திரிணாமுல் ஊழல்

 வாஞ்சி, 1886ஆம் ஆண்டில் ரகுபதி அய்யருக்கு மகனாக பிறந்தவர் வாஞ்சிநாதன். இயற்பெயர் சங்கரன்.

 செங்கோட்டையில் பள்ளிப் பருவத்தினை முடித்தவர். திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெறுகிறார். 

படிக்கும்போதே சீதாராமய்யரின் மகள் பொன்னம்மாளை மணந்தார். பின்னர் திருவனந்தபுரம் புனலூர் காட்டுப்பகுதியில் வனக் காவலாராகவும் பணியாற்றினார். ஆயினிம் இவருக்கு பிரிட்டிஷ் அரசு மேல் கோவமும் வெறுப்பும் இருந்தது. 

சுதந்திரப்போராட்டத்திற்காக தன் உயிரை விட்ட வாஞ்சியின் உடல் பிரேத பரிசோதனைக்கு செல்கிறது. அப்போது அவரின் சட்டையில் கடிதம் இருந்தது. அந்த கடித வரிகளின் சுருக்கம் இதோ, 

"ஆங்கிலேய சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்து அவமானப்படுத்திவருகிறார்கள்.

 நாம் ஆங்கிலேயரை துரத்தி தர்மத்தினையும், சுதந்திரத்தினையும் நிலைநாட்ட வேண்டும். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. 

அவன் எங்கள் தேசத்தில் காலைவைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராஸிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். "

இக்கடிதத்தில் உள்ளது போல் சாதனத்தை ஆஷ் காலில் போட்டு மிதித்து ஏன், எப்படி?

-------------------------------------------------------------------

. 50 கோடி பணம், 6 கிலோ தங்க கட்டி, காப்பு, தங்கப்பேனா, நகைகள்

மேற்குவங்காளத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக செயல்பட்டவர் பார்த்தா சாட்டர்ஜி (வயது 69). இவர் கடந்த 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை மாநில கல்வித்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.

அந்த காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில்

கொல்கத்தா நாக்தலா பகுதியில் உள்ள பார்த்தாவின் வீட்டில் கடந்த 22-ம் தேதி தொடங்கி தொடர்ந்து 27 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 

இதை தொடர்ந்து பெல்ஹச்ஷியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்தாவின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் அர்பிதா பானர்ஜியின் வீட்டில் 21.90 கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து பார்த்தா சாட்டர்ஜியையும், அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியையும் அமலாக்கத்துறையினர் கடந்த 23-ம் தேதி கைது செய்தனர். 

இந்த கைது நடவடிக்கையை தொடர்து பார்த்தா சாட்டர்ஜியை மந்திரி பதவியில் இருந்தும் கட்சி பொறுப்புகளில் இருந்தும் நீக்கி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்கிடையில், கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை வரும் 3-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய அமலாக்கத்துறையினரிடம், பெல்கஞ்யா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனக்கு மேலும் ஒரு வீடு உள்ளதாக அர்பிதா முகர்ஜி தெரிவித்தார்.

இந்நிலையில், பெல்கஞ்யா பகுதியில் உள்ள அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணமும், நகையும் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் பல பெரிய பைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 


அந்த பைகளில் செங்கல் அமைப்பில் பல பார்சல்கள் இருந்தன. அந்த பார்சல்களை திறந்து பார்த்தபோது அதில் 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகளாக இருந்தன. 

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 50 லட்ச ரூபாய் பார்சலாகவும், 500 ரூபாய் நோட்டு 20 லட்ச ரூபாய் பார்சலாகவும் கட்டப்பட்டு பல பார்சல்கள் இருந்தன. அந்த வீட்டில் நடந்த சோதனையில் மொத்தம் 27 கோடியே 90 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது.

பின்னர், அந்த வீட்டில் இருந்த ஒரு லாக்கர் அறையை திறந்தபோது அங்கு தலா ஒரு கிலோ எடைகொண்ட 3 தங்க கட்டிகள் (3 கிலோ), தலா 1/2 கிலோ (அரை கிலோ) எடைகொண்ட 6 தங்க காப்புகள் (கை காப்புகள்) (3 கிலோ), தங்க நகைகள் மற்றும் தங்கத்தால் ஆன பேனா ஆகியவை இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்த தங்க கட்டிகள், நகைகளின் மதிப்பு 4.31 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை நடத்திய 2 நாள் சோதனையில் அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து 21.90 கோடி மற்றும் 27.90 என சுமார் 50 கோடி ரூபாய் (மொத்தம் 49.80 கோடி) பணத்தையும், 6 கிலோவுக்கு அதிகாமான தங்கத்தையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளரான நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

---------------------------------------------------------------------------








இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?