உளவு பார்ப்போம் வாரீர்.

 பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள் உட்பட உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்ட செய்தி வெளியான நிலையில், மீண்டும் பெகாசஸ் பற்றிய விவாதமும் சர்ச்சையும் எழுந்துள்ளது.

பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன.

இந்த வேவு பார்க்கும் மென்பொருளை அரசுகள் பயன்படுத்துவது குறித்துப் பல முறை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் என்எஸ்ஒ நிறுவனத்துக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளன.

ஆனால், இந்தியா இந்த மென்பொருளை வாங்கியதா இல்லையா என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை.

நாட்டின் பாதுகாப்புக்காகவே பெகாசஸை வாங்குவதாகப் பல நாட்டின் அரசுகள் கூறினாலும், அவை மக்களை வேவு பார்க்க இந்த மென்பொருளைப் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பெகாசஸ் எப்படி வேலை செய்கிறது?

பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒருவரின் ஐபோன் அல்லது ஆண்டிராய்ட் போனை தொலைவிலிருந்தே ஹேக் செய்யலாம்.

இதன் மூலம் ஹேக்கர்கள், அந்த போனில் இருந்து மெசேஜ், புகைப்படங்கள், மின்னஞ்சல், பயனாளர் செல்லும் இடம் போன்ற அனைத்து தகவல்களையும் திருட முடியும். தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்க முடியும்.

அத்துடன் மறையாக்கம் செய்யப்பட்ட ( encrypted) மேசேஜ்களை கூட பெகாசஸ் மூலம் படிக்கலாம் என கெஸ்பர்ஸ்கி சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெகாசஸ்

பட மூலாதாரம்

மறையாக்கம் செய்யப்பட்ட மேசேஜ்களை அனுப்புநர் மற்றும் பெறுநரால் மட்டுமே படிக்க முடியும். மெசேஜிங் தளங்களை நடத்தும் வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களால் கூட அதை பார்க்க முடியாது.

ஒரு நபரின் ஃபோனில் பெகாசஸ் நுழைந்தவுடன், வேவு பார்ப்பதற்குத் தேவையான மாட்யூல்களை இன்ஸ்டால் செய்யும். பின்னர் ஃபோனின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக்கொள்ளும்.

மேலும் அதைக் கட்டுப்படுத்துபவர்களுடன் 60 நாட்களுக்கு மேலாக தொடர்புகொள்ள முடியவில்லை என்றாலோ அல்லது தவறான ஃபோனில் இன்ஸ்டால் செய்யப்பட்டாலோ தானாக அழிந்துகொள்ளும் வகையில் அது வடிவமைப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டு தொடங்கிய சர்ச்சை

பெகாசஸ் மூலம் மக்கள் உளவுபார்க்கப்படுவதை 2016-ம் ஆண்டு ஐக்கிய அரசு அமீரகத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அகமது மன்சூர் கண்டறிந்தார்.

மன்சூரின் செல்போனுக்கு பல எஸ்.எம்.எஸ்கள் வந்துள்ளன. அதில் உள்ள இணைப்புகள் தவறான நோக்கத்திற்காக அனுப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகப்பட்டார்.

இதனால், டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகத்தில் உள்ள சைபர் செக்யூரிட்டி நிபுணர்களிடம் தனது செல்ஃபோனை ஒப்படைத்து, தனக்கு வந்துள்ள எஸ்.எம்.எஸ்-கள் குறித்து ஆராயுமாறு கூறியுள்ளார்.

மன்சூரின் சந்தேகம் சரிதான். ஒருவேளை எஸ்.எம்.எஸ்-களில் இருந்த இணைப்புகளை அவர் கிளிக் செய்திருந்தால், அவரது ஃபோன் பெகாசஸ் மால்வேரால் பாதிக்கப்பட்டிருக்கும். மன்சூரின் போனை ஆராய்ந்த சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள், இந்த தாக்குதலைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஒன்று எனக் கூறியுள்ளனர்.

பெகாசஸ்

பட மூலாதாரம்,

அதன் பின்னர் 2017-ம் ஆண்டு பெகாசஸ் மூலம் மக்களை வேவு பார்ப்பதாக மெக்சிகோ அரசு மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

மெக்சிகோவில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆர்வலர்களுக்கு எதிராக பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

தங்களது ஃபோன்களை ஒட்டுக் கேட்பதாகப் பிரபல பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மெக்சிகோ அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

குற்றவாளிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பெகாசஸ் பயன்படுத்தப்படும் என்ற நிபந்தனையுடன், இந்த மென்பொருளை என்எஸ்ஓ மெக்சிகோ அரசுக்கு விற்றுள்ளது என அந்த செய்தி கூறுகிறது.

``இந்த மென்பொருளின் சிறப்பு என்னவென்றால், இது ஸ்மார்ட் ஃபோனைக் கண்டறிந்து அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் பிற உரையாடல்களைக் கண்காணிக்கும். போனின் மைக் அல்லது கேமராவையும் இதனால் இயக்க முடியும்`` என 2017-ம் ஆண்டில் வெளியான செய்தியில் தி நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

போலி ஃபேஸ்புக் தளத்தை உருவாக்கிய என்எஸ்ஓ

பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் ஹேக்கிங் மென்பொருளை ரகசியமாக அனுப்புவதற்கு, ஃபேஸ்புக் போன்ற ஒரு வலைத்தளத்தை என்எஸ்ஓ உருவாக்கியதாக 2020-ம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்டது.

மதர்போர்டு எனும் செய்தி இணையதளம் நடத்திய புலனாய்வில், பேஸ்புக் போலவே காட்சியளிக்கும் ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலம் பெகாசஸ் ஹேக்கிங் டூலை என்எஸ்ஓ பரப்பியது கண்டறியப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் `இட்டுக்கட்டப்பட்டவை` என கூறி என்எஸ்ஓ மறுத்தது. இந்த இஸ்ரேலிய நிறுவனம் ஏற்கனவே ஃபேஸ்புக் உடனான சட்டப் போரில் சிக்கியுள மூலாதாரம்,

வாட்ஸ்அப் மூலம் வேவு மென்பொருளை பரப்பி, தங்களது வாடிக்கையளர்கள் மொபைல்களில் சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கடந்த 2019ம் ஆண்டு என்எஸ்ஓ நிறுவனத்துக்கு எதிராக ஃபேஸ்புக் வழக்கு தொடர்ந்தது.

இந்த மென்பொருள் மூலம் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் மொபைல்போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக ஃபேஸ்புக் கூறியது.

வேவு பார்க்கப்பட்ட ஜமால் கஷோக்ஜி

சௌதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்ஜி, கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணை தூதரகத்துக்குச் சென்றபோது கொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது செல்போனும், கொலை செய்யப்பட்டதற்குப் பின்பு அவரது குடும்பத்தினரின் செல்போனும் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டுள்ளது.

பெகாசஸ்

பட மூலாதாரம்

கடந்த 2017-ம் ஆண்டு பெகாசஸ் மென்பொருளை சௌதி அரேபியா வாங்கியது. நாட்டில் உள்ள மாறுபட்ட கருத்து கொண்டவர்களை நசுக்குவதற்கும், வெளிநாடுகளில் உள்ளவர்களைக் கண்காணிப்பதற்கும் இந்த மென்பொருளை சௌதி பயன்படுத்தியது என தி நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.

  • பாதிக்கப்பட்ட அல் ஜசீரா செய்தியாளர்கள்

கடந்த டிசம்பர் 2020-ல் டஜன் கணக்கான அல் ஜசீரா செய்தியாளர்கள் செல்ஃபோன்கள் வேவு பார்க்கப்படுவதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் சிட்டிசன் ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில், அல் ஜசீராவின் தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என 36 பேரின் செல்போன் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கண்காணிப்பு

கடந்த ஆண்டு, கொரோனா வைரஸின் பரவலைக் கண்காணிக்க உதவும் மென்பொருளை உருவாக்கியதாக என்எஸ்ஒ நிறுவனம் கூறியது. இதற்கு மொபைல் ஃபோன் தரவைப் பயன்படுத்துகிறது. இதை நடைமுறைப்படுத்த உலகெங்கிலும் பல அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சில நாடுகள் இதை சோதனை செய்வதாகவும் அந்த நிறுவனம் கூறியது.

பெகாசஸ்

பட மூலாதாரம்,

என்எஸ்ஒவின் பதில் என்ன?

தன் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் என்எஸ்ஒ மறுக்கிறது.

இந்த பட்டியல் எங்கிருந்து வெளியானது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தங்கள் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

இந்தத் தரவுகள் எங்கள் நிறுவனத்தின் 'சர்வர்களில்' இருந்து கசிந்தது என்பதே நகைப்புக்குரியது. ஏனெனில் இந்தத் தரவுகள் எங்கள் கணினிகளின் சர்வகளில் சேமித்து வைக்கப்படவே இல்லை. ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் வெளியிட்டுள்ள செய்திகள் முற்றிலும் தவறான அனுமானங்கள் மற்றும் உண்மையுடன் பொருந்தாத கோட்பாடுகளுடனும் உள்ளன. அவர்களுக்கு தகவல் வழங்கியவர்களின் நம்பகத்தன்மை மற்றும் நோக்கம் குறித்து ஐயங்கள் எழுகின்றன என்கிறது என்எஸ்ஓ.

பெகாசஸ்

பட மூலாதாரம்

``எங்கள் தொழில்நுட்பம் பாலியல் மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றங்களைத் தடுப்பதற்கும், காணாமல் போன அல்லது கடத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கும், கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், ஆபத்தான டிரோன்களிடம் இருந்து வான்வெளியைப் பாதுகாப்பதற்கு, பயங்கரவாத குற்றங்களைத் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. எங்கள் நிறுவனம் உயிர்களை காப்பாற்றும் பணியில் இருக்கிறது. எங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை`` என என்எஸ்ஒ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஃபார்பிட்டன் ஸ்டோரீஸ் செய்தியில் உள்ள பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம். அவதூறு வழக்கு தொடர்வது குறித்து நாங்கள் பரிசீலித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளனர்.

---------------------------------------------------------

த்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 75 பதவிகளில் 67 இடங்களை பா.ஜ.க.வும் சமாஜ்வாதி கட்சி ஆறு இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி பா.ஜ.க.-வுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

உண்மையில் அப்படித்தானா என்பதைப் பார்க்கலாம். இது தொடர்பாக பிபிசி-யின் இந்தி சேவையின் செய்தியாளர் சமீரத்மஜ் மிஸ்ரா ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பைப் படித்தால், இந்த வெற்றியின் அர்த்தம், அதன் பின்னணியை புரிந்துகொள்ளலாம்.

மொத்தமுள்ள 75 இடங்களில் 22 இடங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதில் 21 இடங்கள் பா.ஜ.க-வுக்கும் 1 இடம் சமாஜ்வாதி கட்சிக்கும் கிடைத்தது. மீதமுள்ள 53 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டதில் 46 இடங்களைப் பா.ஜ.க.-வும் ஐந்து இடங்களை சமாஜ்வாதி கட்சியும் ஒரு இடத்தை ஆர்.எல்.டி.-யும் ஒரு இடத்தை ஜன்சட்டா தளமும் வென்றிருக்கின்றன.

அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்றத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த வெற்றிகளை வைத்துப் பார்க்கும்போது மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமென்றே பலர் கூறிக் கொள்கின்றனர். ஆனால், அது அப்படியில்லை. நடந்து முடிந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களே வாக்களித்தனர்.

இங்குதான் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தபோது மொத்தமுள்ள 3052 இடங்களில் பா.ஜ.க. 603 இடங்களையே பிடித்தது. மாறாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 842 இடங்களில் வெற்றிபெற்றது.

பெரும்பான்மையான இடங்களை சுயேச்சைகளே கைப்பற்றினர். இந்த சுயேச்சைகள்தான் இப்போது பா.ஜ.க.-வால் விலைக்கு வாங்கப்பட்டு, பெரும்பாலான தலைவர் பதவிகளை பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க.-வை எதிர்த்து காங்கிரசும் சமாஜ்வாதி கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், பெரும்பாலன இடங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களையே நிறுத்தவில்லை.

“இந்தத் தேர்தலை செமி – பைனல் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். மக்களே வாக்களிக்காதபோது அதை எப்படி செமி – ஃபைனல் என்று சொல்லலாம்? வேண்டுமானால் ஜில்லா பஞ்சாயத்துத் தேர்தலை செமி – ஃபைனல் என்று சொல்லலாம். அதில் பெரும்பலான இடங்களை சமாஜ்வாதி கட்சிதான் பிடித்தது. அரசின் ஆதரவுடன்தான் இம்மாதிரி தேர்தல்கள் வெல்லப்படுகின்றன” என்கிறார் உ.பியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் கலகன்ஸ்.

தவிர, இந்தத் தேர்தல்களில் பா.ஜ.க. பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக எஸ்.பி-யும் காங்கிரசும் குற்றம்சாட்டுகின்றன. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒவ்வொரு சுயேச்சை உறுப்பினருக்கும் லட்சக் கணக்கில் பணம் தரப்பட்டது. ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சைகள் உடனடியாகக் கடத்தப்பட்டு, தலைவர் தேர்தல் முடியும் வரை பா.ஜ.க-வின் பிடியில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், கடந்த மூன்று முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாகவே பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மூன்று முறையும் எந்தக் கட்சி அதிக இடங்களைப் பிடித்ததோ, அந்தக் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

“2010-ம் ஆண்டில் மாயாவதியின் பி.எஸ்.பி பெரும்பாலான தலைவர் பதவிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2012-ம் ஆண்டில் பெரும்தோல்வியடைந்தது அக்கட்சி. 2016-ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி பெரும்பாலான தலைவர்கள் பதவிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2017-ம் ஆண்டில் பெருந்தோல்வியைச் சந்தித்தது. இப்போது பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது.” என்கிறார் சித்தார்த்.

---------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?