ஒன்றிய முக்கிய அமைச்சர்

 எதிர்பார்ப்பு வரிசையில் ஸ்டாலின்.

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “அனைத்து மாநிலங்களில் இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் தலைவர்கள்” பிரதிநிதித்துவத்துடன் ‘சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு’ தொடங்க உள்ளதாக அறிவித்தார். 


சமூக நீதியைத் தேடுவதோடு, கூட்டாட்சியை அடைவதும் கூட்டமைப்பின் குறிக்கோளாக இருக்கும் என்று ஸ்டாலின் கூறினார்அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு, சமூகப் புரட்சிக் கூட்டணி, பூலே-அம்பேத்காரி கவுரவ்ஷாலி அவுர் ஆதர்ஷவாதி முஹிம், மற்றும் பிஎஸ்பி நிறுவனர் கன்ஷி ராமுடன் தொடர்புடைய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு (அல்லது BAMCEF) போன்ற அமைப்புகளின் கீழ் தேசிய வலைதளத்தில் ஸ்டாலின் உரையாற்றினார்.

“அனைவருக்கும் அனைத்தும் என்பதே இந்தக் கூட்டமைப்புக்கு அடிப்படையாக இருக்கும். அடிக்கடி சந்தித்து சமூக நீதியை நிலைநாட்டுவோம்” என்று கூறிய ஸ்டாலின், திராவிட இயக்கம் தேசத்திற்கு அளித்த மிகப்பெரிய பரிசு சமூக நீதி என்றும் கூறினார்.

கூட்டமைப்பின் அறப்போராட்ட நோக்கங்கள் ஒருபுறமிருக்க, இச்சந்திப்பின் தெளிவான செய்திகளில் ஒன்று, அத்தகைய முன்னணியை வழிநடத்தும் இயல்பான கட்சி திமுகதான் என்பதுதான். காங்கிரஸால் காலியான தேசிய அரங்கில் இடத்தை நிரப்ப மாநிலங்கள் முழுவதும் உள்ள பிராந்திய தலைவர்கள் போட்டியிடும் நிலையில், ஸ்டாலினும் போட்டியில் களம் இறங்குகிறார். திமுக தலைவர் ஒருவர் ஸ்டாலினை “ஒரு தவிர்க்க முடியாத தலைவர்” என்றும் “பிரதமருக்கான தகுதியுடையவர்” என்றும் 

கூட்டத்தில், மாநில இளங்கலை மற்றும் முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசியினருக்கு 27% இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான போராட்டம் குறித்து ஸ்டாலின் பேசியதாவது: இதற்கு திமுக மகத்தான பங்களிப்பை வழங்கியதில் பெருமிதம் கொள்கிறேன். 2020 மே மாதம் உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது, 2021 ஜூலையில்தான் பாஜக அரசு இதை ஏற்றுக்கொண்டது.

திராவிடப் பேரறிஞர் பெரியார் மற்றும் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதி ஆகியோரின் பங்களிப்புகளை மேற்கோள் காட்டி, திமுக அரசுகளின் இத்தகைய “மக்கள் நல” நடவடிக்கைகளை ஸ்டாலின் பட்டியலிட்டார்.

“சமூக நீதிக்கான அனைத்து இயக்கங்களுக்கும் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது… நமது தளபதி (ஸ்டாலின்) அவரது தந்தை மற்றும் பிற திராவிடத் தலைவர்களைப் போலவே இருக்கிறார் … இன்று, வடகிழக்கு மாணவர்கள் கூட நமது OBC ஒதுக்கீட்டு போராட்டத்தின் பலனைப் பெறப் போகிறார்…. நமது முதலமைச்சரின் போராட்டத்தல் ஒட்டுமொத்த நாடும் பயனடையும். 

ஸ்டாலின் தவிர்க்க முடியாத தலைவராகிவிட்டார். அவர் பிரதமருக்கான தகுதியுடையவர் என்று நான் கூறுவேன்,” என்றார்.

ஸ்டாலினின் ஆடுகளம் பாஜகவின் ஆக்ரோஷமான தேசியவாதத்தின் பின்னணியில் வருகிறது, 

பாஜக கட்சி அதிமுக மீது சவாரி செய்து தமிழகத்தில் காலூன்ற முயற்சிக்கிறது. பிராந்திய பெருமை மற்றும் மற்ற உணர்வுகள் மேலெழும்பிய மாநிலம் இதுவரை பாஜகவின் கவர்ச்சியை எதிர்க்கிறது.

காங்கிரஸ் தலைவரும், மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவருமான எஸ் பீட்டர் அல்போன்ஸ், நாட்டின் கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்க ஸ்டாலின் போன்ற தலைவர்கள் முன்னெப்போதையும் விட தேவை என்று கூறினார். 

“பாஜக இந்திய அரசியல் தளத்தில் மதப் பிரச்சினைகளால் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. 

சில தலைவர்கள் இந்த போக்கை எதிர்த்துப் போராட முடியும், ஸ்டாலின் அவ்வாறு செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அல்போன்ஸ் கூறினார், பாஜகவை எதிர்கொள்வதன் மூலம் இந்து வாக்குகளை அந்நியப்படுத்தும் “ஆபத்தில் திமுக தலைவர்” இருக்கிறார் என்று கூறினார்.

 “சமூகப் பிரச்சனைகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவ்வாறு செயல்படும் முதல்வர்கள் மிகக் குறைவு.” என்றும் அவர் கூறினார்.

ஸ்டாலினின் செய்தியில் ஆர்வமுள்ளவர்களில் உத்தரபிரதேசத்தில் உள்ள இளைஞர்களும் இருப்பதாக அல்போன்ஸ் கூறினார், மேலும் அவரது கருத்துகளை சமூக ஊடகங்களில் அந்த இளைஞர்கள் பகிர்ந்து வருகின்றனர். “ஸ்டாலின் வட இந்தியாவில் இருந்து இளைஞர்களின் கற்பனையை கவர்ந்துள்ளார்.” என்றும் அவர் கூறினார்.



------------------------------------------------------------------------

2022 பட்ஜெட்

தலைவர்கள் கருத்து!

2022 பட்ஜெட்: தலைவர்கள் கருத்து!

2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இதில் டிஜிட்டல் கரன்சி, 5ஜி ஏலம், 80 லட்சம் புதிய வீடுகள், வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கான அறிவிப்பு என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்நிலையில் இந்த நிதிநிலை அறிக்கைக்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள்.


காங்கிரஸ் ராகுல் காந்தி எம்.பி

இது மோடி அரசாங்கத்தின் ஜீரோ பட்ஜெட். சம்பளம் வாங்குபவர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

இது முதலாளித்துவமான பட்ஜெட். பத்தி 6ல் ஏழைகள் என்ற சொல் இரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஏழைகளும் இருக்கிறார்கள் என்று நிதியமைச்சர் நினைவுகூர்ந்ததற்கு நன்றி.

90 நிமிடங்களில் பட்ஜெட் உரை முடிக்கப்பட்டது, மாநிலங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனுதவி ஆகிய அம்சங்களைத் தவிர வரவேற்கத்தக்க அம்சங்கள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டம் குறித்து நிதியமைச்சர் குறிப்பிட்டார். அதனால் நிகழ்காலத்தைப் பற்றி கவனம் கொள்ளத் தேவையில்லை என்று மத்திய அரசு நம்புகிறது. எனவே, பட்ஜெட்டில் அறிவித்துள்ள ‘அமிர்த காலம்' விடியும் வரை பொதுமக்கள் பொறுமையாகக் காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது இந்திய மக்களைக் கேலி செய்யும் செயல்.

கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளில் 4.6 கோடி பேர் மிக மோசமான ஏழ்மை நிலைக்குச் சென்றுள்ளனர். குழந்தைகளின் கல்வி குறிப்பாகக் கிராமப்புற குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.2 சதவிகிதமாகவும், கிராமப்புறங்களில் 5.8 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.

ஏறத்தாழ 60 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளது என ஏராளமான சவால்கள் நம்முன் உள்ளன. இவை எல்லாம் நிதியமைச்சரின் கவனத்திலிருந்திருக்க வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்

மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத பட்ஜெட் இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.

அமமுக தினகரன்

மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு,நீர்ப்பாசனம்,சிறு-குறு தொழிலுக்கு உதவி,விவசாயத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு நிதி உள்ளிட்டவை மகிழ்ச்சியளித்தாலும் எல்.ஐ.சி பங்கு விற்பனை,நீர் பாசனத்திட்டங்களில் தனியார் மயம்,தனிநபர் வருமானவரி வரம்பில் மாற்றமில்லாதது ஆகியவை கவலையளிக்கின்றன.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ

பட்ஜெட்டில், 2022-23 ஆம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 முதல் 8.5 விழுக்காடு வரை இருக்கும் என்று பொருளாதார ஆய்வு அறிக்கை கூறுவதை நிறைவேற்றுவதற்கான சாத்திய கூறுகள் இல்லை.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த வளர்ச்சி (ஜிடிபி) ஒரே நிலையில்தான் இருக்கின்றது. முந்தைய நிதி ஆண்டில் சேவைத் துறை வளர்ச்சி விகிதம் -8.4 விழுக்காடு அளவு படுபாதாளத்திலிருந்தது. நடப்பு நிதி ஆண்டில் அதனை மீட்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கொரோனா பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் அது தொடர்பான துறைகளின் வளர்ச்சி, பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டபடி 3.9 விழுக்காடு உயர்வதற்கு, நிதிநிலை அறிக்கையில் அதற்கு ஏற்ப திட்டங்கள் இல்லை.

60 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், கடந்த ஏழாண்டு கால பாஜக அரசில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோய் இருக்கின்றன என்பதுதான் உண்மை நிலை ஆகும்.

சுமார் 4.6 கோடி மக்கள் வறுமையில் உழல்வதாகவும், உலகப் பட்டினிக் குறியீட்டின் 116 நாடுகளில் இந்தியா 104-ஆவது இடத்தில் இருப்பதையும், புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 15 கோடி ஏழை மக்களின் வருவாய் 53 விழுக்காடு குறைந்து விட்டது. இவற்றுக்கெல்லாம் தீர்வு காணும் வகையில் திட்டங்கள் இல்லை.

ரூ. 10 இலட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் 80-சி என்ற வரிவிலக்கு உச்ச வரம்பு நீண்டகாலமாகவே ரூ. 1.5 இலட்சம் என்று இருப்பதை மாற்ற வேண்டும். பிஎப்., ஈஎஸ்ஐ., என பலவற்றிலும் உச்சவரம்புகள் மாற்றப்பட்டது போல் 80-சி திட்டத்திலும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

‘ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே வரி, ஒரே கல்வி’ என்பதை நிலைநாட்ட, தொடர்ந்து முயற்சித்து வரும் மோடி அரசு, மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் உரிமைகளைப் பறிக்கவும், ‘ஒரே நாடு ஒரே ஆவணப் பதிவு’ திட்டத்தையும் கொண்டு வருகின்றது. நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்தும் முறை ஏற்கனவே மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நிலச் சீர்திருத்தம் என்ற பெயரில் ‘ஒரு நாடு; ஒரு பதிவு முறை’ என்பதும் மாநில அதிகாரங்களைப் பறிப்பதற்கான முயற்சி ஆகும்.

நடப்பு ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த ஜி.எஸ்.டி. வரி வசூல் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்ததாகவும் நிதி அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார். ஜிஎஸ்டி வரி நிதிப் பகிர்வு மாநிலங்களுக்குப் பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். அதனை உறுதி செய்யாத மத்திய அரசு வட்டி இல்லா நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்து இருப்பது ஏமாற்றம் அளிக்கின்றது. 2022 நிதி நிலை அறிக்கையிலும் ஏமாற்றமே மிஞ்சுகின்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்- முத்தரசன்

'நாட்டு மக்கள் தொகையில் மேல்தட்டில் உள்ள பத்து சதவீதத்தினர் நாட்டின் மொத்த வருமானத்தில் 57 சதவீதத்தைப் பெற்று வரும் நிலையில் அடித்தட்டில் உள்ள 50 சதவீதத்தினர் (அதாவது 65 கோடி மக்கள்) 8 சதவீதம் மட்டுமே பெறுவதை அண்மையில் சர்வதேச ஆய்வறிக்கை வெளிப்படுத்தியது. சமூக கொந்தளிப்பை உருவாக்கும் இந்த ஏற்றத் தாழ்வைச் சமப்படுத்துவதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இல்லை. 142 பில்லியனர்களிடம் குவிந்து வரும் செல்வக்குவிப்பை மேலும் பெருக்குவதில் நிதிநிலை அறிக்கை அக்கறைகாட்டுகிறது. அடித்தட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்து விட்டது. சமூக உற்பத்தியில் உருவாகும் சொத்துக்களைக் குவித்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்களுக்கு வெண்ணெய் தடவும் நிதிநிலை அறிக்கை, வேலையில்லாமலும் வருமானம் இழந்தும் கதறி அழுதுவரும் ஏழை மக்களின் கண்களில் சுண்ணாம்பு வைத்துத் தேய்த்துள்ளது."

ஒன்றிய முக்கிய அமைச்சர் மோடி

இந்த பட்ஜெட் அதிக முதலீடுகள், உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் நிறைந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். மக்களுக்குச் சாதகமான, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இளைஞர்களுக்குப் பிரகாசமான எதிர்காலத்தை இந்த பட்ஜெட் உறுதி செய்கிறது.வைரத்துக்கு வரி குறைப்பு,குடைக்கு வரி அதிகரிப்பு,கார்பரேட்கள் கூடுதல் வரி 5% குறைப்பு ஆகியவை நமது நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும்.

அஇஅதிமுக பழனிசாமி

நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் அமைந்திருக்கிறது. 

அதை கொஞ்சம் ஓ.பன்னீர்செல்வத்துடன் யோசித்து சொல்கிறேன்.அ.தி.மு.க சார்பில் பிரதமர் மோடிக்கும், சிறப்பான முறையில் பட்ஜெட்டை வழங்கிய நிதி அமைச்சருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.



------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?