந்த நிலைமை உடைந்தது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஸ்டாலினும், கமலும்தான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்!!
-------------------------------------
யார் யாருக்கு அனுமதி ?
மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன்படி ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!
யார் யாருக்கு அனுமதி ?
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.
கட்டுமானப்பணிகள் மற்றும் வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளும் தொடங்க அனுமதி.
50% தொழிலாளர்களுடன் தேயிலை, காபி தோட்டங்கள் இயங்க அனுமதி.
100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு அனுமதி.
நெடுஞ்சாலைகளில் உள்ள மெக்கானிக் ஷாப்புகள், தாபாக்கள் இயங்க அனுமதி.
33% ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் இயங்க அனுமதி.
தச்சுவேலை, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் போன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு அனுமதி.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்.
கொரியர் சேவைகள் தொடரலாம்.
“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!
யாருக்கு அனுமதி இல்லை ?
நாடுமுழுவதும் மதுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை.
பொது போக்குவரத்து சேவைகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், மால்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை.
அனைத்து வழிபாடு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது.
சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க தடை.
அதுமட்டுமின்றி, தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கவும்உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
--------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?