முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அயோக்கியனுக்கு ஆதரவு..



அயோக்கிய அர்னாப் கோஸ்வாமிக்காக களமிறங்கும் பிரஸ் கவுன்சில் !

அண்டப்புளுகர் அர்னாப் “பிரபல ‘ஊடகவியலாளர்’ அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டார்” என்ற ‘அதிர்ச்சிகரமான’ சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கவுன்சில் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வியாழக் கிழமை (23-04-2020) அன்றே இது குறித்து அறிக்கை தருமாறு மராட்டிய அரசின் தலைமைச் செயலரையும் மும்பை போலீசு கமிசனரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22, 2020 அன்று இரவில், அர்னாப் கோஸ்வாமி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தாம் தனது மனைவியோடு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்புகையில் இரண்டு காங்கிரஸ் குண்டர்கள் தமது காரை வழிமறித்து மை பாட்டிலைக் கொண்டு தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்ததாகவும், தமது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்ததாகவும் தெரிவித்தார்.

அண்டப்புளுகன் அர்னாப்

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மும்பை போலீசு விசாரித்து வருகிறது. இந்நிலையில்தான் தாக்குதல் நடந்த அடுத்த நாளே இந்திய பிரஸ் கவுன்சில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் தங்களது கருத்தைத் தெரிவிக்க உரிமை உள்ளது. அது பலருக்கும் ஏற்புடையதாக இல்லாத போதும், அத்தகைய ஒரு குரலை நெறிக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. இந்தத் தாக்குதலை இந்திய பிரஸ் கவுன்சில் கண்டிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மாநில அரசு கைது செய்து, நீதியின் முன் நிறுத்தும் என்று கவுன்சில் எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளது.
இந்திய பிரஸ் கவுன்சிலைப் பொருத்தவரை பிரஸ் கவுன்சில் சட்டம் 1978-ன் படி, அதன் அதிகாரம் செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதுமட்டுமே செல்லத்தக்கது ஆகும். எனில் ஒரு தொலைக்காட்சி ஊடகத்தின் உரிமையாளர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு இந்திய பிரஸ் கவுன்சில் அக்கறை செலுத்துவதன் காரணம் என்ன?
கருத்துரிமைக்கு ஒரு ஆபத்து என்றால் பிரஸ் கவுன்சில் களமிறங்குவது நியாயம் தானே? கடந்த சில ஆண்டுகளாகவே பல பத்திரிகையாளர்கள், அரசாலும், பிற நபர்களாலும் குறிவைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட போதெல்லாம் பிரஸ் கவுன்சில் வாயைத் திறக்கவில்லை. அப்படியே வாயைத் திறந்தாலும், பத்திரிகையாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து பரவலாகப் போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னர் மட்டும்தான் வாயைத் திறந்திருக்கிறது.
சமீபத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினையில் தப்லிகி ஜமாத் கூட்டத்தைக் காரணம் காட்டி மதவெறுப்புப் பிரச்சாரங்கள் நடத்தப்படுவதற்கு ஊடகங்கள் துணைபோவதை தடுத்து நிறுத்தக் கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் பதிலளித்த உச்சநீதிமன்றம், ஊடகங்களைத் தங்களால் கட்டிப்போட முடியாது என்றும், இது தொடர்பாக பிரஸ் கவுன்சிலையும் இவ்வழக்கிற்குட்படுத்துமாறும், அதன் பின்னர், இவ்வழக்கை விசாரிப்பதாகவும் மனுதாரர்களிடம் தெரிவித்தது.
இதற்கு மறுநாளே இந்திய பிரஸ் கவுன்சில், “மின் ஊடகங்கள், தொலைக்காட்சி செய்தி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவை இந்திய பிரஸ் கவுன்சிலின் அதிகார வரம்புக்குள் வராதவை…” என்று விளக்கமளித்து அந்த வழக்கிலிருந்து நழுவிக் கொண்டது. ஆனால் இப்போது அர்னாப் கோஸ்வாமி பிரச்சினைக்கு மட்டும் தானாக முன் வந்து அறிக்கை விடுகிறது. இது இந்திய பிரஸ் கவுன்சிலின் சார்புநிலையை அப்பட்டமாகக் காட்டுகிறது.
இந்திய பிரஸ் கவுன்சில் இவ்வாறு நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. பத்திரிகை நடத்தையின் விதிமுறைகளை மீறி பல்வேறு அச்சு ஊடகங்கள் தவறிழைக்கும் போது அது குறித்து வாயைத் திறக்காத பிசிஐ, கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில இதழான தி டெலிகிராப் நாளிதழிற்கு சமீபத்தில் ஒரு கண்டன நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
“இதைச் செய்தது கோவிட் அல்ல கோவிந்த்” (Kovind, not Covid, did it) – என்ற தலைப்பில் முதல் பக்க தலைப்புச் செய்தியை வெளியிட்டிருந்தது, “தி டெலிகிராப்” நாளிதழ். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்-க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கிய செய்தியை விமர்சனப்பூர்வமாக அவ்வாறு தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத இந்திய பிரஸ் கவுன்சில், பத்திரிகை நடத்தை விதிமுறையை மீறியதாகக் கூறி அப்பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் தப்லிகி ஜமாத் விவகாரத்தில் பொய்ச் செய்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பி, பத்திரிகை நடத்தை விதிமுறைகளை மீறிய பிற பத்திரிகைகளை இந்திய பிரஸ் கவுன்சில் கண்டுகொள்ளவுமில்லை, அவ்விவகாரத்தில் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தவும் இல்லை.
இந்தியில் பெருமளவில் விநியோகிக்கப்படும் பத்திரிகையான “அமர் உஜாலா”வில், “சஹரன்பூரில் உள்ள தனிப்படுத்துதல் முகாமில் இருக்கும் தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள், அசைவ உணவுகள் வேண்டும் என பிடிவாதம் பிடித்தார்கள்; திறந்தவெளியில் மலம் கழித்தார்கள்” என்ற பொய்ச் செய்தி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இச்செய்தியை அப்பகுதி போலீசே மறுத்தது. அதே போல, “டைனிக் ஜாக்ரன்” என்ற பத்திரிகையின் மீரட் பதிப்பில் மதவெறுப்பைத் தூண்டும் விதமான விளம்பரம் வந்திருந்தது. அப்போதெல்லாம் இந்திய பிரஸ் கவுன்சில் வாயைத் திறக்கவில்லை.
பத்திரிகைகளைக் கண்டிப்பதற்கும் எச்சரிப்பதற்கும் இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு பத்திரிகை கவுன்சில் சட்டம் – 1978, முழு அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. ஆனாலும் வாய் திறக்கவில்லை.
சமீபத்தில், இதே பிரஸ் கவுன்சிலின் வரம்புக்குக் கீழ் வரும் “தி இந்து” பத்திரிகையின் பத்திரிகையாளர் உட்பட மூன்று பத்திரிகையாளர்கள் மீது காஷ்மீரில் ஊபா சட்டம் பாய்ந்த போதுகூட இந்திய பிரஸ் கவுன்சில் கருத்துச் சுதந்திரம் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.
இதற்கு முன்னர், ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தொலைதொடர்புக் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களை அனைத்து பகுதிக்கும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி, காஷ்மீர் டைம்ஸ் நாளிதழின் செயல் ஆசிரியர் அனுராதா பாஷின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த சமயத்தில் இந்த வழக்கில் தாமாக முன்வந்து தனது கருத்தையும் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது இந்திய பிரஸ் கவுன்சில். நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.
நடந்திருக்கும் இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒரு விசயத்தை மட்டும் உறுதிப்படுத்துகின்றன. கருத்துச் சுதந்திரத்தைவிட தனது எஜமானர்களின் மனத் திருப்திதான் முக்கியம் என்ற வகையில்தான் ஆளும் காவி பாசிச கும்பலுக்குச் சேவை செய்து வருகிறது இந்திய பிரஸ் கவுன்சில்.
பல குண்டர்கள் தாக்கியதால் பொய்யன் அர்னாப்புக்கு சுண்டுவிரலில் பிளாஸ்திரி மட்டும்தான்.
காவல்துறையும்,பிரஸ் கவுன்சிலும் விசாரிக்காத முக்கிய செய்தி.அர்னாப்பும் அவர் மனைவியும் ஊரடங்கு நேரத்தில் அதுவும் இரவில் ஊர்வலம் வரக் காரணம் என்ன எனபதுதான்.
– நந்தன்செய்தி ஆதாரம், நன்றி :  த வயர். 



கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் இந்தியாவில் நாள் தோறும் அதிகரித்து வரும் வேளையில் ஊரடங்கை மே 3ம் தேதிக்கு பிறகு நீட்டிக்க மத்திய மாநில அரசுகள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
அவ்வாறு நீட்டிக்கப்பட்டால் தினமும் வேலை செய்தால் மட்டுமே சாப்பாட்டுக்கே வழி கிடைக்கும் என்ற விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாவார்கள். அரசு தரப்போ, ஏழைத் தொழிலாளர்களுக்கான நிவாரணங்களை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நிதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என வாய்ப்பந்தல் மட்டுமே போட்டு வருகின்றன.


உண்மையில், புலம்பெயர்ந்த, தினக்கூலி தொழிலாளர்களுக்கு என மத்திய மாநில அரசுகள் ஏதும் செய்திடவில்லை என்பதே நிதர்சனம். தன்னார்வலர்கள் சார்பாக அவ்வப்போது உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கான நிதிகளை மத்திய பா.ஜ.க அரசு வழங்குவதிலும் பாரபட்சம் காட்டி வருகிறது.
தமிழகத்திலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு 1937 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் 22 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களை விட, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது.
இப்படி இருக்கையில், தமிழகத்தில் ஆட்சி புரிந்துவரும் அ.தி.மு.க அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வெறும் 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை காட்டிலும் குறைந்த அளவிலான பாதிப்புகளை கொண்ட கேரள மாநிலம் 80 ஆயிரம் கொடியும், சட்டீஸ்கர் 30 ஆயிரம் கோடியும் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கேட்டுள்ளது.

அதேபோல, மகாராஷ்டிரா அரசு 50 ஆயிரம் கோடி நிவாரணம் கோரியுள்ளது. ராஜஸ்தான் 40 ஆயிரம் கோடியும், மேற்கு வங்கம் 25 ஆயிரம் கோடி ரூபாயும் கோரியுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள 5 மாத ஜி.எஸ்.டி இழப்பீட்டையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இந்த மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
பாதிப்புகள் குறைவாக உள்ள சிறு மாநிலங்களே அதிகபடியான நிவாரண நிதியை கேட்டிருக்கும் போது, நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெறும் 9000 கோடி ரூபாய் மட்டுமே எடப்பாடியின் அ.தி.மு.க அரசு கேட்டுள்ளது. அதிலும், இதுவரையில் சுமார் 1900 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்தால் மாநிலத்தின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்துக்கொள்ள முடியும் என கூறிவிட்டு, மக்களின் தேவைகளுக்கு பதில் தங்களுடைய தேவைகளையே அ.தி.மு.க அரசு கேட்டு பெற்று வருகிறது என்பதில் ஐயப்படும் இல்லை என இதன் மூலம் தெளிவாகவே தமிழக மக்களுக்கு புரிந்துள்ளது.
--------------------------------------------------
ஒரு எழவும் புரியல...
முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியில் பேசியதால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை” என மிசோரம் முதல்வர் சொரம்தங்கா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் காணொளிக் காட்சி மூலம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தக் காணொளிக் காட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, 9 முதல்வர்கள் மட்டுமே பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது பல முதல்வர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுஒருபுறமிருக்க, இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மிசோரம் முதல்வர் சொரம்தங்கா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய மிசோரம் முதல்வர் சொரம்தங்கா, “எனக்கு இந்தி தெரியாது. அவர்கள் இந்தியில் பேசியதால், அவர்கள் பேசிய ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை.” எனத் தெரிவித்தார்.
"பிரதமர் பேசிய ஒரு வார்த்தை கூட புரியவில்லை” - மிசோரம் முதல்வர் குற்றச்சாட்டால் பரபரப்பு! #Corona
பிரதமர் மோடி பொதுவாக மக்களிடையே உரையாடும் போதும், கூட்டங்களின் போதும், செய்தியாளர் சந்திப்புகளிலும் இந்தியில் பேசுவது வழக்கம். பிரதமரின் இத்தகைய போக்கு தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநில முதல்வரே வெளிப்படையாக இதுகுறித்து கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடே இக்கட்டான நிலையில் உள்ளபோது மக்களிடையேயும், முக்கிய தலைவர்களிடையேயும் பேசும்போது அனைவருக்கும் சென்றடையும் வகையில் பிரதமர் பேச வேண்டும் அல்லது மொழிபெயர்ப்பாளரையாவது நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
--------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?