பரவுவது இப்படித்தான்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது.
இந்த வைரஸ் தொற்றால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள்.
இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.
நோயாக உருவாகும் காலம்
இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம்.
உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.
சார்ஸ்-சி.ஓ.வி.-2 என அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்படும் கொரோனா வைரஸ், சுவாசத்தின் மூலம் (அருகில் யாராவது இருமிய பிறகு) அல்லது வைரஸ் பரவியுள்ள ஒரு பொருளை, இடத்தைத் தொட்டுவிட்டு பிறகு முகத்தைத் தொடும் போது இந்த வைரஸ் உடலில் நுழைகிறது.
 AND-ONE/GETTY IMAGES
AND-ONE/GETTY IMAGES
தொண்டை அருகே உள்ள செல்களில் அது முதலில் தொற்றிக் கொள்ளும். சுவாசப் பாதை மற்றும் நுரையீரலுக்கு சென்று அவற்றை ``கொரோனா வைரஸ் உற்பத்தி தொழிற்சாலைகளாக'' மாற்றும். அது பெரும் எண்ணிக்கையில் புதிய வைரஸ்களை உருவாக்கி உடலில் செலுத்தி, அதிக செல்களில் தொற்று ஏற்படுத்தும்.
ஆரம்ப கட்டத்தில் நீங்கள் நோயுற மாட்டீர்கள். சிலருக்கு ஒருபோதும் அறிகுறிகள் தோன்றாது.
நோயாக உருவாகும் காலம், அதாவது தொற்று ஏற்பட்டு அதன் நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கான காலம், ஆளுக்கு ஆள் மாறுபடும். ஆனால் சராசரியாக இது ஐந்து நாட்கள் என்ற அளவில் உள்ளது.
லேசான நோய்
ஏறத்தாழ அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும்.
கொரானா வைரஸ் தொற்று பரவிய 10 பேரில் எட்டு பேருக்கு கோவிட் - 19 நோய் லேசான பாதிப்பாக அமையும். காய்ச்சலும், இருமலும் தான் இதற்கான முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
 SPL
SPL
உடல் வலிகள், தொண்டை வறட்சி, தலைவலியும் கூட வரலாம். ஆனால் இவை வந்தாக வேண்டும் என்றும் கிடையாது.
காய்ச்சலும், அசௌகரியமாக உணர்தலும், தொற்று பரவியதற்கு எதிராக உங்கள் நோய் எதிர்ப்பாற்றலின் செயல்பாட்டால் ஏற்படக் கூடியவை. இந்த வைரஸ் ஊடுருவல் கிருமியாக இருக்கும். உடலின் மற்ற செல்கள், ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என உணர்ந்து சைட்டோகின்ஸ் என்ற ரசாயனத்தை உற்பத்தி செய்யும்.
இவை தான் நோய் எதிர்ப்பாற்றலாக செயல்படும். ஆனால் உடல் வலி, காய்ச்சலையும் ஏற்படுத்தும்.
கொரோனா வைரஸ் இருமல் ஆரம்பத்தில் வறட்டு இருமலாக இருக்கும் பின்னர் வைரஸ் தொற்று ஏற்படும்போது, செல்களில் எரிச்சல் தோன்றும்.
சிலருக்கு இருமலின் போது கெட்டியான சளி வெளியாகும் - வைரஸால் கொல்லப்பட்ட நுரையீரல் செல்களின் கெட்டியான சளியாக அது இருக்குபோனார்.
படுக்கையில் கிடந்து ஓய்வெடுத்தல், நிறைய பானங்கள் குடித்தல் மற்றும் பாரசிட்டமால் மூலம் இதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவமனையின் விசேஷ சிகிச்சை முறை எதுவும் தேவையில்லை.
இந்த நிலை சுமார் ஒரு வாரத்துக்கு இருக்கும் - இதிலேயே பெரும்பாலானோர் குணமாகிவிடுவர். வைரஸை எதிர்த்து நோய் எதிர்ப்பாற்றல் போராடும் காரணத்தால் இவ்வாறு நடக்கும்.
இருந்தபோதிலும், சிலருக்கு தீவிர கோவிட் -19 நோய் பாதிப்பு ஏற்படும்.
இந்த நிலையில், இந்த நோய் பற்றி நாம் புரிந்து கொள்ளக் கூடிய விஷயங்கள் இவை. மூக்கு ஒழுகுதல் போன்ற தீவிர சளி அறிகுறிகளும் ஏற்படலாம் என்றும் ஆய்வுத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.பாதிப்பு
வைரஸ் பாதிப்புக்கு எதிராக நோய்த் தடுப்பாற்றல் உக்கிரமாக செயல்படும்போது, இது நோயாக உருவாகும்.
உடலின் மற்ற பகுதிகளில் அழற்சியை ஏற்படுத்த இது ரசாயன சமிக்ஞைகளை அனுப்பும். ஆனால் இதை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமான அழற்சி ஏற்பட்டால் உடல் முழுக்க பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
``நோய்த் தடுப்பாற்றல் எதிர்வினை செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மையை இந்த வைரஸ் ஏற்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக உடல் அழற்சி இருக்கிறது. இதை எப்படி செய்கிறது என்பது நமக்குத் தெரியவில்லை'' என்று லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நத்தாலி மேக்டெர்மோட் கூறியுள்ளார்.
நுரையீரல் அழற்சி, நிமோனியா எனப்படுகிறது.
 GETTY IMAGES
GETTY IMAGES
உங்கள் வாயில் இருந்து, மூச்சுக் குழாய் வழியாகச் சென்று, நுரையீரலின் சிறிய குழல்களில் அதனால் செல்ல முடியும் என்றால், நுண்ணிய காற்று அறைகளில் அதனால் போய் அமர்ந்து கொள்ள முடியும்.
அங்கு தான் ரத்தத்திற்கு ஆக்சிஜன் செல்வதும், கரியமில வாயு நீக்கப்படுவதும் நடக்கிறது. ஆனால், நிமோனியாவில் இந்த அறைகளில் தண்ணீர் கோர்த்துக் கொண்டு, சுவாச இடைவெளி குறைந்து, சுவாசிப்பது சிரமம் ஆகும்.
சிலருக்கு சுவாசிக்க வென்டிலேட்டர் தேவைப்படும்.
சீனாவில் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி பார்த்தால், 14 சதவீதம் பேருக்கு இந்த நிலை வரை பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிகிறது.
சிக்கலான நிலையில் பாதிப்பு
பாதிக்கப்பட்டவர்களில் 6 சதவீதம் பேருக்கு சிக்கலான நிலையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் உடல் செயல்பாட்டை இழக்கிறது, இதுவே மரணம் ஏற்படவும் காரணமாக உள்ளது.
 KADO/GETTY IMAGES
KADO/GETTY IMAGES
நோய்த் தடுப்பாற்றல் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு, உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்துவது தான் பிரச்சினை.
ரத்த அழுத்தம் அபாயகரமான அளவுக்கு குறையும்போது உடல் உறுப்புகள் செயல்பாடு குறையும் அல்லது முழுமையாக நின்றுவிடும்.
நுரையீரலில் பரவலான அழற்சி ஏற்பட்டு, மூச்சுத் திணறல் ஏற்படும்போது, உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை அளிப்பதை நுரையீரல் நிறுத்துவிடுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்க முடியாமல் சிறுநீரகங்களை அது தடுக்கக் கூடும். உங்கள் குடல்களும் பாதிக்கப்படலாம்.
``நீங்கள் அதற்கு ஆட்படும் அளவுக்கு பெரிய அளவில் அழற்சியை இந்த வைரஸ் ஏற்படுத்தலாம். அது பல உறுப்புகளை செயல் இழக்கச் செய்யலாம்'' என்று டாக்டர் பரத் பன்கானியா கூறுகிறார்.
 GETTY IMAGES
GETTY IMAGES
வைரஸை நோய்த் தடுப்பாற்றலால் அடக்கியாள முடியாமல் போனால், உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் அது பரவி, இன்னும் அதிகமான சேதாரத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் உடலின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். ECMO உள்ளிட்ட சிகிச்சைகள் அதில் அடங்கும்.
தடிமனான குழாய்களில் ரத்தத்தை வெளியில் எடுத்து, ஆக்சிஜனேற்றம் செய்து, மீண்டும் உடலில் செலுத்தக் கூடிய செயற்கை நுரையீரல் இது.
ஆனால் உறுப்புகள் உடலை உயிருடன் வைத்துக் கொள்ள முடியாமல் போகும் போது, அது உயிர்ப்பலி ஏற்படுத்தக் கூடும்.
முதலாவது மரணங்கள்
சிறந்த சிகிச்சைகள் அளித்தும் சில நோயாளிகள் எப்படி இறந்தார்கள் என்பதை டாக்டர்கள் விவரித்துள்ளனர். முதல் இரு நோயாளிகள் சீனாவில் வுஹான் மாகாணத்தில் ஜின்யின்டன் மருத்துவமனையில் இறந்தனர் என்று லான்செட் மருத்துவ இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 HECTOR RETAMAL/GETTY IMAGES
HECTOR RETAMAL/GETTY IMAGES
முதலாவது நபர், 61 வயதான ஆண், மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சமயத்திலேயே தீவிர நிமோனியா பாதிப்புக்கு ஆளாகியிருந்தார்.
அவருக்கு தீவிர மூச்சுத் திணறல் இருந்தது. வென்டிலேட்டர் வைத்த பிறகும், அவருடைய நுரையீரல் செயல் இழந்துவிட்டது, இருதயம் துடிப்பை நிறுத்திக் கொண்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 நாட்களில் அவர் இறந்து போனார்.
இரண்டாவது நோயாளி, 69 வயது ஆண், அவருக்கும் தீவிர மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்தது.
அவருக்கு ECMO சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால் அது போதுமானதாக இல்லை. தீவிர நிமோனியா மற்றும் ரத்த அழுத்த குறைபாட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் இறந்து போனார்.
------------------------4--------------------------
கொரோனா ஒழிப்பு.
முதல்வர் பழனிச்சாமிக்கு ஆங்கில இதழ்கள் பாராட்டு.
மனிதநேயம் என்றால்
உணர்த்தும் தோழர்கள்.
கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக அதிகரித்துள்ளது. இந்தக் கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடுமுழுவதும் அமலில் உள்ளது.
இந்த ஊரடங்கால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். அரசின் நிவாரணம் போதாத நிலையில் ஏழை மக்கள் உணவின்றி பெரும் துயரங்களை சந்திக்கின்றனர்.
ஆனாலும் ஏழைகளின் துரயரங்களை உணர்ந்து பல தன்னார்வலர்கள், சமூக சேவை செய்வோர் மற்றும் அரசியல் கட்சி ஆங்காங்கே பல்வேறு உதவிகளை செய்துவருகின்றனர். அந்த வகையில் கர்நாடாக மாநிலத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக தங்களது சொந்த நிலத்தை இஸ்லாமிய சகோதர்கள் விற்றுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க ஆளும் கர்நாடாக மாநிலத்தில் ஏழைமக்களுக்கும் தெருவோர மக்களுக்கும் அரசு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் கோலார் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதர்கள் தாஜாமுல் பாஷா, முசாமில் பாஷா. சிறிய அளவில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிம் இவர்கள் ஊரடங்கால் ஏழை, எளிய, தெருவோர மக்களுக்கு உணவு இல்லாமல் பரிதவிப்பதை கண்டு அவர்களுக்கு உணவு வழங்கமுடிவு செய்துள்ளனர்.
கையில் இருந்த பணத்தை வைத்து முடிந்தவரை உதவி செய்துவந்த சகோதரர்கள் பணம் தீர்ந்ததும் அவர்களுக்கு சொந்தமான இடத்தை ரூ. 25 லட்சத்துக்கு விற்று, ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.
இந்தப் பணத்தைக் கொண்டு மளிகைப் பொருட்கள் வாங்குவது, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவது, ரேஷன் பொருட்கள் வாங்கி கொடுப்பது, வீட்டு வாசலில் உணவு கொண்டு போய் சேர்ப்பது என்று சேவை புரிந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தஜாமுல் பாஷா பேசுகையில், “என்னுடைய ஐந்து வயது பெற்றோரை இழந்த நிலையில் பாட்டியுடன் கோலார் வந்தோம். பாட்டிதான் கவணித்துவந்தார். வறுமையால் 3ம் வகுப்போடு படிப்பை பாதியில் நிறுத்தினோம். அதன்பின், அங்குள்ள மசூதியில் வளர்க்கப்பட்டோம். ரியல் எஸ்டேட்அதன்பின், அங்குள்ள வாழை மண்டியில் வேலை பார்த்து வந்தேன். 30 வயதுக்குப் பிறகுதான், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடத் துவங்கினோம்.
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் ஏழைகளுக்கு உணவு கிடைக்கவில்லை என்று அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் விபரீதங்கள் ஏற்படும். ஆதலால், அவர்களது வீட்டு வாசலுக்கே மாளிகைப் பொருட்கள், உணவு, அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறோம்.
நாங்கள் அனைதையாக இருந்தபோது அந்த இடத்தில் இருந்த இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் எங்களுக்கு உணவு கொடுத்து உதவினர். மதமும், ஜாதியும் இதற்கு ஒரு தடையாக இருக்கவில்லை. அப்போது கற்றுக்கொண்ட மனித நேயத்தை இப்போதும் தொடர்கின்றோம்.

மிகப் பெரிய அளவில் வசதி இல்லை என்றாலும், ஏழை, எளிய மக்கள் பசியால் வாடுவதை கண்டு, எங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்றோம். இதில் எந்த மத, அரசியல் நோக்கமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
இவர்களது சேவை மன்பபான்மையைப் பார்த்து பலரும் ஏழைக்களுக்கு உதவ முன் வந்துள்ளனர். இதுவரை இந்த சகோதர்கள் 12,000 பேர் கொண்ட 2,800 குடும்பங்களுக்கு உணவு மற்றும் இலவசமாக மளிகைப் பொருட்கள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 
