சிறுநீரகம் காப்போம்.

 சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவது மட்டுமின்றி, நம் உடலின் நீர், உப்பு மற்றும் தாதுக்களின் சமநிலையையும் பராமரிக்க உதவுகின்றன. 

இவற்றில் சமநிலை இல்லை என்றால், நம் உடலின் நரம்புகள், தசைகள் மற்றும் உடலின் மற்ற திசுக்களால் சரியாக செயல்பட முடியாது. இதனால் தான் சிறுநீரகப் பராமரிப்பு மிகவும் முக்கியம் என்று பலரும் பரிந்துரைக்கின்றனர். சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும் நம் தினசரி பழக்கங்கள் என்னென்ன ?


எந்த நோய்த் தொற்று ஏற்பட்டாலும் முதலில் எல்லோரும் நாடுவது வலி நிவாரணியைத் தான். அதுவும் தற்போது பல மருந்து கடைகளில் நாமே நம் பிரச்சனையை சொல்லி மருந்துகளை வாங்கி உண்கிறோம். இவை வலியைக் குறைக்க உதவும் என்றாலும், இவை உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும். அதிலும், குறிப்பாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் வழக்கமான வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளவும்.

உப்பு அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். இதனால் சிறுநீரக நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிக அளவு உப்பு சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக, மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் அதிக உப்பு எடுத்துக் கொள்வதை தடுக்க முடிவேண்டும்.

பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை முடிந்தவரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதிக பாஸ்பரஸ் நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது சிறுநீரகங்கள் மற்றும் எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

​உடலில் நீர் சத்து குறைதல்

உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகங்கள் உடலில் உள்ள சோடியம் மற்றும் நச்சுகளை அகற்ற முடியும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்களை தவிர்க்க முடியும். ஆரோக்கியமான சிறுநீரகங்களை உடையவர்கள் தினமும் 3-லிருந்து 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். சரியான இரவு தூக்கம் சிறுநீரகத்தின் பணிச்சுமையை ஒருங்கிணைக்க உதவும். பொதுவாக குழந்தை பிறந்த பிறகு பெண்களால் நரியாக தூங்கவே முடியாது. குழந்தை தூங்கும் நேரத்தில் மட்டும்தான் தூங்க முடியும். மற்ற நேரங்களில் தூங்க முடியாது. குழந்தைக்கு பசிக்கும். அழும் போன்ற பல பிரச்சினைகளைச் சொல்லி பயமுறுத்துவார்கள்.

​அதிக சர்க்கரை

அதிக சர்க்கரை உட்கொள்ளவது உடல் பருமனுக்கு வழி வகுக்கும். அதோடு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு அபாயத்தையும் அதிக சர்க்கரை சாப்பிடுவது ஏற்படுத்தும். இந்த இரண்டு நோயும் சிறுநீரக நோய்க்கு வழி வகுக்கும். எனவே, பிஸ்கட், தானியங்கள் மற்றும் வெள்ளை சர்க்கரை சேர்த்த ரொட்டி ஆகியவற்றைத் தவிர்த்து விடுங்கள். இவற்றில் மறைமுகமாக அதிக அளவிலான சர்க்கரை நிறைந்துள்ளன.

புகைப்பிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றாலும், புகைப்பிடிப்பவர்களுக்கு சிறுநீரில் புரதம் அதிகமாக இருக்கும். இது சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாகும்.

பொதுவாக மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கு தான் என்றாலும், அதிகமாக மது அருந்துபவர்களுக்கு சிறுநீரக நோயின் அபாயம் இரண்டு மடங்காக இருக்கும்.

​ உடல் செயல்பாடு.

அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது சிறுநீரக நோயுடன் தொடர்புடையது ஆகும். இதனைத் தவிர்க்க வழக்கமான உடல் செயல்பாடை மேற்கொள்வது மேம்பட்ட இரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடையது.

இறைச்சியில் உள்ள புரதம் இரத்தத்தில் அதிக அளவு அமிலத்தை உருவாக்குகிறது. இது சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிப்பதோடு, அமிலத் தன்மையையும் ஏற்படுத்தும்.

அதிகமாக அசைவ உணவுகள் சாப்பிடுவதால் உடல் சூடும் அதிகரிக்கும். அதனால் மீன் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளலாமேயொழிய மட்டன் போன்ற கடினமான அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?