இந்தியாவின் கொரோனா எதிர்ப்பு?

கண்ணுக்குத் தெரியாத, ஆனால் கண்கூடான பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக்கொண்டி ருக்கிறது கொரோனா கிருமி. அதனை வீழ்த்துவதற்கு ஒரு உலக யுத்தமே நடந்துகொண்டிருக்கிறது. இந்தியா வும் அந்த யுத்தத்தில் இணைந்திருக்கி றது.
இந்நிலையில் கொரோனா கிருமி யை முறியடிப்பதிலும், அதனால் ஏற் படும் கோவிட்-19 நோயை வெல்வதி லும் இந்தியா எந்த அளவுக்குத் தயா ராக இருக்கிறது? இருக்கிற தயார் நிலை என்னவென்று தெரிந்தால்தான் இனி ஏற்படுத்த வேண்டிய தயார்நிலை பற்றிய தெளிவான முடிவுகளுக்கு வர முடியும். இதற்காக “கோவிட்-19 தேசிய தயார்நிலை ஆய்வு” ஒன்று நடத்தப்பட் டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிர் வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர் துறை (டீஏஆர்பிஜி) இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது. மார்ச் 25 தொடங்கி 30 வரையில் நடை பெற்ற இந்த ஆய்வில் நாடு முழுவதும் பணியாற்றிக்கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சியர்கள், பல்வேறு துறை களின் ஐஏஎஸ் அதிகாரிகள் (2014-18 அணியினர்) 410 பேர் பங்கேற்றுப் பதி லளித்துள்ளனர். 266 முழுமையான அறிக்கைகள் தாக்கலாகியுள்ளன.
மாவட்டங்களில் உள்ள கொரோனா பரிசோதனை வசதிகள், தற்காலிகக் கூலித் தொழிலாளர்கள் வெளியேறும் நிலை, வெளிநாடுகளிலி ருந்து வந்தவர்கள் பற்றிய விவரங்கள், அவர்களைத் தொடர்புகொள்ளும் ஏற் பாடுகள், பொது இடங்களில் கிருமி யொழிப்பு நடவடிக்கைகள், மக்க ளுக்குக் கட்டாயத் தேவையாக உள்ள பொருள்களும் சேவைகளும் கிடைக் கும் வாய்ப்புகள் ஆகியவை உள்ளிட்ட தகவல்கள் இந்த ஆய்வில் கேட்டறியப் பட்டன.
தற்போதைய ஊரடங்கு நட வடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது முத லான மக்களின் பங்கேற்பை அங்கீ கரிக்கிற இந்த ஆய்வு, எந்த வகை யான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்பன வற்றையும் முன்வைக்கிறது.
தற்போதைய ஊரடங்கு நட வடிக்கைகளுக்கு ஒத்துழைப்பது முத லான மக்களின் பங்கேற்பை அங்கீ கரிக்கிற இந்த ஆய்வு, எந்த வகை யான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், என்னென்ன சிரமங்கள் இருக்கின்றன என்பன வற்றையும் முன்வைக்கிறது.
பொதுவாக மத்திய – மாநில அரசாங்கங்கள் சரியான நடவடிக்கை களை மேற்கொண்டிருப்பதாக 80 முதல் 85 சதவீதம் வரையிலான அதி காரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், குறிப்பான கேள்விகள் என்று வருகிற போது, அவர்களின் பதில்கள் இனி அரசாங்கங்கள் என்ன செய்யப் போகின்றன என்று கேட்க வைப்ப தாக உள்ளன.
மருத்துவமனைக் காட்சிகள்
எடுத்துக்காட்டாக, மருத்துவ மனைகளின் தயார்நிலை போதுமான அளவுக்கு இருக்கிறது என்று தெரி வித்திருக்கிற ஆட்சிப்பணி அதிகாரி கள் 40 சதவீதத்தினர்தான். 60 சத வீதத்தினர் தங்கள் பகுதிகளின் மருத்து வமனைகளில் நிலைமை அவ்வாறு இல்லை என்று கூறியுள்ளனர். மாவட்ட மருத்துவமனைகளிலும் மாவட்டத் துணைநிலை மருத்துவமனைகளிலும் முகமூடி, கையுறை உள்ளிட்ட தனி மனித பாதுகாப்புக் கருவிகள் (பிபிஇ) போதுமான அளவுக்கு இல்லை என்பது கவலைக்குரிய நிலைமை என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கிருமி தொற்றியவர்களைத் தனி மைப்படுத்தி வைத்து சிகிச்சையளிப்ப தற்கான தனிமைப் பிரிவுகள் (ஐசொ லேசன் வார்டுகள்) போதுமான அள வுக்கு இருக்கின்றன என்று 50 சத வீத அதிகாரிகள்தான் கூறியிருக்கிறார் கள். 28 சதவீதத்தினர் போதுமானதாக இல்லை என்று தெளிவுபடுத்தியிருக்கி றார்கள். மீதியுள்ள 22 சதவீதத்தினர் இது பற்றிய கேள்விக்குப் பதிலளிக்க வில்லையா அல்லது “ஏதோ இருக்கி றது” என்ற தொனியில் பதிலளித்தார் களா என்று தெரியவரவில்லை.
மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்) வேண் டிய எண்ணிக்கையில் இல்லை. இது கவலைக்குரிய மற்றொரு நிலைமை என்று பலரும் கருதுகின்றனர். தேவைப் படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்கான தீவிர கவ னிப்புப் பிரிவு (ஐசியு) படுக்கைகள் போதுமான அளவுக்கு இருக்கின்ற னவா? அப்படியெல்லாம் இல்லை என 59 சதவீத அதிகாரிகள் மறுத்துள்ள னர். சான்றாக, அஸ்ஸாம் மாநிலத்தின் நல்பாரி, டிமாட்லாசாவோ மாவட்டங் களின் மருத்துவமனைகளில் ஐசியு பிரிவே இல்லை. சுவாசக் கருவியும் இல்லை.
அசாமுக்குப் போவானேன், வளர்ச்சிக்கான மாடல் மாநிலமாகச் சித்தரிக்கப்படும் குஜராத்தில், அக மதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுதான் நடப்பு நிலைமை.
சாதாரண தகவல் அல்ல
மருத்துவமனைகளின் தயார்நிலை யும் உள்கட்டமைப்பும், தொற்றுடை யோரை விலக்கி வைத்திருப்பதற் கான தனிமைப்பிரிவு வசதிகள், பரி சோதனை வசதிகள், பாதுகாப்புக் கருவிகள், மக்களிடையே முழுமை யான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பற்றிய முழு விவரங்களை சேக ரித்து வைத்திருப்பதோடு அவர்க ளைக் கண்டறிவதற்கான முனைப்பான ஏற்பாடுகள், தற்காலிகத் தொழிலாளர் களும் கூலித் தொழிலாளர்களும் வெளியேறுவதைக் கட்டுப்படுத்துதல், பொது இடங்களில் கிருமியொழிப்பு ஏற்பாடுகள், மக்களின் கட்டாயத் தேவைப் பொருள்களும் சேவை களும் உறுதிப்படுத்தப்படுதல் ஆகிய பணிகளில் கவலையளிக்கும் அள வுக்கு இடைவெளிகள் இருக்கின்றன என்று நிர்வாகப் பணியில் ஈடுபட்டி ருக்கும் இந்த அதிகாரிகள் கூறியிருப் பது சாதாரண தகவல் அல்ல.
வெளிநாடுகளிலிருந்து திரும்பிய வர்களை அடையாளங்கண்டு பரி சோதனைக்கு உட்படுத்துவது சவா லாக இருக்கிறது என்று ஆந்திர மாநில மாவட்டங்களின் அதிகாரிகள் கூறி யுள்ளனர். அருணாசலப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர் மாநிலங்களின் அதி காரிகள் போதிய கருவிகள், ஐசியு வசதிகள் இல்லை என்று தெரிவித்துள் ளனர். தில்லி மாவட்டங்களின் ஆட்சி யர்கள் போதுமான சோதனைக் கருவி கள் தேவை என்று வலியுறுத்தியுள்ள னர். இமாச்சலப்பிரதேசம், ஹரி யானா, மஹாராஷ்டிரா, மத்தியப் பிர தேசம், ஜம்மு-காஷ்மீர், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின் மாவட்ட அதி காரிகளும் கிட்டத்தட்ட இதே நிலைமை களைத்தான் தெரிவித்து, தங்கள் தேவைகளை முன்வைத்திருக்கிறார் கள்.
கட்சிகளின் குரல் எதிரொலிப்பு
இத்தகைய நிலைமையில் மத்திய அரசு செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி கடைசியாகக் கேட்கப்பட்டி ருக்கிறது.  இதற்கு வந்துள்ள பதில்கள்: 
மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டிச் செல்ல நேரிடும் மக்களுக்கு உதவுவதற்கான சீரான வழிகாட்டல் நடைமுறைகளை உருவாக்கிச் செயல் படுத்த வேண்டும். மருத்துவக் கருவி கள் கொள்முதல், போக்குவரத்து, விநி யோகம் ஆகியவை தொடர்பான பிரச்ச னைகளை உடனடியாகக் கவனிக்க வேண்டும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் துணைநிலை மருத்துவமனைகளிலும் பரிசோதனை மையங்களை உரிய வசதிகளோடு ஏற்படுத்த வேண்டும்; விரைவான இடையூறற்ற சிகிச்சைகளை உறு திப்படுத்த வேண்டும்; தேவையற்ற தாமதங்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரங்களின் குடி சைப்பகுதிகளிலும், பின்தங்கிய கிரா மங்களிலும் அதிகமான விழிப்பு ணர்வுப் பரப்புரைகள் நடத்தப்பட வேண்டும். பரிசோதனைக் கருவிகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப் படுவதை ஊக்குவிக்க வேண்டும். கள்ளச்சந்தை முளைப்பதைத் தடுக்க கட்டாயத் தேவைப் பொருள்களின் விலைகள் குறித்த தொடர்ச்சியான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலா ளர்கள், அன்றாடக் கூலித் தொழிலா ளர்கள் ஆகியோருக்குப் பணமாக உதவுவதற்கு வழிசெய்ய வேண்டும்.
மத்திய அரசு என்ன செய்ய வேண் டும் என்ற கேள்விக்கான அதிகாரிகளது பதில்கள், தொடக்கத்திலிருந்தே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பிற அரசி யல் இயக்கங்களும் வலியுறுத்தி வரு வதை எதிரொலிக்கின்றன அல்லவா? இது ஏதோவொரு தன்னார்வ நிறு வனத்தின் ஆய்வறிக்கை அல்ல. மத் திய அரசின் ஒரு துறையால் மேற் கொள்ளப்பட்ட அதிகாரப்பூர்வமான ஆய்வு. மக்களோடு நேரடித் தொடர் பில் இருக்கும் நிர்வாக அதிகாரிகள் இந்த உண்மைகளை வெளிப்படுத்தி, தேவைப்படும் நடவடிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள். இந்த இருட்டுப் பகுதிகளில் முழு கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை ஏற் படுத்துவதற்குப் பதிலாக விளக்கேற்று வதால் அல்லது மெழுகுவர்த்தி கொளுத்துவதால் அல்லது மொபைல் போன் டார்ச் எரியவிடுவதால் எங்கி ருந்து வெளிச்சம் வரும் பிரதமர் அவர் களே?
                                                                                 - அ.குமரேசன்.
தகவல் தொழில் நுட்பத் தொழிலாளரை வேலையிழக்க வைக்கும் கொரோனா.
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழில்கள் முடங்கியுள்ளன. கொரோனா தாக்கம் காரணமாக, இந்திய ஐடி துறையில் ஒன்றரை லட்சம் பணியாளர்கள் வேலையிழக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஐடி துறையில் 45 லட்சம் பேர் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் சுமார் 12 லட்சம் பேர் சிறிய ஐடி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், சர்வதேச அளவில் ஐடி பணிகள் முடங்கியுள்ளதால் சிறு நிறுவனங்கள் ஆட் குறைப்புக்கான நோட்டீஸ் அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், அடுத்து வரும் 6 மாதங்களில் ஐ.டி துறையில் ஒன்றரை லட்சம் வேலையிழப்பு உருவாகும் எனத் தெரியவந்துள்ளது.
ஃபேர் போர்டல் (Fareportal) என்கிற நிறுவனம் குருகிராம் நகரத்தில் இயங்கிக் வருகிறது. இந்த நிறுவனம் தன் 500 ஊழியர்களை ராஜினாமா செய்யச் சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் ஊழியர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் அதிர்ச்சியில் ஐ.டி துறை - 1.5 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்! #CoronaLockdown
பல நிறுவனங்களில் சம்பளக் குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை பிடித்துக் கொள்ளவிருப்பதாக நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் தெரிவித்து வருகின்றன.
சில நிறுவனங்களில், ஊழியர்களுக்கு போதுமான முன் அறிவிப்பு காலம் (Notice Period) கொடுக்காமல் வேலையை விட்டுத் தூக்கும் சூழலும் ஏற்பட்டிருக்கிறதாம். சில ஐடி நிறுவனங்கள் வெறும் 2 மணி நேரம் (120 நிமிடங்கள்) மட்டும் முன் அறிவிப்பு கால அவகாசம் (Notice Period) கொடுத்திருக்கிறார்கள்.
இதுபோன்ற சூழலைச் சமாளிக்க முடியாமல் ஊழியர்கள் பலர் மன அழுத்தத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் பணி நீக்க விவகாரத்தில் அரசு தலையிட்டு, இந்தப் பேரிடரைச் சமாளிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
---------------------8------------------

மோசமான நிலையில் அமெரிக்கா!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளது. சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 64,675 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகளவில் 1,201,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 4 நாட்களாக புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை தினமும் 10,000 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த சீனா, இத்தாலியைப் பின்னுக்கு தள்ளி தற்போது அமெரிக்கா முதல் இடத்திற்கு சென்றுள்ளது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு வல்லரசு நாட்டின் தலைவர் திணறி வருகிறார்.

“நியூயார்க்கில் 2 நிமிடங்களுக்கு ஒருவர் சாவு - ஒரேநாளில் 1,480 பேர் பலி” : மோசமான நிலையில் அமெரிக்கா!
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில், 1,480 பேர் இறந்துள்ளனர். ஒரே நாளில் புதிதாக 32,000 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,11,357 -ஐ தாண்டியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகணத்தில் மட்டுமே 1,14,775-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,565 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க்கில் 2 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
-------------------%------------------------
களவும் செய்வாள் பத்தினி.
தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் 58 வயதான வின்சென்ட். துறைமுக ஊழியரான இவரது மனைவி ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். வின்செண்ட் - ஜான்சி தம்பதிக்கு இரு மகள்கள், இருவருக்கும் திருமணமான நிலையில் வீட்டில் கணவன் மனைவி மட்டும் வசித்து வருகின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் இருவரும் வீட்டுக்குள் முடங்கி இருந்த நிலையில் உள்பக்கம் பூட்டப்பட்ட வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையன் அள்ளிச்சென்றுவிட்டதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் புகார் அளித்தார்.
காவல்துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். வயதான காலத்தில் வங்கியில் வைக்காமல் 100 சவரன் நகைகளை வீட்டில் வைத்தது ஏன்? என்ற கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
துறைமுக ஊழியரான வின்சென்ட் மிகவும் சிக்கனமாக இருந்து சேமித்த பணத்தைக் கொண்டு பழைய நகைகளை வாங்கி சேமித்து வந்துள்ளார். அந்தவகையில் சுமார் 93 சவரன் நகைகளை வங்கியில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாக வின்செண்ட் செல்போனுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அதில் பேசிய பெண் ஒருவர், வங்கியில் பாதுகாப்புக் குறைபாடு உள்ளதால் தங்கள் மனைவியை அழைத்து வந்து நகையை எடுத்துச் சென்றுவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து வங்கி லாக்கரில் இருந்து நகைகளை மொத்தமாக எடுத்து வந்து வீட்டு பீரோவில் வைத்திருந்த நேரத்தில் தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
வங்கியில் விசாரித்தபோது வங்கியில் இருந்து வின்சென்ட்டுக்கு யாரும் போன் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். வீட்டில் இருவர் மட்டுமே இருக்கும் நிலையில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் யார் வந்திருப்பார்கள் என்று அவரது மனைவி ஜான்சியிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரனாக பதில் அளித்து காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

''கணவனுக்கு கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 பவுன் கொள்ளையடித்த மனைவி'' - அதிர்ச்சி தகவல்!
ஏலச்சீட்டு நடத்திவந்த ஜான்சிக்கு பலர் ஏலத்தொகையை கட்டாமல் கம்பி நீட்டியதால் 10 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்துள்ளது. மாதாமாதம் வட்டி மட்டும் 35 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டிய நிலையில் கணவர் உலகமகா சிக்கன திலகமாக இருந்ததால் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார்.
வீட்டில் உள்ள பணத்தை நகையாக வாங்கி அத்தனை நகையையும் வங்கியில் கொண்டு வைத்து விடுவதால், பணத்தேவைக்கு கணவனிடமே கொள்ளையடிக்க முடிவுசெய்தார் ஜான்சி.
அதன்படி வீட்டிற்கு வெளியே போய் வேறொரு போனில் இருந்து வங்கி லாக்கரில் உள்ள நகைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் அதனை எடுத்து செல்ல அறிவுறுத்தி, தனது கணவரது செல்போனுக்கு குரலை மாற்றி பேசியுள்ளார் ஜான்சி. திட்டப்படியே வங்கி லாக்கரில் இருந்த நகைகள் வீட்டு பீரோவுக்கு வந்து விட்டது.
அங்கிருந்து நகையை மொத்தமாக எடுத்துச்செல்ல திட்டமிட்ட ஜான்சி , கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப கபசுர குடிநீர் கசாயம் தருவதாக ஏமாற்றி அதில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்ததால், அதனை குடித்த வின்செண்ட் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்று விட்டார்.

''கணவனுக்கு கொரோனா கசாயம் கொடுத்து சொந்த வீட்டிலேயே 100 பவுன் கொள்ளையடித்த மனைவி'' - அதிர்ச்சி தகவல்!
பின்னர் அவரது இடுப்பில் இருந்து சாவிக்கொத்தை எடுத்து பீரோவை திறந்து 93 சவரன் நகையை அள்ளிச்சென்று வீட்டுக்கு வெளியே புதைத்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் வந்து வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, பீரோவில் இருந்த துணிகளை கலைத்து போட்டுவிட்டு வீட்டு சாவியை பீரோவுக்கு பின்பக்கம் தூக்கி வீசிவிட்டதாக கூறப்படுகின்றது. ஜான்சி சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து 93 சவரன் நகைகளை கைப்பற்றிய போலிஸார், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக காலையில் வின்சென்ட் தனது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதாக போலிஸில் புகார் அளித்தபோது கொள்ளை குறித்து நிருபர்களிடம் அழுதபடி பேட்டி கொடுத்து அசத்தியிருக்கிறார் ஜான்சி.
அதேபோல போலிஸார் ஊரடங்கு நெருக்கடியில் இருந்த நிலையில் அங்கு கொண்டுவரப்பட்ட மோப்ப நாய் ஒன்று, அருகில் நின்ற ஜான்சியை கவ்விப்பிடிக்காமலும் , நகை புதைக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமலும் ,நான்கு தெருவில் ஓடிவிட்டு ஓய்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
போலிஸார் நடத்திய விசாரணையின் போது, தனது கணவர் போதைக்கு அடிமையாகி, வீட்டுச் செலவுக்கு பணம் தராததால் சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்து நாடகமாடியதாக ஜான்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார் என  காவல்துறையினர் தெரிவித்தனர்.
------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?