தொலைக்காட்சியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கேள்விகளை தொடுக்கும் ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சிக்கு 30 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் நிகழ்ச்சியின் இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 18 பேர் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை ஆதரித்தனர். பொன்னாருக்கு ஆதரவாக 8 பேரே கையை தூக்கினர். நிகழ்ச்சியின் இறுதியை மட்டும் தான் பார்க்க முடிந்தது.
கன்னியாகுமரியில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு கடந்த இரண்டு வருடங்களாக திருவனந்தபுரம் செல்லும் நான்கு வழிச் சாலை வேலை நடைபெறவில்லை என்றார் பொன்னார். பாஜக தவிர்த்து வேறு யாரை தேர்ந்தெடுத்தாலும் வேலைகள் நடக்காது என்றும், மூன்று வருடங்கள் இனியும் பாஜக தான் மத்தியில் இருக்கப் போகிறது என்றும் மிரட்டும் தொனியில் பேசினார். அதை நாம் தமிழர் வேட்பாளர் உடனே தட்டிக் கேட்கவும் செய்தார். பொன்னார் இன்னொன்றையும் கூறினார். சாதி, மதமென பிரிந்து கிடப்பது போதுமெனவும், மக்களை வாழ விடுங்கள் என்றும் பெரிய யோக்கிய சிகாமணி போல பேசினார். இது பொன்னார் மற்றவர்களை பார்த்துப் பேசினார் என்று நினைப்பதைக் காட்டிலும் தன்னை நோக்கியே பேசினார் என்று எடுத்துக் கொள்ளலாம். மதவாத அரசியலின் உச்ச பலனை பொன்னார் தொட்டு விட்டார். இதற்கு மேல் மதவாதம் வாக்குகளை பெற்றுத் தராது என்ற அனுபவப் பாடத்தை கற்றுக் கொண்டு விட்டார். அதனால் தான் இரவல் சொற்களில் மதச்சார்பின்மை பேசுகிறார். சங்கிலித் திருடன் ஒருவன், ‘அதோ திருடன்…’ என்று சொல்லிக் கொண்டே ஓடுவதை போன்று பொன்னார் மற்றவர்களை பார்த்து மத அரசியல் வேண்டாம் என்று கூறுவது நகைப்புக்கிடமாக இருக்கிறது. மத அரசியலை உதறும் பாவனை கொண்ட பொன்னாரின் தேர்தல் கால சொல்லாடல்களின் இன்னொரு அம்சம் என்னவென்றால் அதானியின் துறைமுக மற்றும் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு முழுக்க தன்னை நேர்ந்து விட்ட கடப்பாடு. ஒரு பக்கம் இந்துத்துவப் போக்கிரியாகவும் மறுபுறம் அதானிக்கு தம்பிரானாகவும் இருக்க வேண்டிய அந்திம கால அரசியல் நிர்ப்பந்தங்கள் இணைந்து பொன்னாரின் கதையை இன்னொரு முறை முடித்து வைக்க உக்கிரமாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை அப்பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதைத்தொடர்ந்து, அந்த மாணவி உட்பட ஐந்து மாணவர்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த மார்ச் 20 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்தது.
என்ன நடந்தது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்களுள் ஒருவரான சிவ பிரகாஷ் என்பவரைத் தொடர்புகொண்டு பேசினேன்.
சீமானைஅப்போது அவர், "இந்த பிரச்சனை இப்போது ஆரம்பித்தது அல்ல. சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொத்தம் ஆறு மாணவர் விடுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு கரோனா லாக்டவுன் போடப்பட்ட உடன் மாணவர்கள் அனைவரும் விடுதிகளை காலி செய்துவிட்டோம். விடுதிகளும் மூடி தான் இருந்தன. சுமார் 8 மாத காலத்திற்கு யாருமே விடுதிகளில் தங்கியிருக்கவில்லை. ஆனால், அந்த காலகட்டத்திற்கு, மாதத்திற்கு 3,000 - 4,500 ரூபாய் வரை எங்களுக்கு விடுதி கட்டணம் போடப்பட்டிருந்தது. அதை எதிர்த்துக் கடந்த ஜனவரி மாதம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக நாங்கள் போராட்டம் செய்து அதில் வெற்றியும் பெற்றோம். விடுதி கட்டணம் ரத்து செய்யப்படும் மற்றும் போராடிய மாணவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று நிர்வாகிகள் உறுதியளித்திருந்தனர்.
பிப்ரவரி மாதம் எங்களுடைய தேர்வு முடிவுகள் வெளியானது. மதிப்பெண்களை பலகைகளில் ஒட்டுவது, மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவது, பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது எனத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு மூன்று முறைகள் உள்ளன. ஆனால், எங்கள் துறையான பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில், அதில் எதையும் செய்யாமல் பல்கலைக்கழக அதிகாரி ஒருவரை தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு எங்களுடைய தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளச் சொன்னார்கள். அந்த அதிகாரியை நான் தொடர்புகொண்டு கேட்ட போது என்னுடைய 'Grades' ஐ மட்டும் சொல்லிவிட்டு தொலைப்பேசியைத் துண்டித்துவிட்டார். எந்த பாடத்தில் என்ன Grade, Internal Marks எவ்வளவு, External Marks எவ்வளவு போன்ற அடிப்படை விவரங்களைக் கூட அவர் சொல்லவில்லை. தேர்வு முடிவுகளில் நான் இரண்டு பாடங்களில் தோல்வி அடைந்திருப்பதாக வந்திருந்தது. என்னைப்போலவே ஜனவரி மாதம் நடந்த போராட்டத்தோடு தொடர்புடைய வேறு ஏழு மாணவர்களுக்கும் சில பாடங்களில் தோல்வி என்று வந்திருந்தது. நாங்கள் அனைவருமே நன்றாகப் படிக்கக்கூடியவர்கள்.
எங்களுடைய விடைத்தாள்களின் நகலை வாங்கி பார்த்துவிட்டு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று முடிவு செய்து துறைத்தலைவர் சௌந்தராஜனை சந்திக்கச் சென்றோம். அப்போது அவர், நாங்கள் எட்டு பேரும் தோல்வி அடைந்திருந்த பாடத்தின் விடைத்தாள்கள் மட்டும் காணாமல் போய்விட்டதாகச் சொன்னார். அது எப்படிக் குறிப்பாக அந்த விடைத்தாள்கள் மட்டும் காணாமல் போனது என்று தெரியவில்லை. அது பற்றி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் (Registrar) மற்றும் துணை வேந்தரிடம் (Vice-chancellor) ஒரு புகார் அளித்தோம். அந்த புகார் சார்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம். அதைத்தொடர்ந்து, ஒரு கமிட்டி அமைத்து, நாங்கள் எட்டு பேரும் தோல்வி என்று வந்த பாடத்தின் விடைத்தாள்களை மட்டும் அன்றே மறுமதிப்பீடு செய்தனர். மறுமதிப்பீட்டில் நாங்கள் பாஸ் என்று வந்தது. அதுவும் ஒரு மதிப்பெண் அல்லது இரண்டு மதிப்பெண் வித்தியாசத்தில் அல்ல, கிட்டத்தட்ட இருபது முதல் முப்பது மதிப்பெண் வித்தியாசத்தில். அத்தோடு இல்லாமல் எங்கள் வகுப்பில் படிக்கும் எல்லா மாணவர்களின் அனைத்து விடைத்தாள்களையும் இரண்டு வாரத்திற்குள் மறுமதிப்பீடு செய்து முடிவுகளைத் திரும்பவும் வெளியிடுவதாக உறுதியளித்தார்கள்.
(குறிப்பு: கரோனா லாக்டவுன் காரணமாகப் பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடந்துள்ளது. தேர்வு எழுதிய விடைத்தாள்களைப் புகைப்படம் எடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு, பின் ஒரிஜினல் விடைத்தாள்களைத் தபால் மூலமோ அல்லது நேரில் வந்தோ சமர்ப்பிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு மாணவர்களும் சமர்ப்பித்த ஒரிஜினல் விடைத்தாள்கள் காணாமல் போனதால், மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு மறுமதிப்பீடு நடந்துள்ளது)
மூன்று வாரங்கள் கழித்தும் மறுமதிப்பீடு முடிவுகள் வராததால் நானும் எனது நண்பர்கள் நான்கு பேரும் (பாதிக்கப்பட்ட பெண் உட்பட) துறைத் தலைவர் சௌந்தராஜனை பார்க்கச் சென்றோம். அப்போது அவர், 'பொறுக்கி பசங்களோட சேர்ந்து பொறுக்கி தனம் பண்ணாத. கிளம்பி போ,' என்று அந்த பெண்ணிடம் சொன்னார். அதற்கு அந்த பெண், 'இங்க யாரும் பொறுக்கி கிடையாது சார். நாங்க எங்க தேர்வு முடிவுகளைக் கேட்க வந்துருக்கோம். நான் என் தேர்வு முடிவுகளைக் கேட்க வந்துருக்கேன்,' என்று சொன்னார். வாக்குவாதம் முற்றியதில் கோபமடைந்த சௌந்தராஜன், அந்த பெண்ணின் நெஞ்சைத் தொட்டு இடித்துத் தள்ளி விட்டார். அவ்வாறு மூன்று முறை செய்தார். அவரை தடுக்கப் போன எனது நண்பன் லக்ஷ்மணனை அடித்து பீரோ மேல் தள்ளி விட்டார்.
அந்த செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி நாங்கள் அங்கேயே அமர்ந்து விட்டோம். பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சேர்ந்த யாராவது எங்களை அழைத்துப் பேசுவார்கள், நடந்ததை ஒரு புகாராக அளிக்கலாம் என்று மணிக்கணக்காகக் காத்துக்கொண்டிருந்தோம். ஆனால் யாரும் வரவில்லை. காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்கலாம் என்று முடிவு செய்து அங்குச் சென்ற போது, பல்கலைக்கழகத்திலிருந்து 'Intelligence Officer' தொடர்புகொண்டு எங்களைச் சமாதானம் செய்தார். நாங்களும் புகார் அளிக்காமல் காவல் நிலையத்திலிருந்து கிளம்பி விட்டோம்.
பிறகு பல்கலைக்கழகத்தின் இணையதள பக்கத்தைப் பார்த்துக்கொண்டு இருந்த போது, 'Sexual Harassment Cell' என்று ஒன்று இருப்பது தெரியவந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைப்பேசி எண்ணிற்குத் தொடர்புகொண்டு புகார் செய்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதைத்தொடர்ந்து, எங்கள் துறையைச் சேர்ந்த கிட்டத்தட்ட பதினைந்து மாணவர்கள் மார்ச் 17 ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் இறங்கினோம். நிர்வாக அதிகாரிகள் வந்து 'கலைந்து போங்கள்', என்று சொன்னார்களே தவிர எங்களுடைய பிரச்சனையைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. பல மணி நேரம் கழித்து பதிவாளர் எங்களிடம் வந்து, 'உங்கள் துறைத் தலைவர் மீது நீங்கள் பாலியல் துன்புறுத்தல் புகார் வைத்துள்ளது போலவே அவரும் உங்கள் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். நாளை காலை ஒரு விசாரணை கமிட்டி அமைத்துப் பேசுவோம்,' என்று கூறினார். சௌந்தரராஜன் என்ன புகார் செய்துள்ளார் என்று கேட்ட போது அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. எங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் புகார் என்ன என்று கூடச் சொல்லாமல் விசாரணைக்குக் கூப்பிட்டால் எப்படி வருவது என்று சொல்லி நாங்கள் அதைப் புறக்கணித்துவிட்டோம்.
பிறகு 'Sexual Harrasment Cell' இல் ஒரு கமிட்டி அமைத்து விசாரணைக்கு அழைத்தார்கள். அந்த விசாரணைக்குப் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் நாங்கள் இரண்டு பேர் சென்றோம். சௌந்தரராஜன் அவரது பங்கிற்கு சில பேரைக் கூட்டி வந்திருந்தார். எல்லோரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தார்கள். சௌந்தரராஜன் மற்றும் அவருடன் கூட வந்தவர்களுக்குப் பேச நிறைய நேரம் வழங்கப்பட்டது. ஆனால், நாங்கள் சொல்ல நினைத்த அனைத்தையும் சொல்வதற்கு எங்களுக்குத் தகுந்த நேரம் வழங்கப்படவில்லை. நேரம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.
விசாரணையின் நடுவில் அந்த கமிட்டியைச் சேர்ந்த ஒருவர், 'ஒருவேளை ரூம் சின்னதா இருந்துருக்கும். போறபோக்குல தெரியாம தொட்டிருப்பார்,' என்று சொன்னார். விசாரணை முடிவதற்குள்ளாகவே எப்படி அவ்வாறு சொல்லாம்?
இந்த விசாரணையின் போது கூட 'சௌந்தரராஜன் எங்கள் மீது என்ன புகார் செய்துள்ளார்?' என்று கேட்டோம். பதில் கிடைக்கவில்லை.
அடுத்த நாள் அதே கமிட்டியில் இருந்து திரும்பவும் விசாரணைக்குக் கூப்பிட்டார்கள். எங்களுக்கு அவர்கள் மேல் நம்பகத்தன்மை இல்லாததால் அதைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தைத் தொடர்ந்தோம். வெளியிலிருந்து நிறைய மாணவர் அமைப்புகளும் மாதர் சங்கங்களும் எங்களுக்கு ஆதரவாக வந்தார்கள்.
மார்ச் 20 ஆம் தேதி காலையில் மொட்டை கடுதாசி போல ஒரு கடிதத்தைக் கொடுத்தார்கள். அதில் இந்த பிரச்சனையைத் திரும்பவும் ஒரு கமிட்டி அமைத்து விசாரிக்கலாம் என்றும், அந்த கமிட்டியில் ஐந்து ஆண் நிர்வாகிகளும் ஒரு பெண் நிர்வாகியும் இருப்பார்கள் என்றும் இருந்தது. அவர்கள் யார் யார் என்று குறிப்பிடப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் அவர்களிடம் சென்று எப்படி வெளிப்படையாக பேச முடியும் என்று நினைத்து நாங்கள் அந்த அழைப்பைப் புறக்கணித்துவிட்டோம்.
அன்று இரவு 8.30 மணிக்கு எங்களுக்கு சஸ்பென்ஷன் ஆர்டர் கொடுக்கப்பட்டது. உடனே காவல் அதிகாரிகள் வந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருக்கக் கூடாது என்று சொல்லி எங்களை வெளியேற்ற முயன்றார்கள். மற்ற மாணவர் சங்கங்களைத் தொடர்புகொண்டு நாங்கள் அந்த விஷயத்தைத் தெரியப்படுத்தினோம். அடுத்த 15 நிமிடங்களில் மாதர் சங்கத்தினர் வந்து எங்களை வெளியேற்றுவதை தடுத்து நிறுத்தினார்கள். பின் செய்தி ஊடகங்களும் அங்கு வந்ததால் எங்களை அங்கேயே விட்டுவிட்டுக் காவல் துறையினர் சென்றுவிட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் அன்று இரவு முழுவதும் தூங்கவே இல்லை. சஸ்பென்ஷன் ஆர்டர் வந்ததும் ரொம்பப் பயந்து விட்டார். நாங்கள் முடிந்த வரை நம்பிக்கை சொல்லிப் பார்த்தோம். அடுத்த நாள் காலை 7.30 மணி அளவில் பாத்ரூம் போவதாகச் சொல்லிவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பிறகு அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை வழங்கப்பட்டது.
அதற்குப் பிறகு தான் இந்த பிரச்சனை தொடர்பாக வழக்குப் போடப்பட்டது. எங்கள் போராட்டமும் தொடர்ந்தது.
மார்ச் 22 ஆம் தேதி காலை நான் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் சிலரையும் எங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக வந்திருந்த சிலரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். அன்று இரவு வரை எங்களைக் காவல் நிலையத்தில் அமர வைத்திருந்தனர், அதன்பின் அங்கிருந்து செல்லும்படி கூறினர்.
இப்போது வரை சௌந்தரராஜன் மீது எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவர் எங்கள் மீது வைத்த புகார் என்ன என்பதும் எங்களுக்குத் தெரியாது, மறுமதிப்பீடலுக்குப் பிறகான எங்களுடைய தேர்வு முடிவுகள் என்ன என்பதும் எங்களுக்குத் தெரியாது. எங்களுடைய கேள்விகளுக்குப் பதிலும், சௌந்தர்ராஜனின் எல்லை மீறிய செயலுக்குத் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்," என்று கூறினார்.
இந்த பிரச்சனை பற்றிப் பேசப் பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்புகொண்ட போது அவர் 'தான் மருத்துவமனையில் இருப்பதால் தன்னால் பேச இயலாது' என்று சொல்லிவிட்டார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள துறைத் தலைவர் சௌந்தரராஜனை தொடர்புகொண்ட போது அவர் சரியாகப் பதில் அளிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து, சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மதிவாணனிடம் பேசினேன். அப்போது அவர், "இரண்டு தரப்பினருமே மாறி மாறிக் குற்றச்சாட்டுகள் வைத்துள்ளனர். நாங்கள் ஒரு கமிட்டி அமைத்து விசாரணை செய்து வருகிறோம். பல்கலைக்கழக விதிமுறைகள் படி தான் எல்லாம் நடந்து வருகிறது. விசாரணை இன்னும் முடியாததால் என்னால் விரிவான தகவல்களைச் சொல்ல முடியாது. விசாரணைக்குப் பிறகு தான் யார் சொல்வது உண்மை என்று தெரிய வரும்," என்று கூறினார்.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கவிதா கஜேந்திரனை தொடர்புகொண்டு இது பற்றி பேசியபோது, "இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்கவில்லை என்றால், நாளை சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எந்த ஆண் ஆசிரியர் வேண்டுமானாலும் பெண் மாணவர்களைப் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கிவிட்டு நடவடிக்கை ஏதுமின்றி தப்பித்து விடலாம் என்ற எண்ணம் வந்துவிடும். இன்று இந்த பெண்ணிற்கு நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது," என்று கூறினார்.
கோ என்றால் அரசன் எனும் அர்த்தம் தமிழில் உண்டு என்பது தெளிவானது.
இதே போல, ஒற்றைச்சொல்லில் பொருள் கொள்ளக்கூடிய எழுத்துகளின் தமிழின் தனிச்சிறப்பாக கருதலாம். இது பற்றி தமிழ் ஆர்வலர்களிடம் தான் விரிவாக கேட்க வேண்டும்.
இப்போதைய கேள்வி என்னவென்றால், ‘அ’ என்றால் ஏதேனும் பொருள் இருக்கிறதா? என்பது தான்.
இதையே கொஞ்சம் மாற்றி ஆங்கிலத்தில் “A “ எனும் எழுத்திற்கு என்ன பொருள் என்று கேட்டால் எப்படி இருக்கும். இந்த கேள்விக்கான பதிலை கூகுளில் தேடினால் எப்படி இருக்கும்? அதாவது A என்றால் என்ன என தேடக்கூடாது. மாறாக, A எனும் எழுத்தை மட்டும் கூகுளில் சமர்பித்து தேடினால் என்ன முடிவுகள் கிடைக்கும்?
A எனும் எழுத்தில் தேட என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். கூகுளில் தேடினாலும், இந்த எழுத்துக்கான அகராதி அர்த்தம் மற்றும் விக்கிபீடியா விளக்கம் உள்ளிட்ட தேடல் முடிவுகளே பட்டியலிடப்படுகின்றன.
ஆம், அதற்கென்ன என கேட்பதாக இருந்தால், முழு வடிவங்கள் எனும் பொருளில் அமைந்துள்ள ‘ஃபுல்பார்ம்ஸ் (A ) இணையதளத்தில் தேடிப்பாருங்கள், A எனும் எழுத்திற்கு இத்தனை விதமான பொருள் உண்டா என வியந்து போவீர்கள்.
A என்பது மின்சாரத்தை அளவிடுவதற்கான ஆம்பியரை (Ampere ) குறிக்கும் என்பதில் துவங்கி, இரத்த வகையை குறிக்கும், மருத்துவத்தில் அடினைனை குறிக்கும், வைட்டமின் வகையை குறிக்கும், ஆர்கன் வாயுவை என வரிசையாக இந்த எழுத்து எதற்கெல்லாம் சுருக்கெழுத்தாக அல்லது முதலெழுத்தாக பயன்படுகிறது எனும் விவரம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இதே போல ஆங்கில எழுத்தான B பற்றி தேடினால், பிட்டை (bit ) குறிக்கும், பைட்டை (Byte ) குறிக்கும், அழுத்தமான எழுத்தை (bold) குறிக்கும் , பில்லியனை குறிக்கும், என்றெல்லாம் விளக்கம் அளிக்கிறது. கூகுளில் b என தேடினால் இதெல்லாம் வருவதில்லை.
ஃபுல்பார்ம்ஸ் தளத்தில் முகப்பு பக்கத்தில் உள்ள ஆங்கில அகர வரிசை எழுத்துகளில் எந்த எழுத்தை கிளிக் செய்து தேடினாலும், அந்த எழுத்து எத்தைகைய பொருள் மற்றும் பயன்பாட்டை கொண்டுள்ளது என்பதற்கான விளக்கம் வருகிறது.
எழுத்துக்கான ஒவ்வொரு பயன்பாடு தொடர்பான விளக்கம் தவிர, அதன் வகை, சுருக்கமான வரையறை மற்றும் உலக அளவிலான பயன்பாடு விவரம் ஆகிய தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதே விதமாக, அப்ரிவேஷன் எனப்படும் சுருக்க எழுத்துக்களுக்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், இந்த தளம் சுருக்க எழுத்து மற்றும் முதலெழுத்துக்களுக்கான விளக்கத்தை அறிவதற்கான தளம் தான். அருமையான இந்த தளத்தை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சுருக்கெழுத்து அல்லது முதலெழுத்து தொடர்பான விளக்கத்தை தேட விரும்பினால், கூகுளில் தேடுவதற்கு பதில் நேரடியாக இந்த தளத்தில் தேடுங்கள்.
ஏனெனில், கூகுள் எல்லாம் வல்ல தேடியந்திரமாக கொண்டாடப்பட்டாலும், அடிப்படையில் கூகுள் ஒரு பொது தேடியந்திரம் தான். குறிப்பிட்ட நோக்கிலான தகவல்கள் தேவை எனில் கூகுளில் தேடுவதை விட, பிரத்யேக தேடியந்திரங்களை நாடுவது தான் சரியானது. அந்த வகையில், ஃபுல்பார்ம்ஸ் தளத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.
இணையத்தில் சுருக்கெழுத்துகளை தேட வேறு சில இணையதளங்களும் இருக்கின்றன. ஆனால், இந்த தளங்களில் காணக்கூடிய விளக்க வேறுபாடு அல்லது குழப்பத்தன்மைக்கு இடமில்லாமல், சுருக்கெழுத்துகளுக்கான சீரான விளக்கத்தை அளிப்பதாக ஃபுல்பார்ம்ஸ் தெரிவிக்கிறது. இதற்கென தனி ஆசிரியர் குழு பணியாற்றி விளக்கங்களுக்கான தர நிர்ணயத்தை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விகடன் குடும்பத்தில் சொத்துச் சண்டை – சரிக்கட்ட பாஜகவிடம் பேரம் பேசிய சீனிவாசன் .இதுதான் பத்திரிகை உலக இன்றைய கழுகார் பரபரசெய்தி. விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசனின் குடும்பத்தில் மீண்டும் சொத்துச் சண்டை உச்சத்தை அடைந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. சீனிவாசனின் தந்தை பாலசுப்பிரமணியனுக்கு 5 மகள்களும் உள்ளனர். தாத்தாஎஸ்.எஸ்.வாசன் சேர்த்துவைத்தை சொத்துகள் மற்றும் விகடன் குழுமத்தை மொத்தமாக சீனிவாசன் அபகரித்து விட்டதாகவும். கொஞ்ச நஞ்ச சொத்துக்களைக் கொடுத்து பின்னால் செய்கிறேன் பின்னால் செய்கிறேன் என சகோதரிகளை ஏமாற்றிவிட்டதாகவும் குடும்பத்தில் அடிக்கடி குடுமியைப் பிடித்துக் கொள்வது தொடர்ந்துவந்தது. 2001 ஆம் ஆண்டு விகடன் குழுமத்தின் மொத்த அதிகாரத்தையும் கையிலெடுத்த சீனிவாசன், தந்தை பாலசுப்பிரமணியத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சகோதரிகளையும் ஏமாற்றி வந்ததாக அப்போதே பல தகவல்கள் வெளியாகின. இதனால், மகனோடு கோபித்துக் கொண்டு சென்ற பாலசுப்பிரமணியனை அப்போதைய மூத்த பத்திரிகைகுடும்பத்தைச் சார்ந்த ஒருவர் சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளார். அதன் பின்னரும் சீனிவாசனின் ஏமாற்றுப் போக்கை சகித்துக்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம் மேற்கொள்கிறார். அங்கு மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்ற கார், நிலைத்தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தஜகிஸ்தானில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் பிரபு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா திருச்சி ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஹவுரா இடையே ஆகஸ்ட் 18,22,25 ம் தேதிக
சந்திராயன் -3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமரா மூலம் எடுக்கபப்ட்ட நிலவின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மதுரையில் பாடகர் டிஎம்.சௌந்தராஜனின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழக -கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர் வரத்து விநாடிக்கு 8 ஆயிரம் கன அடியில் இருந்து 10 ஆயிரம் கன அடியாக உயர்வு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி அனைத்து எம்.எல்.ஏக்களையும் அழைத்து சென்று பிரதமரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன் - புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி . திருநெல்வேலி, கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், நீட் ஆதரவாக தனது பதவிக்குரிய கண்ணியத்தை மறந்து மூன்றாந்தர அரசியல் செய்யும் ஆளுநர் ஆர்.யன்.ரவியையும் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம்