"வீரசக்ரா"
அபி நந்தனுக்கு வீர்சக்கரா- அபி நந்தன் பாகிஸ்தான் விமானத்தைச் சுட்டது உண்மையா?
கடந்த 2019- நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பாகிஸ்தானுடன் ஒரு மினி ராணுவ விமானப் போரில் இந்தியா ஈடுபட்டது. தாக்குதல் நடத்தப்பட்ட அடுத்த நொடி இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானை இந்தியா தாக்கி விட்டதாகவும் 300 திவீரவாத முகாம்களை அழித்து விட்டதாகவும் அலறின. ஆனால், சற்று நேரம் கழித்துதான் அப்படி ஒரு தாக்குதல் முயற்சியை முறியடித்தோம் என்றும் இந்திய ராணுவ வீரர் ஒருவர் எங்களிடம் பிடிபட்டிருக்கிறார் என்றும் பாகிஸ்தான் சொன்னது.
60 மணி நேரம் கழித்து பாகிஸ்தானே இந்தியாவிடம் அபி நந்தனை பத்திரமாக ஒப்படைத்தது. அவருக்கு வீர தீர செயல்களுக்கான பாதுகாப்புத்துறை விருதான வீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் எப்ஃ-16 ரக விமானத்தை வீழ்த்திய அபிநந்தன் தனது விமானத்தில் இருந்து பாரசூட்டில் குதித்து உயிர்தப்பினார் என்கிறது இந்திய தரப்பு. ஆனால். பாகிஸ்தான் தரப்போ இதை அடியோடு மறுக்கிறது.
இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்திய விமானப்படை விமானியால் பாகிஸ்தானின் எப் -16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்தியா கூறுவதை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரிக்கிறது. குறிப்பிட்ட அந்த தினத்தில் எப் -16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என சர்வதேச நிபுணர்களும் அமெரிக்க அதிகாரிகளும் ஏற்கனவே உறுதிப்படுத்தியிருக்கின்ற்னர்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தரப்பு சொல்வது இதுதான்!
இந்த பாகிஸ்தான் விமானப்படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் மிக்-21 பைஸன் ரக போர் விமானத்தின் மூலம் விரட்டிச் சென்றார். ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜவுரி வான் பகுதியில் பாகிஸ்தான் போர் விமானங்களை அபிநந்தன் இடைமறித்தார்.
அப்போது அந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருந்து திரும்பியபோது அந்நாட்டு விமானப்படையினர் அபிநந்தன் விமானத்தைச் சுட்டனர். இதில் அவர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினார். ஏற்குறைய 60 மணிநேரத்துக்கும் மேலாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்து அதன்பின் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்.
-----------------------------------------------------------------------------------
மாடுக்கு ஆம்புலன்ஸ்
மனுசனுக்கு குப்பை வண்டி......
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதற்கு ஏற்ப வாகனங்களை மாடுகளுக்கான ஆம்புலன்ஸ்களாக மாற்றும் பணிகளைத் துவக்கிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் !
கொரோனாவில் மொத்த மாநிலமே கதிகலங்கி நின்றது. மருத்துவமனை பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை, சுடுகாட்டு பற்றாக்குறை, கங்கையில் கொரோனா சடலங்கள் மிதந்தது, கங்கைக் கரையில் புதைக்கப்பட்ட கொரோனா சடலங்கள் என உத்தரப் பிரதேசத்தின் மருத்துவம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை கொரோனா அம்பலப்படுத்தியது.
கொரோனாவால் மரணமடைந்தவர்களை எடுத்துச் செல்ல வண்டியில்லாமல் குப்பை வண்டியில் ஏற்றப்பட்ட நிலைமையை சீர்படுத்துவது குறித்து எதுவும் பேசாத யோகி, மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் தருகிறார்.
இந்துராஷ்டிரத்தில் பார்ப்பனரல்லாத குடிமக்கள்
அனைவரும் மாடுகளை விட ஒருபடி கீழே தான்!
----------------------------------------------------------------------------------------------