2020 சென்று வா.....

 




தலைமுடி.

ஒருவரின் தலைமுடி அவரின் அழகை மட்டுமல்லாது, உடல் நலத்தையும் வெளிப்படுத்தும் ஒன்றாக உள்ளது.

தலைமுடியை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும், அதிகம் வெள்ளை முடி வருவதற்கு காரணம் என்ன ?

முன்பெல்லாம் இளநரை என்பது 15-20 வயதில் வந்த நிலை மாறி, குழந்தைகளுக்கு இளநரை வருவது அதிகரித்துள்ளது.

தலை முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் ஆகியவை குறித்து அவர் கூறிய முக்கியத் தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.

உங்கள் வாழ்வியல் மாற்றங்களும் முடியை நரைக்க வைக்கும். நரைத்த முடி என்பது நீங்கள் போதிய ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளவில்லை என்பதன் அறிகுறி.

விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இல்லாத உணவுகளை உண்ணுதல், மரபணு என நரை முடி உண்டாகப் பல காரணங்கள் உண்டு.

தலைமுடிக்கு எந்த எண்ணெய் சிறந்தது? எவ்வாறு பராமரிக்க வேண்டும்?

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்?

ஸ்ட்ரெயிட்டனிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள், மட்டமான மற்றும் தரமில்லாத ஷாம்பு, அதிக அளவில் பொடுகு ஆகியவையும் நரைத்த முடி வரக் காரணமாகும்.

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்தான் முடிக்கு கரு நிறத்தைத் தருகிறது. விட்டமின் பி காம்ளெக்ஸ் மற்றும் அனைத்து வகையான ஊட்டச்சத்து அடங்கிய உணவு, எண்ணெய் தேய்த்து பராமரிப்பு செய்தல் ஆகியவை நரை முடி வருவதைத் தடுக்கும்.

இரும்புச் சத்துள்ள பேரிச்சை போன்ற பழங்கள், மீன், கீரைகள் முடி நன்கு வளர உதவுவதுடன் முடி உதிர்வதையும் தடுக்கும்.

அதைப்போலவே பால், முட்டை, பயிறு உள்ளிட்ட புரதம் மிகுந்த உணவும் மிக மிக அவசியம். விட்டமின் நிறைந்த உணவுகள் முடிக்கு நன்மை தரும்.

எண்ணெய் தேய்ப்பதற்கும் முடி உதிர்வது நிற்கும் என்பதற்கும் நேரடித் தொடர்பு கிடையாது. ஆனால், முடியைப் பராமரிக்க எண்ணெய் தேய்ப்பது அவசியம். அது முடி உதிர்வைத் தடுக்கும்.

விற்பனை செய்யப்படும் ஏதோ ஒரு கிரீம், ஆயில் ஆகியவற்றை தடவுவதால் முடி உதிர்வது, நரைப்பது தடுக்கப்படும் என்பது ஓரளவே உண்மை. பல வண்ணங்களில், ஊட்டம் மிகுந்த உணவுகளே முடிக்கு மிகவும் அவசியம்.

வெவ்வேறு வண்ணம் உள்ள உணவுகளை வழக்கமாக உண்பதற்காக அட்டவணை ஒன்றைத் தயார் செய்துகொள்வது நல்லது.

-------------------------------------------

கொரோனா போராளிகளுக்கு அஞ்சலி

2020ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் உலக அளவில் பரவி வரும் வேளையில், இதுவரை இந்தியாவில் மட்டும் அந்த பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு 1,45,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த பட்டியலில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக முன்களத்தில் பணியாற்றி உயிரை பறிகொடுத்த எண்ணற்ற மருத்துவர்களும், செவிலியர்களும் அடக்கம். இதில் இந்தியாவிலேயே அதிக அளவில் தமிழகத்தில் தான் 40க்கும் அதிகமான மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பணிக்காலத்தில் குடும்பத்தையும் உறவுகளையும் வாரக்கணக்கில் பிரியும் நிலை, சிக்கலான சூழலில் ஆற்றும் சவாலான பணிகள், பிபிஇ ஆடையுடன் ஒவ்வொரு முறையும் கொரோனா வார்டுகளுக்கு சென்று வரும் அழுத்தம் என பல சவால்களை இந்த மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் அன்றாடம் எதிர்கொள்கிறார்கள்.

இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான களப்பணியில் ஈடுபடும் மருத்துவம் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு வைரஸ் தடுப்பூசி போடுவதில் உலக நாடுகள் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. ஆனால், இதிலும் மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் மீண்டும் கொரோனா பணியை ஆற்ற வேண்டும்.

இத்தகைய சூழலில்தான் கொரோனா வைரஸ் புதிய திரிபு பிரிட்டனில் வேகமாக பரவத் தொடங்கியதால், இந்தியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட உலகின் பல நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கத் தொடங்கியிருக்கின்றன. இந்த புதிய திரிபு அதிக வீரியத்துடன் தாக்கும் வல்லமை கொண்டுள்ளதால், அதை அழிப்பதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.



கொரோனா தொற்றால் நாடு முழுவதும் 155 சுகாதார ஊழியர்கள் இறந்துள்ளதாக மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தெரிவித்திருந்தது. அந்த 155 பேரில் 64 பேர் மருத்துவர்கள் என்று அரசு தரப்பு தெரிவித்தாலும், பல மதிப்பீடுகள் அந்த எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாகவே கூறுகின்றன.

நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்த இந்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஷ்வினி செளபே, உடல்நலம் ஒரு மாநில விவகாரம் என்றும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் பதிவுகளை மத்திய அரசு வைத்திருக்கவில்லை என்றும் கூறினார்.

இந்த ஆண்டு முழுவதும், கிட்டத்தட்ட முழு வசதிகள் இல்லாத நிலையில் , மருத்துவ ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வருவதாக தொடர்ச்சியான செய்திகள் வந்தன.

மேலும், இந்த தொற்றை தடுக்க தேவையான பொருட்கள், ஆரம்ப கட்டத்தில் மருத்துவ ஊழியர்களிடம் கிடைக்கவில்லை, பல இடங்களில் அவர்கள் எந்த விடுப்பும் இல்லாமல் நீண்ட காலம் தொடர்ந்து பணியாற்றினர்.

ஆனால் இத்தனைக்கும் நடுவே, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அவர்களின் துணிச்சலான சேவை பற்றிய கதைகள் வெளிவந்தன.

இத்தகைய சூழ்நிலையில், இந்த தொற்றை எதிர்கொண்டு உயிர் துறந்த மருத்துவ ஊழியர்களின் படங்களையும் பிபிசி சேகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் இருந்தபோது அவர்கள் உயிரை இழந்ததாக தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் புதிய வைரஸ் திரிபு, இந்த களப்பணியாளர்களுக்கு மிகுந்த சவால் நிறைந்ததாக மாறியிருக்கிறது.

2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் மட்டும் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தரவு கூறுகிறது.

பொது மருத்துவர்களே கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகளவில் உயிரிழந்துள்ளனர் . .  .

அதிலும் குறிப்பாக, இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 40க்கும் அதிகமான மருத்துவர்கள் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். .  .

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோது, அதே வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு இந்த 2020 ஆண்டின் முடிவில் அஞ்சலி செலுத்துவோம்.

----------------------------------------------------------------------

நடிப்பு அரசியல்.

'நடிகர்கள் அரசியலில் வருவது தமிழகத்தில் தொடர்கதை. ரஜினி, கமலுக்கு முன்னதாக, விஜயகாந்த், சரத்குமார், பாக்யராஜ், டி ராஜேந்திரன் என பல நடிகர்கள் திமுக, அதிமுக பலமான கட்சிகளாக இருக்கும் நேரத்தில் அரசியலில் பங்கெடுத்தவர்கள். இவர்களில் விஜயகாந்தை தவிர பிற நடிகர்கள் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்கள். அதே காரணத்தால்தான் கமல் ஹாசனுக்கு ஓட்டு கிடைப்பதில் சிக்கல் இருக்கும். அதாவது ரசிகர் மன்ற உறுப்பினர்களிடம் அரசியல் உணர்வை இந்த நடிகர்கள் பெருமளவு ஏற்படுத்த தவறிவிட்டார்கள். விஜயகாந்தை பொறுத்தவரை, ரசிகர் மன்றங்களை கட்சியின் உறுப்பினர் மன்றங்களாக மாற்றினார். 2005இல் கட்சி தொடங்கிய அவர், ஜனரஞ்சகமான கொள்கைகளை பேசினார். கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தினார். 

அடுத்த ஆண்டே தேர்தலை சந்தித்து 10 சதவீத வாக்குகளை பெற்று, எதிர்க்கட்சியாக தனது பலத்தை நிரூபித்தார். அவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த ஆர்வத்தை தக்கவைக்க தவறியதால், கட்சி பலம் இழந்து வீழ்ச்சியையும் சந்தித்தார். நடிகர்கள் அரசியலில் எப்படி இருந்தால் வெற்றி, எப்படி இருந்தால் தோல்வி என்பதற்கு விஜயகாந்த் சான்று .

சரத்குமாரை எடுத்துக்கொள்வோம். விஜயகாந்தை போல தனது ரசிகர் மன்றங்களை ஊக்குவிக்க முடியவில்லை என்பதால்தான் இன்று வரை அவரது கட்சி கவனம் பெறவில்லை. 2007இல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினர் சரத் குமார். அப்துல் கலாம், காமராஜ் ஆகியோரின் சிந்தனைகளை தனது கட்சி முன்னெடுக்கும் என்றார். ஆனால் அரசியல் ஆர்வத்தை அவர் ரசிகர்களிடம் வளர்க்கவில்லை. அதனால், திமுக அல்லது அதிமுகவை நம்பித்தான் தேர்தலை சந்திக்கவேண்டும் என்ற நிலை அவருக்கு ஏற்பட்டது.

 சமத்துவ மக்கள் கட்சி விஜயகாந்த் மூன்றாவது அணியாக உருவெடுக்கும் அளவுக்கு வளர்ந்ததற்கு ரசிகர் மன்றங்களை தொடர்ந்து அரசியல் ஈடுபாட்டோடு வைத்திருந்ததுதான். எல்லா கிரமங்களிலும் திமுக, அதிமுக போல தனது கட்சி கொடியை விஜயகாந்த் பறக்கவிட்டார் என்பதுதான் அவர் பெற்ற வெற்றிக்கு காரணம்."

"பாக்கியராஜ் எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியதோடு சரி, அவருடைய திரை பாணியை ரசித்த மக்கள் அரசியல் தலைவராக அவரை பார்க்கவில்லை. அவர் கட்சியின் கொள்கை என்ன என்று கூட தெளிவாக அவர் பேசவில்லை. ஒரு கட்டத்தில் அவரது கட்சியை திமுகவோடு இணைத்துவிட்டார். 

எம்ஜிஆரின் சினிமா வாரிசு என்ற பிம்பம் அவருக்கு உதவவில்லை. அதிமுகவில் இருந்தவர்கள் கூட, அவருக்கு ஆதரவாக பேசவில்லை.

''டி.ராஜேந்தருக்கு பல திறமைகள் இருந்தாலும், அரசியல் களம் அவருக்கு சாதகமாக இல்லை. ஆரம்பத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

 2005இல் திமுகவில் இருந்து பிரிந்து வந்த அவர், அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். ஆனால், அவர் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த வரலாறை மட்டும்தான் மக்கள் மனத்தில் வைத்திருக்கிறார்கள். 

திமுக, அதிமுக பலம் பொருந்திய கட்சிகளாக நீடிப்பதால், நடிகர்கள் கட்சி தொடங்கி தங்களது அடையாளத்தை தக்கவைத்து பன்மடங்கு உழைக்க வேண்டும்.

''நடிகர் கார்த்திக் சாதி அரசியல் பக்கம் சென்றார். அவர் கட்டமைப்பு பற்றி கவலைப்படவில்லை. 2006இல் அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழக தலைவராகப் பொறுப்பேற்றார். ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் அவர் அரசியல்வாதியாக வலம் வந்ததார். அரசியல் கட்சிக்கான கட்டமைப்பை அவர் ஏற்படுத்தவில்லை. அதன் அவசியத்தை அவர் உணரவும் இல்லை. ஒருவேளை அந்த வளர்ச்சி பற்றி அவர் கவலைகூடபடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். 

2009ல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கியதோடு அவரது அரசியல் பயணம் நின்றுவிட்டது.

பல நடிகர்கள், திரைத்துறையில் தங்களுக்கு உள்ள செல்வாக்கு ஒன்றை மட்டுமே நம்பி அரசியலில் இறங்கினால் என்ன நிலை ஏற்படும் என்பதை வரலாறு உணர்த்தியுள்ளது என்று கூறிய அவர், ''1989ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகர் சிவாஜி, அரசியல் கணக்கில் சூழலுக்கு ஏற்ற முடிவை எடுக்கவில்லை. எம்ஜிஆர் மறைவால் அதிமுகவில் உருவான பிளவில், ஜானகி அணியுடன் கூட்டணி வைத்தார். ஜெயலலிதா அணியுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்ற காரணத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகி ஜானகி அணியுடன் கூட்டணி வைத்தார்."

"ஆனால் ஜெயலலிதா அணி தேர்தலில் வெற்றி பெற்றது. அதனால் தமிழக முன்னேற்ற முன்னணி கட்சியை தொடங்கிய அதே ஆண்டு கலைத்துவிட்டார். 

திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவியதோடு, தனது கட்சியை ஜனதாதளத்துடன் இணைத்துவிட்டு அரசியலில் இருந்து விலகிவிட்டார். இப்போதும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்ற வாய்ப்பை எப்போதும் தமிழக அரசியல் களம் கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் திரை செல்வாக்கு என்பது அரசியல் செல்வாக்காக மாறுவதற்கு திரை பிரபலம் என்ற அடையாளத்தை தாண்டி கடுமையான உழைப்பு தேவை என்பதைத்தான் நடிகர்களின் வீழ்ச்சி உணர்த்துகிறது,'

எம்.ஜி.ஆர்.அரசியலில் வென்றார் என்றால் அவருக்கு முதலில் காங்கிரஸ் பின் தி.மு.க என அரசியல் பின்புலம் இருந்தது.

தி.மு.க வின் பரங்கிமலை சட்டமன்ற உறுப்பினர் என்ற தகுதி. இருந்தது.தனது திரைப்படங்களில் திராவிட இயக்க கொள்கைகளைப் புகுத்தியவர்.

ஜெயல்லிதாவுக்கு எம்.ஜி.ஆரின் ஜோடி என்ற தகுதிதான் இருந்தது.மேலும் எம்.ஜி.ஆரின் மறைவுக்கு முன்னரே அவரால் கட்சிக்கு கொண்டு வரப்பட்டு கொள்கை(?) பரப்புச் செயலாளர் பதவி தரப்பட்டு அதிமுக பிரபலமாக்க மேடைகளில் வலம் வந்தார். பாமர மக்களுக்குத் தெரிந்த இரட்டை இலை சின்னமும் கைகொடுத்தது.( சேவல் சின்னத்தில் தோற்றவர்) 

ரஜினிகாந்துக்கு வெற்றிகரமான மசாலா பட நாயகன்,பஞ்ச் வசனம்  என்ற தகுதியைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை.இதே தகுதி கொண்ட  ரஜினியைப் போன்ற மிகப்பிரபலம் சிரஞ்சீவி தெலுங்கு மசாலா நடிகர் ஆந்திராவில் கட்சி துவங்கி காங்கிரசில் கரைந்து போன வரலாறு அவரின் நெருங்கிய நண்பர் ரஜினிக்கும் தெரியும்தானே.

மேலும் மத்திய,மாநில உளவுத்துறைகள் கமல் வாங்கிய வாக்குகளை விட 2% வேண்டுமானால் இவருக்கு அதிகம் கிடைக்கலாம்.அதுவும் கிராமப்புறங்களில் மட்டும் என்ற கள நிலவரங்களை எடுத்துக் காட்டியது.ஆனாலும பா.ஜ.க அதிமுகவை மிரட்டவே இவரை கையில் எடுத்தது.ரஜினி தங்களுக்கே ஆதரவுதருவார் என தனக்கான இடங்களை அதிகப்படுத்தவும்,முதல்வராக பன்னீர்செல்வத்தை கொண்டு வரவும் கண்ட கனவில் ரஜினி மண்ணை அள்ளிப் போட்டதே உண்மை.

பள்ளி வாடகைப் பாக்கி,மாநகராட்சி சொத்துவரியையே கட்ட வருந்துபவர்,நண்பர்களுக்கு அரசு அனுமதி பெறாமல் வட்டிக்கு விடுபவர்,பல கோடிகளை ஊதியமாகப் பெற்றும் ஒருமுறை வரிகட்ட தயங்கி இரு முறை சோதனைக்கு உள்ளானவர் எப்படி அரசியல் தேர்தல் களத்தில் பணத்தைசெலவிடுவார்.எம்.ஜி.ஆர் செவிட பணமின்றி கடன் வாங்கியதும்.தனது லாயிட்ஸ் சாலை சொத்தை ஜானகி அம்மையாருக்கு விற்ற வரலாறும் இங்கே உண்டு.

+--------------------+------------------+-------------------+




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?