ஆறு ஜி.

6G இன் இணைய வேகம் 5G ஐ விட 50 மடங்கு அதிகமாக இருக்கும். இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது 5 ஜி சோதனைகளை நடத்தி வருகின்றன, அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவில் 5 ஜி சேவை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவில் 5G சேவையின் வணிக ரீதியான அறிமுகத்திற்கு முன்னதாகவே 6G பற்றிய தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவிலும் 6G க்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 6G இன் இணைய வேகம் 5G ஐ விட 50 மடங்கு அதிக வேகமாக இருக்குமாம்!  

உண்மையில், 6 ஜி நெட்வொர்க்கிற்கு அரசாங்கம் தயாராகிவிட்டது என்று கூறி சில தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கான பொறுப்பை தொலைத்தொடர்பு துறை (Telecom Department, DoT), அரசு தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனமான C-DoTக்கு, ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

6 ஜி நெட்வொர்க் தொடர்பான அனைத்து தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளையும் ஆராய சி-டோட்டிற்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

6 ஜி தொடர்பான தொழில்நுட்ப வாய்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும், இதனால் உலகளாவிய சந்தையில் 6 ஜி அறிமுகம் செய்யும், அதே நேரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என்று தொலைத்தொடர்பு செயலாளர் கே.ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

5 ஜி நெட்வொர்க் வணிக ரீதியாக தென் கொரியா, சீனா மற்றும் அமெரிக்க சந்தையில் 2019 இல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் தற்போது 5 ஜிக்கான ஐமுக சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

தற்போது 6 ஜி நெட்வொர்க்குகளில் வேலை செய்யும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. 6 ஜி நெட்வொர்க்குகளில் வேலை செய்யத் தொடங்கிய சாம்சங், எல்ஜி, ஹவாய் (Samsung, LG, Huawei) போன்ற ஜாம்பவான்களின் பெயர்கள் இதில் அடங்கும்.

2028-2030 க்குள் 6 ஜி நெட்வொர்க்குகள் உலகளவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் இந்தியாவும் 6 ஜி நெட்வொர்க்கிற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளது.

5 ஜி நெட்வொர்க், அதிகபட்சமாக 20 ஜிபிபிஎஸ் வரை தரவிறக்கம் செய்யும் வேகத்தை வழங்கும். மறுபுறம், இந்தியாவில் 5 ஜி நெட்வொர்க்கின் சோதனையின் போது தரவு பதிவிறக்கத்தின் அதிகபட்ச வேகம் 3.7Gbpsஐ எட்டியுள்ளது. ஏர்டெல், வி மற்றும் ஜியோ ஆகிய மூன்று நிறுவனங்கள் 5 ஜி நெட்வொர்க் சோதனைகளில் 3 ஜிபிபிஎஸ் வரை தரவிறக்கம் செய்வதற்கான வேக சோதனைகளை நடத்தியுள்ளன.

அதே வேகம் 6G நெட்வொர்க்கில் 1000Gbps ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்ஜி 6 ஜியை தொடங்குவதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளதாக ஊடக அறிக்கைகள் வெளிவந்துள்ளன.  நிறுவனம் சமீபத்தில் ஜெர்மனியின் பெர்லினில் 6 ஜி நெட்வொர்க்கை சோதனை செய்யத் தொடங்கியது.

இந்த சோதனையின் போது 100 மீட்டர் தொலைவுக்கு அனுப்பப்பட்ட தரவு  வெற்றிகரமாக திரும்ப பெறப்பட்டது. 6 ஜி நெட்வொர்க்கில், 6 ஜிபி அளவுள்ள திரைப்படத்தை வெறும் 51 வினாடிகளில் 1000 மெகாபைட் வேகத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

1G-6G நெட்வொர்க் 5G- ஐ விட 15 மடங்கு வேகமாக இருக்கும். ஜப்பானில் 6G நெட்வொர்க் 2030-க்குள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் 6 ஜி நெட்வொர்க்கிற்காக தொடங்கியது. 5- DW அறிக்கையின்படி, 6G நெட்வொர்க்கிற்காக ஐரோப்பிய யூனியனில் மில்லியன் கணக்கான யூரோக்கள் செலவிடப்படுகின்றன. 

https://youtu.be/SuhTizuuzII



 மோடியைப் போல் 

வெறும் வாய் சவுடால் மட்டுமே.


அரசியல் கட்சிகள் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறும் நோக்கோடுதான் உருவாக்கப்படுகிறது. மக்களின் ஆதரவைப் பெற பல விதமான வாக்குறுதிகளையும் மக்களுக்கு அளிக்கிறது. அதே கட்சி ஆளும் கட்சி ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றி தங்கள் அணுகுமுறையால் வெல்கிறது.

ஆனால், திமுக, திராவிட இயக்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு உருவான கட்சிதான் நாம் தமிழர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முதல் அக்கட்சியின் கீழ் மட்ட பிரமுகர்கள் வரை வாயைத் திறந்தால் வன்முறை வாடை வீசுகிறது. தலைவர்களை அறுவருப்பாக பேசுவது. அரசியல் தலைவர்களின் குடும்பங்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது, பெண்களை அவதூறாகப் பேசுவது என இதையே அரசியல் பணியாகச் செய்து வருகிறார்கள்.

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடம் இருந்து ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாயை நன்கொடையாகப் பெறும் நாம் தமிழர் கட்சி அந்த நிதி பற்றி எதுவும் பேசுவதில்லை. இந்திய  தேர்தல் கமிஷனால் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு அரசியல் கட்சி எந்த வெளிநாட்டிடம் இருந்தும் தேர்தல் நிதி பெறக்கூடாது. ஆனால், நாம் தமிழர் கட்சி வெவ்வேறு காரணங்களைச் சொல்லி நிதி பெறுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் முதல்வரின் பிறப்பைப் பற்றி மோசமாகப் பேசி சட்டை துரைமுருகன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சரி, இவ்வளவு பேசும் இவர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் வெல்வதில்லை. இப்போது நடந்து முடிவுகள் வெளியாகி வரும் உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் ஒன்றில் கூட வெல்ல முடியவில்லை. சரி மாவட்ட அளவில்தான் வெல்ல முடியவில்லை. ஒரு வார்டிலாவது வென்றார்களா என்றால் இல்லை.

மக்கள் நீதி மய்யம் 11 இடங்களில் வென்றுள்ளது. விஜய் ரசிகர்கள் சுயேட்சைகளாக 113 இடங்களல் வென்றுள்ளார்கள்.


வார்ட் என்பது போட்டியிடும் வேட்பாளர்கள் வசிக்கும் பகுதி அன்றாடம் மக்களோடு புழங்கும் இடம் என்பதால் ஓரளவுக்கு போட்டியிடும் அனைவருக்குமே மக்களிடம் செல்வாக்கு இருக்கும். ஆனால், நாம் தமிழர் கட்சி ஒரு வார்ட் தேர்தலில் கூட வெற்றி பெற முடியவில்லை. அந்த அளவுக்கு மக்களோடு நெருக்கமாக  இருக்கிறார்கள்.

மைக், மேடை, வாட்சப், பேஸ்புக் போன்றவற்றின் மூலமாகவே ஒரு கட்சியை வளர்த்து விட முடியாது என்பதையே நாம் தமிழர் கட்சி  துவங்கிய நாள் முதல் சந்தித்து வரும் தோல்விகள் எடுத்துக் காட்டுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?