ஆணையத்துக்கே ஆணையா?

 தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான காணொளி வாயிலான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திராவுக்கு பிரதமர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சுசில் சந்த்ரா



கடந்த நவம்பர் 15 அன்று, ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சக செயலாளர், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியதாக கூறப்படுகிறது. அதில், “மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சித் தேர்ததல் அனைத்துக்கும் பொதுவான வாக்காளர் பட்டியலை உருவாக்குவது குறித்து பிரதமரின் தலைமைச் செயலாளர், டாக்டர் பி.கே. மிஸ்ரா தலைமையில் நவம்பர் 16 அன்று ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில், தலைமை தேர்தல் ஆணையர் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்” என்று அரசு செயலாளர் உத்தரவிட்டு இருந்ததாக தெரிகிறது.


இந்திய அரசியலமைப்பு தேர்தல் ஆணையத்துக்கு தன்னாட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்களை எந்தவிதமான அரசியல் குறுக்கீடுகள் மூலமும் ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த முடியாது. அலுவல் சார்ந்த வசதிகளை மட்டுமே, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் செய்து கொடுக்க முடியும்.

ஆனால் அதற்கு மாறாக அவ்வாறிருக்கையில், தலைமைத் தேர்தல் ஆணையர் உட்பட ஒட்டுமொத்த தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவு பிறப்பித்து பிரதமரின் அலுவலகம் கடிதம் எழுதிய விவகாரத்தை ஆங்கில நாளேடு ஒன்று ஏடு வெளிக்கொண்டு வந்துள்ளது.


மேலும் அந்த நாளேட்டில், இந்திய தேர்தல் ஆணையர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்து, இந்திய அரசியலமைப்பு தங்களுக்கு வழங்கியிருக்கும் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்கள் என்றும் கூறியுள்ளது. லட்சுமணரேகையை மீறாத வகையில், கூட்டத்திற்குப் பிறகு, தேர்தல் ஆணைய அதிகாரிகள் முறைசாரா விதத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகவும் (informal talks) தெரிவித்துள்ளது.



இதையடுத்து, ஒன்றிய அரசின் இந்த செயல் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இருக்க வேண்டும். அது ஒரு சுதந்திரமான அமைப்பு. அவ்வாறிருக்கையில், பிரதமர் அலுவலகம் எவ்வாறு தேர்தல் ஆணையத்தை அழைக்க முடியும்? அப்படியானால், தேர்தல் பாரபட்சமின்றி நடக்கும் என்பதற்கு என்ன உத்தர வாதம் உள்ளது? என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.



---------------------------------------------------------------------+)

 கொரோனா பேரிழப்பு.

கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்தது சீனா அல்ல.அமெரிக்காவின .ட்ரம்ப்பின் தவறான பேரிடர் எதிர்கொள்ளல்தான் இவ்வதிக உயிரிழப்புக்கு மய்யம்.

இந்த அமெரிக்கா நாட்டில் இதுவரை 5.71 கோடி மக்கள் மூன்றாவது தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய Omicron வைரஸ் உலக நாடுகளில் படையெடுக்க தொடங்கியுள்ளது.

இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் அமெரிக்கா கொரோனா தொற்றால் பல லட்ச உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.

இதையடுத்து அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தலைமையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல வகையில் தீவிர முயற்சிகள் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன், பைசர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் அமெரிக்க நோய் தடுப்பு மையம் இதுவரை அமெரிக்காவில் பொதுமக்களுக்கு மொத்தம் 49,00,30,849 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் மாடர்னா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்களின் மூன்றாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இதுவரை சுமார் 5.71 கோடி பேர் செலுத்தி கொண்டுள்ளனர்.    

 தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபான ஒமைக்ரான் தொற்று தற்போது உலகின் 80 நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் 111 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று வேகமாகப் பரவி வருவதால் உலக சுகாதார அமைப்பு இந்த தொற்றை உலக நாடுகள் எச்சரிகையுடன் கண்காணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

மேலும் ஒமைக்காரன் தொற்று குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொற்று ஜனவரி, பிப்ரவரியில் வேகமாகப் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

----------------------------------------------------

நாம்பொய்த் தமிழர் கட்சி

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் பாக்ஸ்கான் ஆலை இங்கி வருகிறது. இங்கு சுமார் ஐந்தாயிரம் பெண்கள் குறைந்த கூலிக்கு பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் திருச்சி, தஞ்சை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இருந்து  வந்து பணி செய்கின்றனர். இவர்களை தொழிற்சாலை நிர்வாகம் தங்கவைத்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு தரமான உணவை பாக்ஸ்கான் ஆலை வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சுகாதாரமற்ற உணவை உண்ட சில பெண்களுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள். இதற்கிடையில் 8 தொழிலாளர்களைக் காண வில்லை என்றும் நான்குபேர் உணர்வு அருந்தி இறந்து விட்டதாகவும் வதந்திகள் பரவியது. இதனையடுத்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தொழிற்சாலை நுழைவு வாயிலில் போராட்டம் நடத்தினார்கள்.  வதந்திகள் மேலும் மேலும் பரவ அவர்கள் பெங்களூரு சென்னை நெடுஞ்சாலையை மறித்து போரட்டத்தில் இறங்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பின்னர் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உட்பட மாவட்ட ஆட்சியர் சென்று பெண்களுடன் போராட்டம் நடத்தி போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர். ஆனால் இந்த போராட்டத்திற்கும் பல மணி நேர போக்குவரத்து பாதிப்பிற்கும் காரணம் வாட்சப்பில் பரவிய வதந்தி. இந்த வதந்தியை நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் பரப்பியிருக்கிறார். வதந்தியை வைத்தே அரசியல் செய்து வரும் நாம் தமிழர் கட்சி ஆபத்தான கட்சியாக மாறி வருகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?