உலகம் மாறப் போகுது!

 இன்று இருக்கும் இலங்கை 200 மில்லியன் ஆண்டுகளில் மறைந்து இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என அமெரிக்க - உட்ரெக்ட் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் டூவே வான் ஹின்ஸ்பெர்கன் கூறியுள்ளார்.

தனது ஆய்வுகட்டுரையில் இதனைத் தெரிவித்த அவர், எதிர்கால மலைகள் மற்றும் கண்டங்கள் எப்படி இருக்கும் என்பதற்கான விடை தற்போது தம்மிடம் உள்ளதென பெரும் பீதியை கிளப்பியுள்ளார்.



அவரது ஆய்வுகட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ எமது பூமிக்கு கீழே உள்ள டெக்டோனிக் தகடுகள் தொடர்ந்து நகர்ந்து வருவதால் அனைத்துக் கண்டங்களும் தொடர்ச்சியாக நகர்ந்து வருகின்றன.

டெக்டோனிக் தகடுகள் மெதுவாக ஆனால் நிச்சயமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து வருகின்றன.

இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில், கிழக்கு ஆபிரிக்கா (நவீன சோமாலியா, கென்யா, தான்சானியா மற்றும் மொசாம்பிக் உட்பட) மற்றும் மடகாஸ்கர் ஆகியவை இந்தியாவின் மேல் எழும்பும். இது ‘இந்தியாவின் நவீன மேற்குக் கடற்கரையில் நீண்ட மலைத்தொடரை உருவாக்குவதற்கும்’ வழிவகுக்கும்.

இந்தியாவின் மேற்கு கடற்கரை சோமாலய மலைகளால் மாற்றப்படும். மும்பையில் கடல் இல்லாமல் போகும். கடல் இல்லாவிட்டாலும் மும்பை நன்றாக இருக்கும்.



டெல்லி "சோமாலயா மலைகள்" என்று அழைக்கப்படுவதன் அடிவாரத்தில் அமைந்திருக்கும். சீஷெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் தீவுகள் அனைத்தும் மேலே தள்ளப்பட்டு மும்பை சோமாலயா மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் என்று ஆய்வுக் குழு குறிப்பிட்டது.

அது முழு கடலோரக் கோட்டையும் மாற்றும். மொகடிசுவும் மும்பையும் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் அண்டை நாடுகளாக மாறும். கொல்கத்தாவும் மொரீஷியஸும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும்.

அத்தோடு, இன்று இருக்கும் இலங்கை மறைந்து புதிய இந்திய துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக மாறும்.

மத்திய தரைக்கடல் பகுதியில் காணாமல் போன ஒரு கண்டம், தென்கிழக்கு ஆசியாவில் காணாமல் போன மற்றொரு பெரிய கண்டம், அதன் நினைவுச்சின்னங்கள் இந்தோனேசியா முழுவதும் காணப்படுகின்றன.

தென்மேற்கு இந்தியாவில் திருவனந்தபுரத்திலிருந்து கராச்சி வரை ஒரு அழுத்தம் ஏற்படும். சோமாலியாவை உள்ளடக்கிய ஆபிரிக்காவின் மேல் பகுதி தென்மேற்கு இந்தியாவின் மீது மேலெழுந்து பெரிய மலைப் பகுதியை உருவாக்கும்.”எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  


----------------------------------------

பிரிட்டனை சேர்ந்த பிரிஸ்டால் பல்கலைகழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மூச்சு காற்றில் இருந்து வெளியேறும் வைரஸ் காற்றில் கலந்த 20 நிமிடங்களில் பரவும் தன்மையை இழந்துவிடுகிறது எனக் கூறியுள்ளனர்.

குறிப்பாக முதல் 5 நிமிடங்களில் அதன் பரவும் தன்மை பெருமளவில் குறைந்துவிடுவதாகவும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது வைரஸ் பரவுவதில் இருந்து பெரும் பாதுகாப்பை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.

----------------------------------------தளபதி விபத்தில் மரணம்.

என்னதான் நடந்தது?

இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், உள்ளிட்ட 14 பேரின் இறப்புக்குக் காரணமான, நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முப்படைகளின் உயர்நிலைக்குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் "சதி அல்லது அலட்சியம்" கண்டறியப்படவில்லை என்று உயர்நிலைக்குழு கூறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புப்படைகளின் முதலாவது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் கடந்த மாதம் டிசம்பர் 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். (இந்த பதவியை இவருக்காகவே பிரதமர் நரேந்திர மோதி அரசு உருவாக்கியிருந்தது.)

இந்த விபத்தில் பல அதிகாரிகளும் உயிரிழந்தனர். ஜெனரல் ராவத்தின் மனைவியும் ஹெலிகாப்டரில் இருந்ததால் அவரும் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில், "விபத்துக்கு காரணம் இயந்திர கோளாறோ, சதி அல்லது அலட்சியமோ அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் விமான டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றை விசாரணைக்குழு ஆய்வு செய்துள்ளதாக இந்திய விமானப்படை சார்பில் கூறப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீலகிரி மலைப்பகுதியில் வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் மேகங்கள் நுழைந்ததன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணைக்குழு கூறியுள்ளது.

அந்த மேக கூட்டங்களுக்குள் சிக்காமல் விமானி ஹெலிகாப்டரின் திசையை மாற்றும் கட்டாயத்துக்கு வழிவகுத்தது என்றும் அதன் விளைவாக நிலப்பரப்பில் ஹெலிகாப்டரை தரையிறக்குவதற்கு விசையை கட்டுப்படுத்த வழியின்றி சம்பவம் நடந்ததாக விசாரணைக்குழு கூறியுள்ளது.

இதே சமயம், இந்த விசாரணைக்குழு எதிர்காலத்தில் இதுபோன்ற அசாதாரண நிலையில் எத்தகைய நடைமுறைகளை கையாள வேண்டும் என்பது தொடர்பான சில பரிந்துரைகளை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வழங்கியிருக்கிறது.

பிபின் ராவத்

பட மூலாதாரம்

படக்குறிப்பு,

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதி

அவற்றின் விவரத்தை பாதுகாப்புத் துறையினர் வெளியிடவில்லை. இந்த குழுவின் அறிக்கை மீளாய்வு செய்யப்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

முன்னதாக, பிபின் ராவத் பறந்து சென்ற ஹெலிகாப்டர் சம்பவம் குறித்து விசாரிக்க ஏதுவாக தமிழக காவல்துறை ஆரம்பநிலை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. பிறகு இந்த சம்பவம் பற்றிய விசாரணையை பாதுகாப்புத்துறையே ஏற்றுக் கொண்டது.

இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நிலைக்குழுவை அமைப்பதாக இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது அறிவித்தார். அதன்படி விசாரணைக்குழு தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

பிபின் ராவத்

பட மூலாதாரம்,

Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடந்த 5ஆம் தேதியே அளி.க்கப்பட்டது. இந்த ரக ஹெலிகாப்டர்கள், மிகவும் பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் கருதப்படும் ரஷ்ய தயாரிப்பு வடிவமைப்பாகும்.

பிபன் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானபோது அதன் செயல் திறன் முழுமையாக சேவை செய்யக்கூடியதாகவே இருந்தது என பாதுகாப்புத்துறையினர் கூறுகின்றனர்.

எனினும் தாழ்வாகப் பறந்த நிலையில் அந்த ஹெலிகாப்டர், வெலிங்டனில் தரையிறங்குவதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன், மேக மூட்டத்தில் சிக்கியதால் கட்டுப்படுத்த முடியாத வகையில் கீழே விழுந்து நொறுங்கியிருப்பதாக விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி, தமிழகத்தின் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.48 மணிக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு வெலிங்டன் கோல்ஃப் மைதானத்தில் உள்ள ஹெலிபேடில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.

ஹெலிகாப்டர்

பட மூலாதாரம்,

இருப்பினும், சூலூரில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டறை, ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில், மதியம் 12.08 மணிக்கு, ஹெலிகாப்டருடனான தொடர்பை இழந்தது.இந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர்களை ஏற்றிச் செல்லும் விமானங்களை நிர்வகிக்கும் நெறிமுறைகள் அடங்கிய தனது பரிந்துரைகளை விசாரணைக்குழு பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளித்துள்ளது. அவற்றை இந்திய விமானப்படை மதிப்பாய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mi-17V5 விபத்துக்குள்ளான நாளில் பிபின் ராவத், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரிக்கு (DSSC) உரையாற்ற சென்றிருந்தார்.அந்த விபத்தில் பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராஜே சிங் ராவத், அவரது பாதுகாப்பு அதிகாரி பிரிகேடியர் எல்எஸ் லிடர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், விங் கமாண்டர் பிருத்வி சிங் செளஹான், Mi-17V5 விமானியான ஸ்குவாட்ரான் லீடர் குல்தீப் சிங், துணை விமானி. ஜூனியர் வாரண்ட் அதிகாரி ராணா பிரதாப் தாஸ், ஜூனியர் வாரண்ட் அதிகாரி அரக்கல் பிரதீப், ஹவில்தார் சத்பால் ராய், நாயக் குர்சேவக் சிங், நாயக் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாயக் விவேக் குமார் மற்றும் லான்ஸ் நாயக் பி சாய் தேஜா ஆகியோர் இறந்தனர்.

அந்த சம்பவத்தில் உயிர் தப்பிய ஒரே குரூப் கேப்டன் வருண் சிங், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், டிசம்பர் 15ஆம் தேதி  அவரது உயிர் பிரிந்தது.

-------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?