மோசடி ஆப்புகள்

 டி.ஜி.பி. சைலேந்திர பாபு இ.கா.ப. வெளியிட்டுள்ள காணொளியில்,

 "ஆன்லைன் Fraud- ஆ பத்தி தொடர்ந்து நாம பேசிட்டு இருக்கிறோம். 

இப்ப சமீப காலத்தில் சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு பயங்கரமான ஆன்லைன் மோசடி நடந்துக் கொண்டிருக்கிறது. 

அப்லே பண்ண சொல்லும் போது ஒரு போட்டோ கேப்பாங்க. 

அதே மாதிரி உங்களுடைய கான்டெக்ஸ் லிஸ்ட்ல நாலஞ்சு பேர சொல்லுங்க, அவங்களுடைய ஈமெயில் ஐடி கொடுங்க, கான்டெக்ட் டீடெய்ல்ஸ் கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு, லோன் அப்லே பண்ணுவீங்க. 

ரூபாய் 3,000, ரூபாய் 4,000, ரூபாய் 5,000 என்று லோனும் உங்களுக்கு கொடுத்துடுவாங்க. 

இப்போ நீங்க அனுப்பன போட்டோவ, அதை ஆபாசமாக சித்தரித்து உங்களுக்கு அனுப்பி, இந்த மாதிரி நீங்க 10,000 ரூபாய் கொடுத்துடுங்க. இல்ல, இந்த போட்டோவ உங்க கான்டெக்ட்ல இருக்கற அனைவருக்கும் அனுப்பிடுவோம். 

அப்படி, உங்களைப் பயமுறுத்தி ரூபாய் 10,000 வாங்குவாங்க. ரூபாய் 50,000 வாங்குவாங்க, ரூபாய் 1,00,000 வாங்குவாங்க. 

அப்படி உங்களுக்கு நிம்மதி போயிடும். இந்த போட்டோவ மத்தவங்க பாத்தாங்கனா என்ன நினைப்பாங்க அப்படிங்கற மாதிரி உங்களுக்கு பயம் வந்திடும். 

அது உண்மையில்லை என்றாலும் மத்தவங்க நம்பமாட்டாங்க. 

இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழ்நிலையில் உங்கள சிக்க வைச்சி, பிளாக் மெயில் பண்ணி நிறைய பணம் வாங்கற நிகழ்ச்சி நடந்திருக்கிறது. 

நமது காவல்துறை அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்துட்டு இருக்கிறார்கள். இந்த ஆப்ப எல்லாம் முடக்கறத்துக்கும் முயற்சிப் பண்ணிருக்கோம். 

ஆனால், தொடர்ந்து பல்வேறு விதமான ஆப் எல்லாம் தொடர்ந்து வந்துட்டு தான் இருக்கும். நீங்கள் இன்னில இருந்து ஏமாறக் கூடாது என்பதற்காக இந்த செய்தியை சொல்றோம்" என்று கூறினார். 

அத்துடன் மோசடி ஆப்களின் பெயர்களைப் பட்டியலிட்ட டி.ஜி.பி., 

Euvalt, 

Masen Rupee, 

Lory loan,

 Wingo Loan, 

cici Loan,

 City loan 

இந்த ஆப்கள் மோசடியான ஆப்கள். இந்த ஆப்களை எல்லாம் டவுன்லோடு பண்ணிடாதீங்க. ஒருவேளை பண்ணிடீங்கன்னா கூட, அத உடனே டெலிட் பண்ணிடுங்க. பாதுகாப்பாக இருங்க; இது தமிழக காவல்துறையினர் வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார்.

---------------------------------------------------------------


14,00,000 தவளைகள்.

@thinfrog என்ற ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த அவர் தனது வீட்டு பின்புறத்தில் இந்த வீடியோவை எடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவரின் வீட்டு கொல்லைப்புறம் முழுக்க முழுக்க தவளைகளாக இருந்துள்ளது. 

குட்டி குட்டியாக தரையை மொத்தமாக மறைத்து தவளைகள் இருந்துள்ளன. அவர் கேமராவை திருப்பும் பக்கம் எல்லாம் தவளைகள்தான் இருந்துள்ளனர்.

இந்த வீடியோவை பகிர்ந்த அவர்.. இதோ தவளைகளின் ஆர்மி என்று குறிப்பிட்டு உள்ளார். மொத்தம் 14 லட்சம் தவளைகள் அங்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் வியந்து போய் உள்ளனர்.

 என்னது இவ்வளவு தவளைகளா பார்க்கவே ஆச்சர்யமாகவும், அதே சமயம் அருவெறுப்பாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர் உங்களுக்கு எப்படி இதில் 14 லட்சம் தவளைகள் இருப்பது தெரியும் என்றும் கேட்டுள்ளனர்.

இதற்கு பதில் அளித்த அந்த நெட்டிசன், நான்தான் இந்த தவளைகளை வளர்க்கிறேன். வீட்டிற்கு பின் பக்கம் இருக்கும் குளத்தில் தவளைகளை வளர்க்கிறேன். 

இதில் 14 லட்சம் + முட்டைகளை போட்டு இருந்தோம். அவை வளர்ந்து இப்போது குட்டிகளாக மாறி உள்ளன. 

இப்போது என் வீட்டு பின் பக்கத்தை மொத்தமாக இந்த தவளைகள் ஆக்கிரமித்துள்ளன.

சரியாக 95 நாட்களுக்கு முன் இந்த முட்டைகளை போட்டோம். அவை தற்போது வளர்ந்து உள்ளன. 

என் வீட்டு பின் பக்கம் இனி நான் நடக்கவே முடியாது. நான் முதலில் தவளைகளை அதிகம் வளர்க்கலாம் என்று நம்பி முட்டைகள் போட்டேன். 

ஆனால் இவ்வளவு தவளைகள் இருப்பதை பார்க்கும் போது தவறான முடிவு எடுத்துவிட்டேனோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

நான் இதை ஒரு சோதனை முயற்சியாக செய்து பார்த்தேன். 

ஆனால் இப்போது விளைவுகள் மோசமாகி உள்ளது. என் பக்கத்துக்கு வீடுகளில் தவளை புகுந்துவிட்டதால் பிரச்சனையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

அவரின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இது சுற்றுசுழல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் சூழலியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

----------+-------++++++--+++++++++---------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?